செவ்வாய், 20 ஜூன், 2017

மெய்யனா? பொய்யனா?


ராதே கிருஷ்ணா 20-06-2017


. மெய்யனா? பொய்யனா?
திருவஹீந்த்ரபுரத்தில் சாதுர்மாஸ்ய ஸங்கல்பத்தை அநுஷ்டிக்கும் அஹோபில மட ஜீயரையும், மாலோலனையும் சேவித்துக் கொண்டு எங்கக்கா பெண்ணும் நானும் ஹேமாம்புஜநாயிகாஸமேத தேவநாதனை சேவிக்கப் போனோம். நான் வர வழியெல்லாம் அவகிட்ட கோவிலைப் பற்றியும் ஸ்வாமி தேசிகன் அந்த ஊர்ல எழுந்தருளியிருந்த சரித்ரத்தையும் சொல்லிக் கொண்டே வந்தேன். கோயிலில் பட்டர் ஸேவை பண்ணிவைக்கும்போது இந்தப் பெருமாளை அடியவர்க்கு மெய்யன் என்று திருமங்கை மன்னன் மங்களாசாஸனம் செய்கிறார் என்றார்.
ஸன்னிதியை விட்டு வெளியே வந்தவுடன், சித்தி, அதென்ன அடியவர்க்கு மெய்யன்....அப்படின்னா மத்தவாளுக்கு பொய்யனா? என்று கேட்டாள். ஒருவகையில் ஆமான்னு சொல்லணும். நம்மாழ்வார் தன் திருவாய்மொழியில் மெய்யனாகும் விரும்பித்தொழுவார்க்கெல்லாம் பொய்யனாகும் புறமே தொழுவார்க்கெல்லாம் என்கிறார். திருமாலையில் தொண்டரடிப்பொடியாழ்வாரோ மெய்யர்க்கே மெய்யனாகும் விதியிலா வென்னைப்போல பொய்யர்க்கே பொய்யனாகும் புட்கொடியுடைய கோமான் என்கிறார். கொஞ்சம் இவா ரெண்டு பேரோட வார்த்தையையும் கூட்டி நம்ம ஆசார்யர்கள் சொன்ன அர்த்தத்தையும் சேர்த்துப் பார்த்தா மனுஷாளை முன்று வகையா பிரிக்கலாம். நான் சொல்ல, அவள் என்னை, அதென்ன மூன்றுன்னு கேட்டாள்.
நம்மாழ்வார் பாசுரத்துக்கு நம்பிள்ளை காட்டுகிற விருத்தாந்தத்தைப் பார். கண்ணனோட உதவி பாரதப் போருக்கு வேணும்னு அர்ஜுனனும் துரியோதனனும் போனது நமக்கெல்லாம் தெரியும். அர்ஜுனன் விரும்பியது கண்ணனை மாத்திரம். அவன் யாசகமாகக் கேட்டது அவசியம் நீ எங்க பக்கம் இருக்கணுங்கிறதுதான். ஆனால் துரியோதனனும் கண்ணனைத் தொழுதான். கண்ணனுக்காகன்னு இல்லாம அவனுடைய சைன்யத்துக்காக ..அதாவது அவனை விட்டுவிட்டு புறத்திலுள்ள வஸ்துக்களெல்லாம் வேணும்னு ஆசைப்பட்டு அவைகளைக் கேட்டான். எம்பெருமானுக்கு புறத்தே ஒரு பொருளும் கிடையாதுங்கிற தத்வஜ்ஞானம் அவன்கிட்டேயில்லை. ஆனால் அதுக்காக துரியோதனனுடைய விருப்பத்தை நிராகரிக்கலை. அவன் கேட்டதை மாத்திரம் கொடுத்து அவனோட ஆசையை நிறைவேற்றி வைத்தான். இதுல நம்பிள்ளை காட்ற சூஷ்மம்..எம்பெருமானை அவனோட ஸகலவிதமான கல்யாண குணங்களோடு உள்ளபடி மெய்யா உணர்ந்தவா ஒரு கோஷ்டி. அவர்களுக்கு அவனும் தன்னை முழுசாய் காட்டிக் கொடுத்து மெய்யன் என்பதைக் கொண்டாட வைக்கிறான். அவர்களுக்கு தாஸனாக இருந்து எல்லாவிதமான காரியமும் பண்ணுகிறான். இன்னொரு கோஷ்டி, அவனை ஒரு சாதாரணமான தேவதை மாதிரி நினைத்துக் கொண்டு இதைக் கொடு, அதைக் கொடுன்னு கேட்கிறவர்கள். அவர்களுக்கு, அவர்கள் எந்த அளவு அவனை புரிஞ்சு வச்சிண்டிருக்காளோ அந்த அளவுக்குக் காட்டிக் கொடுத்து - உள்ளபடி காட்டிக் கொடுக்காமல் பொய்யனாக நிற்கிறான்.
சித்தி நீ மூன்று category ன்னு சொன்னயே.. விடாமல் அவள் கேட்க, தொண்டரடிப்பொடியாழ்வாரைக் கவனித்தால் அது கிடைக்கும் என்றேன். நம்மாழ்வார் காட்டினது மெய்யாய் அவனைத் தொழுபவர்கள். பொய்யாய் புறம் தொழுபவர்கள். தொண்டரடிப்பொடியாழ்வார் காட்டுவது இரண்டு கோஷ்டி. ஒன்று நம்மாழ்வார் காட்டிய மாதிரி உள்ளபடி அவனையறிந்து கொண்ட மெய்யரான அன்பர்கள் இன்னொன்று அவன் இருக்கான்னே தெரிஞ்சுக்காம அவனோட லோகத்தில வாழ்ந்திண்டிருக்கிறவா. இவர்கள் புறமே தொழுவார்களைவிடக் கீழே இருக்கிறவா. . இவர்களுக்கு பகவான் என்ன பண்ணுகிறான் என்று கேட்டால் , அவனே பொய்யன்னு நினைத்துக் கொண்டிருப்பவர்களுக்குஅவனுடைய உண்மையான ஸ்வரூபத்தைக் காட்டாதது மட்டுமின்றி அவர்களுக்கு பொய்யான ஒரு தோற்றத்தைக் காண்பித்து திசை திருப்பி விடுகிறான் என்கிறார். இதுவும் ஒரு அருள்தான். அவர்களெல்லாம் எல்லாவிடத்திலேயும் சுத்தி கடைசியில் எம்பெருமான் காலில்தான் வந்து விழுவார்கள். இப்படி, அவனை உள்ளபடி அறிஞ்சவா, அவனை ஒரு தேவதைன்னு மட்டும் அறிஞ்சவா, அவனைப்பற்றி ஒன்றுமே அறிஞ்சிக்காம இருக்கிறவான்னு மூன்று வகை. இந்த மூணுவகைக்காரர்களுக்கும் மூன்று விதமா அருள் செய்கிறான்.
இதுமாத்திரமல்ல. ஸகஸ்ரநாமத்தில் அவனோட ஸத்யன் என்கிற திருநாமமும் மூன்று முறை வருகிறது. எம்பெருமானை உள்ளபடி அறிந்துகொள்பவர்கள் ஸத் என்றும், அப்படிப்பட்ட ஸத்துக்களுக்கு அநுகூலன் என்றும், அடியவர்களுக்கு நல்லவன் என்றும், க்ருஷ்ணன்-வாஸுதேவன் ஸத்யத்தில் நிலை பெற்றிருக்கிறான்.ஸத்யம் அவனிடத்தில் நிலை பெற்றிருக்கிறதுன்னு வ்யாக்யானம் செய்கிறார் ஸ்ரீபராஸரபட்டர்.
தத்வத்ரயமான அசித், சித், பரமாத்மாவில் அசித் ஸ்வரூபத்தாலும் ஸ்வபாவத்தாலும் மாறிக் கொண்டேயிருக்கும். சித் என்னும் ஜீவாத்மாக்கள் ஸ்வரூபத்தில் மாற்றம் இல்லையினும் ஸ்வரூபத்தில் மாறும். ஆனால் பரமாத்மாவோ ஸ்வரூபம், ஸ்வபாவம் இவைகளால் எக்காலத்திலும் மாறாமல் இருக்கிறான். ஸத்ய: ன்னு இந்த என்றைக்கும் மாறாத உண்மையைச் சொல்வதில் என்ன தப்பு!
ததியாராதனையை முடித்துக் கொண்டு மடத்திலிருந்து கிளம்பும்போது, சித்தி நீ சொன்ன மூன்று வகையில் நான் இரண்டாவது வகையில் இருக்கேன்னு நினைக்கிறேன். .கூடிய சீக்கிரம் எம்பெருமானிடத்தில் அவனையே கேட்கணும்னு பார்க்கிறேன்..ஆனால் சட்டம் இடம் கொடுக்காது போல் இருக்கிறதே.! என்றபடி எதிர்த்தாற்போல் பெட்டிக் கடையில் அன்றைய செய்தித் தாளின் வால் போஸ்டரைக் காட்ட அதில் ராமர் சிலையைக் காணோம் - போலீஸ் வலை வீச்சு என்றிருக்க அவள் தலையில் ஓங்கி வைத்தேன் ஒரு குட்டு!
நப்பின்னை...

Show more react

கர்ணன் பூர்வ ஜென்மம்

ராதே கிருஷ்ணா 20-06-2017



கர்ணன் பூர்வ ஜென்மம்

Srinivasan Nambi
இன்று நாம் வாழும் வாழ்க்கைக்கும் நடக்கும் நல்லது கெட்டதுக்கும் பூர்வஜென்ம வாழ்க்கைக்கும் சம்பந்தம் உண்டா?
உண்டு என்றால் நம்புவீர்களா?
இந்த மகாபாரத கர்ணனின் கதையை கேளுங்கள் புரியும்.
மகாபாரதத்தில் வரும் மாவீரன் கர்ணன் ஒரு பாண்டவ புத்திரன் என்ற இரகசியம் அவன் இறந்த பிறகே உலகம் அறிந்தது.
கொடைக்குப் பெயர் பெற்ற கர்ணனோ இறப்பதற்கு சில நாட்கள் முன்புதான் அறிந்திருந்தான். அதுவும் கிருஷ்ண பகவானின் லீலையால்! மிகவும் நல்லவனான கர்ணனுக்கு ஏன் இப்படிப்பட்ட வாழ்வு?
இதற்கு விடை கர்ணனுடைய பூர்வ ஜன்ம இரகசியத்தில் உள்ளது.
பூர்வ ஜன்மத்தில் கர்ணன் சஹஸ்ர கவசன் என்ற அசுரனாக இருந்தான்.
தேவர்களை நிர்தாட்சண்யமின்றி தாக்கி வந்தான்.
பிரம்ம தேவனிடம் அவன் பெற்ற வரத்தின்படி அவனுடைய சரீரம் ஆயிரம் சட்டைகளால் போர்த்தப்பட்டிருந்தது.
எவரும் அந்த ஆயிரம் சட்டைகளை நீக்காமல் அவனைக் கொல்ல முடியாது.
அவனைத் தாக்க விரும்பும் வீரன் 12 வருடங்கள் தவமிருந்து விட்டு, அதன் பின்னர் 12 வருடங்கள் அவனுடன் தொடர்ந்து போர் புரிந்தால் ஆயிரம் கவசங்களுள் ஒன்றை அறுக்க முடியும்.
இவ்வாறு 24 வருடங்கள் வீதம் தவமும் போரும் யாகமும் செய்து ஆயிரம் கவசங்களை ஒன்றன்பின் ஒன்றாக அறுத்தெறிந்தால் சஹஸ்ர கவசன் மடிவான்.
இதை யாரால் செய்து சாதிக்க முடியும்?
அவனிடமிருந்து தேவர்கள் தாங்கொணாத் துயரத்திற்கு ஆளாயினர்.
அமரர்கள் மகாவிஷ்ணுவை நாடி அசுர உபாதையை ஒழித்து உதவுமாறு வேண்டினர்.
விண்ணவர் மீது இரக்கம் கொண்ட மகாவிஷ்ணு அசுரர் கொடுமையை ஒழித்து அமரவாசிகளுக்கு ஆறுதல் உண்டு பண்ணத் திருவுளம் கொண்டு நர நாராயணர்களாக அவதரித்தார்.
ஸஹஸ்ர கவசனை ஸம்ஹரிப்பதற்கு அவர்கள் கூட்டு முயற்சி செய்தனர்.
நரன் 12 வருடங்கள் தவம் புரிய, நாராயணர் ஸஹஸ்ர கவசனென்னும் அசுரனுடன் போர் புரிந்து கவசமொன்றை அறுத்துத் தள்ளினார்.
இப்படிப் பல வருடங்கள் இருவரும் மாறி மாறி 12வருடம் தவமும் 12வருடம் போரும் புரிந்து விடா முயற்சி செய்து ஸஹஸரகவசத்தில் 999 கவசங்களை ஒவ்வொன்றாக அறுத்து எறிந்தனர்.
இதற்குள் பிரம்ம பிரளயமே வந்து விட்டது.
எஞ்சி நின்ற ஒரு கவசத்துடன் சஹஸ்ரகவசன் சூரிய லோகம் போய்ச் சேர்ந்தான்.
அந்த சஹஸ்ர கவசனே அடுத்த ஜன்மத்தில் சூர்ய புத்திரனாக கர்ணன் என்ற பெயரில் மீதமுள்ள (பூர்வ ஜன்ம கவசம்) ஒரு கவசத்தோடு குத்தி மைந்தனாக பிறப்பெடுத்தான்.
இந்தக் கவசமும் அறுக்கப்பட வேண்டியதே!
இந்தக் காரியத்திற்காகவே பகவான் மகாவிஷ்ணு நர ரூபத்தில் அர்ஜுனனாகவும், நாராயண அம்சத்தில் கிருஷ்ணனாகவும் ஜனித்தனர்.
கர்ணனை அழிப்பதாக அரஜுன்ன் வாயினால் சபதம் செய்ய வைத்தார்.
12 ஆண்டுகள் பாண்டவர்கள் வனவாசம் செய்தது அந்த நரனுடைய 12 வருடத் தவமேயாகும். அந்த தவத்தின் முலம் மீதி இருந்த ஒரு கவசத்தையும் இந்திரன் மூலம் நீக்கிய விஷயம் நாம் எல்லோரும் அறிந்ததே.
கவசம் நீங்கியதால்தான் அர்ஜுனன் கர்ணணை கொல்ல முடிந்தது.
அதேபோல் நம்முடைய இந்த ஜன்ம வாழ்க்கை நிகழ்வுகளுக்குக் காரணம் தெரியாமல் நாம் திகைக்கிறோம்.
நிணைத்து பாருங்கள் நமது இந்த ஜென்ம வாழ்க்கைக்கு காரணம் பூர்வ ஜன்மக் நமது கர்மாக்களே ஆகும்.
கர்ணனின் வாழ்க்கை அமைந்த விதம் இந்த உண்மையை நிரூபிக்கிறது.
எனவே நல்லதே இந்த பிறவியில் இயன்றவரை செய்து அடுத்த பிறவியில் இதைவிட நல்ல ஜென்மமெடுப்போம் அல்லது பிறவாநிலையை எடுப்போம் . என்ன முயலுவீர்கள்தானே?
நானும் முயன்று வருகிறேன் சங்கடமாகவே உள்ளது நிறையபேர் கேவலமாக பேசுவதும் நிணைப்பதும் ஏன் என் முன்புறம் என்னை புகழ்ந்து எனது பின்புறம் இகழ்வதும் தெரிந்தே நிறைய நபர்களிடம் சிரித்து பழகுகிறேன் முடிந்தவரை அவர்களுக்கு நல்லது செய்ய முயற்ச்சிப்பேன் அல்லது அவர்கள் நன்றாக இருக்க பிரார்த்தனை செய்கிறேன்
நீங்களும் முயலுங்கள் இந்த பிறவியை இத்தோடு நிறுத்த முடியும்
ஜெய் ஶ்ரீராம்!

புதன், 14 ஜூன், 2017

மஹாபாரதத்தின்படி வம்சங்கள் வரலாறு

ராதே கிருஷ்ணா 14-06-2017



மஹாபாரதத்தின்படி வம்சங்கள் வரலாறு



மஹாபாரதத்தின் முக்கிய மனிதர்கள் வரும் பகுதிகள்

அக்ருதவ்ரணர் அக்னி அகம்பனன் அகஸ்தியர் அகிருதவரணர் அங்கதன் அங்காரபர்ணன் அங்கிரஸ் அசமஞ்சன் அசலன் அசுவினிகள் அத்புதன் அத்ரி அத்ரிசியந்தி அதிரதன் அபிமன்யு அம்பரீஷன் அம்பா அம்பாலிகை அம்பை அயோதா தௌம்யா அர்வாவசு அர்ஜுனன் அரிஷ்டநேமி அருணன் அருணி அருந்ததி அலம்புசன் அலாயுதன் அவிந்தியன் அவுர்வா அன்சுமான் அனுவிந்தன் அஷ்டகன் அஷ்டவக்கிரர் அஸ்வத்தாமன் அஸ்வபதி ஆணிமாண்டவ்யர் ஆத்ரேயர் ஆதிசேஷன் ஆர்யகன் ஆர்ஷ்டிஷேணர் ஆஸ்தீகர் இந்திரசேனன்இந்திரசேனை இந்திரத்யும்னன் இந்திரன் இந்திரஜித் இராவான் {அரவான்} இல்வலன் உக்கிரசேனன் உக்தன் உச்சைஸ்ரவஸ் உசீநரன் உத்தமௌஜஸ் உத்தரன் உத்தரை உத்தவர் உத்தாலகர் உதங்கர் உதங்கா உபமன்யு உபரிசரன் உபஸ்ருதி உலூகன் உலூபி ஊர்வசி எலபத்திரன் ஏகலவ்யன் ஐராவதன் கங்கன் கங்கை கசன் கடோத்கசன் கண்வர் கணிகர் கத்ரு கந்தன் கபோதரோமன் கயன் கர்ணன் கருடன் கல்கி கல்மாஷபாதன் கலி கவந்தன் கனகன் கஹோடர் காகமா காசியபர் காதி காந்தாரி காமதேனு காயத்ரி கார்க்கோடகன்கார்த்திகை காலகேயர் காலவர் காளி காக்ஷிவத் கிந்தமா கிர்மீரன் கிரது கிரந்திகன் கிராதன் கிரிசன் கிரிடச்சி கிருதவர்மன் கிருதவீர்யன் கிருதாசி கிருபர் கிருஷ்ணன் கீசகர்கள் கீசகன் குணகேசி குந்தி குந்திபோஜன் குபேரன் கும்பகர்ணன் குரோதவாசர்கள் குவலாஸ்வன் கேசின் கேசினி கைகேயி கோடிகன் கோமுகன் கௌசிகர் கௌசிகி கௌதமர் சக்திரி சக்ரதேவன் சகரன் சகாதேவன் சகுந்தலை சகுனி சங்கன் சச்சி சசபிந்து சஞ்சயன் சஞ்சயன் 1 சத்தியபாமா சத்தியவதி சத்தியஜித் சத்யபாமா சத்யவான்சதானீகன் சந்தனு சந்திரன் சம்சப்தகர்கள் சம்பா சம்பை சம்வர்ணன் சமீகர் சர்மிஷ்டை சர்யாதி சரஸ்வதி சல்லியன் சலன் சனத்சுஜாதர் சஹஸ்ரபத் சாகரன் சாண்டிலி சாத்யகி சாத்யர்கள் சாந்தை சாம்பன் சாம்யமணி சாரங்கத்வஜன் சாரிசிரிகன் சாருதேஷ்ணன் சால்வன் சாவித்ரி சிகண்டி சிங்கசேனன் சிசுபாலன் சித்திரசேனன் சித்திராங்கதை சித்ரவாஹனன் சிபி சியவணன் சியவனர் சிரிங்கின் சிருஞ்சயன் சிவன் சீதை சுக்ரன் சுக்ரீவன் சுகன்யா சுசர்மன் சுசோபனை சுதர்சனன் சுதர்மை சுதன்வான் சுதக்ஷிணன் சுதாமன்சுதேவன் சுதேஷ்ணை சுந்தன் உபசுந்தன் சுநந்தை சுப்ரதீகா சுபத்திரை சுமுகன் சுரதை சுருதசேனன் சுருதர்வான் சுருதாயுதன் சுருதாயுஸ் சுவாகா சுவேதகேது சுனந்தை சுஹோத்திரன் சூதன்வான் சூர்ப்பனகை சூரன் சூரியதத்தன் சூரியன் சேகிதானன் சேதுகன் சைகாவத்யர் சைப்யை சைரந்திரி சோமகன் சோமதத்தன் சௌதியும்னி சௌனகர் ததீசர் தபதி தபஸ் தம்போத்பவன் தமயந்தி தமனர் தர்மதேவன் தர்மவியாதர் தளன் தக்ஷகன் தாத்ரேயிகை தார்க்ஷ்யர் தாருகன் தாலப்யர் தியுமத்சேனன் திர்கதமஸ் திரஸதஸ்யு திரிசிரன் திரிஜடைதிருதராஷ்டிரன் திருஷ்டத்யும்னன் திரௌபதி திலீபன் திலோத்தமை திவோதாசன் துச்சலை துச்சாசனன் துந்து துர்க்கை துர்மதன் துர்மர்ஷணன் துர்முகன் துர்வாசர் துர்ஜயன் துரியோதனன் துருபதன் துருபதன் புரோகிதர் துரோணர் துவஷ்டிரி துவாபரன் துஷ்கர்ணன் துஷ்யந்தன் தேவ தேவசேனை தேவயானி தேவாபி தௌமியர் நகுலன் நகுஷன் நரகாசுரன் நரன் நளன் நளன்2 நாரதர் நாராயணர்கள் நாராயணன் நிவாதகவசர்கள் நீலன் நைருதர்கள் பகதத்தன் பகர் பகன் பகீரதன் பத்ரசாகன்பத்ரா பப்ருவாஹனன் பர்ணாதன் பர்வதர் பரசுராமர் பரத்வாஜர் பரதன் பராசரர் பராவசு பரீக்ஷித் பரீக்ஷித்1 பலராமன் பலன் பலி பாகுகன் பாண்டியன் பாண்டு பானுமான் பாஹ்லீகர் பிங்களன் பிரகலாதன் பிரத்யும்னன் பிரத்னஸ்வன் பிரதர்த்தனன் பிரதிவிந்தியன் பிரதீபன் பிரம்மத்வாரா பிரம்மா பிரம்மாதி பிரமாதின் பிராதிகாமின் பிருகத்யும்னன் பிருகதஸ்வர் பிருகு பிருது பிருந்தாரகன் பிருஹத்சேனை பிருஹத்பலன் பிருஹத்ரதன் பிருஹந்நளை பிருஹஸ்பதி பீமன் பீமன்1 பீஷ்மர் புரு புருரவஸ் புரோசனன் புலஸ்தியர் புலஹர்புலோமா புஷ்கரன் பூமாதேவி பூரி பூரிஸ்ரவஸ் பௌரவன் பௌலோமர் மங்கணகர் மடன் மணிமான் மதிராக்ஷன் மதுகைடபர் மந்தபாலர் மந்தரை மயன் மருத்தன் மஹாபிஷன் மஹிஷன் மாத்ரி மாதலி மாதவி மாந்தாதா மார்க்கண்டேயர் மாரீசன் மாலினி மிருத்யு முகுந்தன் முசுகுந்தன் முத்கலர் முனிவர்பகன் மூகன் மேதாவி மேனகை மைத்ரேயர் யது யமன் யயவரர் யயாதி யவக்கிரீ யுதாமன்யு யுதிஷ்டிரன் யுயுத்சு யுவனாஸ்வன் ரந்திதேவன் ராகு ராதை ராமன் ராவணன் ரிசீகர் ரிதுபர்ணன் ரிஷ்யசிருங்கர் ரிஷபர் ருக்மரதன்ருக்மி ருத்திரன் ருரு ரேணுகை ரைப்பியர் ரோமபாதன் லட்சுமணன் லட்சுமி லபிதை லக்ஷ்மணன் லோகபாலர்கள் லோபாமுத்திரை லோமசர் லோமபாதன் லோமஹர்ஷனர் வசாதீயன் வசிஷ்டர் வசு வசுதேவர் வசுமனஸ் வந்தின் வர்கா வருணன் வஜ்ரவேகன் வாசுகி வாதாபி வாமதேவர் வாயு வார்ஷ்ணேயன் வாலகில்யர் வாலி விகர்ணன் விசாகன் விசித்திரவீரியன் விதுரன் விதுலை விந்தன் விபாண்டகர் விபாவசு விபீஷணன் வியாக்ரதத்தன் வியாசர் வியுஷிதஸ்வா விராடன் விருத்திரன் விருஷகன் விருஷசேனன் விருஷதர்பன்விருஷபர்வன் விரோசனன் விவிங்சதி வினதை விஷ்ணு விஸ்வகர்மா விஸ்வாமித்ரர் வேதா வைகர்த்தனன் வைசம்பாயனர் வைவஸ்வத மனு வைனியன் ஜடாசுரன் ஜடாயு ஜந்து ஜமதக்னி ஜரத்காரு ஜராசந்தன் ஜரிதை ஜரை ஜலசந்தன் ஜனகன் ஜனபதி ஜனமேஜயன் ஜாரிதரி ஜிமூதன் ஜீவலன் ஜெயத்சேனன் ஜெயத்ரதன் ஜோதஸ்நாகாலி ஷாமந்தர் ஸ்தூணாகர்ணன் ஸ்வேதகி ஸ்வேதகேது ஸ்வேதன் ஹயக்ரீவன் ஹர்யஸ்வன் ஹரிச்சந்திரன் ஹனுமான் ஹிடிம்பன் ஹிடிம்பை ஹோத்திரவாஹனர்
- See more at: http://mahabharatham.arasan.info/2015/08/Mahabharatha-Bhishma-Parva-Section-013.html#sthash.g2ELvh0F.dpuf