வியாழன், 4 ஜூலை, 2013

சப்தகன்னியர் - II

ராதே கிருஷ்ணா 04-07-2013



சப்தகன்னியர்
temple

பிராம்மிஅக்டோபர் 08,2012

பிராம்மி, மாகேசுவரி, கவுமாரி, நாராயணி, வராகி, இந்திராணி, சாமுண்டி (காளி) ஆகியோர் சப்தகன்னியர் எனப்படுவர். பராசக்தியின் படைத்தளபதிகளான இவர்கள் பெரும்பாலான சிவாலயங்களில் ...மேலும்

temple

மாகேஸ்வரிஅக்டோபர் 08,2012

பிராம்மி, மாகேசுவரி, கவுமாரி, நாராயணி, வராகி, இந்திராணி, சாமுண்டி (காளி) ஆகியோர் சப்தகன்னியர் எனப்படுவர். பராசக்தியின் படைத்தளபதிகளான இவர்கள் பெரும்பாலான சிவாலயங்களில் ...மேலும்

temple

கவுமாரிஅக்டோபர் 08,2012

பிராம்மி, மாகேசுவரி, கவுமாரி, நாராயணி, வராகி, இந்திராணி, சாமுண்டி (காளி) ஆகியோர் சப்தகன்னியர் எனப்படுவர்.
சப்தகன்னியரில் கவுமாரி வழிபட்ட தலம் நாகப்பட்டினம் மாவட்டம், ஆனந்த ... மேலும்

temple
பிராம்மி, மாகேசுவரி, கவுமாரி, நாராயணி, வராகி, இந்திராணி, சாமுண்டி (காளி) ஆகியோர் சப்தகன்னியர் எனப்படுவர்.
இதில் ஒவ்வொரு கன்னியரும் ஒவ்வொரு சிவாலயங்களுக்கு சென்று சிவனின் ... மேலும்

temple

வராகிஅக்டோபர் 08,2012

வராஹி: பிராம்மி, மாகேசுவரி, கவுமாரி, நாராயணி, வராகி, இந்திராணி, சாமுண்டி (காளி) ஆகியோர் சப்தகன்னியர் எனப்படுவர். அந்தகாசுரன் என்பவனை அழிக்க, சிவன் தனக்கு உதவியாக ... மேலும்

temple

இந்திராணிஅக்டோபர் 08,2012

பிராம்மி, மாகேசுவரி, கவுமாரி, நாராயணி, வராகி, இந்திராணி, சாமுண்டி (காளி) ஆகியோர் சப்தகன்னியர் எனப்படுவர்.
இதில் ஒவ்வொரு கன்னியரும் ஒவ்வொரு சிவாலயங்களுக்கு சென்று சிவனின் ... மேலும்

temple

சாமுண்டிஅக்டோபர் 08,2012

பிராம்மி, மாகேசுவரி, கவுமாரி, நாராயணி, வராகி, இந்திராணி, சாமுண்டி (காளி) ஆகியோர் சப்தகன்னியர் எனப்படுவர்.
சப்தகன்னியரில் சாமுண்டி வழிபட்ட தலம் நாகப்பட்டினம் மாவட்டம், ...மேலும்






































சப்தகன்னியர்
நாராயணி என்ற வைஷ்ணவி
அக்டோபர் 08,2012

அ-
+
Temple images
பிராம்மி, மாகேசுவரி, கவுமாரி, நாராயணி, வராகி, இந்திராணி, சாமுண்டி (காளி) ஆகியோர் சப்தகன்னியர் எனப்படுவர்.
இதில் ஒவ்வொரு கன்னியரும் ஒவ்வொரு சிவாலயங்களுக்கு சென்று சிவனின் அருளாசி பெற்றுள்ளனர். சப்தகன்னியரில் நாராயணி வழிபட்ட தலம் நாகப்பட்டினம் மாவட்டம், சேந்தன்குடி பசுபதிகோயில் பரமகல்யாணி சமேத பசுபதீசுவரர் திருக்கோயில் ஆகும். நாராயணி, விஷ்ணு அம்சம் உடையவள். தாமரை இலை போன்ற அகன்ற கண்களை உடையவள். சியாமள வர்ணம் உடையவள். மிக்க பலம் பொருந்தியவள். சங்கு, சக்கரம், அபயம், வரதம் அமைந்த நாற்கரத்தினள். கருடக்கொடி, கருடவாகனம் உடையவள்.
மயிலாடுதுறை பூம்பூகார் சாலையில் பசுபதி அக்ரகாரத்திற்கு அண்மையில் உள்ளது.
காலை 6 மணி முதல் 10 மணி வரையிலும், மாலை 6 மணி முதல் 8 மணி வரையிலும் நடை திறந்திருக்கும்.
அய்யம்பேட்டையிலிருந்து மூன்று கிலோ மீட்டர் தூர ஆட்டோ பயணம் செய்தால் ஜம்புகேஸ்வரர் சமேத அலங்காரவல்லி திருக்கோயில் அமைந்துள்ளது. இக்கோயில் வைஷ்ணவி வழிபட்ட தலமாகும். வைஷ்ணவியின் தரிசனம் செய்தபோது சிவபெருமான், தனது திருக்கழல் தரிசனத்தை நிகழ்த்தியுள்ளார். அப்போது அம்பாள் மடந்தைப் பருவத்திளாய்(18 வயது) காட்சி அளித்துள்ளாள்.
வைஷ்ணவி - ரூபலக்ஷ்ணம் (திருவுருவ அமைப்பு)
இவள் விஷ்ணு அம்சி ; மகாலட்சுமியின் அவதாரம். ஒரு முகமும் - இரண்டு கண்களும் - நான்கு கரங்களும் உடையவள். கீழ் இரு வல - இடக் கரங்களை அபய - வரதமாக வைத்திருப்பாள். மேல் வலக்கரத்தில் சக்கரமும் - இடக்கரத்தில் சங்கும் கொண்டவள். கிருஷ்ணவதாரத்தில் - கோபி கைகளை மோகிக்க அவர் எடுத்த ரூபம் இவளுடையதே என்பர்.
விஷ்ணு ஸ்திக்கு அதிபதி, எனவே, இவள் காப்புக் கடவுள் ஆவாள். இள வயதினைத் தாண்டி - யௌவன வயதை அடைந்த பெண்கள் இவளை வழிபட்டாள், யௌவனமும் - திடகாத்திரமும் பெறுவர். இவளை உபாசித்தால் நம்மைக் காத்து - நம் மனோரதங்களைப் பூர்த்தி செய்பவள் இவள்!
நாராயணி பாடல்: பரவுபுண்ணிய நாதனைப் பசுபதீச்சரத்து
விரவும் ஆதியை அடியருக்கெளிய வேதியனைப்
புரவுபூண்டொளிர் வயிணவி பூசனை புரிந்து
கரவுநீர்தரு வரமெலாம் பெற்றுமை களித்தாள்.
நாராயணி (வைஷ்ணவி) - பூஜா
ஆசன மூர்த்தி மூலம்: ஓம் - ஹ்ரீம் - வைஷ்ணவி - ஆசனாயயாய - நம:
ஓம் - ஹ்ரீம் - வம் - வைஸ்ணவி மூர்த்தியை - நம:
ஓம் - ஹ்ரீம் - ஸ்ரீம் - வம் - வைஸ்ணவியை - நம:
காயத்ரி: ஓம் - தார்க்ஷ்யத்வஜாயை வித்மஹே;
சக்ரஹஸ்தாயை தீமஹி;
தந்நோ, வைஷ்ணவி ப்ரசோதயாத்
தியான ஸ்லோகம்: ஸங்க சக்ர தராதேவீ
கிரீட மகுடாந்விதா;
ஸீஸ்தநா சாருவத
நாஸ்யாமாபா ச சுலோசநா;
பீதாம்பரதரா தேவீ
கிரீட மகுடாந்விதா;
ராஜவ்ருட்சம் ஸமாச்ரித்ய
கருட த்வஜ வாஹி நீ;
வைஷ்ணவீ த்யாயேத் பீடகா தேவீம்,
விஷ்ணு பூஷண பூஷிதாம்.
மூல மந்திரம்: ஓம் - ஹ்ரீம் - ஸ்ரீம் - வம் - வைஸ்ணவ்யை - நம :
அர்ச்சனை: ஓம் வைஷ்ணவியை நம
ஓம் அம்ருதாயை நம
ஓம் அரவிந்தாயை நம
ஓம் ஆதித்தாயை நம
ஓம் ஆனந்தாயை நம
ஓம் குமுதாயை நம
ஓம் கிருஷ்ணாயை நம
ஓம் கருடத்துஜாயை நம
ஓம் கோவிந்தாயை நம
ஓம் சதுர்ப்புஜாயை நம
ஓம் ஜனார்த்தனாயை நம
ஓம் தாராயை நம
ஓம் தமனாயை நம
ஓம் தாமோதராயை நம
ஓம் தீப்பமூர்த்யை நம
ஓம் நரசிம்யாயை நம
ஓம் பத்மநாயை நம
ஓம் கத்மின்யை நம
ஓம் புரந்தராயை நம
ஓம் புண்டரீவாøக்ஷ நம
ஓம் பக்தவத்சலாயை நம
ஓம் மதுசூதனாயை நம
ஓம் மகாமாயாயை நம
ஓம் மாதவாயை நம
ஓம் முகுந்தாயை நம
ஓம் யக்ஞபதயேயை நம
ஓம் ராமாயை நம
ஓம் வரதாயை நம
ஓம் வாமனாயை நம
ஓம் விக்ரமாயை நம
ஓம் விஷ்வக்சேனாயை நம
ஓம் வேதாயை நம
ஓம் வைகுண்டாயை நம
ஓம் சாந்தாயை நம
ஓம் சிவாயை நம
ஓம் சூபர்காயை நம
ஓம் சர்வேஸ்வராயை நம
ஓம் ஹிரண்யகர்பாயை நம
ஓம் வாசுதேவாயை நம
ஓம் புண்யாயை நம
ஓம் கௌஸ்துபாயை நம
ஓம் மதுராக்ருதயே நம
ஓம் அனந்தாயை நம
ஓம் வனமாலினேயை நம
ஓம் பீதவஸ்ராயை நம
ஓம் பாரிஜாதப்ரியாயை நம
ஓம் கோபாலாயை நம
ஓம் காமஜனகாயை நம
ஓம் த்வாரகர்நாகாயை நம
ஓம் ப்ருந்தாவனாயை நம
ஓம் நரநாராயணாயை நம
ஓம் அஷ்டலட்மியே நம
ஓம் பரமபுருசயை நம
ஓம் கம்சவதாயைசத்ய வாசேயை நம
ஓம் சத்யசங்கல்பாயை நம
ஓம் பரப்ப்ரமன்யை நம
ஓம் தீர்த்தபதாயை நம
ஓம் தயாநிதியை நம
ஓம் மோட்சலக்ஷிமியை நம
ஓம் பயநாசனாயை நம
ஓம் வராயை நம
ஓம் ரகுபுங்கவாயை நம
ஓம் தேஜஸ்வினேயை நம
ஓம் ரூபவதேயை நம
ஓம் கமலகாந்தாயை நம
ஓம் ராஜராஜவரப்ரதாயை நம
ஓம் நிதர்யவைபவாயை நம
ஓம் ரம்ய விக்ரகாயை நம
ஓம் லோகநாகியை நம
ஓம் யக்ஷகர்தர்வவரதாயை நம
ஓம் வரேண்யாயை நம
ஓம் பூர்ணபோதாயை நம
ஓம் சார புஷ்கரிணீதீராயை நம
ஓம் யஜ்ஞ வராகாயை நம
ஓம் ராசீவ லோசனாயை நம
ஓம் மதுசூதனாயை நம
ஓம் அச்யுதாயை நம
ஓம் தேவ பூஜிதாயை நம
ஓம் சக்ரத்ராயை நம
ஓம் சங்குஹஸ்தராயை நம
ஓம் நிர்விகல்பாயை நம
ஓம் நிராதங்காயை நம
ஓம் நிரஞ்ஜனாயை நம
ஓம் சார்ங்கபாணாயை நம
ஓம் ஊருஹஸ்தாயை நம
ஓம் தீன பந்தாயை நம
ஓம் பக்தவத்சலாயை நம
ஓம் கரந்தமகுடாயை நம
ஓம் தேவகீயாயை நம
ஓம் அயக்ரீவாயை நம
ஓம் ஜனார்த்தனாயை நம
ஓம் வனமாலின்யை நம
ஓம் அஸ்வரூடாயை நம
ஓம் கஸ்தூரி திலகாயை நம
ஓம் சேசாத்ரி காயை நம
ஓம் பராயை நம
ஓம் அனந்தசிரயாயை நம
ஓம் வாமதேவாயை நம
ஓம் பீஷ்டப்பரதாயியை நம
ஓம் கூர்மமூர்த்தியை நம
ஓம் மத்ய ரூபாயை நம
ஓம் ச்வேதகோலபராயை நம
ஓம் சௌம்ய ரூபாயை நம
ஓம் சேசாயை நம
ஓம் சர்வகாமப்ரதாயை நம
ஓம் சத்வ மூர்த்யை நம
ஓம் கருணாநிதியை நம
ஓம் நாராயணாயை நம
ஸ்ரீ நாராயணி அஷ்ட சதஸ்தோத்ரம் ஸம்பூர்ணம்.
பூஜை: பீஜங்களுடன் கூடிய தேவிநாமம் கூறி - சமர்ப்பியாமி சொல்லி - தூப - தீப - நைவேத்திய - தாம்பூலம் - சமர்ப்பிக்க வேண்டும்.
துதி: சங்க சக்ர கதா சார்ங்க
க்ருஹீத பரமாயுதே
ப்ரஸீத வைஷ்ணவீ ரூபே
நாராயணீ நமோஸ்துதே.










































































































































































































 சப்தகன்னியர்
வராகி
அக்டோபர் 08,2012

அ-
+
Temple images
வராஹி: பிராம்மி, மாகேசுவரி, கவுமாரி, நாராயணி, வராகி, இந்திராணி, சாமுண்டி (காளி) ஆகியோர் சப்தகன்னியர் எனப்படுவர். அந்தகாசுரன் என்பவனை அழிக்க, சிவன் தனக்கு உதவியாக சப்தமாதர்களைத் தோற்றுவித்ததாக மத்ஸ்யபுராணம் சொல்கிறது. சும்பன், நிசும்பன் என்ற அரக்கர்கள் வதத்தின்போது, தனக்கு உதவியாக சப்தமாதர்களை சக்திதேவி தோற்றுவித்ததாக மார்க்கண்டேய புராணம் கூறுகிறது. சப்தமாதர்களில் வாராஹியை தனிதெய்வமாக வழிபடும் முறை பழங்காலத்தில் இருந்தே நடைமுறையில் உள்ளது.  இவள் கருப்பு நிறம், பன்றி முகம், பெருவயிறுடன், ஆறு கைகளுடன் இருப்பதாக ஸ்ரீதத்வநிதி என்றநூல் வர்ணிக்கிறது.  வராஹியின் வரத, அபயஹஸ்தம் தவிர மற்ற கைகளில் சூலம்,  கபாலம், உலக்கை, நாகம் தாங்கியிக்கிறாள். சதுர்த்தி, சஷ்டி, அஷ்டமி, தசமி, துவாதசி, அமாவாசை திதிகள் வாராஹி வழிபாட்டிற்கு உகந்தவை. சோழ அரசர்களின் இஷ்ட தெய்வமாக விளங்கிய வாராஹிக்கு தஞ்சை பெரியகோயிலில் சந்நிதி உள்ளது. வாராஹி மாலை என்னும் நூலை எழுதிய சுந்தரேசர், சோழ மன்னரான குலோத்துங்கனின் படையில் குதிரைப்படைக்குத் தலைமை வகித்தவர். வாராஹியை வழிபடுபவருக்கு எதிரிகளின் தொல்லை நீங்கி, வளமான வாழ்வு உண்டாகும்.
இதில் ஒவ்வொரு கன்னியரும் ஒவ்வொரு சிவாலயங்களுக்கு சென்று சிவனின் அருளாசி பெற்றுள்ளனர். சப்தகன்னியரில் வராகி வழிபட்ட தலம் நாகப்பட்டினம் மாவட்டம், வழுவூர் அருள்மிகு இளங்கிளை நாயகி சமேத வீரட்டேசுரர் திருக்கோயில் ஆகும். இவருக்கு கிருத்திவாசர் என்ற பெயரும் உண்டு. அஷ்டவீரட்டத் தலங்களில் கஜசம்காரம் நிகழ்ந்த தலம். கஜசம்ஹார மூர்த்தி திருவுருவம் மிக்க சிறப்புடையது. இவர் எழுந்தருளிய சபை ஞானசபை எனப்பெறும். தேவார வைப்புத் தலம். வராகி பூஜித்த தலம்.
திருமாலின் வராக அவதார அம்சம் உடையவள். கறுப்புப் பட்டாடை உடுத்தியவள். பன்றி முகம் உடையவள். மிக்க செல்வமும் அணிகலன் பூண்ட அழகிய மார்பும் உடையவள். பாதங்களில் நூபுரம் அணிந்தவள். கலப்பை, முசலம், வரதம், அபயம் அமைந்த நாற்கரத்தினள். கருநிறம் உடையவள்.
அருள்மிகு வீரட்டேசுவரர் திருக்கோயில்
மூலவர் : கிருத்திவாசர் (வீரட்டேசுவரர்)
அம்மன் / தாயார் : பாலகுராம்பிகை, இளங்கிளைநாயகி
தலவிருட்சம் :தேவதாரு,வன்னி
தீர்த்தம் : பாதாளகங்கை
பாடியவர் : திருஞானசம்பந்தர்( வைப்புத்தலம்)
புராண பெயர் : தாருகா வனம்
மாநிலம் : தமிழ்நாடு
மாவட்டம் :   நாகப்பட்டினம்
ஊர் :   திருவழுவூர்

திருவிழா :  மாசிமகம் - யானை சம்கார ஐதீக நிகழ்ச்சி -10 நாட்கள் திருவிழா - தினமும் இரண்டு வேளை வீதியுலா - 9ம் நாள் யானை சம்கார நிகழ்ச்சி - 10 ம்நாள் தீர்த்த வாரி - இத்திருவிழா இத்தலத்தில் நடைபெறும் மிகச்சிறப்பான திருவிழா ஆகும். ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொள்வர்.
மார்கழி - திருவாதிரை - 3 நாட்கள் திருவிழா
புரட்டாசி - நவராத்திரி திருவிழா - 10 நாட்கள் திருவிழா
கார்த்திகை சோம வாரங்கள் இத்தலத்தில் விசேஷமாக இருக்கும்,
இரவு தினந்தோறும் யந்திர பிரதிஷ்டைக்குப் பூஜை நடைபெறுகிறது. அமாவாசை தோறும் சுவாமி தீர்த்தம் கொடுத்தருள்கிறார்.
ஆடிப்பூரம், பௌர்ணமி பூஜை ஆகியவை இத்தலத்தில் வெகு விமரிசையாக நடக்கும். கந்தர் சஷ்டி, மகாசிவராத்திரி, பங்குனி உத்திரம் ஆகியவை தலத்தின் சிறப்பான விசேச நாட்கள் ஆகும்.
மாதாந்திர பிரதோச நாட்களின் போது பக்தர்கள் கூட்டம் கோயிலில் பெருமளவில் இருக்கும்.
வருடத்தின் சிறப்பு நாட்களான தீபாவளி,பொங்கல், தமிழ்,ஆங்கில புத்தாண்டு தினங்களின்போதும் கோயிலில் சிறப்பு அபிஷேக ஆராதனைகளும் நடக்கும்.
தல சிறப்பு :  இங்கு சிவன் சுயம்பு மூர்த்தியாக அருள்பாலிக்கிறார்
அட்ட வீரட்டத் தலங்களில் இது 6 வது தலம்.
சிவபெருமானின் உள்ளங்கால் தரிசனம் இத்தலத்தில் மட்டுமே பெறமுடியும்.
சப்தகன்னியரில் வராகி வழிபட்ட தலம்
திறக்கும் நேரம் : காலை 6  மணி முதல்   12  மணி வரை, மாலை 4 மணி முதல் இரவு 8   மணி வரை திறந்திருக்கும்.

முகவரி: அருள்மிகு வீரட்டேசுவரர் திருக்கோயில்,
வழுவூர் - 609 401
நாகப்பட்டினம் மாவட்டம்
போன் :  99437 98083

பொது தகவல் : இங்குள்ள தீர்த்தத்தில் 5 கிணறுகள் உள்ளன. இதற்கு பஞ்சமுக கிணறு என்று பெயர். திருஞான சம்பந்தர் எட்டு வீரட்டங்களைக் குறிப்பிட்டு அருளியுள்ள திருப்பாடல்களில் இத்தலத்தை குறிப்பாக அருளியுள்ளார்.இது தேவார வைப்புத்தலம் என போற்றப்படுகிறது. இத்தல விநாயகர் செல்வ  விநாயகர் என்ற திருநாமத்துடன் அருள்புரிகிறார்.
பிரார்த்தனை : அமாவாசை தோறும் சுவாமி சந்நிதியில் உள்ள தீர்த்தத்தில் சுவாமி தீர்த்தம் கொடுத்தருள்கிறார். அந்நாளில் இத்தீர்த்தத்தில் நீராடி இறைவனை வழிபடுவோர்க்கு புத்திர தோசம் நீங்கி நன்மக்கட்பேறு வாய்த்து வருகிறது.
திருமண வரம் , குழந்தை வரம் ஆகியவற்றை பக்தர்கள் இத்தலத்தில் வேண்டிக் கொண்டால் நிச்சயம் நிறைவேறுகிறது.
இத்தலத்தின் சிறப்பு மூர்த்தியான கஜசம்கார மூர்த்திக்கு பின்புறம் தெய்வீக யந்திரம் பிரதிஷ்டை செய்யப்பட்டுள்ளது. அந்த யந்திரத்தை வழிபட்டால் பில்லி , சூன்யம், ஏவல், மாந்திரீகம் ஆகியவை விலகி நன்மை பயக்கும்.
இத்தலத்தில் வீற்றிருக்கும் மூலவர் கிருத்திவாசரை வணங்குவோர்களுக்கு துயரம் நீங்கி மனஅமைதி கிடைக்கும்.மேலும் வேலை வாய்ப்பு , தொழில் விருத்தி , உத்தியோக உயர்வு, ஆகியவற்றுக்காகவும் இங்கு பிரார்த்தனை செய்தால் சுவாமி பக்தர்களது வேண்டுதல்களை நிச்சயம் நிறைவேற்றி கொடுப்பார்.

நேர்த்தி கடன் : அமாவாசை அன்று தீர்த்தத்தில் நீராடி விட்டு சுவாமிக்கு அர்ச்சனைசெய்து வழிபடுகிறார்கள்
கல்யாணவரம் வேண்டுவோர் கல்யாண மாலை சாத்துதல்,
சுவாமிக்கு சங்காபிசேகமும்,கலசாபிசேகமும் செய்யலாம்
அம்மனுக்கு புடவை சாத்துதலும், அபிசேகம் செய்தலும், சந்தனகாப்பு சாத்துதலும் பக்தர்களின் முக்கிய நேர்த்திகடன்களாக உள்ளது.
சுவாமிக்கு மா மஞ்சள் பொடி, திரவிய பொடி, தைலம், பால், தயிர், இளநீர், பஞ்சாமிர்தம், எலுமிச்சை, தேன், சந்தனம் ஆகியவற்றால் அபிசேகம் செய்யலாம்.
மேலும்கோயிலுக்கு வரும் பக்தர்களுக்கு அன்னதானம் படைத்தல் ஆகிவற்றை செய்யலாம்.சுவாமிக்கு நைவேத்தியம் செய்து பக்தர்களுக்கு விநியோகிக்கலாம்.தவிர வழக்கமான அபிசேக ஆராதனைகளும் செய்யலாம்.வசதி படைத்தோர் கோயில் திருப்பணிக்கு பொருளுதவி செய்யலாம்.
தல பெருமை:
கஜசம்கார மூர்த்தி : இத்தலத்தின் விசேச மூர்த்தி இந்த கஜசம்கார மூர்த்தி என்பது குறிப்பிடத்தக்கது.இங்குள்ள மூர்த்தி போல் வேறு எந்த கோயில்களிலும் கஜசம்கார மூர்த்தியைக் காண முடியாது. திருவடியை யானையின் தலைமேல் ஊன்றி அதன் தோலைக் கிழித்துப் போர்த்தும் நிலையில் பெரிய திருவுருவத்தோடு கஜசம்காரமூர்த்தி விளங்குகிறார். அருகில் குழந்தையான முருகனை தன் இடுப்பில் வைத்துள்ள உமையவள் அச்சத்தோடு திரும்பும் நிலையில் நிற்கிறார். கையிலுள்ள முருகனோ தன் தந்தையை ஆட்காட்டி விரலால் சுட்டிக்காட்டுகிறார். சிவனுக்கும், நந்திக்கும் இடையில் பஞ்சபிரம்ம தீர்த்தம் அமைந்துள்ளது எங்குமில்லாத தனிசிறப்பு. இத்தீர்த்தத்தில் நீராடினால் குழந்தைப்பேறு கிட்டும். ஆணவம் நீங்கினால், ஞானம் கிடைக்கும். அம்மன் சன்னதி முன்புள்ள சரஸ்வதி தீர்த்தத்தில் நீராடினால் கல்வியறிவு பெருகும். சிதம்பரத்தில் சிதம்பர ரகசிய பிரதிஷ்டை உள்ளது போல் இங்கும் கஜசம்ஹார மூர்த்திக்கு பின்னால் யந்திர பிரதிஷ்டை உள்ளது. அம்பாள் இளங்கிளை நாயகி எனப்படுகிறாள்.பெருமான், உமையஞ்ச ஆனையை உரித்ததை இத்திரு உருவத்தில் காணலாம். சுவாமியின் உள்ளங்காலை பக்தர்கள் இத்தலத்தில் மட்டுமே இந்த மூர்த்தியிடம் மட்டுமே தரிசனம் செய்யலாம். சம்காரமூர்த்தி இருக்கும் இடம் ஞான சபை ஆகும்.
சனிபகவான் : சூரிய மண்டலத்தில் விக்கிரம ராஜாவோடு சனி பகவான் யுத்தம் செய்கிறார். இதில் விக்கிரமராஜா தோற்றுப்போய்விடுகிறார். இத்தீர்த்தத்தில் வந்து விழுகிறார். தீர்த்தக்குளத்தில் குளித்து விட்டு சுவாமியை வழிபடுகிறார். சுவாமி அவருக்கு அருள் பாலிக்கிறார். சனி பகவான் சிவபெருமானிடம் மன்னிப்பு கேட்கிறார். சனிபகவானை சுவாமி ஒரு காலை முடமாக்கி விடுகிறார்.இத்தலத்தில் சனிபகவானுக்கு தனி சந்நிதி உள்ளது.இங்குள்ள சனிபகவான் கையில் வில்லோடு இருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.
இத்தலத்தில் யானையை பிளந்து சிவபெருமான் வீரச்செயல் புரிந்துள்ளார்.
சனீசுவரனுக்கு இங்கு சாப நிவர்த்தி ஆன தலம். சிதம்பர ரகசியப் பிரதிஷ்டைபோல இங்கும் கஜசம்கார மூர்த்திக்கு பின்னால் யந்திர பிரதிஷ்டை உள்ளது. முதலில் நந்தி, பின்பு குளம், அதன்பிறகு மூலஸ்தானம் என்று வித்தியாசமான கோயில் அமைப்பை இங்கு மட்டுமே காண முடியும். கஜ சம்கார மூர்த்தி உள்ள இடம் ஞானசபை ஆகும். கஜசம்கார நடனம் நவ தாண்டவத்தில் ஊர்த்துவ தாண்டவமாகப் போற்றப்படும் நடன சபையில் ஞானசபை என்று இது கூறப்படும்.
யானையைப் பிளந்து வீரநடனமாடி வரும் அப்பாவைப் பார்த்து அம்பாளின் இடுப்பில் இருக்கும் முருகப்பெருமான் அதோ அப்பா வருகிறார் என்று சுட்டிக் காட்டியபடி உள்ளார். 48000 மகரிஷிகள் இத்தலத்தில் தவம் செய்து ஞானோதயம் பெற்றனர் எனக் கூறப்படுகிறது. சனீசுவரனுக்கு தனி சந்நிதி உள்ளது.
இங்கு சனீசுவரன் கையில் வில்லோடு இருக்கிறார் என்பது சிறப்பம்சம் தீர்த்தங்களில் சுவாமி சந்நிதிக்கு எதிரே உள்ள ஈசான தீர்த்தம் அல்லது பாதாள கங்கை விசேசமானது. பிரளய காலத்திலும் அழியாமல் வழுவியதாதலின் வழுவூர் என்று ஆனது. இதிகாசங்களில் இத்தலம் தாருகா வனம் என்று குறிப்பிடப்படுகிறது.
தல வரலாறு : தாருகாவனத்து முனிவர்கள் தாமே தவ முனிவர்கள் எனவும் தாம் செய்யும் நற்கருமங்களே பலனைத்தரும் எனவும் இதற்குக் கடவுள் துணை தேவையில்லை எனவும் கருதி ஆணவர் கொண்டனர். அவ்வாறே அவர்களது மனைவியரும் நினைத்தனர். இவர்களது ஆணவத்தையும் கர்வத்தையும் அழிக்கும் பொருட்டு சிவபெருமான் பிட்சாடனராகவும், திருமால் மோகினியாகவும் உருவெடுத்து தாருகாவனம் வந்தனர். முனிவர்கள் மோகினியைக் கண்டும், அவர்களது மனைவியர் பிட்சாடனரைக் கண்டும் தந்நிலை அழிந்தனர். பெருமான் மோகினியோடு கூடி ஐயனாரை பெற்றெடுத்து மறைந்தார். முனிவர்கள் சிவபெருமானின் செயல் கண்டு கோபம் கொண்டனர். வேள்வி செய்து அக்னி, புலி, மான், மழு,பாம்பு , முயலகன் ஆகியவற்றை சிவபெருமான் மீது ஏவி தோல்வி கண்டு கடைசியாக மதயானையை வேள்வி தீயிலிருந்து உண்டாக்கி பெருமான் மீது ஏவினர். பிட்சாடனர் உருவில் வந்த பெருமான் யானையின் வயிற்றுக்குள் புகுந்து கொண்டார். உலகம் இருள்கிறது. அம்பிகை ஐயனைக் காணாது அஞ்சினாள். பெருமான் யானையின் வயிற்றிலிருந்து கலக்க, கொல்ல வந்த யானை வலி தாங்க முடியாமல் தவிக்க, சுவாமி யானையின் வயிற்றை கிழித்துக் கொண்டு (ஊர்த்துவ தாண்டவம்) வீர நடனமாடிக் கொண்டு வருகிறார். அதன்பின் ஆணவம் அழிந்த முனிவர்கள், வந்தது சிவன் என்பதை அறிந்து மன்னிப்பு கேட்டனர். யானையை சம்ஹராம் செய்தவர் என்பதால் இறைவன் கஜசம்ஹாரமூர்த்தி எனப்படுகிறார்.
இருப்பிடம் : மயிலாடுதுறை - மங்கநல்லூர் பேருந்துச் சாலையில் எலந்தங்குடியை அடுத்து உள்ள நெய்க்குப்பையில் வழுவூர் கைகாட்டியில் இறங்கிச் சென்றால் எளிதில் கோயிலை அடையலாம்
முக்கிய ஊர்களிலிருந்து தூரம் :
மயிலாடுதுறை - 7 கி.மீ.
திருவாரூர் - 25 கி.மீ.
வாராஹி - ரூபலக்ஷ்ணம் (திருவுருவ அமைப்பு)
விஷ்ணுவின் தசாவதாரங்களில் ஒன்றான வராக அவதாரத்தின் அம்சமாக அவதரித்தவள் - வாராஹி. வராக (பன்றி) முகமும் - நான்கு கரங்களும் உடையவள். கீழ் இரு கரங்களை அபய - வரதமாகவும்; மேல் வலக்கரத்தில் தண்டமும் - இடக்கரத்தில் கலப்பையும் கொண்டவள். கருப்பு நிறமுடைய ஆடையை உடுத்திக் கொண்டிருப்பவள். கிரீட மகுடம் தரித்து - சிம்ம வாஹனத்தில் அமர்ந்திருப்பவள்.
இவள் அசுரன், உலகைத் தூக்கிக் கொண்டு கடலுள் ஒழிந்தபோது, வராக அவதார மெடுத்து மீட்டுக் கொண்டு வந்தவள். எனவே, இவளை வழிபட்டால், எதிரிகளை அழித்து வெற்றி அடையலாம். பெண்கள் உபாசித்தால் கற்பு நிலையைக் காப்பாற்றிக் கொள்ளலாம். அதற்குத் தீங்கு நேரும்போது, எதிர்த்து நின்று காத்தருள்வாள்!
வராகி பாடல்: கரியின் தோல் திருமேனியிற் கவினுறப் போர்த்தி
அரியின் கண்ணடி அணிதரும் அண்ணலைச் சத்தி
புரியின் மேவிய பொருளினை வராகி பூசித்தாள்
தெரியின் மேம்படு வரமெலாம் சிறப்புறப் பெற்றாள்.
வாராகி விஷ்ணு அம்சி - பூஜா
ஆசன மூர்த்தி மூலம்: ஓம் - ஹ்ரீம் - வாராகி - ஆசனாயயாய - நம:
ஓம் - ஹ்ரீம் - வம் - வாராகி மூர்த்தியை - நம:
ஓம் - ஹ்ரீம் - ஸ்ரீம் - வம் - வாராகியை - நம:
காயத்ரி: ஓம் - மஹிசத்வஜாயை வித்மஹே
தண்ட ஹஸ்தாயை தீமஹி;
தந்நோ, வராஹி ப்ரசோதயாத்
தியான ஸ்லோகம்: ஏக வக்த்ராம் த்விநேத்ராம்ச
சதுர்புஜ சமன் விதாம்;
க்ருஷ்ணாம்பர தராம், தேவிம்
வராஹ சக்ர ஸம்யுதாம்;
ஹசலமுஸல ஹஸ்தாம்
தாம் வரா பயகராம்புஜாம்;
ஸிம்ஹ வாஹ ஸமாரூடாம்
கிரீட மகுடோஜ் வலாம்;
ஸர் வாலங்கார ஸம்பன்னாம்,
வாராஹிம் பூஜயேத்புத
மூல மந்திரம்: ஓம் - ஹ்ரீம் - ஸ்ரீம் - வம் - வாராகியை - நம :
அர்ச்சனை: ஓம் வாராஹ்யை நம
ஓம் வாமந்யை நம
ஓம் வாமாயை நம
ஓம் வாசவ்யை நம
ஓம் பாலாயை நம
ஓம் பாமாயை நம
ஓம் பாசாயை நம
ஓம் பயாநகாயை நம
ஓம் தன்யாயை நம
ஓம் தராயை நம
ஓம் தபஸ்விந்யை நம
ஓம் தமாயை நம
ஓம் கர்வாயை நம
ஓம் கபாலின்யை நம
ஓம் கதாதாரிண்யை நம
ஓம் கலாரூபிண்யை நம
ஓம் மதுபாயை நம
ஓம் மங்கலாயை நம
ஓம் மருதாந்யை நம
ஓம் மகீலாயை நம
ஓம் ராதாயை நம
ஓம் ராகாயை நம
ஓம் ரமாயை நம
ஓம் ரஜன்யை நம
ஓம் ரூஜாயை நம
ஓம் ரூபவத்யை நம
ஓம் ருத்ராண்யை நம
ஓம் ரூபலாவண்யை நம
ஓம் துர்வாசாயை நம
ஓம் துர்க்ககாயை நம
ஓம் துர்ப்ரகம்யயை நம
ஓம் துர்க்காயை நம
ஓம் குப்ஜாயை நம
ஓம் குணபாசநாயை நம
ஓம் குர்விண்யை நம
ஓம் குருதர்யை நம
ஓம் கோநாயை நம
ஓம் கோரகசாயை நம
ஓம் கோஷ்ட்யை நம
ஓம் கோசிவாயை நம
ஓம் பேருண்டாயை நம
ஓம் நிஷ்களங்காயை நம
ஓம் நிஷ்பரிக்ரகாயை நம
ஓம் நிஷ்கலாயை நம
ஓம் நீலலோகிதாயை நம
ஓம் கிருஷ்ணமூர்த்தாயை நம
ஓம் கிருஷ்ணாயை நம
ஓம் கிருஷ்ணவல்லபாயை நம
ஓம் கிருஷ்ணாம்பராயை நம
ஓம் சதுர்வேதரூபிண்யை நம
ஓம் சண்டப்ரஹரணாயை நம
ஓம் சனத்யாயை நம
ஓம் சந்தோபத்ந்யை நம
ஓம் ப்ராமிண்யை நம
ஓம் ப்ராமாயை நம
ஓம் ப்ரமண்யை நம
ஓம் ப்ரமர்யை நம
ஓம் அஜராயை நம
ஓம் அஹங்காராயை நம
ஓம் அக்நிஷ்டோமாயை நம
ஓம் அஷ்வமேதாயை நம
ஓம் விதாயாயை நம
ஓம் விபாவசேயை நம
ஓம் விநகாயை நம
ஓம் விஷ்வரூபிண்யை நம
ஓம் சபா ரூபிண்யை நம
ஓம் பக்ஷ ரூபிண்யை நம
ஓம் அகோர ரூபிண்யை நம
ஓம் த்ருடி ரூபிண்யை நம
ஓம் ரமண்யை நம
ஓம் ரங்கன்யை நம
ஓம் ரஜ்ஜன்யை நம
ஓம் ரண பண்டிதாயை நம
ஓம் வ்ருசப்ரியாயை நம
ஓம் வ்ருசாவர்தாயை நம
ஓம் வ்ருசபர்வாயை நம
ஓம் வ்ருசாக்ருத்யை நம
ஓம் நிர்குணாயை நம
ஓம் நிர்மலாயை நம
ஓம் நித்யாயை நம
ஓம் பராயை நம
ஓம் பாராயை நம
ஓம் பரமாத்னேயை நம
ஓம் பரந்தபாயை நம
ஓம் தோஷநாசின்யை நம
ஓம் வியாதிநாசின்யை நம
ஓம் விக்ரநாசின்யை நம
ஓம் பாபநாசின்யை நம
ஓம் மோகபகாயை நம
ஓம் மதாபகாயை நம
ஓம் மலா பகாயை நம
ஓம் மூர்ச்சா பகாயை  நம
ஓம் மகா கர்ப்பாயை நம
ஓம் விஷ்வ கர்ப்பாயை நம
ஓம் மாலிண்யை நம
ஓம் த்யான பராயை நம
ஓம் ரேவாயை நம
ஓம் உதும்பராயை நம
ஓம் தீர்த்தாயை நம
ஓம் பாதாலகாயை நம
ஓம் காந்தாயை நம
ஓம் வசூதாயை நம
ஓம் வைதேஹ்யை நம
ஓம் நிராமயாயை நம
ஓம் தயாலயாயை நம
ஓம் ஆநந்தரூபாயை நம
ஓம் விஷ்ணுவல்லபாயை நம
ஓம் விஷ்ணுஅம்சியை நம
ஸ்ரீ வாராகி அஷ்ட சதஸ்தோத்ரம் ஸம்பூர்ணா.
பூஜை: பீஜங்களுடன் கூடிய தேவிநாமம் கூறி - சமர்ப்பியாமி சொல்லி - தூப - தீப - நைவேத்திய - தாம்பூலம் - சமர்ப்பிக்க வேண்டும்.
துதி: க்ரூஹீதோக்ர மகாசக்ரே
தம்ஸ்ட்ரோத் த்ருத வசுந்தரே
வராஹ ரூபிணி
நாராயணி நமோஸ்துதே.
























































































































































































































































































































































 சப்தகன்னியர்
இந்திராணி
அக்டோபர் 08,2012

அ-
+
Temple images
பிராம்மி, மாகேசுவரி, கவுமாரி, நாராயணி, வராகி, இந்திராணி, சாமுண்டி (காளி) ஆகியோர் சப்தகன்னியர் எனப்படுவர்.
இதில் ஒவ்வொரு கன்னியரும் ஒவ்வொரு சிவாலயங்களுக்கு சென்று சிவனின் அருளாசி பெற்றுள்ளனர். சப்தகன்னியரில் இந்திராணி வழிபட்ட தலம் நாகப்பட்டினம் மாவட்டம், தருமபுரம் அருள்மிகு அபயாம்பிகை சமேத தருமபுரீசுவரர் திருக்கோயில் ஆகும். குருஞானசம்பந்தரால் நிறுவப்பெற்ற புகழ்பெற்ற தருமை ஆதீனம் இங்குள்ளது. தருமராஜா பூஜித்தது. எமன் சிவபிரானை வழிபடும் திருவுருவங்கள் வழிபாட்டில் உள்ளன. பதினெண்கரங்களோடு கூடிய துர்கை ஆலயம் இங்கு உள்ளது.
சந்திரனின் சாப நீக்கம் பெற்ற தலமும் கூட, மனோகாரகன் எனும் ஜோதிடத்தில் குறிப்பிடப்படும் சந்திரன், மனிதனின் மனத்தைக் குறிப்பிடுபவன். கலைகள், கற்பனைத் திறன் இவையெல்லாம் சந்திரனைப் பொறுத்தே அமைகின்றன. அந்த சந்திரனுக்கு அருள்பாலித்த பெருமான், அருள்மிகு சந்திரமவுலீஸ்வரர். பசுபதி கோயில் எனும் ஊரில் சுயம்பு லிங்கமாகத் தோன்றி கோயில் கொண்டுள்ளார். தஞ்சை-கும்பகோணம் சாலையில் பசுபதி கோயில் ஊருக்கு முன்பாக, சாலையிலிருந்து சற்று விலகி கிழக்குநோக்கி கம்பீரமாக அமைந்துள்ளது ஆலயம். அம்பாள் ஆதி மூல அம்பிகையாக, மகாராணியாக, ராஜராஜேஸ்வரியாக அருள்பாலித்துக் கொண்டிருக்கிறாள். சப்த மங்கை தலங்களுள் பல்வேறு சிறப்புகளைப் பெற்று தனித்து விளங்குகிறது இந்தத் தாழமங்கை.
சப்த மங்கையர்களின் இந்திராணி எனப்படும் தாழமங்கை, தங்கியிருந்து வழிபட்ட சிவாலயம். அதனாலேயே கோயிலின் பெயர்கூட, தாழமங்கை சந்திரமவுலீஸ்வரர் சிவாலயம் என்றுதான் இன்றுவரை பேச்சு வழக்கில் உலவுகிறது.
இந்திராணி, இந்திரன் அம்சம் உடையவள். இரண்டு கண்கள் உடையவள். அழகிய ஆடை பூண்டவள். வரதம், அபயம் உடையவள். யானைக்கொடி, யானை வாகனம் உடையவள்.
மயிலாடுதுறை செம்பொனார் கோயில் பேருந்துச்சாலையில் உள்ளது.
காலை 6 மணி முதல் 10 மணி வரையிலும், மாலை 6 மணி முதல் 8 மணி வரையிலும் நடை திறந்திருக்கும்.
இந்திராணி - ரூபலக்ஷ்ணம் (திருவுருவ அமைப்பு)
இவள் இந்திரனின் சக்தி மகேந்திரி என்றும் - ஐந்திரி என்றும் அழைக்கப்படுவாள். ஒரு முகமும், நான்கு கரங்களும் உடையவள். கீழ் இரு கரங்களையும், அபயவரதமாகக் கொண்டவள். மேல் வலக்கையில் - சக்தியையும் - இடக்கையில் அம்பையும் ஆயுதமாகக் கொண்டு காட்சி கொடுப்பவள். ஆயிரம் கண்களை அகநோக்கில் உடையவள். இரத்தின கிரீடம் அணிந்திருப்பவள் யானை வாகனத்தின் மேல் அமர்ந்திருப்பாள் பொன்னிறமேனியள். இந்திரன் தேவலோக அரசன் - எனவே இவள் அரசி. அரச சம்பத்தெல்லாம் இந்த சக்தியின் அனுக்கிரகத்தால் ஏற்படுகிறது என்று லகுஸ்துதி சுலோகம் கூறும் இவளை வணங்கினால் சொத்து சுகம் சேரும் உபாசித்தால் - பதவிகளை அடையலாம்!
இந்திராணி பாடல்: கரம் விராய வச்சிரக் கவின்பெற்ற இந்திராணி
தரம் விராயபல்லுயிர்க்கு நன்கருள் திருத் தரும
புரம் விராய அற்புதன் அடிப்பூசனை புரிந்தாள்
பரம் விராய பல் வரங்களும் பண்புறப் பெற்றாள்.
இந்திராணி ஐந்தரி பூஜா
ஆசன மூர்த்தி மூலம்: ஓம் - ஹ்ரீம் - இந்திராணி - ஆசனாயயாய - நம:
ஓம் - ஹ்ரீம் - இம் - இந்திராணி மூர்த்தியை - நம:
ஓம் - ஹ்ரீம் - தம் - இம் - இந்திராணியே - நம:
காயத்ரி: ஓம் - கஜத்வஜாயை வித்மஹே;
வஜ்ரஹஸ்தாயை தீமஹி;
தந்நோ இந்த்ராணி ப்ரசோதயாத்
தியான ஸ்லோகம்: ஏக வக்த்ராம் த்விநேத் ராம்;
ச சதுர்புஜ ஸமன் விதாம்;
ஸ ரத்ன மகுடோபேதாம்,
ஹேமவர்ண ஸ்வரூபிணீம்;
வராபயகராம், போஜாம்,
வஜ்ரம் சக்திம் ச தாரிணீம்;
மாஹேந்த்ரீம் மாதரம்,
வந்தே கஜவாஹண ஸம்ஸ்த்திதாம்.
மூல மந்திரம்: ஓம் - ஹ்ரீம் - இம் - வம் -இந்திராணியை - நம :
அர்ச்சனை: ஓம் இந்த்ராயை நம
ஓம் தேவேந்திராயை நம
ஓம் மகேந்த்ரியாயை நம
ஓம் ஐராவதரூடாயை நம
ஓம் சகஸ்ரநேத்ராயை நம
ஓம் சதமன்யவேயை நம
ஓம் புரந்தராயை நம
ஓம் த்ரிலோகாதிபதாயை நம
ஓம் ஸ்ரீமதே நம
ஓம் சசிநாமாயை நம
ஓம் வாஸ்தோபதாயை நம
ஓம் திக்பாலநாயகியை நம
ஓம் கர்மதேனு சமன்விதாயை நம
ஓம் வாச வாயை நம
ஓம் சத்ய வாதிநேயை நம
ஓம் சூப்ரீ தாயை நம
ஓம் வஜ்ரதேகாயை நம
ஓம் வஜ்ரஹஸ்தாயை நம
ஓம் பஷணாயை நம
ஓம் அநகாயை நம
ஓம் புலோமஜிதேயை நம
ஓம் பலிதர்ப்பக்நாயை நம
ஓம் யக்ஷ சேவ்யாயை நம
ஓம் வேதபர்வநாயை நம
ஓம் இந்த்ரப்ரியாயை நம
ஓம் வாலி ஜநகாயை நம
ஓம் புண்யாத்மநேயை நம
ஓம் விஷ்ணு பக்தாயை நம
ஓம் ருத்ர பூஜிதாயை நம
ஓம் ராஜேந்திராயை நம
ஓம் கல்பத்தருமேசாயை நம
ஓம் நமுச்சயேயை நம
ஓம் யஞ்ஞப்ரீதாயை நம
ஓம் யஞ்ஞசோசநாயை நம
ஓம் மாந்தாயயை நம
ஓம் தாந்தாயயை நம
ஓம் ருது தாம்நேயை நம
ஓம் சத்யாத்மநேயை நம
ஓம் புருஷ சூக்தாயை நம
ஓம் புண்டரீகாஷாயை நம
ஓம் பீதாம் பராயை நம
ஓம் மகா பராயை நம
ஓம் ப்ரஹ்மவித்யாயை நம
ஓம் சர்வாபரணபூசிதாயை நம
ஓம் சுப ரூபாயை நம
ஓம் சந்த்ரவர்ணாயை நம
ஓம் களாதராயை நம
ஓம் இந்த்ரரூபிண்யை நம
ஓம் இந்த்ர சக்த்யை நம
ஓம் சுந்தர்யை நம
ஓம் லோக மாத்ரேயை நம
ஓம் சுகாசனாயை நம
ஓம் காஞ்ச நாயை நம
ஓம் புஷ்பஹராயை நம
ஓம் பதிவ்ரதாயை நம
ஓம் ஹேமாவத்யை நம
ஓம் பஹாவர்ணாயை நம
ஓம் பங்கள காரிண்யை நம
ஓம் தயாரூபிண்யை நம
ஓம் பரா தேவ்யை நம
ஓம் சித்திதாயை நம
ஓம் திவ்யாயை நம
ஓம் சத்யப்ரபாயை நம
ஓம் சத்யோசாதாயை நம
ஓம் யோகின்யை நம
ஓம் பாபநாசின்யை நம
ஓம் இந்த்ர லோகாயை நம
ஓம் சாம்ராஜ்யாயை நம
ஓம் வேத சாராயை நம
ஓம் அம்ரகாணாம்யை நம
ஓம் அணிமாயை நம
ஓம் சுப ரூபாயை நம
ஓம் புராதன்யை நம
ஓம் ஹேமபூசணாயை நம
ஓம் சர்வ நாயகியை நம
ஓம் கப காயை நம
ஓம் உச்சைஸ்வர ரூடாயை நம
ஓம் சிந்தாமணி சமாயதாயை நம
ஓம் அஹிப்ரியாயை நம
ஓம் தர்மஸ்ரீலாயை நம
ஓம் சர்வ நாயகாயை நம
ஓம் நகாராயை நம
ஓம் காஸ்யபேயாயை நம
ஓம் ஹராயை நம
ஓம் ஜயந்த்ஜநகாயை நம
ஓம் உபேந்தபூர்வசாயை நம
ஓம் மகவதேயை நம
ஓம் பர்ஜன்யாயை நம
ஓம் சூதா ஹாராயை நம
ஓம் திவ்ய ரத்ன கிரீடாயை நம
ஓம் ஸ்ரீயவர்த்தநாயை நம
ஓம் ஹரிஹராயை நம
ஓம் சண்டவிக்ரமாயை நம
ஓம் வேதாங்காயை நம
ஓம் பாகசாசநாயை நம
ஓம் அதிதிநந்தநாயை நம
ஓம் ஹவிர்போக்த்ரேயை நம
ஓம் சகல பக்ஷப்ரபேதாயை நம
ஓம் நிர்மலா சயாயை நம
ஓம் ஆகண்டலாயை நம
ஓம் மருத்வதேயை நம
ஓம் மகா மாயினேயை நம
ஓம் பூர்ண சந்த்ராயை நம
ஓம் லோகாத்யக்ஷõயை நம
ஓம் சூராத்யக்ஷõயை நம
ஓம் குணத்ரயாயை நம
ஓம் ப்ராண சக்த்யை நம
ஓம் ஐந்த்ரியாயை நம
ஸ்ரீஇந்திராணி அஷ்டசத ஸ்தோத்ரம் ஸம்பூர்ணா.
பூஜை: பீஜங்களுடன் கூடிய தேவிநாமம் கூறி - சமர்ப்பியாமி சொல்லி - தூப - தீப - நைவேத்திய - தாம்பூலம் - சமர்ப்பிக்க வேண்டும்.
துதி: கிரீடினி மஹா வஜ்ரே
ஸஹஸ்ர நயனோ ஜ்வலே
வ்ருத்ர ப்ராணஹரே சைந்த்ரி
மகேந்த்ரி நமோஸ்துதே.


















































































































































































































 சப்தகன்னியர்
சாமுண்டி
அக்டோபர் 08,2012

அ-
+
Temple images
பிராம்மி, மாகேசுவரி, கவுமாரி, நாராயணி, வராகி, இந்திராணி, சாமுண்டி (காளி) ஆகியோர் சப்தகன்னியர் எனப்படுவர்.
சப்தகன்னியரில் சாமுண்டி வழிபட்ட தலம் நாகப்பட்டினம் மாவட்டம், வள்ளலார் கோயில் ஞானாம்பிகை சமேத வதாரண்யேஸ்வரர் திருக்கோயில் ஆகும். . தருமை ஆதீன அருளாட்சியில் விளங்குவது. சாமுண்டி சிவன் அம்சம் உடையவள். மூன்று கண்களும் சூலம், கட்கம், அம்பு, சக்கரம், பாசம், பலகை, வில், சங்கு ஆகியன கொண்ட எட்டுக்கைகளும் உடையவள். சடாமகுடம் உடையவள். மகிடவாகனம் உடையவள்.
மயிலாடுதுறை நகரில்  வள்ளலார் கோயில் அமைந்துள்ளது.
மூலவர்: வதாரண்யேஸ்வரர், (வள்ளலார்)
அம்மன்: ஞானாம்பிகை
சிறப்பு: சப்த கன்னியரில் சாமுண்டி வழிபட்ட தலம்
ஊர்: மயிலாடுதுறை
மாவட்டம்: நாகப்பட்டினம்
தல வரலாறு: பார்வதிதேவி மயில் உருவம் கொண்டு மயிலாடுதுறையில் உள்ள மாயூரநாதரை வழிபாடு செய்து வந்தாள். அவளுக்கு அருள்பாலிக்க சிவன் ரிஷபத்தில் வந்தார். நீண்ட தூரத்தை குறைந்த நேரத்தில் கடந்த ரிஷபத்திற்கு, தன்னால் தான் சிவபெருமானால் இவ்வளது தூரத்தை விரைவாக கடக்க முடிந்தது என்ற ஆணவம் ஏற்பட்டது. இதை அறிந்த சிவன், நந்தியின் ஆணவத்தை அடக்க தமது திருவடியின் பெருவிரலால் சிறிது அழுத்தினார். உடனே நந்திதேவர் பாதாள உலகத்திற்கு போய்விட்டார். தனது தவறை உணர்ந்த நந்தி, தனக்கு இனிமேல் ஆணவம் ஏற்படாதவாறு ஞான உபதேசம் செய்ய இறைவனை வேண்டினார். அதற்கு சிவபெருமான்,நந்தி! இவ்வுலக மக்கள் அனைவரும் தங்களது பாவம் தீர கங்கையில் நீராடுவர். இந்த பாவங்களையெல்லாம் சேர்த்து கொண்ட கங்கை, தன் பாவத்தை ஐப்பசி மாத அமாவாசையன்று இத்தல காவிரியில் நீராடி போக்கி கொள்ளும். அப்போது காவிரியின் வடகரையில் தோன்றி, குருவாக இருந்து உனக்கு ஆணவத்தை அடக்கும் முறை பற்றி உபதேசம் செய்வேன்,என்றார். இதனால் இத்தலத்தில் ரிஷபத்தின் மீது அமர்ந்த கோலத்தில் மேதா தெட்சிணாமூர்த்தி காட்சியளிக்கிறார். குருவின் முன்னால் நந்தி: சிவசன்னதி, அம்மன் சன்னதியின் முன்பு தான் நந்தியைப் பார்த்திருப்பீர்கள். ஆனால் இத்தலத்தில் மட்டும் தான் தெட்சிணாமூர்த்தி சன்னதி முன்பு நந்தி இருப்பதைக் காண முடியும். இவரை தரிசித்தால் ஆணவம் நீங்கி முக்தி கிடைக்கும் என்பது ஐதீகம்.
தல சிறப்பு: இத்தலம் காசிக்கு இணையானது என்றும், கைலாயத்திற்கு நிகரானது என்றும் புராணங்கள் கூறுகிறது.அன்னை பார்வதிதேவி சண்ட, முண்ட அரக்கர்களை வதம் செய்வதற்காக சப்த கன்னியர்களாக வடிவெடுத்தாள். அவர்களுக்கு பிரம்மஹத்தி தோஷம் ஏற்பட்டது. தங்கள் தோஷம் நீங்க ஏழு சிவாலயங்களை தேர்ந்தெடுத்து பூஜை செய்து தோஷம் நீங்க பெற்றனர். இவர்களில் சாமுண்டி வழிபட்ட தலம் வள்ளலார் கோயில் ஆகும். சாமுண்டி இங்கு அஷ்ட புஜ துர்க்கையாக அருள்பாலிக்கிறாள். ஞானாம்பிகை அம்மன் சன்னதியை சுற்றிலும் சப்தகன்னியரின் சுதை சிலைகள் உள்ளன. சித்ரா பவுர்ணமியன்று இங்கு சண்டிஹோமம் நடக்கிறது.
போன்: 04364-242 996
சாமுண்டி - ரூபலக்ஷ்ணம் (திருவுருவ அமைப்பு)
இவள் ருத்ர அம்சம்; சண்ட முண்டர்களைச் சாய்ப்பதற்காக எடுத்த அவதாரம். ஒரு சிரமும், நான்கு கரமும், மூன்று நேத்திரங்களும் உடையவள். கோரைப் பற்களும், கருப்பான மேனியும் படைத்தவள். புலித்தோலை உடுத்தி - முண்ட மாலை அணிந்திருப்பாள். கீழ் வலக்கரத்தில் முத்தலைச் சூலமும், இடக்கையில் முண்டமும் கொண்டிருப்பாள். மேல் வலக்கரத்தில் கத்தியும் - இடக்கரத்தில் கபாலமும் ஏந்தியிருப்பாள். சவத்தின் மேல் அமர்ந்து, பயங்கர முகத்துடன் காட்சி நல்குவாள். இவள் வெற்றித் தேவதை, கோப ரூபிணி. எதிரிகளை வெற்றி கொள்ள எதிரிகளிடமிருந்து தன்னைக் காப்பாற்றிக் கொள்ள இவளை வழிபட வேண்டும். இவளை உபாசித்தால் கணவன் மனைவிக்கும், மனைவி கணவனுக்கும் கட்டுப்பட்டு நடப்பர்!
சாமுண்டி பாடல் : பாரமேருவிற் பரமனைப் பரவும் உத்தரமா
யூரநாதனை உம்பர்கள் தம்பெருமானைத்
தீரமேதரு சாமுண்டி பூசனை செய்து
வாரம்மேய பல்வரங்களும் பெற்றுளம் மகிழ்ந்தாள்.
சாமுண்டி பைரவி பூஜா
ஆசன மூர்த்தி மூலம்: ஓம் - ஹ்ரீம் - சாமுண்டி - ஆசனாயயாய - நம:
ஓம் - ஹ்ரீம் - சம் - சாமுண்டி மூர்த்தியை - நம:
ஓம் - ஹ்ரீம் - க்ரூம் - சம் - சாமுண்டியை - நம:
காயத்ரி: ஓம் - பிசாச த்வஜாயை வித்மஹே;
சூல ஹஸ்தாயை தீமஹி;
தந்நோ, காளீ ப்ரசோத யாத்
தியான ஸ்லோகம்: சதுர்புஜா த்ரிநேத்ராசரக்தவர்ண ஊர்த்வகேசிகா;
கபால சூல ஹஸ்தா;
ச வரதாபய பாணிநீ;
ஸிரோமாலா உபவீதா ச
பத்ம பீடோ பரிஸ்திதா;
வ்யாக்ர சர்மாம்பர தரா
வட வ்ருக்ஷ ஸமாச்ரிதா;
வாம பாத ஸ்திதா, ஸர்வா
ஸவ்ய பாத ப்ரலம்பிதா;
நவாமி சாமுண்டா தேவிம்
மூல மந்திரம்: ஓம் - ஹ்ரீம் - க்ரூம் - சம் -சாமுண்டியை - நம :
அர்ச்சனை: ஓம் சாமுண்டாயை நம
ஓம் மாங்கல்யாயை நம
ஓம் குலவர்த்திந்யை நம
ஓம் மேர சயங்கர்யை நம
ஓம் ப்ரஹ்ம சாரிண்யை நம
ஓம் பர்ணசந்த்ரநிதாயை நம
ஓம் அஷ்டபுஜாயை நம
ஓம் த்ரிதசபூஜிதாயை நம
ஓம் மகிசாசுநாசின்யை நம
ஓம் ஜயவிஜயாயை நம
ஓம் வரதசித்தியாயை நம
ஓம் காள்யவர்ணாயை நம
ஓம் மாம்சப்ரியாயை நம
ஓம் பாபபரிண்யை நம
ஓம் கீர்த்தியாயை நம
ஓம் பந்தநாசிந்யை நம
ஓம் மோகநாசிந்யை நம
ஓம் ம்ருத்யுநாசிந்யை நம
ஓம் பயநாசிந்யை நம
ஓம் ராஜ்யதாயை நம
ஓம் பவமோசந்யை நம
ஓம் ஆர்யாயை நம
ஓம் ஆத்யாயை நம
ஓம் த்ரிநேத்ராயை நம
ஓம் பிநாகதாரிண்யை நம
ஓம் சண்டகண்டாயை நம
ஓம் சித்தரூபாயை நம
ஓம் சர்வமக்த்ரம்யை நம
ஓம் அநந்தாயை நம
ஓம் சதாகத்யை நம
ஓம் அபர்ணாயை நம
ஓம் பாடலாவத்யை நம
ஓம் வந்துர்க்காயை நம
ஓம் மாதங்க்யை நம
ஓம் வராஹ்யை நம
ஓம் ப்ராஹ்ம்யை நம
ஓம் ஐந்தர்யை நம
ஓம் கௌமார்யை நம
ஓம் மகேச்வர்யை நம
ஓம் வைஷ்ணவ்யை நம
ஓம் விமலாயை நம
ஓம் இலக்ஷ்ம்யை நம
ஓம் புருஷாக்ருத்யை நம
ஓம் உதகர்சின்யை நம
ஓம் நித்யாயை நம
ஓம் புத்திதாயை நம
ஓம் நிசும்பசும்ப பகந்யை நம
ஓம் மகிசாசுரமர்திந்யை நம
ஓம் மதுகைடபஹர்ந்யை நம
ஓம் சர்வாசுர விநாசாயை நம
ஓம் ப்ரௌடாயை நம
ஓம் அப்ரௌடாயை நம
ஓம் பலப்ரதாயை நம
ஓம் மகோத்திர்யை நம
ஓம் அக்நிசுவலாயை நம
ஓம் ரௌத்ரமுக்யை நம
ஓம் முண்ட கண்டாயை நம
ஓம் பத்ர காள்யை நம
ஓம் சிவதூத்யை நம
ஓம் காத்யாயந்யை நம
ஓம் சாகம்பர்யை நம
ஓம் குண்டல்யை நம
ஓம் விச்வ ரூபிண்யை நம
ஓம் ஹ்ரீங்கார்யை நம
ஓம் அசலாயை நம
ஓம் சூஷ்மாயை நம
ஓம் சர்வவர்ணாயை நம
ஓம் மதூசித்யை நம
ஓம் ஸ்வாஹாயை நம
ஓம் த்ரிபுராந்தகாயை நம
ஓம் த்ரி சக்தியை நம
ஓம் திரைலோக்யவாசின்யை நம
ஓம் அத்ரி சூதாயை நம
ஓம் நிர்க் குணாயை நம
ஓம் காமிண்யை நம
ஓம் சர்வகர்மபலப்ரதாயை நம
ஓம் சர்வ தீர்த்தமயாயை நம
ஓம் புண்யாயை நம
ஓம் அயோகிசாயை நம
ஓம் ஆத்மரூபிண்யை நம
ஓம் சரண் அருளாயை நம
ஓம் சௌபாக்யதாயை நம
ஓம் ஆரோக்யதாயை நம
ஓம் பக்தவத்சலாயை நம
ஓம் கட்ககரத்தாயை நம
ஓம் திவ்யாம்பரதாயை நம
ஓம் நாராயண அம்சாயை நம
ஓம் பாத்ரஹஸ்தாயை நம
ஓம் குண்டல பூர்ணகாணாயை நம
ஓம் க்ருஷ்ணாயை நம
ஓம் பாச தாரிண்யை நம
ஓம் தநுர்தாரிண்யை நம
ஓம் சக்ர தாரிண்யை நம
ஓம் கண்டாதாரிண்யை நம
ஓம் கேடக பாணியேயை நம
ஓம் திரிசூலகரத்தாயை நம
ஓம் கோபரூபிண்யை நம
ஓம் ருத்ரதாண்டவாயை நம
ஓம் வாக்கிஸ்வரி அம்சியே நம
ஓம் வாகீஸ்வரியாயை நம
ஓம் ரௌத்ரி கோபாயை நம
ஓம் வைஷ்ணவி ரூபாயை நம
ஓம் ப்ரம்மசாஸ்ததாயை நம
ஓம் அபிராமியாயை நம
ஓம் ப்ரத்தியங்கராயை நம
ஓம் துர்க்காசாயாயை நம
ஓம் பைரவி அம்சாயை நம
ஓம் சண்டமுண்டசம் ஹாராயை நம
ஸ்ரீ சாமுண்டி அஷ்டசத ஸ்தோத்ரம் ஸம்பூர்ணா.
பூஜை: பீஜங்களுடன் கூடிய தேவிநாமம் கூறி - சமர்ப்பியாமி சொல்லி - தூப - தீப - நைவேத்திய - தாம்பூலம் - சமர்ப்பிக்க வேண்டும்.
துதி: தம் ஷட் ராக ரால வதனே
சிரோமாலா விபூஷனே
சாமுண்டே முண்ட மதனே
அம்பிகே நமோஸ்துதே.





























































































































































































































































































































































































































































































கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக