வியாழன், 22 டிசம்பர், 2011

சனிப் பெயர்ச்சி பலன்கள் - பகுதி - 1

ராதே கிருஷ்ணா 23 - 12 - 2011


சனிப் பெயர்ச்சி பலன்கள் பகுதி - 1 


 சனிப்பெயர்ச்சி பலன்கள்
temple
தலைமை நீதிபதி  சனி பகவான்: மனிதன் யாருக்கு பயப்படுகிறானோ இல்லையோ, சனி பகவானுக்கு பயப்பட்டே ஆக வேண்டும். ஏனென்றால் இவரிடமிருந்து யாரும் தப்ப முடியாது. சிவனா இருந்தாலும் ... மேலும்

temple
நவகிரக மண்டலத்திலுள்ள சனிக் கோளின் வானவியல் ஆய்வு
குரு கிரகத்துக்கு அடுத்து பெரிய கிரகம் சனி. இதன் குறுக்களவு சுமார் 73,000 மைல். சனி வளையம் என்று கூறப்படும் வளையத்தின் ... மேலும்

temple
சூரியனுடனும் (ஆன்மா), சந்திரனுடம் (மனம்) இணைந்திருப்பவர் சனி பகவான். சூரியனின் சாரம் சனி; சூரினிடமிருந்து வெளிவந்தவர்; சூரியனின் புதல்வன் என்றும் ஜோதிடம் தெரிவிக்கிறது. ... மேலும்

temple
சனிபகவானும், விநாயகரும்: ஒருசமயம், சனி பகவான் விநாயகரைப் பிடிக்க வந்தார். இதனை அறிந்த விநாயகர், தன் முதுகில் நாளை வா என்ற வாசகத்தை எழுதி வைத்துக்கொண்டு முதுகைப் பார் ... மேலும்

temple
கீழே கொடுக்கப்பட்டுள்ள ஸ்லோகங்களைக் கூறுவதன் மூலம் சனிபகவானின் பரிபூரண அருளைப் பெறலாம்.
சனீஸ்வர காயத்ரி
ஓம் சனைச்சராய வித்மஹே
சாயாபுத்ராய தீமஹி
தந்நோ: ... மேலும்

temple
திருநள்ளாற்றுத் திருத்தலம்: செந்நெல்லும், செங்கரும்பும் செழித்து வளரும் சோழவள நாட்டிலே - காவிரி ஆற்றின் தென்கரையிலே திருநள்ளாறு என்னும் இத்திருத்தலம் அமைந்துள்ளது. ... மேலும்

temple
சனிதோஷம் விலக வழி: சனிபகவானுக்குரிய இலை வன்னி இலை. இந்த இலையால் நவக்கிரக மண்டபத்திலுள்ள சனி பகவானுக்கு அர்ச்சனை செய்ய வேண்டும். உங்கள் ஊர் கோயில்களில் வன்னிமரம் வைக்க ... மேலும்

temple
மேஷம்(55/100)  கண்டச்சனி வந்தாச்சு!
மற்றவர்களின் நல்வாழ்விற்காக தங்கள் பங்கை முன்வந்து தரும் மேஷராசி அன்பர்களே!  உங்கள் ராசிக்கு ஆறாம் இடத்தில் அனுகூலமாக இருந்த ...மேலும்

temple
துலாம் (50/100) ஏழரையின் உச்சத்தை எப்படியோ சமாளியுங்க!
தோற்றப் பொலிவின் மூலம் பிறரை வசீகரிக்கும் துலாம்ராசி அன்பர்களே!
உங்கள் ராசிக்கு பன்னிரெண்டாம் ... மேலும்



















































சனி பகவானின் பிறப்பு!

தலைமை நீதிபதி  சனி பகவான்:மனிதன் யாருக்கு பயப்படுகிறானோ இல்லையோ, சனி பகவானுக்கு பயப்பட்டே ஆக வேண்டும். ஏனென்றால் இவரிடமிருந்து யாரும் தப்ப முடியாது. சிவனா இருந்தாலும் சரி...எவனாக இருந்தாலும் சரி...சனிபகவானின் தீர்ப்பு ஒரே மாதிரியாகத்தான் இருக்கும். எனவே தான் இவரை தலைமை நீதிபதி என்பார்கள். இவர் தண்டிக்கும் தெய்வம் அல்ல. திருத்தும் தெய்வம். இவர் சோதனை கொடுத்து நம்மை திருத்தி, நல்வழிப்படுத்தி நமக்கு நன்மை மட்டுமே செய்பவர். ஆனால் மக்கள் இதை சரியாக புரிந்துகொள்ளாமல், இவரைக்கண்டு பயப்படுகிறார்கள். தவறு செய்தவன் தான் பயப்பட வேண்டும். தவறு செய்யாதவர்கள் சனியினால் தோஷம் ஏற்பட்ட காலங்களில், இவருக்கு சனிக்கிழமைகளில் எள் விளக்கேற்றி வழிபட வேண்டும். சனிபகவானை வணங்கும் போது நேரிடையாக அவரைப் பார்க்காமல், சற்று பக்கவாட்டில் நின்று வழிபட வேண்டும் என்று சாஸ்திரம் சொல்கிறது. ஏனெனில், சனியின் பார்வை நேரிடையாக நம்மீதுபடக்கூடாது என்ற கருத்து நிலவுகிறது. என்னதான் கோயில் கோயிலாக சென்று சனிபகவானை சுற்றி வழிபட்டாலும், நாம் உண்மையான மற்றும் மற்றவர்களுக்கு தீங்கிழைக்காத வாழ்க்கை வாழ்ந்தால் எந்த தோஷத்திலிருந்தும் தப்பிக்கலாம். கிரகங்களுள் ஈஸ்வரப் பட்டம் பெற்ற ஒரே கிரகம் என்ற பெருமைக்கு உரியவர், சனிபகவான் மட்டுமே. தன்னை வழிபடுவோரின் வாட்டங்களைப் போக்கும் வல்லமை இவருக்கு உண்டு.

சனி பகவானின் பிறப்பு: சனீஸ்வர பகவான், சூரிய பகவானின் குமாரர். இவருடைய மாதா, சாயா தேவியார்! சாயாதேவிக்கு நிஷுபா, பிருத்வீ என்னும் பல பெயர்கள் உண்டு. சூரிய பகவானுக்கும், சாயாதேவிக்கும் புதல்வராக அவதரித்த சனீஸ்வர பகவானின் புராண வைபவம் நமக்கு பேரருளையும், செல்வத்தையும் அளிக்கும். திருப்பாற் கடலில் ஸ்ரீமந்நாராயணன் தேவி, பூதேவி சமேதராய் - திருவாழி திருச் சங்குடன், கவுஸ்துப, வனமால கேயூர கிரீடங்களுடன் சேவை சாதிக்கிறார். இவரின் நாபிக் கமலத்தில் நின்று சதுர்முக பிரம்மன் அவதரித்தார். பிரம்மதேவன், விஷ்ணுவின் ஆணைப்படி பிரபஞ்சங்களை சிருஷ்டிக்கும் கர்த்தாவாக சத்தியலோகத்தில் எழுந்தருளினார். சிருஷ்டியின் மகிமையால் பிரம்மதேவன் மரீசி, அத்திரி, ஆங்கிரீஸ், புலஸ்தியர், புலகர், கிருது, வசிஷ்டர் என்னும் ஞானத் தவயோகியர்களைத் தோன்றச் செய்தார். அந்த மாமுனிவர்கள் சப்தரிஷிகள் என்னும் திருநாமத்தைப் பெற்றனர். சப்தரிஷிகளைப் படைத்த பிரம்மதேவன் தக்ஷப் பிரஜாபதி என்ற மகரிஷியையும் உலக ÷க்ஷமத்திற்காக சிருஷ்டித்து அருளினார். சப்தரிஷிகளில் மூத்தவரான மரீசி மகரிஷி. சம்பூதி என்னும் கன்னிகையைத் திருமணம் செய்து கொண்டார். அவர்கள் இருவருக்கும் காசியப முனிவர் குமாரராகப் பிறந்தார். காசியப முனிவர், தக்ஷபிரஜாபதியின் குமாரத்தியான அதிதி என்பவளைத் திருமணம் செய்துக் கொண்டார். அதிதிக்கும், காசியப முனிவருக்கும் அநேக புத்திரர்கள் ஜனித்தார்கள். அவர்கள் நல்ல தேஜஸைப் பெற்றிருந்தார்கள். அவ்வாறு அத்யந்த தேஜஸ் பொருந்திய காசியப புத்திரர்கள் துவாதச ஆதித்தியர்கள் என்ற திருநாமத்தைப் பெற்றனர். ஆதித்ய குமாரர்களில் மூத்தவர்தான் சூரிய பகவான்!
சூரிய பகவான் அழகானவர் - அவனிக்கு ஒளியாகத் திகழ்பவர் - சுவர்ண சொரூபமானவர் - பரமாத்மரூபிணியானவர் - தேஜோ மயமானவர்-ஆரோக்கியம், ஐசுவர்யம், கீர்த்தி, வெற்றி அனைத்தையும் அருளுபவர் - ஆயிரம் கிரணங்களைக் கொண்டவர் - சக்கராதி கிரகங்களுக்குத் தலைவன் - திவ்யமான ஏழு பச்சைக் குதிரைகள் பூட்டப் பெற்ற பொன் வண்ணத் தேரைச் செலுத்துபவர் - குரு குகனுக்கு ப்ரீதியானவர் என்றெல்லாம் போற்றப்படும் நவக்கிரக நாயகனாக விளங்குகிறார் சூரியபகவான்! பொன்மயமான சவுமனஸம் என்ற சிகரத்திலிருந்து புறப்படுகிறார். அங்கிருந்து புறப்பட்டு, ஜம்பூத் துவீபத்தில் வடக்கு திக்காக எழுந்தருளி எங்கும் பேரொளி பரப்புகிறார். சூரியதேவன் உத்திராயண காலத்தில் இந்த சிகரத்திலிருந்து புறப்படுகிறார். தக்ஷிணாயனத்தின் போது ஜோதிஷ்கம் என்ற சிகரத்துக்கு எழுந்தருளுகிறார். விஷுக் கனியின் போது இரண்டுக்கும் நடுவேயிருந்து எழுந்தருளுகிறார். சூரியதேவன் த்வஷ்டா என்பவரின் குமாரத்தியான சுவர்ச்சலாத் தேவியைத் திருமணம் செய்து கொண்டார். சுவர்ச்சலா தேவிக்கு ஸமுக்ஞா, ஸரேணு, ராக்ஞீ, பிரபாஸா என்றும் பல பெயர்கள் உண்டு. சூரிய தேவனுக்கும், சுவர்ச்சலா தேவிக்கும் சிராத்த தேவன் என்று அழைக்கப்படும் வைவசுதமனு யமதர்ம ராஜன் என்று இரு புதல்வர்களும், யமுனை என்னும் பெயருடைய அதிரூபவதியான புத்திரியும் பிறந்தனர். யமனும், யமுனையும் இரட்டைப் பிறவிகள். சூரிய தேவனின் இல்லறக் கோவிலில் இன்புற்று வாழ்ந்து வந்த சுவர்ச்சலா தேவிக்கு நாளாக, நாளாக சூரிய தேவனின் உக்கிரமான கிரணங்களைத் தாங்கும்படியான சக்தி குறைந்து கொண்டே வந்தது.
இந்த நிலையில், சுவர்ச்சலாதேவி தனது துயர நிலையைச் சூரிய தேவனிடம் சொல்லும் படியான சக்தியற்றுப் போனாள். சுவர்ச்சலாதேவி கானகம் சென்று கடும் தவம் இருந்து உரிய சக்தியைப் பெற்று வருவதற்கு எண்ணினாள். அந்த எண்ணத்தையும் சூரியதேவனிடம் சொல்லும் ஆற்றல் அவளுக்கு இல்லாமற் போனது. சுவர்ச்சலா தேவி தனக்குள் ஒரு முடிவிற்கு வந்தாள். தனது மனோ சக்தியால் தனது நிழலையே, தன்னைப் போன்ற பேரெழில் கொண்ட பெண்ணாகத் தோன்றச் செய்தாள். நிழலில் நின்றும் உருப் பெற்று வந்த அந்த நளின சிங்கார வனிதை, தன்னைப் போன்ற உருவத்துடன் காணும் சுவர்ச்சலா தேவியைக் கண்டு திகைத்தாள்; அவளை நமஸ்கரித்து நின்றாள். சுவர்ச்சலா தேவி அவளைப் பார்த்து, எனது சாயையில் நின்றும் தோன்றியவளே! உனக்கு சாயாதேவி என்று நாம கரணம் சூட்டுகிறேன். உனக்கு நான் சகல சௌபாக்கியங்களையும் அளிக்கிறேன். நான் தவம் செய்யப் போகிறேன். நான் திரும்பி வரும் வரை நீ என் கணவருடன் சுகித்து வாழ்வாயாக! என் குழந்தைகளான வைவசுதமனு, யமதர்மன், யமுனா ஆகியோர்களை அன்போடு அரவணைத்து வாழ்வாயாக! என்று கூறினாள். சுவர்ச்சலா தேவியின் சுந்தர மொழி கேட்டு சாயாதேவி, தேவி! தங்கள் சித்தம் எந்தன் பாக்கியம். இருப்பினும் இந்த எளியவளுக்கு உங்களிடம் ஒரு சிறு விண்ணப்பம். என்றாவது ஒரு நாள் நம் பதி எனது சிகையைப் பற்றி இழுக்கும் துர்பாக்கியம் ஏற்படுமாயின் அன்று நான் நம் நாயகரிடம் உண்மையை நவில்வேன். இது சத்தியம் என்றாள். சுவர்ச்சலா தேவியும் அதற்கு சம்மதித்தாள். சுவர்ச்சலாதேவி சந்தோஷத்துடன் தந்தை வீட்டிற்குப் புறப்பட்டாள். சுவர்ச்சலா, பதியின் பாதத்தை விட்டு நீங்கி, பிதாவான த்வஷ்டா இல்லம் சென்றாள். நடந்தவற்றைத் தந்தையிடம் கூறினாள். தந்தையார், சுவர்ச்சலாவின் செயலைக் கண்டித்தார். ஒரு பெண், பதியை விட்டு வருவது தர்மமாகாது. என்னைக் காண வேண்டுமென்றால் உன் பதியோடு தான் வரவேண்டும். எனவே சற்றும் தாமதியாமல் உன் பதியின் கிருஹத்திற்குச் செல்வாயாக! சுவர்ச்சலா தேவி சஞ்சலம் கொண்டாள். தந்தையின் அடி பணிந்து, நேராக குரு÷க்ஷத்ரம் சென்றாள். தன்னை எவரும் அடையாளம் கண்டு கொள்ளக் கூடாது என்பதற்காக, குதிரை உருவம் கொண்டு, தவத்தைத் தொடங்கினாள். சுவர்ச்சலாவின் அன்பு கட்டளைப்படி சாயாதேவி, சூரியதேவனுடன் வாழத் தொடங்கினாள்.
சூரிய தேவனின் குழந்தைகளிடம் சாயா தேவி, மிகுந்த வாத்ஸல்யம் கொண்டிருந்தாள். கண்ணும் கருத்துமாக அக்குழந்தைகளைக் காத்து வந்தாள். சூரிய தேவனுக்கும், சாயா தேவிக்கும் தபதீ என்னும் புத்திரியும், ச்ருதச்ரவஸீ, ச்ருதகர்மா என்று இரு புதல்வர்களும் பிறந்தனர். ச்ருதகர்மா தான் பின்னால் சனீஸ்வரர் என்று அழைக்கப்படுபவர். சுவர்ச்சலாவின் குழந்தைகளும், சாயா தேவியின் குழந்தைகளும் சாயாதேவியின் அரவணைப்பில் சந்தோஷமாக வாழ்ந்து வந்தனர். நாளாக நாளாக சாயா தேவி, தனது குழந்தைகளிடம் சற்று அதிகப்படியான வாஞ்சை செலுத்தினாள். சுவர்ச்சலா தேவியின் மகனான எமதர்மராஜனுக்கு இதனால் மனத்திலே வேதனை மிகுந்தது. தனது தாய்க்கு ஏன் இந்த பாரபக்ஷம் என்பதனை நினைந்து வருந்தினார். ஒரு நாள் எமதர்மராஜனுக்குத் தாயிடம் கோபம் மிகுந்து வந்தது. தந்தையாகிய சூரிய தேவனிடம் சென்றார். சிறிது காலமாகத் தாயார் தங்களைத் தரக் குறைவாக நடத்துவதாகச் சொல்லிக் கண் கலங்கினார். தர்மாத்மாவான, யமனின் வார்த்தைகளை ஏற்றுக் கொண்டார் சூரியதேவன்! தருமபுத்திரா! தரும வழியில் நடந்து வரும் உனக்கே கோபம் வருகிறதென்றால் இதில் உண்மை இருக்கத்தான் செய்யும். நான் இப்போதே உனது குறையை நிவர்த்திக்கிறேன் என்று சூரியதேவன் மகனை அன்போடு அருகே அழைத்து, ஆரத் தழுவி ஆறுதல் சொன்னார். சூரிய தேவன் சாயாதேவி மீது கோபம் மிகக் கொண்டார். சாயா தேவியிடம், இதைப் பற்றி விசாரித்தார். சாயா தேவி மவுனம் சாதித்தாள். மவுனம் சம்மதத்திற்கு அறிகுறி என்பதால், சூரிய தேவன் கோபத்தில் அவளது சிகையைப் பற்றி இழுக்க அது வரை பொறுமையாக இருந்த சாயாதேவி நடந்த விருத்தாந்தங்கள் அனைத்தையும் எடுத்துக்கூறி, தனது பிழையைப் பொறுத்தருளுமாறு பகலவனின் பாதங்களைப் பணிந்து கேட்டாள். இவற்றையெல்லாம் கேட்டு சூரிய தேவன், சாயா தேவியை க்ஷமித்தார்; எமதர்மராஜனும் சாயாதேவி மீது அனுதாபம் கொண்டார். சூரிய தேவன் ஞான திருஷ்டியால், சுவர்ச்சலாதேவி தவமிருக்கும் இடத்தை கண்டறிந்து, நேராக குரு÷க்ஷத்ரம் சென்றார். சுவர்ச்சலா தேவியை ஆனந்தத்தால் அநுக்கிரஹித்தார். சூரிய தேவனின் சக்தியால், சுவர்ச்சலா தேவிக்கு, இருபுத்திரர்கள் பிறந்தனர். அவர்கள் அஸ்வினி தேவர்கள் என்று திருநாமம் பெற்றனர். இவர்கள் தேவலோக வைத்தியர்களாக விளங்கினர். ரைவதன் என்று மற்றொரு மகனும் பிறந்தான். சூரிய தேவன், சுவர்ச்சலா தேவியை அழைத்துக்கொண்டு, தமது லோகத்திற்குத் திரும்பினார். சாயா தேவியையும் ஏற்றுக் கொண்டு இரு தேவியர் சமேதராக பத்மாசனத்தில் எழுந்தருளி பாரெல்லாம் பவனி வந்தார்.
எமதர்மராஜன், காசி அருகேயுள்ள கோகர்ணம் என்னும் திருப்பதியில் சிவபெருமானை ஆராதித்து அற்புதமான தவம் இயற்றினார். எமதர்மராஜனின் தவத்திற்கு திருவுள்ளம் கனிந்த பெருமான் எமனைத் திரு நோக்கம் செய்து, ஆதவன் புதல்வா! உனக்கு சையமணி என்னும் நகரத்தைப் பரிபாலிக்கும் பாக்கியத்தை அருளுவோம். எமது அருளாணைப்படி பிதுர் பரிபாலன தர்மத்தை காலம் தவறாமல் கண்ணியத்துடன் நடத்தும் உனக்கு காலன் என்னும் நாமம் சித்திக்கும் என்று திருவாய் மலர்ந்தார். எமதர்மராஜனும் சிவனைப் போற்றி தென் திசைக்கு அதிபதியாக விளங்கினான். அதே போல் வைவசுதமனு வைது மன் வந்தர மனு ஆனார். ச்ருதசரஸ், மேரு மலையில் தவம் செய்து சாவர்ணீ என்ற திருநாமம் பெற்றான். அவன் ஏழாவது மன்வந்தரத்து மனுவானார். சாயா தேவியின் புத்தரி யமுனையும் , சுவர்ச்சலா தேவியின் புத்திரி தபதியும் நதிகளாயினர். தபதீ என்பவள் ஸமவரணன் என்ற மன்னனை மணந்தாள். அதன் பின்னர்தான் அவள் விந்திய மலையிலிருந்து பெருகி வரும் தபதி என்ற நதியாக மாறினாள் என்பது புராணம்! அசுவனி தேவர்கள், பகவானின் திருவருட் கிருபையால், நட்சத்திரங்களில் முதல் நட்சத்திரமான அசுவினி நட்சத்திரமாக வானிலே ஒளி வீசும் பேறு பெற்றனர். ரைவதனும் பகவானின் பேரளால் மனுவாகி ரைவத மனுவந்தரத்தில் சகல அண்ட சராசரங்களையும் ரட்சிக்கும் உன்னத மேன்மை அடைந்தான். ஒவ்வொரு மனுவின் காலத்திலும் ஒருவர் இந்திரனாக இருப்பார். இந்த பதினான்கு மனுக்களின் காலத்தில் பதினான்கு பேர் இந்திரனாக இருப்பார்கள். இவ்வாறு சூரிய புத்திரர்கள் பாரெல்லாம் போற்றும் பெருமை பெற்றனர். ச்ருதகர்மாவான சனீஸ்வரர், இளமை முதற்கொண்டே மற்ற புத்தர புத்திரிகள் எவருக்கும் இல்லாத ஓர் தனித்தன்மை பெற்ற விளங்கினார். சனீஸ்வர பகவானின் திருவிழிகளிலே ஓர் அபார சக்தி! அவரது பார்வையிலே தனி தீட்சண்யம்! அவரது பார்வை பட்ட மாத்திரத்திலேயே பல விபரீதங்கள் ஏற்படும்! சாயாதேவி, குழந்தை சனீஸ்வரனின் நிலை கண்டு கண் கலங்கினாள். தனது புத்திரனால் மற்றவர்களுக்குத் துன்பம் ஏதும் வர வேண்டாம் என்பதற்காக, சனீஸ்வரரை எங்கும் அனுப்பாமல், தனது கண்காணிப்பில் தனது லோகத்திலேயே வைத்துக் கொண்டிருந்தாள். சனீஸ்வரரும், சாயாதேவியுடன் சந்தோஷமாக வாழ்ந்து வந்தார்.
மனிதனாகப் பிறந்தவன் முதலில் சந்திப்பது கல்வியை. அடுத்து பொருளாதாரம், செயல்பாடு, தெளிவு பெற்று மகிழ்தல் கடைசியில் மறைதல் என அவனது வாழ்கை நிறைவுறுகிறது. இந்த வரிசையில் புதன், சுக்கிரன், செவ்வாய், குரு, சனி எனத் தென்படுகிறது. இறுதியில் உள்ள சனி, மறைவைச் சந்திக்கிற வேளையை நடைமுறைப்படுத்துகிறார். அதாவது, சனி பகவான் அழிவைத் தருபவர் அல்ல; அழிவு வரும் வேளையைச் சுட்டிக்காட்டுபவர். பிறந்தவனுக்கு இறப்பு உண்டு; இறப்பு இருப்பவனே பிறக்க இயலும்; அதுதான் நியதி என்கிறார் ஸ்ரீகிருஷ்ணர். விதை முளைக்கிறது; வளர்கிறது. இலை, பூ, காய், கனி என மாறுபாடுகளைச் சந்திக்கிறது; வாட்டமுறுகிறது; மறைகிறது என்பது நமக்குத் தெரியும். உடலில், ஆன்மவுக்குக் குடியிருக்கத் தகுதியில்லாத நிலையில், உடலுக்கு மறைவு வருகிறது. அந்த வேளையை வரையறுக்கும் பணியை சனிபகவான் சுட்டிக்காட்டுகிறார். நம்மை வளர்த்து, நமக்கு ஆக்கமும் ஊக்கமும் அளித்து, இன்ப - துன்பங்களை கர்மவினைப்படி செயல்படுத்தி, வாழவைப்பவர் சனி பகவான். உடல் வாழத் தகுதியற்ற நிலையில், மறுபிறவி தருவார்; பாபமும் புண்ணியமும் அற்றுப் போயிருப்பின், மறைவை இறுதியாக்கி மோட்சம் தருவார். சம் சனைச்சராய நம: என்று சொல்லி, சனி பகவானுக்கு 16 வகை உபசாரங்களை அளித்து வழிபடலாம். நம: ஸூர்யாய ஸோமாய மங்களா புதாய ச குருசுக்கிர சனிப்ய: சராஹவே கேதவே நம: எனும் ஸ்லோகத்தைச் சொல்லி, 12 நமஸ்காரங்களைச் செய்தால், 12 ராசியில் வீற்றிருக்கும் கிரகங்களை வணங்கி வழிபட்டதாக ஆகிவிடும். உடல் - உள்ளத்தை வாடவைத்து, அடிபணிந்தால்தான் பலன் உண்டு என நினைக்க வேண்டாம். உள்ளத் தெளிவுடனும் ஈடுபாட்டுடனும் சனி பகவானின் திருநாமத்தைச் சொல்லி வழிபட்டால், அவனருளால் இன்பம் பொங்கும்; மூன்று நிலைகள் இருந்தாலும், நம்மைப் பொறுத்தவரை பொங்கும் சனியாகவே நமக்குக் காட்சி தருவார். சனீஸ்வரரை தினமும் வணங்கி, மனதில் உறைந்தவராக மாற்றினால், விசேஷ பூஜை, தனி வழிபாடுகள் ஏதும் தேவையே இல்லை. வாழ்வின் ஒவ்வொரு பருவத்துக்கும் ஏற்பச் செயல்பட்டு, வளங்கள் அனைத்தையும் நமக்குத் தந்தருளும் சனீஸ்வர பகவானை மனதாரப் பிரார்த்திப்போம்.
சனி பகவானின் பிறப்பையும், அவரது பெருமையையும் படிப்பவர்களுக்கு அவரது பரிபூரண அருள் கிடைக்கும்.
சங்கடந் தீர்க்கும் சனி பகவானே
மங்கலம் பொங்க மனம் வைத்தருள்வாய்
சச்சரவின்றி சாகா நெறியில்
இச் செகம் வாழ இன்னருள் தா! தா!
சனீஸ்வர பகவான் சங்கடங்களைத் தீர்ப்பவர்; மங்கலம் பொங்கும் மனையிலே ஒரு மனதாக, அவரைப் போற்றுவோர்க்கு உன்னதமான பதவியைப் பேரானந்தம் பொங்க அருளும் கருணைத் தேவன்! ஊழ்வினைப் பயனால், நம்மை ஆரம்பத்தில் சோதனைக்குள்ளாக்கும் சனிபகவானைத் தினமும் தியானித்து பூஜித்தால், அவர் நமக்கு ஏற்பட இருக்கும் இன்னல்களைக் குறைத்து இறுதியில் ஈடில்லா இன்பத்தைப் பெருக்குவார்! காகம் அமர்ந்து, மேற்கு திசை முகம் நோக்கி, நீலநிற வஸ்திரம் அணிந்து அபயஹஸ்தம் நல்கும் சனீஸ்வர பகவான் தாமச குணம் கொண்டவர்! சனீஸ்வர பகவான் தம்மைச் சரணடைந்தோர்க்கு, சஞ்சலங்களைத் தீர்த்து நல்ல வரங்களைத் தந்து சந்தோஷத்தை நிலை பெறச் செய்வதில் கற்பக விருட்சம் ! காமதேனு! காலச் சக்கரத்தைப் பிளப்பதில் அவர் கதிரவனுக்கு நிகரானவர்.
சாப்பாடு போடுபவர்
ஒரு மனிதனின் வாழ்நாளை நிர்ணயம் செய்வதும், அவரவர் தகுதிக்கேற்ப சாப்பாடை வழங்குபவரும் சனி பகவானே. எனவே அவரை ஆயுள்காரகன் என்றும், ஜீவனகாரகன் என்றும் சொல்வர். அவர் தர்மப்பிரபு. தர்மத்துக்கு மிக மிக கட்டுப்படுபவர். பூஜைக்குச் சென்ற நளன், தன் காலில் சரியாக தண்ணீர் ஊற்றிக் கழுவவில்லை என்பதைக் கூட அவரால் பொறுத்துக் கொள்ள முடியவில்லை. பூஜா தர்மத்தை மீறியதாக ஏழரை ஆண்டுகள், அவனது குடும்பத்தையே பாடாய் படுத்தியவர். எல்லாம் பர்பெக்ட்ஆக இருக்க வேண்டும் என்று அதிகம் எதிர்பார்ப்பார். இது சற்று தவறினாலும், அவரது கோபக்கனலுக்கு ஆளாகி விடுவோம். அவரவர் செய்த பாவ, புண்ணியத்தின் அடிப்படையில் சாப்பாடு கிடைக்கும். அதுபோல, ஆயுளை நிர்ணயம் செய்பவராகவும் திகழ்கிறார்.
நினைத்ததை நடத்துபவர்
ஒருமுறை தேவலோகத்தில் ஒரு மண்டபம் கட்ட முடிவாயிற்று. அதில், தேவலோகத்தில் வசிப்பவர்கள் அனைவரும் தங்கி, ஆட்டம், பாட்டம் கொண்டாட்டமாக இருக்கலாம் என்பது திட்டம். சிவபெருமானுக்கு இதில் இஷ்டமில்லை. அதேநேரம், அவரது மனைவி பார்வதி மண்டபம் கட்டும் விஷயத்தில் ஆர்வமாக இருந்தாள்.தேவஜோதிடர்கள் மண்டபம் கட்ட நாள் பார்த்தனர். அப்போது ஒருவர், இதைக் கட்டி முடித்தாலும் எரிந்து போகும். சனியின் பார்வை சரியில்லை, என்றார். இருந்தாலும், சனீஸ்வரனை சரிக்கட்டி விடலாம் என நினைத்த பார்வதி மண்டபத்தை கட்ட ஏற்பாடு செய்தாள்.  பார்வதி சிவனிடம், மண்டபத்தை அழியாமல் பாதுகாக்கும்படி சனீஸ்வரனிடம் சொல்வோம். அவன் நம்மை மீறவா செய்வான்? அப்படி மீறினால், நீங்கள் எனக்கு ஒரு சமிக்ஞை செய்யுங்கள். அவன் எரிப்பதற்கு முன் நானே  எரித்து விடுகிறேன். அவன் ஜெயிக்கக்கூடாது என்றாள். எல்லாருக்கும் பாவபுண்ணிய பலனைத் தர வேண்டும் என்ற உத்தரவு போட்டவரே  மீறலாம் என்றால் எப்படி?  சிவன் பார்வதியிடம், நானே அவனிடம் விஷயத்தைச் சொல்கிறேன். அவன் கேட்க மறுத்தால்,  தலைக்கு மேல் உடுக்கையைத் தூக்கி அடித்து சமிக்ஞை செய்கிறேன். நீ  தீ வைத்து விடு, என சொல்லிவிட்டு சென்றார். சனீஸ்வரனிடம் சென்று, தேவர்களுக்காக இந்த மண்டபத்தை விட்டுக்கொடேன், என்றார்.  சிவனே சொல்லும் போது என்ன செய்ய!சனீஸ்வரர் தடுமாறினார். வேறு வழியின்றி, பெருமானே! தாங்கள் நடனமாடுவதில் வல்லவர். உங்கள் நடனத்தை நான் பார்த்ததில்லை. எனக்காக ஆடிக்காட்டினால் விட்டு விடுகிறேன், என்றார்.எனக்கு சகாயம் செய்த உனக்கு நான் இதைக்கூடவா செய்யமாட்டேன்! என்ற சிவன், உடுக்கையை தலைக்கு மேல் தூக்கி அடித்தபடியே ஆடினார். பார்வதியின் காதில் சத்தம் விழுந்தது. ஆஹா! சனீஸ்வரன் சம்மதிக்கவில்லை போலிருக்கிறதே! என்று எண்ணியவள், மண்டபத்துக்கு தீ வைத்து விட்டாள். சனீஸ்வரனும் கடமையைச் செய்து விட்டார், சிவனும் நினைத்ததை சாதித்து விட்டார். அவரவர் பாவ புண்ணியத்தைப் பொறுத்து சனீஸ்வரன் பலன் வழங்கியே தீருவார் என்பதற்கு இந்த சம்பவம் உதாரணம்.


நவகிரக மண்டலத்திலுள்ள சனிக் கோளின் வானவியல் ஆய்வு!




நவகிரக மண்டலத்திலுள்ள சனிக் கோளின் வானவியல் ஆய்வு
குரு கிரகத்துக்கு அடுத்து பெரிய கிரகம் சனி. இதன் குறுக்களவு சுமார் 73,000 மைல். சனி வளையம் என்று கூறப்படும் வளையத்தின் குறுக்களவு 1,70,000 மைல். மிக லேசான பொருட்களால் ஆனதால் இந்த கிரகத்தின் அடர்த்தி மிகவும் குறைவு. 0.715-அதாவது தண்ணீரைவிட குறைவான ஒப்படர்த்தி உள்ளது. எனவே, சனி கிரகத்தை பெரிய கடல் நீரில் போட்டால் மிதக்கும். சூரியனிலிருந்து இதன் தொலைவு 89.6 கோடி மைல். பூமிக்கும் சனிக்கும் இடையில் உள்ள தொலைவு 75 கோடி மைல். இது தன்னைத் தானே ஒருமுறை சுற்றிக்கொள்ள 10 மணி 14 நிமிடங்கள் ஆகின்றன. அதனால் கிட்டத்தட்ட பத்தரை மணி நேரமே சனி கிரகத்தின் ஒருநாள். இது ஒருமுறை சூரியனைச் சுற்றிவர இருபத்தொன்பதரை ஆண்டுகள் ஆகின்றன. அதாவது பூமியில் இருபத்தொன்பதரை ஆண்டுகள் கழிந்தால் சனியில் ஓராண்டு கழிந்திருக்கும். சாதாரணமாகப் பார்த்தால் மஞ்சள் நிற நட்சத்திரமாக இது தெரியும். தொலைநோக்காடியின் மூலம் பார்த்தால் இதைச் சுற்றியுள்ள வளையம் தெரியும். வேறு எந்த கிரகத்திற்கும் இத்தகைய வளையம் கிடையாது. 1610-ல் கலிலியோதான் இதை முதன்முதலில் கண்டுபிடித்தார். சனியை இந்த வளையம் மிக வேகமாகச் சுற்றுகிறது. உள்ளுக்குள் உள்ளாய் மூன்று வளையங்கள் உள்ளன என்று தற்கால ஆராய்ச்சியில் கண்டிருக்கிறார்கள். சனிக்கு ஒன்பது உட்கிரகங்கள் உள்ளன. அவற்றுள் டைட்டன் என்பது மிகப்பெரியது. இது சனியிலிருந்து 76,000 மைல் தூரத்தில் உள்ளது. சந்திரனைவிட இரட்டிப்பு கனமுடையது. எப்போதும் கடுமையான குளிர். பிராணவாயு இருப்பதற்கான அறிகுறிகளே இல்லை. சனி தன்னைத்தானே சுற்றிக்கொள்ளும்போது பம்பரம்போல் பக்கவாட்டில் சுற்றுவதாகக் கூறுகிறார்கள்.
குரு கிரகத்துக்கு அடுத்து பெரிய கிரகம் சனி. இதன் குறுக்களவு சுமார் 73,000 மைல். சனி வளையம் என்று கூறப்படும் வளையத்தின் குறுக்களவு 1,70,000 மைல். மிக லேசான பொருட்களால் ஆனதால் இந்த கிரகத்தின் அடர்த்தி மிகவும் குறைவு. 0.715-அதாவது தண்ணீரைவிட குறைவான ஒப்படர்த்தி உள்ளது. எனவே, சனி கிரகத்தை பெரிய கடல் நீரில் போட்டால் மிதக்கும். சூரியனிலிருந்து இதன் தொலைவு 89.6 கோடி மைல். பூமிக்கும் சனிக்கும் இடையில் உள்ள தொலைவு 75 கோடி மைல். இது தன்னைத் தானே ஒருமுறை சுற்றிக்கொள்ள 10 மணி 14 நிமிடங்கள் ஆகின்றன. அதனால் கிட்டத்தட்ட பத்தரை மணி நேரமே சனி கிரகத்தின் ஒருநாள். இது ஒருமுறை சூரியனைச் சுற்றிவர இருபத்தொன்பதரை ஆண்டுகள் ஆகின்றன. அதாவது பூமியில் இருபத்தொன்பதரை ஆண்டுகள் கழிந்தால் சனியில் ஓராண்டு கழிந்திருக்கும். சாதாரணமாகப் பார்த்தால் மஞ்சள் நிற நட்சத்திரமாக இது தெரியும். தொலைநோக்காடியின் மூலம் பார்த்தால் இதைச் சுற்றியுள்ள வளையம் தெரியும். வேறு எந்த கிரகத்திற்கும் இத்தகைய வளையம் கிடையாது. 1610-ல் கலிலியோதான் இதை முதன்முதலில் கண்டுபிடித்தார். சனியை இந்த வளையம் மிக வேகமாகச் சுற்றுகிறது. உள்ளுக்குள் உள்ளாய் மூன்று வளையங்கள் உள்ளன என்று தற்கால ஆராய்ச்சியில் கண்டிருக்கிறார்கள். சனிக்கு ஒன்பது உட்கிரகங்கள் உள்ளன. அவற்றுள் டைட்டன் என்பது மிகப்பெரியது. இது சனியிலிருந்து 76,000 மைல் தூரத்தில் உள்ளது. சந்திரனைவிட இரட்டிப்பு கனமுடையது. எப்போதும் கடுமையான குளிர். பிராணவாயு இருப்பதற்கான அறிகுறிகளே இல்லை. சனி தன்னைத்தானே சுற்றிக்கொள்ளும்போது பம்பரம்போல் பக்கவாட்டில் சுற்றுவதாகக் கூறுகிறார்கள்.


ஜோதிடத்தில் சனிபகவான்!




சூரியனுடனும் (ஆன்மா), சந்திரனுடம் (மனம்) இணைந்திருப்பவர் சனி பகவான். சூரியனின் சாரம் சனி; சூரினிடமிருந்து வெளிவந்தவர்; சூரியனின் புதல்வன் என்றும் ஜோதிடம் தெரிவிக்கிறது. அப்பாவின் சாரம், பிள்ளையாக உருவெடுத்தது என்கிறது வேதம். அதேபோல், மனதுடன் தொடர்புகொண்டவர் சனி. மனதுள் உறைந்திருக்கும் சிந்தனையைத் தட்டி எழுப்பிச் செயல்பட வைக்கிற தமோ குணம் அவரிடம் உண்டு. சூரியனில் (ஆன்மா) இருந்து உருப்பெற்றது சந்திரன் (மனம்). ஆன்மா ஒன்று மனமும் ஒன்று. ஆகவே 12 ராசிகளில் இருவருக்கும் ஒரு வீடு மட்டுமே உண்டு. புலன்கள் இரண்டாக இருப்பதால், மற்ற ஐந்து கிரகங்களுக்கு இரண்டு வீடுகள் இருக்கும். ஆன்மா மற்றும் மனத்துடன் புலன்களுக்குத் தொடர்பு உண்டு. ஆதலால் ராசிச் சக்கரத்தில், சிம்மத்தில் உள்ள சூரியனுக்கு, மற்ற கிரகங்களின் தொடர்பு வரிசையாக இருக்குளம். அதேபோல், கடகத்தில் உள்ள சந்திரனுக்கு, மற்ற கிரகங்களின் தொடர்பு வரிசையாக இருக்கும். அதேபோல், கடகத்தில் உள்ள சந்திரனுக்கு, மற்ற கிரகங்களின் தொடர்பு வரிசையாக இருக்கும். சூரியனுக்கு சிம்மராசி. அதற்கு அடுத்த ராசியில், புதன், அதையடுத்து, சுக்கிரன், செவ்வாய், குரு, சனி என்று இருப்பார்கள். சந்திரனுக்குப் பின் ராசியில், மிதுனத்தில் புதன்; அடுத்து சுக்கிரன், செவ்வாய், குரு, சனி என்று இருப்பார்கள். இருவருக்கும் கடைசியில் சனி தென்படுவதால் மகரத்துக்கும் கும்பத்துக்கும் சனி அதிபதியாக அமைந்துள்ளார். ஆன்மாவுடன் மனம் இணையவேண்டும் அத்துடன் எண்ணங்கள் இணைந்தால் மட்டுமே, அது வளர்ந்து அனுபவத்துக்கு வரும். ஆன்மா, மனத்துடன் இணைகிறது; மனம், புலனுடன் இணைகிறது; புலன்கள் பொருட்களுடன் இணைகின்றன என்கிறது ஜோதிடம் (ஆன்மாமனஸா ஸம்யுஜ்யதே...). இருக்கிற பொருள், தோற்றமளிக்கும்; வளரும், மாறுபாட்டைச் சந்திக்கும்; வாட்டமுறும்; மறையும். ஆக.... இருத்தல், தோன்றுதல், வளருதல், மாறுபடுதல், வாட்டமுறுதல், மறைதல் ஆகிய ஆறுவித மாறுபாடுகளைக் கொண்ட பொருளுக்கு. எல்லாமே உண்டு. அது மனிதனுக்கும் உண்டு. அதனை ஆறு பாவ விகாரங்கள் என்கிற சாஸ்திரம் (அஸ்தி, ஜாயதெ, வர்த்ததெ, விபரிணமதே, ம்லாயதெ, நச்யதி, இதி. சூரிய - சந்திரனுடன் இணைந்த இந்த ஐந்து கிரகங்கள், ஜீவராசிகளில் தென்படும் ஆறுவித மாற்றங்களை நடைமுறைப்படுத்துகின்றன எனும் கோணத்தில், ராசிச் சக்கரத்தின் கிரக வரிசைகள் சுட்டிக்காட்டுகின்றன.
ஜோதிடத்தில் சனிபகவான்: மகர ராசிக்கும், கும்ப ராசிக்கும் அதிபதியான சனி பகவான் நவக்கிரக மண்டலத்தில் சூரியனுக்கு மேற்கே தனுசின் உருவம் கொண்டு மண்டலத்தில் உறைபவர். ஜோதிடத்தில் சனி பகவானுக்கு சூரியன், சந்திரன், செவ்வாய் சத்ருக்கள் - குரு சமமானவர் - சனிக்கு புதன், சுக்கிரன், ராகு, கேது ஆகியவர்கள் நண்பர்களாவார்கள். சனி பகவான் ஒரு ராசியில் இரண்டரை ஆண்டுகாலம் சஞ்சரிப்பவர். 3,10ம் இடங்களைப் பார்ப்பவர். லக்னத்திற்கு 8ம், 12ம் இடமும் மறைவு ஸ்தானங்களாகும். இவர் மேஷ ராசியில் நீச்சமானவர். துலா ராசியில் உச்சமானவர். சனி தசை பத்தொன்பது வருட காலமாகும். சனியின் அதிதேவதை எமதர்மனாவார். இவருடைய வாகனம் காகம். சில புராணங்களில் இவருடைய வாகனம் கழுகு என்றும் சொல்லப்படுகிறது. இவர் வன்னிய சமித்துக்கு ப்ரீதியானவர். திசைகளில் இவர் மேற்கு முகம் நோக்கி காட்சி தருகிறார். நவதானியத்தில் எள் - மலர்களில் கருங்குவளை - நவரத்தினங்களில் நீல நிறக்கல் - இவருக்கு உகந்ததாகும். மகரம், கும்பம் இரண்டு ராசிகளும் இவருக்கு ஸ்வ÷க்ஷத்ரமாகும். இவருடைய ஆட்சி வீடு மகரம். மூலதிரிகோண வீடு கும்பம். பூசம், அனுஷம், உத்திராட்டாதி ஆகிய மூன்று நட்சத்திரங்களும், சனியின் சாரம் பெற்ற நக்ஷத்ரங்களாகும். இவர் அன்னிய பாஷைக்கு ஆதிபத்தியம் வகிக்கிறார். சுவையினில் சனி கசப்பிற்கும், புளிப்பிற்கும் ஆதிபத்தியம் வகிக்கிறார். வஸ்திர அமைப்பில், சனி கருப்பு பட்டு வஸ்திரத்திற்கு பூஷிதராவார். சனி, காசியப முனிவர் கோத்திரத்தைச் சேர்ந்தவராகிறார். பஞ்சபூத அமைப்பில் சனி ஆகாயத்திற்கு ஆதிபத்தியம் வகிக்கிறார். ஜெனன காலத்தில், சந்திரன் நின்ற ஸ்தானம், ஜெனன ராசியாகும். ஜெனன ராசிக்கு 4ல் சனி சஞ்சரிக்கும் காலம் அர்த்தாஷ்டமச் சனி என்று சொல்லப்படுகிறது. ஜெனன ராசிக்கு 7ல் சஞ்சரிக்கும் காலம் கண்டச் சனி என்று சொல்லப்படுகிறது. ஜெனன ராசிக்கு 8ல் சனி சஞ்சரிக்கும் காலம் அஷ்டமத்துச் சனி என்று சொல்லப்படுகிறது.
ஒன்பது கிரகங்களில், சனி பகவானும் ஒருவர். சனைச்சரன் என்றும், மந்தன் என்றும் குறிப்பிடுவர். சனை என்றால் மெள்ள, அதாவது மெதுவாக என்று அர்த்தம். ஒரு ராசியில் தனது பயணத்தைச் சுமார் இரண்டரை வருடங்கள் எடுத்துக்கொள்கிறார் சனி பகவான். மற்ற கிரகங்களைவிட இவருடைய பயணம் மெதுவாக இருப்பதால், அந்தப் பெயரே பொருந்துகிறது இவருக்கு. சனி பகவான் ஒவ்வொரு ராசியினருக்கும், அவரவர் பாவ புண்ணியங்களுக்கேற்ப பலன் தருபவர். அதாவது ஒரு ராசிக்காரருக்கு அஷ்டமத்து சனி, ஜென்ம சனி, கண்ட சனி, மங்கு சனி, ஏழரைச்சனி ஆகிய காலங்களில் இவர் கொடுக்கும் பலன் கஷ்டமாகத் தோன்றினாலும்,  இந்த காலகட்டத்தில் அந்த ராசிக்காரரை திருத்தி நல்வழியில் நடக்க வைத்து ராசியை விட்டு விலகும் காலத்தில் மிகச்சிறந்த பலனை கொடுப்பதே சனி பகவானின் நோக்கம். இப்படி ஒரு சிறந்த தீர்ப்பை வழங்கும் சனி பகவானை கிரகங்களில் தலைமை நீதிபதி எனலாம். விண்வெளியில் அவர் பயணிக்கும் பாதை, எல்லா கிரகங்களையும் தாண்டி இருக்கும். விண்வெளியில் வெகு தொலைவில் இருப்பவர், இவர் ! சனி பகவானைக் கடந்து இருப்பது நட்சத்திர மண்டலம். அவரிடமிருந்துதான் கிழமைகளின் தோற்றமும் வரிசைகளும் உருவாயின.
ராசி மண்டலத்தை ஒருமுறை வலம் வருவதற்கு சனி பகவானுக்கு 30 வருடங்கள் தேவை. அதாவது, ஒருவரது வாழ்நாளில், சனி பகவான் மூன்று முறை வலம் வருகிறார். முதல் 30 வருடத்துக்குள் ஒருமுறை, 60 வருடத்துக்குள் இரண்டாவது முறை, 90 வருடத்துக்குள் மூன்றாவது முறை என சனி பகவானின் வலம் வருதல் நிகழ்கிறது. முதல் வலத்தை மங்கும் சனி; அடுத்ததை பொங்கும் சனி; மூன்றாவதை போக்கு சனி என்பார்கள் ! இப்படி மூன்றாகப் பிரித்த ஆயுள் காலத்தில், முதல் பிரிவு கவுமாரம் எனப்படும். அதாவது, அனைத்தையும் கற்கும் சிறுவயது என்பர். அடுத்து, யௌவனம்; அதாவது இளமைப் பருவம். எண்ணங்களின் வசத்துக்கு உட்பட்டு, அலசி ஆராயும் திறனுடன், நல்லது - கெட்டதை அறிந்து செயல்பட்டு வாழும் காலம் அது. துன்பங்களைத் தாங்கி, அதனை அலட்சியப்படுத்தி, மனோபலமும் சிந்தனைத் தெளிவும் கொண்டு செழிப்புடன் விளங்குகிற பருவம் இது ! மூன்றாவது, முதுமை. தேக ஆரோக்கியமும் மனோபலமும் குறைகிற இறுதிப்பகுதி. கவுமாரம், யௌவனம், வார்த்தகம் என வாழ்வின் மூன்று பிரிவுகளை விவரிக்கிறது ஆயுர்வேதம். சிறுவயதில் கல்வியைக் கிரகிக்கும் தருணத்தில், சகல விஷயங்களையும் உள்வாங்கிப் பதிய வைக்கும்போது, சனி பகவானின் தாக்கம் மங்கலாகவே இருக்கும். மனதில் பதிந்த எண்ணங்கள், முழு வளர்ச்சியை எட்டாத நிலையில், சனியின் தாக்கம் முடங்கிவிடும். ஆகவே சனியின் பாதிப்பு மயங்கியது என்பர். இதனால் மங்குசனி என்கின்றனர். இளமையில் வளர்ச்சியுற்று, எண்ணம் பெருகி, கிரகிப்பதிலும் வளர்ந்து, சனி பகவானின் தாக்கம் கட்டுக்கடங்காத ஆசைகளை அவனுக்குள் வளர்ந்தோங்கச் செய்து, பொங்கச் செய்கிறது. ஆகவே, பொங்கு சனி என்கின்றனர். இன்ப - துன்பம் நிறைந்த வாழ்வில், துன்பத்தை ஏற்காமல், இன்பத்தை மட்டுமே ஏற்று மனதுள் மகிழ்ச்சியப் பொங்கச் செய்கிறார் சனி பகவான். இளமையில் கற்ற கல்வியுடன் விவேகமும், பகுத்தறிகிற பக்குவமும் கலந்திருக்க, சனி பகவானின் தாக்கத்தை, விருப்பத்தை நிறைவேற்றும் வகையில் திசை திருப்ப முடியும். ஆகவே பொங்கு சனியாகச் செயல்படுகிறார் சனீஸ்வரர். முதுமையில் சோர்வைச் சந்தித்த உடலும் உள்ளமும் கொண்டிருக்க, சனியின் தாக்கத்தை எதிர்கொள்ள முடியாமல் போகிறது. சனியின் விருப்பப்படி தன்னை இணைத்துக்கொள்ள நிர்பந்தம் ஏற்படுவதால், வாழ்க்கையின் எல்லையை எட்டவைக்க அவன் செயல்பாடு உதவும். ஆகவே, அவனது வேலையைச் சுட்டிக்காட்டி, போக்கு சனி என்றனர். ஆக, முதற்பகுதி வளரும் பருவம்; 2-ஆம் பகுதி, வளர்ந்து செழிப்புற்று, இன்பத்தை அனுபவிக்கின்ற பருவம்; இறுதியில், உடலுறுப்புகள் தகுதியை இழக்கும் பருவம். இப்படி உடலின் மாறுபட்ட பருவங்களுக்குத் தக்கபடி, சனி பகவானின் செயல்பாடு இருப்பதை, ஜோதிடம் சுட்டிக்காட்டுகிறது.
ராசி மண்டலத்தில் வலம் வரும் தருணத்தில், சந்திரன் இருக்கிற ராசியில் இருந்து பன்னிரண்டிலும், சந்திரன் இருக்கிற ராசியிலும், அடுத்து சந்திரனில் இருந்து 2-வது ராசியிலும் இரண்டரை வருடங்கள் தங்கியிருந்து, பயணிப்பார் சனி பகவான். ஆக, மூன்று ராசியிலும் இருந்த காலத்தைக் கூட்டினால் மொத்தம் ஏழரை வருடங்கள் வரும். இதை, ஏழரை நாட்டுச் சனி என்பார்கள் அதாவது ஏழரை ஆண்டுகளை நாடிய சனி எனப் பொருள். பிறக்கும் வேளையில் சந்திரன் இருக்கும் ராசி, ஒருவரது நட்சத்திரத்தைச் சொல்லும். அத்துடன், அவனது மனத்தையும் சுட்டிக்காட்டும். சனியுடன் மனம் நெருங்கிவரும், சந்திரன் இருக்கும் ராசி; அந்த நெருக்கம் தளர்வது. 2-வது ராசி. இந்த நெருக்கத்தின் தன்மையைக்கொண்டே, மங்கும் சனி, பொங்கும் சனி, போக்குச் சனி என்றும் சொல்லலாம். 12-ல் உள்ளபோது மங்க வைப்பார். சந்திரன் இருக்கும் ராசியில் இருக்கும்போது பொங்க வைப்பார். இரண்டில் இருக்கும்போது, போக வைப்பார். மனதோடு இணைந்த எண்ணங்கள், அதன் தாக்கம் நெருங்கும்போது, இன்பமோ துன்பமோ முழுமையாக வரும். விலகியிருக்கும் வேளையில், தாக்கம் செயலற்றுப் போகும். அதாவது, பன்னிரண்டிலும் இரண்டிலும்... நெருக்கம், மனத்துடன் (சந்திரனுடன் குறைந்திருப்பதால் பாதிப்பானது, அனுபவத்துக்கு வராமலே போகலாம். அந்த ஏழரை வருடகாலத்தில், அவனது தசாபுக்தி அந்தரங்கள் வலுவாகவும் நன்மையை வாரி வழங்குவதாகவும் இருந்தால், சனியின் தாக்கம் செயலிழந்துவிடும். தனக்கு இருக்கும் மூன்று இயல்புகளில் பொங்கும் இயல்பு வெளிப்பட்டு, தசாபுக்தி அந்தரங்களின் தரத்தைப் பொங்க வைத்து மகிழ்ச்சியைப் பன்மடங்காக்குவார், மாறாக தசாபுக்தி அந்தரங்கள் துயரத்தில் ஆழ்த்தும் நிலையில் இருந்தால், தரத்தையொட்டி மங்கவைப்பதோ அல்லது அதன் உச்சத்தை எட்டவைப்பதோ சனியின் வேலையாக மாறிவிடும்.
தசாபுக்தி அந்தரங்களைப் புறக்கணித்து, தன்னிச்சையாக செயல்படும் தகுதி சந்திர சாரப்படி வளையவருகிற ஏழரை நாட்டுச் சனிக்கு இல்லை. சந்திர சாரப்படி தென்படுகிற கிரகம், தசாபுக்தி அந்தரங்களின் பலத்தை நிறைவேற்றவே ஒத்துழைக்கும். பிறக்கும்போது இணைந்த நட்சத்திரம், அவனது ஆயுள் முடியும் வரை சந்திக்க வேண்டிய தசாபுக்தி அந்தரங்களை வரிசையாகப் பட்டியலிட்டுத் தந்துவிடும்; கர்மவினைக்கு உகந்தபடி, இன்ப- துன்பங்களைச் சந்திக்கும் காலத்தையும் வரையறுத்துவிடும். சந்திரசாரப்படி மாறி வரும் அந்தந்த வேளையில், அந்தந்த ராசியில் தென்படும் கிரகங்களின் பலன்கள், தசாபுக்தி அந்தர பலன்களை முடக்கிவைக்க இயலாது. நொடிக்கு நொடி, மனித சிந்தனையில் மாற்றங்கள் நிகழந்துக்கொண்டே இருப்பதால், மனமாற்றத்துடன் இணைந்த கிரகங்கள், நிரந்தரப் பலனை அளிக்க இயலாது என்பதே உண்மை. நிச்சயமான பலனை அளிக்கவல்லது தசாபுக்தி அந்தரங்கள். தசையினால் திடமான பலத்தை அறியவேண்டும் என்கிறது ஜோதிடம் (விசிந்தயேத் த்ருடம்...). அஷ்டகவர்த்தை முன் வைத்து அதிருட பலத்தை அறியவேண்டும். நிச்சயமல்லாத, அதாவது சந்தர்ப்பம் இருந்தால் தென்படும் பலன்களை அறியவேண்டும் என்கிறது அது. யோகங்களால் இரண்டு வித பலன்களும் ஏற்படலாம். யோக பலம் செயல்பட்டுத்தான் தீரவேண்டும் என்ற கட்டாயமில்லை என்றும் விளக்கம் தருகிறது ஜோதிடம்.
சனியின் உச்ச - ஆச்சி - நீச்ச வீட்டு பலன்கள்
சனி உச்சம் பெற்று இருப்பவரானால், அந்த ஜாதகர் எதையும் நல்ல முறையில் செய்து, எல்லோருடைய பாராட்டையும் பெறுவார்கள். மனோதைரியம் அதிகமாகயிருக்கும். நீண்ட ஆயுளைப் பெற்றிருப்பவர். இரும்பு யந்திர துறையில் நல்ல முன்னேற்றம் அடைவர். சனி ஆட்சி வீட்டில் இருந்தால் உல்லாசமான வாழ்க்கை வாழ்வார்கள். நல்ல தொழிலைப் பெற்றிருப்பர். வாகன யோகமுண்டு. பிரயாணத்தின் மூலம் நன்மை அடைவர். சனி நீச்ச வீட்டில் இருந்தால் சாஸ்திர, சம்பிரதாயத்தில் நம்பிக்கை இருக்காது. மனோவலிமை குறைந்தவர்களாகவும், சில தீய குணங்கள் கொண்டவர்களாவும் இருப்பர்.
சனியினால் ஏற்படும் யோகங்கள் பரிகாரங்கள்
சந்திரனுக்கு 9ல் சனி இருந்தால் அது சசியோகம் எனப்படும். இத்தகைய யோகம் அமையப் பெற்றவர்கள் பெரிய குடும்பத்தைப் பெற்றிருப்பர். நிறைய வருவாயும், அதற்கேற்ற செலவும் உடையவர்களாக இருப்பார்கள். சந்திரனுக்கு 2ல் சனியிருந்தால் அது சுனபாயோகம் எனப்படும். இத்தகைய ஜாதகர்களுக்கு பிதுர் வழியில் சொத்து அமையாவிடினும், சுயமாக சம்பாதித்து அரச போக வாழ்க்கையை அனுபவிப்பார்கள். இவ்வாறு சனி பகவானால் சிற்சில சோதனைகள் ஏற்பட்டாலும், அதற்கேற்ப அவரவருடைய ஜாதகப்படி ப்ரீதிகளைச் செய்தால் நல்ல யோகங்களைப் பெறலாம்! நமக்கு மலையளவு ஏற்படக்கூடிய சோதனைகளை சனி பகவான் கடுகளவாக குறைத்து, செல்வத்தையும், ஐசுவரியத்தையும் வாரி வழங்கும் இயல்புடையவர். அவரை பிரார்த்தித்து அஷ்ட ஐசுவரியங்களையும் பெறுவோமாக!
ஜெனன ராசிக்கு 12-1-2ல் சனி சஞ்சரிக்கும் ஏழரை ஆண்டு காலம் - ஏழரை நாட்டு சனி என்று சொல்லப்படுகிறது. சனியின் முதல் சுற்று மங்கு சனி என்றும், இரண்டாவது சுற்று பொங்கு சனி என்றும், மூன்றாவது சுற்று மரணச் சனி என்றும் சொல்லப்படுகிறது. இக்காலங்களில் சனி பகவானுக்கு ப்ரீதி செய்வதன் மூலம் நன்மைப் பெறலாம். பொதுவாக ஜெனன லக்னத்திற்கு 3-6-11 ஆகிய ஸ்தானங்களில் சனி நின்றால், அந்த ஜாதகருக்கு நன்மைகள் அநேகம் நடைபெறும் என்று சொல்ப்படுகிறது. முதல் இடமாகிய லக்னத்தில் சனி நின்றால் அந்த ஜாதகர் தீர்க்க ஜீவனம் அமையப் பெற்றவர். உபாயம் அறிந்தவர். எதிலும் வெற்றி பெறக் கூடியவர். கண்டிப்பான வார்த்தை பேசுபவர். சிக்கனத்தை கடைப்பிடிப்பவர். புறம் பேசுபவர்.
இரண்டாமிடத்தில் இருந்தால் வாக்கு பலிதம் உடையவர். தர்க்கம் வாதம் செய்பவர். இத்தகைய அமைப்பு உடையவர்கள் பால்யத்திலேயே திருமணமானவர்களாயின், இரண்டாம் தாரம் அமையும் நிலையுண்டாகும். கண்ணால் பேசக்கூடிய கவர்ச்சியைப் பெற்றிருப்பர். மூன்றாமிடத்தில் இருந்தால் நல்ல தைரியம் உடையவர்களாக இருப்பர். தன்னைவிட தாழ்ந்தவர்களுடன் சிநேகமாக இருப்பார்கள். ஆசார அனுஷ்டானங்களை மதியாதவர்கள். இனஜன பந்துக்களை மதிக்காதவர்கள். இளைய சகோதரர்கள் மிகவும் உதவுவார்கள். நான்காமிடத்தில் இருந்தால் தாய்க்கு ஆகாது. வீடு, வாகனம் முதலியவைகளை அடையும் வாய்ப்பு குறைவு. இவர்கள் சகல சாஸ்திரங்களையும் கற்றவர்களாக இருப்பார்கள். இளமையிலேயே புனித யாத்திரை செல்லும் வாய்ப்பு இவர்களுக்கு உண்டாகும்.
ஐந்தாமிடத்தில் இருந்தால் பிதுர் தோஷமாகும். புத்திரர்களுக்கும் ஆகாது. இவர்கள் பிறரை பழி வாங்கும் எண்ணம் கொண்டவர்களாக இருப்பார்கள். இவர்கள் செய்யும் தொழிலில் போட்டியும், பொறாமையும் நிறைந்திருக்கும். ஆறாம் இடத்தில் இருந்தால் காது சற்று மந்தமாக இருக்கும். தனம், சம்பத்து முதலியவைகளைப் பெற்றிருப்பர். எந்த காரியத்திலும் முதலில் தோல்வி ஏற்பட்டாலும் இறுதியில் ஜெயம் உண்டாகும். இத்தகைய அமைப்புடையவர்கள் பகைவர்களை வெல்லும் திறமையுடையவர்கள். ஏழாமிடத்தில் இருந்தால் மனைவியினால் துன்பத்தை அநுபவிப்பவர். அதிகமான பொறுப்புகளை ஏற்று நடத்துவர். இனிமையாக பேசக் கூடியவர்கள்.
எட்டாமிடத்தில் இருந்தால் வாக்கு பலிதம் பெற்றிருப்பர். இவர்கள் கஷ்டப்பட்டு பொருள் சேர்ப்பர். சில தீய குணங்களும் அமைந்திருக்கும். ஆனால் இவர்கள் துணிவும் தைரியமும் நிரம்ப பெற்றிருப்பர். மூலம் போன்ற உஷ்ண நோயினால் பாதிக்கப்படுவார்கள். ஒன்பதாம் இடத்தில் சனி இருந்தால் தந்தைக்கு தோஷமுண்டாகும். இளமையிலேயே வறுமையால் துன்பப்படுவார்கள். இவர்கள் சகோதர வகையிலும் துன்பத்தைப் பெறுவார்கள். சிவபக்தி உடையவர்களாக இருப்பார்கள். பத்தாமிடத்தில் இருந்தால் தாய்க்கு ஆகாது. இவர்கள் எவரையும் எளிதில் நம்பி காரியத்தில் இறங்க மாட்டார்கள். ஆசார, அனுஷ்டானங்களை பின்பற்றுவார்கள். நல்ல விவேகம் உடையவர்களாக இருப்பார்கள். இவர்களுக்கு வாகன யோகமும் உண்டு.
பதினொன்றாம் இடத்தில் இருந்தால் நல்ல சாஸ்திரம் அறிந்தவராகவும், சிறந்த ஞானம் பெற்றவராகவும் இருப்பார். வாகன யோகமுண்டு. ஆயுள் விருத்தி உண்டாகும். இத்தகைய சனியுடன் புதனும் கூடியிருந்தால், கலைத் துறையில் நல்ல முன்னேற்றம் உண்டாகும். பன்னிரண்டாம் இடத்தில் சனி இருந்தால் முன் கோபியாகவும், ஆரோக்கியம் குறைந்தும் இருப்பர். சனியும், அங்காரகன் எனப்படும் செவ்வாயும் கூடி இருந்தாலும் அல்லது ஒருவரை ஒருவர் பார்த்துக் கொண்டாலும் இரும்பு யந்திர துறையில் ஈடுபட்டிருப்பர். பட்டம் பெறும் வாய்ப்பும் பெறுவர். சனியும், சுக்கிரனும் கூடியிருக்கும் அமைப்பைப் பெற்றவர்கள் சில நஷ்டங்களாலும், நோயினாலும் துன்பப்படுவார்கள். இவர்களிடம் சில தீய பழக்கங்கள் குடி கொண்டிருக்கும். சனியும், ராகுவும் கூடியிருந்தால் கலைத் துறையிலும், இரசாயன துறையிலும் ஈடுபாடு உடையவர்களாக இருப்பார்கள்.
இதுவரை கன்னி ராசியில் இருந்த சனி பகவான் (21-12-2011) கர வருடம், மார்கழி மாதம் 5-ஆம் தேதி புதன்கிழமை, நாழிகை 3.30 அளவில் (காலை 7.30) துலா ராசிக்கு - சித்திரை 3-ஆம் பாதத்தில் மாறுகிறார். இது வாக்கியப் பஞ்சாங்கப்படி கணிக்கப்பட்டது. திருநள்ளாறு சனிப்பெயர்ச்சி விழா வாக்கியப் பஞ்சாங்கப்படி 21-12-2011-ல் தான் நடக்கிறது.
திருக்கணிதப் பஞ்சாங்கப்படி 15-11-2011 கர வருடம், ஐப்பசி மாதம் 29-ஆம் தேதி நாழிகை 10-11 விநாடிக்கு (காலை 10.05 மணி) அளவில் சனிப்பெயர்ச்சி என்று கணிக்கப்படுகிறது.
சனீஸ்வரருக்கு அதிகாரப்பூர்வமான தலம் திருநள்ளாறுதான்! ஊர் ஊருக்கு அய்யப்ப சுவாமிக்கு கோவில் கட்டினாலும், கேரளத்தில் சபரிமலையில் உள்ள அய்யப்பன் கோவிலே அதிகாரப்பூர்வமான கோவில் என்பதுபோல திருநள்ளாறு கோவிலே சனீஸ்வரருக்கு உரிய திருத்தலம். அதனால் நாமும் சனிப்பெயர்ச்சி நாளாக 21-12-2011- ஆம் தேதியை எடுத்துக்கொள்வோம்.
மூன்று வருஷம் இருக்கப் போறார்!
புராதன நூலான அர்த்தசாஸ்திரம், நம் அன்றாட வாழ்வில் சனியின் பங்களிப்பு பற்றி விரிவாகக் கூறுகிறது. ஒருவரது வாழ்நாள், தொழில், வியாபாரம் அல்லது பணி ஆகியவற்றை நிர்ணயிப்பவர் இவர் தான். அதனால், இவருக்கு ஆயுள்காரகர், ஜீவனகாரகர் என்ற பெயர் உண்டு. ஜோதிடத்தில் சிறந்தவரான வராஹமிகிரர், சனீஸ்வரர் துன்பத்தை மட்டுமே தருபவர் என்ற கருத்து முற்றிலும் தவறானது என்று கூறியுள்ளார். ஒருவரது ராசியில் இருந்து 3,6,11 ஆகிய இடங்களில், இவர் சஞ்சரிக்கும்போது அளவற்ற நன்மைகளைக் செய்வார். இதுதவிர, துலாம், மகரம், கும்பம் ஆகிய ராசியினருக்கு ஆயுள், ஆரோக்கியம், செய்யும் தொழில் ஆகியவற்றில் விசேஷபலன்களைத் தந்தருள்வார். பிதுர்களை வழிபடுவது இவருக்கு மிகவும் பிடித்தமானது. இவருடைய வாகனமான காகம் பிதுர்களின் அம்சமாகத் திகழ்கிறது.
சனீஸ்வரர் பொதுவாக ஒரு ராசியில் இரண்டே கால் முதல் இரண்டரை ஆண்டுகள் வரையே இருப்பார். ஆனால், இம்முறை அவருக்கு பிடித்த துலாம் வீட்டில் மூன்றாண்டுகள் வாசம் செய்ய உள்ளார். 2011 டிசம்பர் 21 முதல், 2014 டிசம்பர் 16 வரை இவர் துலாம் ராசியில் சஞ்சரிப்பார். இதில் ஆறுமாத காலம் (2012 மார்ச் 26 முதல் செப்.10 வரை) வக்ரமாகி, மீண்டும் முந்தைய ராசிக்கே செல்வார். இந்த காலத்தில் நற்பலன் பெறுபவர்கள் கவனமாகவும், கெடுபலன் பெறுபவர்கள் மூச்சு விடுவதற்கும் வாய்ப்பு கொடுப்பார். இந்த காலகட்டத்தை அனைத்து ராசியினரும் கவனமாக இருக்க வேண்டும். உதாரணத்திற்காக, ஒருவருக்கு பணக்கஷ்டம் என்றால், இந்த காலகட்டத்தில் சுதாரிப்பாக இருந்து, எதிர்காலத்தில் கஷ்டம் வரும் போது பயன்படுத்தும் அளவுக்கு சேமித்துக் கொள்ள வேண்டும். பணம் தாராளமாக கிடைக்கிறதே என செலவழித்து விட்டால், சிரமம் தான்.



புராணங்களில் சனிபகவானின் சிறப்பு!





சனிபகவானும், விநாயகரும்:ஒருசமயம், சனி பகவான் விநாயகரைப் பிடிக்க வந்தார். இதனை அறிந்த விநாயகர், தன் முதுகில் நாளை வா என்ற வாசகத்தை எழுதி வைத்துக்கொண்டு முதுகைப் பார் என்கிறார். அவர் முதுகில் நாளை வா என்ற வாசகத்தைப் பார்த்து விட்டு, அதன்படி மறுநாள் வந்தார் சனி பகவான். மறுநாளும் அந்த வாசகத்தைப் படித்துவிட்டு திரும்பிச் சென்றார். இதுவே தொடர்கதையாக, அன்று முதல் இன்று வரை விநாயகரை சனியால் பிடிக்கவே முடியவில்லை என்று புராணம் கூறுகிறது.
சனி பகவானும், இராவணனும்:இலங்காபுரியை அரசாண்டு வந்த அரக்கர் குலமன்னன் இராவணன், ஈசனிடம் வரம் பெற்ற மமதையால் தேவர்களையும், முனிவர்களையும் பற்பல தொல்லைகளுக்கு ஆளாக்கினான். மாதவம் புரிந்து வந்த மாத் தவசியர்களை மதுக்குடங்களைச் சுமக்கச் செய்து அவர்களது சாபத்திற்கு ஆளானான். தொழுதற்குரிய அவர்களைத் துன்புறுத்தினான். நாளெல்லாம் ஆராதிக்க வேண்டிய நவக்கிரகத் தேவர்களை, மதியாமல் மமதையோடு திரிந்தான். இராவணன், நவக்கிரஹ நாயகர்களைத் தனது அரியணை ஏறும் படிக்கட்டுகளின் கீழே குப்புறபடுத்திருக்கச் செய்து, அதன் மீதுள்ள சிம்மாசனத்தில் கொலுவிருந்தான். சர்வேஸ்வரனிடம் இராவணன் வரம் பெற்ற ஒரே காரணத்தால் நவக்கிரக தேவர்கள் இராவணனின் கொடுமைகளுக்குக் கட்டுண்டு இருந்தனர். இராவணனது அகங்காரத்தையும், அராஜக போக்கையும் அடியோட அழிக்க, நாரத முனிவர் ஓர் அற்புதமான செயலைச் செய்தார். நாரதர் இராவணனை எப்படியும் அழிக்க வேண்டும் - அவனிடமுள்ள சக்தியை ஒடுக்க வேண்டும் என்ற எண்ணத்தில், ஒரு நாள் இராவணனது அவைக்கு விஜயம் செய்தார். இராவணன், நாரதரை வரவேற்று உபசரித்தான். உயர்ந்த ஆசனத்தில் எழுந்தருளச் செய்தான். இராவணன், நாரதரிடம் தனது பிரதாபங்களைச் சொல்லத் தொடங்கினான். நாரதரே! தேவலோகம், சொர்க்க லோகம், பாதாள லோகம், அதலம், விதலம், பூமி என்று பதினான்கு லோகங்களையும் சுற்றி வரும் பிரம்ம புத்திரரே! என்னைப் போன்ற அதி பராக்கிரம சாலியைக் கண்டதுண்டா? அரக்கனின் ஆணவ மொழி கேட்டு நாரதர், இலங்கேஸ்வரா! புரம் எரித்தவரிடமே சாகா வரம் பெற்றவன் அல்லவா நீ ! உன்னுடைய பெருமை, தேஜஸ், கம்பீரம், தைரியமும் எவருக்கு வரும்! உன்னுடைய பிரதாபங்களைப் பேசாத லோகமே இல்லை! ஆனால் எனக்கு ஒரு ஐயப்பாடு என்று ஒரு பீடிகையைப் போட்டார். ஐயப்பாடா? இந்த இராவணனிடமா? கேளும் விளக்கம் தருகிறேன். நவக்கிரக தேவர்களில் வல்லமை பொருந்தியவர் சனீஸ்வரன். அவன் உன்னைப் போல் ஈசனிடம் சனீஸ்வரன் என்ற பட்டத்தை வாங்கியவன். அவன் உனது பிரதாபங்களைக் காண வேண்டாமா? அதனால் அவனை உன்னைப் பார்த்து நிமிர்ந்து இருக்கச் சொல்! நாரதரின் சூழ்ச்சியை உணராத இராவணன், நன்று சொன்னீர் நாரதரே! அவ்வாறே செய்கிறேன் என்று ஆணவத்தால் கொக்கரித்த இராவணன், சனி பகவானைத் தன்னைப் பார்த்து நிமிர்ந்து இருக்கச் சொன்னான். இது தான் சமயம் என்று சனி பகவான் நிமிர்ந்து இராவணனைப் பார்த்தார். அவ்வாறு பார்த்த மாத்திரத்திலேயே இராவணனிடமிருந்த சக்தி, ஆற்றல், வரம்பெற்ற பலம் அனைத்தும் அவனை விட்டு மாயமாய் மறைந்தது! இராவணன் ஒரு விநாடி நடுங்கிப் போனான்.
சனி பகவானுடைய பார்வை கர்வம் பிடித்த இராவணனை நிலைகுலையச் செய்தது. சனியின் பார்வையின் வன்மை, வல்லமை மிக்க இராவணனை, இராம பாணத்திற்கு பலியாக்கியது! இதே போல், சனி பகவான் மற்றொரு சந்தர்ப்பத்தில், ராவணனின் சூட்சியை அடியோடு அழித்தார். இராவணனின் மனைவியான மண்டோதரி இந்திரஜித்தைக் கருவுற்று இருந்த சமயம் அது! இராவணன் தனக்குப் புத்திரன் பிறக்க வேண்டுமென்றும் அவ்வாறு பிறக்கின்ற புத்திரன் நீண்ட ஆயுளுடனும், ஈரேழு பதினான்கு லோகங்களையும் ஆளுகின்ற வீரம் பெற்றவனாகவும் இருக்க வேண்டுமென்றும் கருதினான். அதற்காக இராவணன் ஒரு சூழ்ச்சி செய்தான். ஜோதிட நிபுணர்களை வரவழைத்தான். தனது எண்ணம் போல் புத்திரன் பிறப்பதற்கு கிரகங்கள் எந்தெந்த வீடுகளில் எப்படி எப்படி இணைந்திருக்க வேண்டும் என்பதனைத் தெரிந்து கொண்டான். மண்டோதரிக்குப் பிரசவகாலம் நெருங்கிய பொழுது இராவணன் பன்னிரண்டு கிரகங்களையும் ஜோதிட நிபுணர்கள் கணித்துக் குறித்துக் கொடுத்தபடி அந்தந்த வீடுகளில் இருக்கச் செய்தான். இராவணனுடைய பேராசையையும், சூழ்ச்சியையும் தெரிந்து கொண்ட சனீஸ்வர பகவான் அவன் எண்ணத்தை அழித்துவிடக் கருதினார். சனிபகவான் அதற்காக ஓர் உபாயம் செய்தார். இந்திரஜித் பிறக்கப் போகும் காலகட்டம் நெருங்கியதும் சனிபகவான் தமது கால்களை பக்கத்து கிரகத்துக்குள் நீட்டினார். இதனால் சனிவக்ரம் அடைந்து விட்டார். (இது ஜோதிட நியதி). இந்திரஜித்தின் ஜனன காலத்தில் சனி வக்கரமடைந்த காரணத்தினால் இந்திரஜித் அற்ப ஆயுளில் உயிர் நீத்தான்! இராவணனுடைய சூழ்ச்சி முறியடிக்கப்பட்டது ! சனிபகவான், தம்மை அலட்சியப் படுத்துவோரை அழிக்காமல் விடமாட்டார். அதே சமயம் தம்மை ஆராதிப்போர்க்கு ஐசுவரியத்தை அள்ளி அள்ளிக் கொடுப்பார்.
சனிபகவானும், வாயுகுமாரனும்: ராமாவதாரம் முடிந்து கிருஷ்ணாவதாரம் நடக்கும் துவாபரயுகம்! சஞ்சீவி மலையை கொண்டு வந்து அமரர்குலம் காத்த சிரஞ்சீவி ஆஞ்சநேயர் ஸ்ரீராமபிரானின் திருநாமத்தை ஜபித்தவாறு வாழ்ந்து வந்தார். வாயுகுமாரனான ஆஞ்சநேயர், சிவபெருமானின் அம்சம் ஆவார். சூரிய குமாரனான சனியோ, சிவபெருமானிடம் சனீஸ்வரன் என்று ஈஸ்வர பட்டத்தைப் பெற்றவர். ஆஞ்சநேயர் மார்கழி திங்கள் மதிமறைந்த நந்நாள் மூல நட்சத்திரத்தில் பிறந்தவர். ஜோதிட சாஸ்திரப்படி தனுர்ராசியில் சூரியனும், சந்திரனும் இருக்கின்ற சுபவேளையில் ஆஞ்சநேயர் அவதாரம் பண்ணினார். ஆஞ்சநேயர் மூல நட்சத்திரத்தில் பிறந்தவராதலால் சனிபகவான் 7 1/2 ஆண்டு காலம் அவரைப் பிடிக்க வேண்டும் என்பது சாஸ்திரம். அதற்கான சந்தர்ப்பத்தை எதிர்பார்த்துக் கொண்டிருந்தார் சனிபகவான்! ஆஞ்சநேயர் எதைப் பற்றியும் கவலைப்படாமல் ராமநாமத்தை ஜபிப்பதும், ஸ்ரீராமரை மலர் கொண்டு ஆராதிப்பதுமாக இருந்து வந்தார். ஆஞ்சநேயர் பூ பறிக்க மலர் வனம் புறப்படும்போது அவரைப் பிடிக்கலாம் என்று சனிபகவான் காத்துக் கொண்டிருந்தார். சனிபகவானின் எண்ணத்தை முன்னதாகவே தெரிந்து வைத்திருந்த அனுமன் சனிபகவானின் பிடியிலிருந்து தப்புவதற்கு உகந்த மார்க்கத்தைத் தெரிந்து வைத்திருந்தார். ஆஞ்சநேயர் திருமாளிகையின் மணிக்கதவைச் சற்று திறந்து தமது வாலை மட்டும் கொஞ்சம் வெளியே நீட்டினார். அவ்வளவு தான்! ஆஞ்சநேயரைப் பிடிக்க வெளியே நின்று கொண்டிருந்த சனிபகவான் இது தான் சமயம் என்று ஆஞ்சநேயர் வாலைக் கட்டியாகப் பிடித்துக் கொண்டார். சனி பகவானின் செயலைப் புரிந்து கொண்ட ஆஞ்சநேயர் முகம் மலர, சுவாமி! என்னை விட்டு விடுங்கள்! என்றார். அதற்கு சனிபகவான், ஆஞ்சநேயா! அது எப்படி முடியும்? 7 1/2 ஆண்டு காலம் உன்னை நான் பிடித்து ஆட்டிப் படைக்க வேண்டும் என்பது நியதியல்லவா? என்று கேட்டார். என் ராம ஜபத்துக்கும், பூஜைக்கும் உங்களால் ஊறு வரலாமா? ஈசுவர பட்டம் பெற்ற தேவரீர், ஈசுவர சொரூபமான இந்த எளியவனை விட்டு விலகுதல் தான் உசிதமானது; உத்தமமானது! என்றார் ஆஞ்சநேயர்! இல்லை ஆஞ்சநேயா! இது என்னால் முடியாது. நான் அந்த ஈசுவரனையே பிடித்துள்ளேன். பூவுலகில் வாசம் என்று வந்துவிட்டால் கிரகங்களுக்குக் கட்டுப்பட்டுத்தான் ஆகவேண்டும். இது ஜோதிடத்தின் தீர்ப்பு! எதைப் பற்றியும் எனக்குக் கவலை இல்லை. எனக்கு என் ஸ்ரீராமச்சந்திர பிரபு தான் முக்கியம்! இதில் எவ்வித மாற்றமும் இல்லை! தங்கள் பிடியிலிருந்து எப்படி தப்புவது என்பது எனக்குத் தெரியும்! ஆஞ்சநேயர் ஆணித்தரமாகக் கூறினார். இவ்வாறு சனிபகவானிடம் தமது முடிவைத் திடமாகச் சொன்ன ஆஞ்சநேயர். ஆனந்தம் தாங்காமல் வாலை சுழற்றி, சுழற்றி துள்ளிக்குதித்து ராமநாம சங்கீர்த்தனத்தை பாடிக்கொண்டு, ஆடத்தொடங்கினார்.
ஆஞ்சநேயரின் வாலைப் பிடித்துக் கொண்டிருந்த சனி பகவான் வாலைப் பிடிக்கவும் முடியாமல் விடவும் முடியாமல் தத்தளித்துக் கொண்டிருந்தார். வாலின் நுனியில் அமர்ந்திருந்த சனிபகவான் மிகுந்த வேதனையை அனுபவித்துக் கொண்டிருந்தார். அவர் ஆஞ்சநேயரிடம், வாயு குமாரா! நீ எப்போது உனது பஜனையை நிறுத்தப் போகிறாய்? என்று கேட்டார். ஸ்ரீராம நாம சங்கீர்த்தனத்தை நிறுத்துவதா? நன்றாக கேட்டீர்களே ஒரு கேள்வி! சிரித்துக் கொண்டே சொன்னார் ஆஞ்சநேயர்! துள்ளிக் குதிக்கிறாயே! அதை எப்போது நிறுத்துவாய்? என்று கேட்டேன்? நீர் எம்மை எத்தனை ஆண்டுகள் பிடிப்பதாக உத்தேசம்? ஏழரை ஆண்டுகள். அப்படியானால் நானும் ஏழரை ஆண்டுகாலம் குதித்துக் கொண்டே இருப்பேன்! ஆஞ்சநேயரின் முடிவு சனிபகவானுக்குப் பெரும் அதிர்ச்சியைக் கொடுத்தது. சனி பகவான் தமக்குள் ஓர் முடிவிற்கு வந்தார். இவரை விட்டு விடுவோம் ! ஏழரை ஆண்டுகள் நான் பிடிப்பேன் என்ற அச்சத்தில் ஆஞ்சநேயர் இருக்கிறார்? இந்த பய உணர்வே நான் ஏழரை ஆண்டுகாலம் அவரைப் பிடித்ததற்குச் சமம்! என்று எண்ணியவராய் ஆஞ்சநேயர் வாலை விட்டு கீழே இறங்கினார் சனிபகவான்! ஆஞ்சநேயர் வாலை உள்ளே இழுத்துக் கொண்டு உள்ளிருந்த படியே, ச்ருதகர்மா! உனக்கு எனது வந்தனங்கள். என் ராமர் உன் ஈசுவரனைப் பூஜித்தவர். நானோ அந்த ஈசனின் சொரூபம்! நீயோ அந்த ஈசனால் சனிபகவான் என்ற பட்டத்தைப் பெற்றவன். அதுமட்டுமல்ல; உன் தந்தையான சூரிய பகவான் என் குருதேவர்! இப்படி நாம் இருவருமே அந்த ஈசுவரனின் அன்பிற்கு பாத்திரமானவர்கள் என்பதனை நீ உணர்வாய்! என்றார். ஆஞ்சநேயர் வெளியே வந்து, சனிபகவானை வணங்கினார். சனிபகவானும் ஆஞ்சநேயரை வணங்கி, ஆஞ்சநேயா! உன்னால் உன் பக்தர்களுக்கு ஒரு நல்ல காரியம் நடக்க வேண்டும் என்பதற்காகத் தான் இப்படியொரு அற்புத திருவிளையாடலை அந்த ஈசனே நடத்தினார் போலும்! என்றார். ச்ருதகர்மா! எம்மைத் துதிப்போர்களை நீ எந்த வகையிலும் துன்புறுத்தலாகாது. அவர்களுக்கு நல்ல மேன்மைகளையும் சந்தோஷத்தையும் அளிக்க வேண்டும்! அப்படியே ஆகட்டும் ஆஞ்சநேயா! என்றார் சனிபகவான்! எல்லா சிவன் கோவில்களிலும் சனிபகவான் சன்னதி எதிரில் ஆஞ்சநேயர் சன்னதியைக் காணலாம். ஆஞ்சநேயரை வணங்கி வழிபட்டால் சனிபகவான் மகிழ்ச்சி அடைவார். தம்மால் அவர்கட்கு எவ்வித கஷ்டமும் நேராமல் அருள் புரிவார்.
சனிபகவானும், நளனும்: நிடத நாட்டு மன்னன் நளன், மாவிந்த நகரத்தைத் தலைநகராகக் கொண்டு, பட்ட மகிஷி தமயந்தியுடன் அரசோச்சி வந்தான். ஒருமுறை கால் சுத்தம் செய்யாமல் இறைவழிபாட்டிற்கு அமர்ந்த நளனை கலிரூபத்தில் சனிபகவான் பற்றிக் கொண்டார். அதன் விளைவு நளனின் நல்வாழ்வு நலிவுற்றது. புட்கரன் என்பவனுடன் நளன் சூதாடித் தோற்றான். நளன் நாடு இழந்தான், நலம் இழந்தான். கட்டிய மனைவியுடன் உடுத்திருந்த உடையுடன் காடு புகுந்தான். காட்டிலே, நளனும், தமயந்தியும் இன்னல்கள் பல அனுபவித்தனர். ஒருநாள் இரவு நளன், மனைவியைக் கலை பாதியோடு வனத்திலே தவிக்க விட்டுவிட்டு ஓடினான். கால் போன போக்கிலே, கானகத்தில் சென்று கொண்டிருந்த நளன், காட்டுத் தீயில் சிக்கித் தவித்துக் கொண்டிருந்த கார்க்கோடகன் என்னும் சர்ப்பத்தைக் காப்பாற்றினான். அவ்வாறு நெருப்பிலிருந்து தப்பிய கார்க்கோடன் நளனைத் தீண்டியது. அவ்வாறு தீண்டிய மாத்திரத்திலேயே, நஞ்சின் கடுமையால் நளன் உடல் நீலம் பாய்ந்தது. அவன் உடல் குறுகினான். கார்க்கோடனின் செயலைக் கண்டு, நளன், நான் உபகாரம் செய்ததற்கு, அபகாரம் செய்து விட்டாயே என்று வருந்தினான். அதற்குக் கார்க்கோடகன், நளனிடம், மன்னா! உன்னை எவரும் அடையாளம் கண்டு கொள்ளமாட்டார்கள். உனக்கு எவ்வித துன்பமும் ஏற்படாது என்று கூறி அரவுரி ஆடையைக் கொடுத்தான். உனது உண்மையான உருவைத் திரும்ப பெறுவதற்கு இந்த அரவுரியைப் போர்த்திக் கொண்டால் போதுமானது என்றான். நளனும் கார்க்கோடகனுக்கு நன்றி கூறிப் புறப்பட்டான். காட்டிலே தனித்து விடப்பட்ட தமயந்தி பல துன்பங்களுக்கிடையே தந்தையை அடைகிறாள். அதே போல் நளனும் துன்பங்கள் பல அனுபவித்து, இறுதியில் தமயந்தியை அடைகிறான். அரவுரி போர்த்தி, அரூப தோற்றத்தைக் களைந்து புதுப்பொலிவு பெற்றான் நளன்! நளன் முன் போல் மனைவியுடன் மகிழ்ந்து பிள்ளைகளைப் பெற்று வாழ்வைத் தொடங்குகிறான். அரச போகமும், அரண்மனை வாழ்வும் நளனுக்குக் கிட்டியும், அவனது இதயத்தில் மட்டும், ஏதோ ஒரு விதசலனம் இருந்து கொண்டேதான் இருந்தது! எந்நேரமும் பித்துப் பிடித்தவன் போல் காணப்பட்டான். ஒரு நாள் நாரத மகரிஷி, நளனது அரண்மனைக்கு வந்தார். நளன் நாரத முனிவரை முகமன்கூறி வரவேற்றான். உயர்ந்த ஆசனத்தில் எழுந்தருளச் செய்து பாத பூஜை செய்தான். நாரதர் அகம் மகிழ்ந்து, நளமன்னா! உன் உள்ளத்திலே இருக்கும் துயரத்தை யாம் அறிவோம். இதுவரை நடந்த துன்பத்திற்குக் காரணம் சனீசுவரனின் செயலேயாகும். அதனால் சனீசுவரனை ப்ரீதி செய்வாயாக! இப்பொழுதே தீர்த்த யாத்திரை புறப்படுவாயாக! சித்தம் தடுமாறும் நிலைமாறும் என்று நல் வார்த்தைகள் நவின்றார். மன்னனும் மனம் மகிழ்ந்து முனிவரைப் பன்முறை நமஸ்கரித்து, அவரது பேரருளைப் பரிபூரணமாகப் பெற்றான். நள மகராஜன் அரச பாரத்தை அமைச்சர்களிடம் ஒப்படைத்து, தமயந்தியுடனும் குமாரர்களுடனும் தீர்த்த யாத்திரைப் புறப்பட்டான். வட தேசத்திலும், தென் தேசத்திலுமுள்ள பற்பல புண்ணிய ÷க்ஷத்ரங்களைத் தரிசித்தான். புனித நதிகளில் நீராடினான். மகான்களைத் தரிசித்தான். இப்படியெல்லாம் இருந்தும் அரசனின் இதயத்திலுள்ள துன்பச் சுமை மட்டும் குறையவே இல்லை! நளன், தென்னாட்டிலுள்ள திருமுதுகுன்றத்தூரை வந்தடைந்தான். அவ்வூரில் கோவில் கொண்டுள்ள பழமலை நாதரையும், பிராட்டியாரையும் கண்குளிரக் கண்டுகளித்துப் பேரானந்தம் கொண்டான்.
ஆண்டவனைத் தரிசித்த மன்னர்க்கு அடியவரைத் தரிசிக்கும் பேறு கிட்டியது. மாத்தவசியான பரத்துவாஜ முனிவரைத் திருக்கோயிலில் கண்டார். மன்னன், மனைவி மக்களுடன், முனிவரை சாஷ்டாங்கமாக வீழ்ந்து பணிந்தான். மன்னனின் மனக்குறையைத் தமது தபோ வலிமையால் உணர்ந்த முனிவர், நளவேந்தே! உனது வேதனையை யாம் அறிந்தோம். புண்ணிய பாரதம் முழுதும் பகவத் கைங்கரியம் செய்தும் புண்பட்ட நெஞ்சிற்கு மட்டும் அமைதி பிறக்க வில்லையே! இதற்கு என்ன காரணம் என்பதனை அறிய முடியாமல் அல்லலுறுகிறாய்! அடுத்துள்ள திருநள்ளாறு ÷க்ஷத்ரம் செல்வாயாக! தர்ப்பாரண்யேஸ்வரர் கோயிலில் அம்மன் சன்னதியின் பக்கத்தில் எழுந்தருளியுள்ள சனி பகவானைத் தோத்திரம்செய்து ஆராதித்து, அவரால் ஏற்பட்ட துன்பத்தைத் தீர்த்துக் கொள்வாயாக! என்றார். முனிவர் மொழி கேட்டு, சுவாமி! அடியேன் தேவரீர் அருளினாற் போல் இப்பொழுதே சென்று எனது பாபத்திற்கு பிராயச்சித்தம் தேடிக் கொள்கிறேன் என்று கூறி, முனிவரின் ஆசியுடன் திருநள்ளாறு என்னும் திருப்பதியை வந்தடைந்தான். மன்னன், மனைவி மக்களுடன் பிரம்ம தீர்த்தத்தில் நீராடினான். அந்த தீர்த்தத்தில் நீராடிய நள மன்னன், கங்கை நதியில் நீராடி சனி பகவானைத் தரிசிக்கும் பேறு தனக்குக் கிட்டவில்லையே என்று வருத்தமுற்றான். வடக்கே ஓடும் கங்கை நீரை எப்படியாவது, திரு நள்ளாற்றுக்குக் கொண்டு வரவேண்டுமென்று பேராவல் கொண்டான். மனைவி மக்களுடன் சிவதியானத்தில் ஈடுபட்டான். நாளாக நாளாக தியானமே தவமானது. நள மன்னனின் தவம் சிவபெருமான் மனதை இளகச் செய்தது. சிவபெருமான் நள மன்னனுக்குத் தரிசனம் கொடுத்தார். நளன் எம்பெருமானை நிலம் கிடந்து சேவித்தான். அன்று பகீரத மன்னனுக்காக கங்கையைப் பெருக விட்ட சங்கரன் இன்று நள மன்னனுக்காக வேண்டி கங்கையைப் பெருக விட திருவுள்ளம் பற்றினார். சிவபெருமான் தமது சூலாயுதத்தால் நிலத்தைக் கீறி கங்கையைத் திருநள்ளாற்றில் பெருக விட்டார். அந்த தீர்த்தத்திற்கு நளகூபம் என்று திருநாமம் சூட்டினார். எம்பெருமான் நளனுக்குப் பேரருள் புரிந்தார். நள மன்னன் எம்பெருமானை தோத்திரம் செய்தான். நிலத்தில் வீழ்ந்து வணங்கினான். மனமகிழ்ச்சி பொங்க குடும்பத்துடன் ஆலய தரிசனத்துக்குப் புறப்பட்டார். சிவநாமத்தைச் சிந்தையிலே கொண்டு, இருகரம் கூப்பி கோபுரத்தைத் தரிசித்தான். அம்மன் சன்னதி அருகே அபயஹஸ்தம் அளிக்கும் திருக்கரத்துடன் அருட்காக்ஷி தரும் சனிபகவானைக் கண்டான். மன்னன் இருகரங் கூப்பித் தொழுதான். அபிஷேக ஆராதனைகளைச் செய்தான். எள் அன்னத்தை நிவேதித்தான். அவருக்கு பிரியமான கருமை நிற வஸ்திரம் சாத்தினான். எண்ணெய் விளக்கேற்றி தூபதீபம் காண்பித்தான். சூரியனுக்கும் சாயாதேவிக்கும் குமாரராக அவதரித்தவரே! சுபிட்க்ஷத்தை அள்ளித் தருபவரே! எனது பிழை பொறுத்தருளுவீர் என்று கோடிமுறை பிழை பொறுத்தருள பிரார்த்தனை செய்தான். இவ்வாறு மன்னன் சனிபகவானை ஆராதனையாலும், அபிஷேக பூஜையாலும், நாம சேவையாலும் மானசீகமாக போற்றிப் பணிந்ததும், சனிபகவான் மனம் குளிர்ந்தார். சனிபகவான் நளனை விட்டு நீங்கினார். நளன் புத்துணர்ச்சி பெற்றான். சித்தத்திலே சுத்தமான தெளிவு பிறந்தது.
சனிபகவான் நளனுக்குப் பேரருள் நல்கினார்.
அவஸம் த்வயி ராஜேந்த்ர ஸுது: கம்அபராஜித!
விஷேண நாகராஜஸ்ய தஹ்யமாநோ திவாநிசம
யே சத்வாம் மதுஜா லோகே கீர்த்தயிழ்யந்த்ய தந்த்ரிதா
மதப்ரஸுதம் பயம் தேஷாம் ந கதாசித் பவிஷ்யதி!
அரசர்களுள் ஒப்பற்றவனே! தோல்வியை உணராதவனே! இத்தனை காலம் யாம் உன்னுடன் வாஸம் செய்து வந்தோம். இரவும் பகலும் நாகராஜனின் நஞ்சு எம்மை பொசுக்கிக் கொண்டே இருந்தது. இதுகாறும் நான் துக்கத்துடன்தான் உன்னிடம் வசித்து வந்தேன். இவ்வுலகில், எந்த மனிதர்கள் உன்னுடைய சரிதத்தைச் சொல்வார்களோ, அவர்களுக்கு என்னால் எத்தகைய துன்பமும் ஏற்படாது. இவ்வாறு நளனுக்கு வரம் நல்கி, அந்த வரத்தால், மானிடர் அனைவர்க்கும் தமது வல்லமையை உணர்த்தினார் சனி பகவான்! நளமன்னன் அம்பிகையையும் அரவணிந்த அண்ணலையும் தரிசித்து, காதலால் கசிந்து கண்ணீர் மல்கினான். நளன், திருநள்ளாற்றில் சில காலம் தங்கியிருந்து, சனி பகவானையும், போகமார்த்த பூண்முலையாள் நாயகியையும், தர்ப்பாரண்யேஸ்வர நாயகரையும் ஆராதித்து அஷ்ட ஐசுவரியத்துடன் நாடு திரும்பினான். அள்ளிக் கொடுக்கும் வள்ளலாகிய சனிபகவானின் பேரருளால் நளன் சகல சவுபாக்கியங்களுடன் நிடத நாட்டை நெடுங்காலம் ஆண்டு பெருவாழ்வு பெற்றான். நமது ஜாதகத்தில் ஏற்படுகின்ற தோஷங்கள் - அதனால் வரும் துன்பங்கள் அனைத்தும், நவக்கிரஹதேவனான திரு நள்ளாற்று நாயகனான சனிபகவானைப் பூஜித்து வழிபடுவதால் தானாக விலகிப் போகும்! திருநள்ளாற்று திருக்கோவிலில் எழுந்தருளி, அடியவர்களுக்கு ஆனந்த தரிசனம் தரும் ஆதவன் மைந்தனான - சனி பகவானை - ஆராதித்து ஆனந்த வாழ்வைப் பெறலாம்.
சனிபகவானும் திருக்கச்சி நம்பியும்: பண்டையக் காலத்தில் நறுமலர்ச்சோலைகளும், ஓங்கி உயர்ந்த மரங்களைக் கொண்ட சாலைகளும் கொண்டு விளங்கிய ஊர் பூவிருந்தவல்லி. அத்திருத்தலத்தில் ஆற்றலோடும், பக்தியோடும், பாரோர் போற்றும் செல்வத் தோடும் வாழ்ந்த குடிகள் பல உண்டு. உயர்ந்த குலத்திலே - ஆதவன் உதித்தாற் போல், மாசி மாதம், மிருகசீரிஷ நட்சத்திரம் கூடிய பொன்னான நாளில் அவதரித்தவர் திருக்கச்சி நம்பிகள்! இவருடைய இயற்பெயர், காஞ்சிபூர்ணர் என்பதாகும். இளமையிலிருந்து எம்பெருமானுக்குக் கைங்கரியம் செய்வதனையே பிறவியின் பெரும் பயனாகக் கொண்டிருந்தார். அனுதினமும் வைகறைத் துயிலெழுந்து நீராடி நெற்றியிலும், மேனியிலும் திருமண், ஸ்ரீசூர்ணம் அணிந்து கொள்வார். துளசிமணி மாலைகளை அணிந்து கொள்வார். வாசமிகும் நறுமலர்களைப் பறித்து வர நந்தவனம் செல்வார். ஸ்ரீமந் நாராயணனின் அனந்த கோடி நாமங்களை அகத்தே கொண்டு, மலரும் நிலையிலுள்ள வண்டுகள் தீண்டாத பூக்களை நிறைய பறித்துக் கொண்டு வரதராஜர், திருக்கோவியிக்குக் கொடுப்பார். திருக்கோயிலிலே, உத்ஸவமூர்த்தி திருவீதி உலா வரும் போது ஆலவட்ட (விசிறி) கைங்கரியம் செய்து வந்தார். பூவிருந்த வல்லிப் பெருமானுக்கு கைங்கரியம் செய்து வந்த அன்பருக்கு ஸ்ரீரங்கம் என்னும் திரு ÷க்ஷத்ரத்தில் கோயில் கொண்டுள்ள பள்ளி கொண்ட பெருமானுக்கு, கைங்கரியம் செய்ய வேண்டும் என்று ஆசை ஏற்பட்டது. ஒருநாள் அங்கு சென்று, ஸ்ரீரங்கத்தின் எல்லையில் நின்று கோபுரத்தைத் தரிசித்து, ஸ்ரீரங்கநாதனைத் தரிசித்து, தோத்திரங்களால் ஆராதித்து ஆலவட்ட கைங்கரியத்தைத் தொடர்ந்தார்.
நம்பிக்கு, திருப்பதியிலே கோயில் கொண்டுள்ள திருவேங்கடமுடையானுக்கும் ஆலவட்ட கைங்கரியம் செய்ய வேண்டும் என்ற எண்ணம் எழுந்தது. ஒருநாள், பூவிருந்த வல்லியில் இருந்து புறப்பட்டு, திருவேங்கடமுடையான் திருமலைக்கு வந்தார். ஸ்ரீநிவாஸனை உடலும் உள்ளமும் உருக கண்குளிரக் மனம்குளிரக் கண்டுகளித்து சேவித்தார். ஸ்ரீநிவாஸனுக்கு ஆலவட்ட கைங்கரியத்தை அளவிலா ஆசையோடும் பக்தியோடும் செய்து வந்தார். ஒருநாள் இரவிலே, எம்பெருமான், நம்பிக்கு காட்சி தந்தார். நம்பீ! நானோ இப்பிரதேசத்தில் குளிரால் நடுங்கிக் கொண்டிருக்கிறேன். அதனால் உனது ஆலமிட்ட கைங்கரியத்தை வரதனுக்குச் செய்வாய் என்று திருவாய் மலர்ந்து அருளினார். எம்பெருமானின் அன்புக் கட்டளைப்படி காஞ்சி பூரணர், காஞ்சியம்பதி வந்தார். காஞ்சி வரதராஜனுக்கு ஆலவட்ட கைங்கரியம் செய்ய ஆரம்பித்தார். வரதராஜனின் பனிதூங்கும் மென்மலர்த் திருவடியில் சிந்தை எல்லாம் செலுத்திய நம்பிகள் அத்திருத்தலத்திலேயே தங்கி விட்டார். நம்பிகளின் பக்திக்குத் திருவுள்ளம் பற்றி வரதராஜப் பெருமான், அவர் முன்னால் பிரசன்னமாகி - வேதாந்த விஷயமாக ஆறு வார்த்தைகள் திருவாய் மலர்ந்தருளினார். நம்பிகள் பெருமானை வலம் வந்து, அநேக கோடி தண்டம் சமர்ப்பித்து, தம்மை எம்பெருமானின் திருவடியில் சேர்த்துக் கொள்ளும்படியான வைகுண்ட பதவியை பெறப் பிரார்த்தித்தார். அதற்கு எம்பெருமான், நம்பிகளிடம், ஆசாரிய முகமாகத்தான் வரவேண்டும் என்று அநுக்கிரஹித்து அருளினார். எம்பெருமானின் அருளால் நம்பிகளுக்கு ஆளவந்தாரிடம் பஞ்ச ஸமஸ்காரம், மந்திரோபதேசம் போன்ற குரு மார்க்கப் பேரருள் சித்தித்தது. நம்பிகள், வரதராஜனைப் போற்றிப் புகழ்ந்து, தேவராஜ அஷ்டகம் என்ற கிரந்தத்தை அருளினார். இவ்வாறு காஞ்சியிலே எழுந்தருளி பகவத் கைங்கரியம் செய்து நம்பிகளுக்கு ஓர் சோதனை ஏற்பட்டது!
ஒரு முறை சனி பகவான் நம்பிகளிடம், சுவாமி! தங்களை, யாம் ஏழரை ஆண்டு காலம் ஆட்கொள்ள வேண்டும் என்பது விதி என்றார். நம்பிகள், சனி பகவானை நமஸ்கரித்து, சனைச்சுவரா! தேவரீருடைய எண்ணப்படி, இந்த எளியவனை எத்தனை ஆண்டு காலம் வேண்டுமானாலும் ஆட்டிப்படைக்கலாம். அடியேன் ஏற்றுக் கொள்ளச் சித்தமாக உள்ளேன். ஆனால், நான் அனுதினமும் நடத்திவரும் ஆலவட்ட கைங்கரியத்துக்கு பங்கம் ஏற்படுமே என்று தான் கவலை கொள்கிறேன் என்றார். சனி பகவான் சற்று சிந்தித்து, அப்படியானால் ஏழரை ஆண்டுகள் என்பதனை, உமக்காக வேண்டி ஏழரை நாட்களாக மாற்றிக் கொள்கிறேன் என்றார். ஏழரை நாட்களா! அதுவும் என் சுவாமிக்கு நான் அபச்சாரம் செய்வது போல் அல்லவா ஆகிவிடும். சூரிய குமாரரே! அடியேனை விட்டுவிடும். நம்பிகளின் பக்தியைக் கண்டு சனிபகவான், நம்பி! உனது பக்தியைக் கண்டு யாம் மகிழ்ந்தோம். உம்மை ஏழரை நாழிகை யாம் பிடித்துக் கொள்வோம்! என்ற திருவாய் மலர்ந்து அருளினார்! வழக்கம் போல், நம்பிகள் வரதராஜனுக்குத் திருவால வட்டக் கைங்கரியத்தை முடித்து விட்டு, ஆலயத்தைப் பன்முறை வலம் வந்து, தமது திருமாளிகைக்குத் திரும்பினார். அன்றைய தினம் எதனாலோ, சுவாமிகளின் இதயத்திலே ஒரு வித சலனம்; சஞ்சலம்; சங்கடம். சுவாமிகள் திரு மாளிகையிலே அமர்ந்து, தேவராஜ அஷ்டகத்தைப் பாராயணம் செய்து கொண்டிருந்தார். அது சமயம், பெருமானுக்குத் திருவாராதனம் செய்யப் போன அர்ச்சகர், சன்னதியிலே வைத்திருந்த தங்கவட்டிலைக் காணாது திகைத்தார். அந்த நேரம் அர்ச்சகருக்கு, நம்பிகளின் நினைவு தான் வந்தது! எம்பெருமானுக்கு அந்தரங்க பூர்வமாக ஆலவட்ட கைங்கரியம் செய்து வரும் நம்பிகள் எடுத்திருக்கக் கூடுமோ? என்ற ஐயப்பாடு எழுந்தது. அர்ச்சகர், அதிகாரிகளிடம் விஷயத்தைச் சொல்லி, நம்பிகளை விசாரிக்க வேண்டும் என்று கேட்டுக் கொண்டார். அதிகாரிகள் நிலைமை தர்ம சங்கடமானது! என் செய்வது! வேறு வழியின்றி நம்பிகளை அழைத்து வந்தனர். அதிகாரிகள் சுவாமிகளிடம் மிகுந்த தயக்கத்துடன், சன்னிதானத்திலிருந்த தங்கவட்டிலைக் காணவில்லை! அதுபற்றித் தேவரீருக்கு ஏதாகிலும் தெரியுமா? என்று கேட்டவர், மீண்டும் சுவாமிகளிடம், அந்தரங்ககைங்கரியம் செய்யும் தங்களுக்குத் தெரியாமல் வட்டில் வெளியே போக வழி இல்லை என்று அர்ச்சகர் முறையிடுகிறார். இதில் சுவாமிகளின் அபிப்பிராயம் என்னவோ? என்று கேட்டார். நம்பிகள் நடுங்கினார். தணலிடைப் புழுவாய்த் துடித்தார்! அதிகாரிகளின் அபாண்டத்துக்கு என்ன பதில் சொல்வதென்பது அறியாமல் அவதிப்பட்டார். வரதராஜா! இதென்ன வேதனை! தேவரீருடைய திருமுடி முதல் திருவடி பரியந்தம் கண்குளிரக் கண்டுகளித்து கட்டியம் கூறி பேரின்பம் காணும் இந்த எளியவனுக்குப் பொன்னாசையா? வரதா! உனக்கு விளையாடுவதற்கு வேறு ஆள் கிடைக்கவில்லையா? என்னை எதற்காக இப்படி சோதிக்கிறாய்? என்றெல்லாம் பலவாறு சொல்லிச் சொல்லி புலம்பினார். அதிகாரிகளின் நிலைமை தர்ம சங்கடமானது! இந்த சமயத்தில் அர்ச்சகர் வட்டிலும் கையுமாக ஓடோடி வந்தார். நம்பிகளை சாஷ்டாங்கமாகப் பணிந்தார்.
சுவாமி! அடியேன் பிழை பொறுத்தருளுங்கள். ஆராய்ந்து பார்க்காமல் ஐயனுக்கு அபச்சாரம் செய்து விட்டேன். வட்டில், எம்பெருமான் விக்ரஹத்திற்குப் பின்னால் இருந்தது. எதனாலோ என் கண்ணை ஒரு கணம் மறைத்து விட்டது! ஏழரை நாழிகை தங்களை ஏளனத்துக்குள்ளாக்கிய அடியேன் ஏழேழு ஜன்மங்கள் எடுத்து புலம்பி அழுதாலும் பாபம் தீராது! அதிகாரிகள் நம்பிகளிடம் தங்கள் பிழை பொறுத்தருள பிரார்த்தித்தனர். ஏழரை நாழிகை என்று அர்ச்சகர் சொன்னதும் சுவாமிகளுக்கு, சனிபகவானின் நினைவு வந்தது! நம்பிகள் குறுநகை சிந்தினார்! வரத நாதனின் திருப் பாசுரங்களைப் பாடிக்கொண்டே திருமாளிகைக்குச் சென்றார். இன்றும் காஞ்சி வரதராஜப் பெருமான் திருச்சன்னதியில், பூஜை காலத்தில், திருவால வட்டம் திருக்கச்சிநம்பி என்று அருளப்பாடு சொல்லி தாதாசாரியார் ஆலவட்ட கைங்கர்யம் பண்ணுவதனைக் கண்கூடக் காணலாம். பூவிருந்தவல்லியில், வரதராஜர் ஆலயத்தில் நம்பிகளுக்குப் பிரதான சன்னதியைக் தரிசிக்கலாம். நம்பிகளின் ப்ரீதிக்காக பிரதி வருஷமும் மாசி மாதம் மிருகசீர்ஷ நக்ஷத்திரத்தில் விசேஷ உற்சவம் நடைபெறுவதைப் பக்த கோடிகள் கண்டு களிக்கின்றனர். சனி பகவான், தம்மிடம் பக்தி செய்வோர்க்கு இவ்வாறு பேரருள் பாலித்து, அவர்களுக்குத் தம்மால் வரும் சங்கடங்களைத் தீர்த்து வைப்பார்.
சனிபகவானும் தசரதரும்: தசரத சக்கரவர்த்தி சப்த த்வீபங்களும் அரசு பரிபாலனம் செய்து வந்தார். அவர் அறுபதினாயிரம் ஆண்டுகள் அரசு புரிந்தார் என்று சொல்லப்படுகிறது. இவரது ஆட்சிகாலத்தில் மாதம் மும்மாரி பொழிந்தது. குடி உயர்ந்தது. அக்குடி மக்களால் மன்னரின் கோன் உயர்ந்து, அவரது புகழ் எங்கும் கொடி கட்டிப் பறந்தது. ஈரேழு பதினான்கு லோகங்களும் தசரத சக்ரவர்த்தியின் பெருமையையும் புகழையும் பேசிய வண்ணமாகவே இருந்தன. இவ்வாறு இருந்து வரும் நாளில், ஒரு முறை தசரத மன்னனின் ஆட்சியின் அமைதிக்குப் பங்கம் ஏற்படும் சந்தர்ப்பம் ஒன்று உருவானது. அதனை முன்கூட்டியே உணர்ந்த ஜோதிடர் அரசனிடம், விஷயத்தை விளக்கினார்.
அரசே! சனிபகவான் கிருத்திகா நக்ஷத்திரத்திலிருந்து, ரோகிணி நக்ஷத்திரத்தைப் பிளந்து கொண்டு வெளிப்படப்போகிறார், இதனை ஜோதிட சாஸ்திரத்தில், நாங்கள், ரோஹிணீ சகடபேதநம் என்று சொல்லுவோம். அவ்வாறு சனிக்கிரஹம் செல்வதால் பூமிக்கு என்ன கேடு வரப் போகிறது? தசரத சக்கரவர்த்தி வியப்பு மேலிடக் கேட்டார். ஜோதிடர், மன்னரைப் பார்த்து, மன்னவா! கிரஹங்களிலே சலியானவர் அசுரர்களையும், தேவர்களையும் நடுங்கச் செய்யும் படியான ஆற்றல் கொண்டவர். அவருடைய உக்ரத்தை உலகம் அறியும். அரசனும் அதனை அறியாதவர் அல்லர். இருப்பினும் நாங்கள் கூறுகின்றோம். இத்தகைய ரோஹிணீ சகட பேதநத்தால், நாட்டில் பன்னிரண்டு ஆண்டு காலத்திற்கு மழை பொழியாது. மழை இன்றி பயிர்கள் வாடும். பயிர் வாடுவதால் நாட்டிற்கு என்னென்ன இன்னல்கள் ஏற்படும் என்பதனை எவரும் அறிவர் என்று கூறினார்.
நாட்டிற்கு வரப்போகும் துன்பத்தை, ஜோதிட நிபுணர்கள் மூலம், முன் கூட்டியே அறிந்த தசரத சக்கரவர்த்தி, சற்றும் தாமதியாமல் அவை கூட்டினான். அவை அறிய ஜோதிடர் சொன்னவற்றைப் பிரகடனப்படுத்தினான். அமைச்சர்கள், வசிஷ்ட முனிவரைக் கேட்டால் இதற்கு நல்லதொரு மார்க்கம் பிறக்கும் என்று கூறினார். தசரதர், வசிஷ்டமுனிவரை, அரண்மனைக்கு வர வழைத்தார். முறைப்படி மாமுனிவரை வரவேற்று உபசரித்தார். பின்னர் அரசன், முனிவர் பெருமானிடம், ஜோதிடர் மொழிந்தவற்றைச் சொன்னார். முனிபுங்கவரே! எனது ஆட்சி காலத்தில் பிரஜைகளுக்குத் துன்பம் ஏற்படலாமா? இதற்கு ஏதாகிலும் சனிப்ரீதி செய்வதற்கான உபாயம் உண்டா? என்று மனக் கலக்கத்துடன் வினவினார்.
வசிஷ்ட முனிவர், மன்னர் முகம் நோக்கி, ரகுகுல நாயக! நீ சனிபகவானைத் தரிசித்து இதற்கு நல்லதொரு மார்க்கத்தைக் காண்பாயாக! என்றார். முனிவரின் மொழியை முழுமனத்துடன் ஏற்றுக் கொண்ட தசரத மாமன்னர், மகரிஷியே! தேவரீர் சித்தம்; எந்தன் பாக்கியம். அடியேன் இப்பொழுதே சென்று சனி பகவானைத் தரிசித்து, தியானித்து நமது நாட்டிற்கு வர இருக்கும் துன்பத்தைத் தடுக்க வழி கண்டு வருகிறேன் என்றார். வசிஷ்ட முனிவர், மங்களாநி பவந்து என்று மன்னனை அநுக்கிரஹித்தார். ஒரு நல்ல சுபமுகூர்த்த வேளையில், சனி பகவானைத் தரிசிக்க தசரதர் புறப்பட்டார்.
பத்து திக்குகளுக்கும் தங்கு தடை இன்றிச் செல்லும், தனது பொன் வண்ணத் தேரைப் பூட்டினார் தசரதன்! திவ்யமான ஆயுதங்களை எடுத்துக் கொண்டு ரதத்தில் அமர்ந்தார். காற்றினும் கடுக ரதத்தைச் செலுத்தினார். தசரதரின் பொற்தேர், ஆகாய மார்க்கமாக சூரியனுக்கு மேலே ஒன்றே கால் லக்ஷம் யோஜனை உயரத்தில் அமைந்துள்ள நட்சத்திர மண்டலத்தை அடைந்தது. ரோகிணி நட்சத்திரத்தின் முன்பாகச் சென்று நின்றார் தசரதர். அங்கே கோடி சூர்ய பிரகாசத்துடன் கூடிய பேரொளியைக் கண்டார் மன்னர்! ஒப்பற்ற - உயர்ந்த பலவகையான ரத்தினங்களால் அலங்கரிக்கப்பட்ட தங்கமயமான மேருபர்வதம் போன்ற உயர்ந்த திவ்யத் தேரில் அன்னப் பறவைகள் போன்ற வெண்மையான குதிரைகள் பூட்டப்பட்டிருந்தன. அத்தேரிலுள்ள நவமணித் தட்டில், வைர நவரத்ன பொற்கிரீடம் ஜொலி ஜொலிக்க - சூரியனைப் போல் காந்தியுடன் எழுந்தருளியிருந்த சனி பகவானைக் கண்டார் தசரத மன்னர்.
தசரதர் வில்லில் நாணேற்றி, சனிபகவான் மீது ஸம்ஹா ராஸ்திரத்தைப் பிரயோகம் செய்ய முற்பட்டார். தசரதரைப் பார்த்து சனீசுவர பகவான் குறுநகை புரிந்தார். தசரத மன்னா! தேவர்களும் அசுரர்களும் அஞ்சும்படியான உனது அதிபராக்கிரமத்தைக் கண்டு யாம் அக மகிழ்ந்தோம்! பிரஜைகளின் ÷க்ஷமத்திற்காக என்னை எதிர்த்து வந்த உன் பிழையைப் பொறுத்துக் கொள்வேன். உம்முடைய தவமும், வலிமையும் எமக்கு மகிழ்ச்சியைத் தருகிறது. வேண்டும் வரம் தருவோம்! சனிபகவானின் பெருங்கருணையால், மன்னர் கோடி இன்பம் கொண்டார். நாணேற்றிய வில்லைக் கீழே போட்டார். கரங்கூப்பித் தொழுதார். ஆதவன்மைந்தா! அநேக கோடி நமஸ்காரம். எனது நாட்டில் உம்மால் மழைபொழியாமல் இருக்கக் கூடாது த்வாதச வர்ஷ க்ஷõமம் என்பது எப்பொழுதுமே எனது பிராஜைகளுக்கு ஏற்படக் கூடாது. பிரஜைகளின் ÷க்ஷமத்தைப் பெரிதாகக் கொண்டு வாழும் சக்ரவர்த்தியின் ராஜ தர்மத்தைக் கண்டு, சனி பகவான், மன்னர் மீது கருணையும், வாத்ஸல்யமும் கொண்டு, தசரத மன்ன! உமது விருப்பம் போல் யாம் வரமளித்தோம். நீரும் உமது பிரஜைகளும் ÷க்ஷமமுடன் வாழ்வீர் என்று அருள்வாக்கு அளித்தார். தசரதர் அடைந்த ஆனந்தத்திற்கு அளவில்லை! முடிபட, சனிபகவானை அடிபணிந்தார் தசரதமன்னர். சனிபகவானைத் தோத்திரம் செய்தார்.
தசரத மன்னரின் தோத்திரங்களால் சனிபகவான் மகிழ்ந்தார். தசரத மன்னா! நீர் துதிசெய்த இந்த ஸ்தோத்திரத்தைக் காலையிலும், மாலையிலும் துதிப்போர்க்கு, அவர்களைப் பற்றியுள்ள தோஷங்கள் விலகும். சகல சுபமங்களங்களும் பொங்கும். எனக்கு விருப்பமான சனிக்கிழமைகளில், வன்னி தளத்தால் எம்மை அர்ச்சித்து, ஆராதித்து, எள் அன்னம் நிவேதித்து, தானம் செய்வோர்க்கு நான் நன்மையைச் செய்வேன். இவ்வாறு சனிபகவான் திருவாய் மலர்ந்து அருளியது கேட்டு, மனம் மகிழ்ந்த தசரதமன்னர் சனிபகவானை பன்முறை வலம் வந்தார். சனிபகவானின் ஸ்தோத்திரத்தை ஜபித்துக் கொண்டே தமது நகரத்திற்குத் திரும்பினார். சனிபகவானுக்குப் ப்ரீதியான சனிக்கிழமையன்று, தங்கத்தினால் செய்யப்பட்ட சனிபகவானின் விக்ரஹத்திற்குப் பூஜைகள் செய்து, எள் அமுது நிவேதித்து, தோத்திரங்களைச் சொல்லி, அன்றைய தினம் பூரண உபவாஸம் இருந்து அவரை ஆராதித்தார் தசரதர்! சனிபகவானின் அருளால், தனக்கும் தனது நாட்டிற்கும், நாட்டு மக்களுக்கும் வர இருந்த பேராபத்தைத் தடுத்தார் தசரதர். சனிபகவானின் கிருபாகடாக்ஷத்தால் எல்லோரும் இன்புற்றனர்.
சனிபகவானும் முத்து சுவாமிதீட்சிதரும்: கர்நாடக சங்கீதத்திற்குச் சிறந்த பீடமாகத் திகழ்ந்தது தஞ்சை! இசைவாணர்கள் பிறந்த இடம் தஞ்சை! மும்மூர்த்திகளுள் ஒருவராக விளங்கும் முத்து சுவாமிதீட்சிதர் அவர்கள் பிறந்த இடம் தஞ்சையைச் சேர்ந்த திருவாரூராகும். திருவாரூர்த் தியாகேசப் பெருமானின் பேரருளால் கீர்த்தனங்களை இயற்றிப் பாடும் சுக்ருதத்தைப் பெற்றிருந்த தீட்சிதர் அவர்கள் வடமொழியிலான அநேகம் கிருதிகளை மிக்க அற்புதமாக இயற்றியுள்ளார். குருநாதரான சிதம்பரயோகியிடம் சீடராகி, வித்தியா உபதேசம் பெற்றார். குருதேவருடன் எண்ணற்ற கோவில்களைத் தரிசித்தார்.
இவர், திருத்தணி முருகன் மீது பக்தி கொண்டிருந்தார். முருகனின் அருளைப் பரிபூரணமாகப் பெற்ற முத்துசுவாமி தீட்சிதர் அவர்கள் குருவின் ஆக்ஞைப்படி, கர்நாடக சங்கீதத்தையும், யோக சோதிட சாஸ்திரங்களையும் லோக சேமத்திற்கு அர்ப்பணித்தார். தீட்சிதர் அவர்கள் இயற்றியுள்ள கீர்த்தனங்கள் அனைத்தும், அவர் தரிசித்த ÷க்ஷத்ரங்களின் மகிமையைச் சொல்லும் வண்ணம் இயற்றப்பட்டிருந்தன. திருவாரூர் திருத்தலத்தில் கோவில் கொண்டுள்ள கமலாம்பிகை பேரிலும், மாயூரம் அபயாம்பிகை பேரிலும் தீட்சிதர் இயற்றியுள்ள கிருதிகள் நெஞ்சை அள்ளும் அற்புத சாகித்யங்களாகும்! மதுரை மீனாட்சி அம்பிகையின் பேரிலும் க்ருதிகளைத் தந்துள்ளார். இவர் இயற்றிய நவக்கிரஹ கீர்த்தனங்கள் மிகவும் பிரசித்தமானது. நவக்கிரஹகிருதிகளைப் பாடுவதால் நம்மைப் பற்றியுள்ள கிருஹதோஷம் விலகும். தீட்சிதர் அவர்கள் சனி பகவானைப் போற்றி துதித்துப் பாடியுள்ள கீர்த்தனங்களைப் படிப்போர்க்கு சனிபகவான் பேரருளை தந்தருள்வார்.
ஆறுதல் சொன்ன வியாசர்: பாண்டவர்கள் வனவாசம் சென்றனர். அவர்களுடன் வந்த திரவுபதி நடக்க முடியாமல் சோர்ந்தாள். காட்டில் கிடந்த இலைச் சருகுகளைப் பரப்பி விரித்து, அவளைத் தூங்கச் செய்தனர். ராஜபோகத்தில், பஞ்சு மெத்தையில் படுத்த அவள், சருகு படுக்கையில் உறங்க நேர்ந்தது கண்டு கண்ணீர் சிந்தினர். அவ்வழியே வந்த வியாசர் இக்காட்சியைக் கண்டார் ராஜகுமாரர்களே! உங்கள் நிலை வருந்தத்தக்கது தான் என்றாலும், காலம் என்ற நியதிக்கு நாம் அனைவரும் கட்டுப்பட்டுத் தான் ஆக வேண்டும். நிடதநாட்டில் நளன் என்னும் சக்கரவர்த்தி இருந்தான். அவனும், அவன் மனைவி தமயந்தியும் படாத துன்பமில்லை. சனீஸ்வரரின் பிடியில் சிக்கி நாட்டை இழந்து காட்டுக்குச் சென்றான். பின்னர் நாரதரின் உபதேசத்தால் தீர்த்தயாத்திரை சென்று சனிதோஷம் நீங்கப்பெற்றான். ஒருபோதும் கலங்காதீர்கள். கெடுப்பதும் கொடுப்பதும் காலம் தான்! என்று ஆறுதல் கூறினார்.

சனீஸ்வரர் மந்திரங்கள்!





கீழே கொடுக்கப்பட்டுள்ள ஸ்லோகங்களைக் கூறுவதன் மூலம் சனிபகவானின் பரிபூரண அருளைப் பெறலாம்.
சனீஸ்வர காயத்ரி
ஓம் சனைச்சராய வித்மஹே
சாயாபுத்ராய தீமஹி
தந்நோ: மந்தப்ரசோதயாத்
ஓம் காக த்வஜாய வித்மஹே
கட்க ஹஸ்தாய தீமஹி
தந்நோ மந்த: ப்ரசோதயாத்
ஸ்லோகம்
நீலாம்பரோ, நீலவபு: கிரீடி
க்ருத்ரஸ்தித: சத்ராஸக ரோ தநுஷ்மான்
சதுர்புஜ: ஸுர்யஸு: ப்ரசாந்த:
ஸதாஸ்து மஹ்யம் வரத: ப்ரஸன்ன:
பொருள் : மிகவும் சாந்தமானவரும், வரத்தை அளிப்பவருமான சனி பகவானைத் தியானம் செய்தால் ஆயுள் விருத்தி, விவசாயத்தில் மேன்மை, எருமை விருத்தி, இரும்புத் தொழில்கள், செங்கல் காளாவாயினால் லாபம் ஏற்பட, உத்தியோகம் செய்யும் இடத்தில் மனநிம்மதி ஏற்பட வேலைக்காரர்களால் நன்மை பெற, எலும்பு, பற்கள், கணை சம்பந்தமான நோய்கள் வராமல் இருக்க, சளி, நெஞ்சுக் கட்டு, வாத நோய்கள் தடுக்க, சட்டபூர்வமான தண்டனை, சிறைவாசம், கட்டுப்படுதல், சில சமயங்களில் விபத்துக்கள், மனோதைரியம் இழந்து தடுமாறுதல், சித்தப்பிரமை, மேகநீர் உபத்திரவம் ஏற்படாமல் இருக்க போன்றவை நெருங்காமல் தடைபடும்.
சனி ஸ்தோத்திரம்
ஸூர்யபுத்ரோ தீர்க்கதேஹோ விசாலாக்ஷ: ஸிவப்ரிய:
தீர்க்கசார: ப்ரஸந்நாத்மா பீடாம்ஹரதுமே ஸனி:
சூர்யபுத்திரனும், நீண்டதேஹமுள்ளவனும், சிவப்ரியனும் தெளிந்த மனம் உள்ளவனுமான சனீஸ்வரபகவான் என்னுடைய தோஷத்தை போக்க வேண்டும்.
சனி வழிபாடு
நீலாஞ்ஜன ஸமாபாஸம் ரவிபுத்ரம யமாக்ரஜம்
சாயா மார் தாண்டஸம்பூதம் தம் நமாமி சனைச்சரம்
சனீஸ்வர ஸ்தோத்ரம்
ஸன்னோதேவீசரபிஷ்டய ஆபோ பவந்து பீதயே
ஸம்யோ ரபிஸ்ர வந்துந:
அதிதேவதா மந்த்ரம்:
இமம்யமப்ரஸ்தரமாஹி ஸீதாங்கிரோபி: பித்ருபி: ஸம்விதான:
ஆத்வா மந்த்ரா கவிஸஸ்தா வஹன்த்வே நா ராஜன்ஹ விஷாமாதயஸ்வ:
ப்ரத்யதி தேவதா மந்த்ரம்:
ப்ரஜாபதே நத்வதேதான்யன்யோ விஸ்வா ஜாதானி பரிதாபபூவ
யத்காமாஸ்தே ஜுஹுமஸ் தன்னோ அஸ்து வயங்ஸ்யாம-பதயோ ரயீணாம்
அதிதேவதா ப்ரத்யதி தேவதா ஸமேத பகவதே சனைஸ்ச்சராய நம:
சந்தோஷம் தரும் சனைச்சர ஸ்தோத்ரம்
கோணேந்தகோ ரௌத்ரயமோத பப்ரு:
க்ருஷ்ண: ஸநி: பிங்களமந்தஸெளரி:
நித்யம் ஸ்ம்ருதோ யோ ஹரதே ச பீடாம்
தஸ்மை நம: ஸ்ரீரவிநந்தனாய
பொருள்: கோணன்-முடிவைச் செய்பவன்; ரௌத்ரன், இந்திரியங்களை -அடக்குபவன். மேலும் பப்ரு, கிருஷ்ணன், சனி, பிங்களன், மந்தன், சூரிய புத்திரன் ஆகிய பெயர்களைக் கொண்ட சனைச்சரன் தினமும் நம்மால் தியானிக்கப்படுபவனாகி, சகல பீடைகளையும் போக்குகிறான். அத்தகைய சூரிய புத்திரனான சனைச்சரனுக்கு நமஸ்காரம்.
தசரதர் கண்டு சொன்ன சனைச்சர ஸ்தோத்ரத்தின் ஒரு ஸ்லோகம் இது. தினமும் பயபக்தியுடன் இந்த ஸ்லோகத்தைப் படித்து, சனி பகவானை தியானித்து வழிபட, நற்பலன்கள் கைகூடும்.
சனி கோசார ரீதியால் பன்னிரண்டு, எட்டு முதலிய ஸ்தானங்களில் இருப்பதாலும், ஜாதகத்தில் தோஷத்துடன் கூடியிருப்பதாலும், சனி தசாபுக்திகளிலும் ஏற்படும் கஷ்டங்கள் விலகுவதுடன், சர்வ சம்பத்துகளும் உண்டாகும்.

சனீஸ்வர தியான ஸ்லோகம் (வேறு வகை)
1. நீலாஞ்ஜன ஸமாபாஸம் ரவிபுத்ரம் யமாக்ரஜம்
சாயா மார்தாண்ட ஸம்பூதம் தம் நமாமி சனைச்சரம்
2. சதுர்புஜம் சனிம் தேவம் சாப தூணீக்ரு பாணகை
சஹிதம் வரதம் பீமதம்ஷ்ட்ரம் நீலோத் பலாக்ருதிம்
3. நீல மால்யானுலேபம் ச நீலரத்னைரலங் கிருதம்
ஜ்வாலோர்தவ முகுடாபாசம் நீலக்ருத்ர ரதாந்விதம்
4. மேரும் ப்ரதக்ஷிணம் யாந்தம் சர்வ லோக பயாவம்கம்
க்ருஷ்ணாம்பரதரம் தேவம் த்விபுஜம் க்ருத்ர சம்ஸ்திதம்
சர்வ பீடாஹரம் ந்ரூணாம் த்யாயேத் க்ரஹ கணோத்தமம்
5. சாபாசனோ க்ருத்ர ரதோதி நீல: ப்ரத்யங்முக: காச்யப கோத்ர ஜாத:
ஸசூலசா பேஷுகதாத ரோவ்யாத் சௌராஷ்ட்ர தேச ப்ரபவச்ச ஸெளரி
6. ஸனைச்சராய ஸாந்தாய சர்வாபீஷ்ட பிரதாயினே
நம: சர்வாத்மனே துப்யம் நமோ நீலாம்பராயச
7. த்வாதசாஷ்ட மஜன் மர்ஷே த்வீதிய ஸ்தான் ஏவச
த்வத் சஞ்சா ரோத்பவா தோஷா: ஸர்வே நச்யந்துமே ப்ரபோ
முனிவர்கள் தேவர் ஏனைய மூர்த்திகள் முதலானோர்கள்
மனிதர்கள் சகல வாழ்வு உன் மகிமை அல்லால் வேறுண்டோ?
கனிவுள தெய்வம் நீயே: கதிர் சேயே! காகம் ஏறும்
சனியனே! உனைத் துதித்தேன்; தமியனேற்கு அருள் செய்வாயே!

சனிபகவான் ஸ்தோத்திரம்
காப்பு - வெண்பா
தேவரெண்டிசைக்கதிபர் சித்தரொடு கிம்புருடர்
மூவர் முனிவர் முதலோரை - மேவியுறுந்
தாரணிந்த மார்பன் சனிபகவான் கதை புகலக்
காரணிந்த யானைமுகன்-காப்பு
1. ஆதிவே தாந்த முதலறிய ஞான
மைந்தெழுத்தினுட் பொருளையயன் மாலோடு
சோதி சிற்றம்பலத்தி லாடிகின்ற
சுடரொளியை நீ பிடித்த தோஷத்தாலே
பாதிமதி சடைக்கணிய வரவம்பூணப்
பதியிழக்கச் சுடலைதனிற் பாடியாடச்
சாதியில்லா வேடனெச் சிற்றின்ன வைத்த
சனியனே காகமேறுந் தம்பிரானே
2. வேலவனை வேங்கை மரமாக்கி வைத்தாய்
விறகுகட்டிச் சொக்கர் தமை விற்க வைத்தாய்
மாலினியை யுரலொடு கட்டுவித்தாய்
வள்ளிதனைக்குறவரது வனத்தில் வைத்தாய்
காலனை மார்க்கண்டனுக்காவரனுதைத்த
காரணமும் நீபிடித்த கருமத்தாலே
சாலவுனையான் றொழுதே னெனைத்தொடதே
சனியனே காகமேறுந் தம்பிரானே
3. மஞ்சுத வழயோத்தியில் வாழ்தசரதன் தன்
மக்களையும் வனவாசமாக்கி வைத்தாய்
பஞ்சவர்கள் சூதினால் பதியிழந்து
பஞ்சுபடும் பாடவர் படச்செய்வித்தாய்
எஞ்சலிலா வரிச்சந்திரன் பெண்டைவிற்றே
யிழிகுலத்திலடி மையுற விசையவைத்தாய்
தஞ்சமெனவுனைப் பணிந்தேனெனைத் தொடாதே
சனியனே காகமேறுந் தம்பிரானே
4. அண்டமாயிரத்தெட்டு மரசுசெய்த
வடல்சூரபத்மனையு மடக்கிவைத்தாய்
மண்டலத்தையாண்ட நளச்சக்கரவர்த்தி
மனைவியோடு வனமதனி லலையச்செய்தாய்
விண்டலத்தை பானுகோபன்றன்னாலே
வெந்தணலாய்ச் சூரரை வெருவச்செய்தாய்
தெண்டனிட்டே னெந்நாளு மெனைத்தொடாதே
சனியனே காகமேறுந் தம்பிரானே
5. அண்டர்கோன்மேனியிற் கண்ணாக்கி வைத்தாய்
அயன்சிரத்தை வயிரவனாலறுக்க வைத்தாய்
திண்டிறல்கொள் கௌதமனால கலிகைதான்
சிலையாகவேசாப முறவேசெய்தாய்
கண்டரள நகையிரதி மாரன் றன்றைச்
சங்கரனார் நுதல்விழியிற் றணல்செய்வித்தாய்
சண்டமிலா துனைத் தொழுதேனெனைத் தொடாதே
சனியனே காகமேறுந் தம்பிரானே
6. பாருலவுபரிதியைப் பல்லுதிரவைத்தாய்
பஞ்சவருக்குத்தூது பீதாம்பரனை வைத்தாய்
தாருலவுவாலி சுக்ரீவன் தம்மைத்
தாரையினாற்றீராத சமர்செய்வித்தாய்
சூரனெ னுமிலங்கை ராவணன்றங்கை
சூர்ப்பனகி மூக்குமுலை துணிசெய்வித்தாய்
தாரணியு மணிமார்பா வெனைத்தொடாதே
சனியனே காகமேறுந் தம்பிரானே
7. சுக்ரன்றன் கண்ணிழந்தான் இலங்கையாண்டு
துலங்குமி ராவணன் சிரங்கண்டிக்க வீழ்ந்தான்
மிக்கபுகழிரணியன்றன் வீறழிந்தான்
விளங்குதிரிபுராதிகளும் வெந்துமாண்டார்
சக்கரத்தாலுடலறுத்தான் சலந்திரன்றான்
தாருகாசுரனுமே சமரில் மாண்டான்
தக்கன் மிகச் சிரமிழந்தா னின்றோஷத்தாற்
சனியனே காகமேறுந் தம்பிரானே
8. அந்தமுள ஐங்கரன் கொம்பரவே செய்தாய்
அறுமுனிவர் மனைவிகள் கற்பழியச் செய்தாய்
சந்திரன் தன் கலையழிந்து தழைக்கச் செய்தாய்
சங்கரனைப் பிச்சை தானெடுக்கச் செய்தாய்
தந்திமுகச் சூரனுயிர் தளரச்செய்தாய்
சாரங்கதரன் கரத்தைத் தறிக்கச் செய்தாய்
சந்ததமுமுனைப் பணிவேனெனைத் தொடாதே
சனியனே காகமேறுந் தம்பிரானே
9. சீதைதனையிரா வணனாற் சிறைசெய்வித்தாய்
தேவர்களைச்சூரனாற் சிறைசெய்வித்தாய்
மாதுதுரோபதை துயிலை வாங்குவித்தாய்
மகேச்சுரனையுமைபிரியும் வகைசெய்வித்தாய்
போதிலயன் றாளிற்றளை பூட்டுவித்தாய்
பொதிகையினிலகத்தியனைப் பொருந்தச் செய்தாய்
தாதுசேர்மலர்மார்பா வெனைத் தொடாதே
சனியனே காகமேறுந் தம்பிரானே
10. அப்பர் தமைக்கருங்கல்லோ டலையிற்சேர்த்தாய்
அரனடியில் முயல்களை யடங்கச்செய்தாய்
செப்புமாணிக்கர் தமைச் சிறையிலிட்டாய்
ஸ்ரீராமனைமச்சவுரு வெடுக்கச் செய்தாய்
ஓப்பிலனுமான் வாலிலொளி தீயிட்டாய்
ஒலிகடலினஞ்சையர னுண்ணவைத்தாய்
தப்பிலா துனைத்தொழுதேனெனைத் தொடாதே
சனியனே காகமேறுந் தம்பிரானே
11. நீரினையுண்டேழுமேக வண்ணா போற்றி
நெடுந்தபத்திலறு கமலக்கண்ணா போற்றி
சூரியன் தவத்தில் வந்த பாலா போற்றி
துலங்கு நவக்கிரகத்துண் மேலா போற்றி
காரியன் பெயர்களுப காரா போற்றி
காசினியிற் கீர்த்திபெற்ற தீரா போற்றி
மூரிகொளு நோய்மகவாமுடவா போற்றி
மூதுமகனின் முண்டகத்தாள் போற்றி போற்றி

சனீஸ்வர கவசம்
நெருங்கிடு பிணி யெலாம்
நீக்கு நோன்மையும்
ஒருங்கு மொய்ம்பு இரண்டும்
ஆங்குறும் கருந்துகில்
மருங்குலும் கழுகிவர்
வனப்பும் கொண்டு அமர்
அருங்கதிர் மதலை தாள்
அன்போடு ஏத்துவாம்!
(வேறு)
மறுவறும் எனது சென்னி
வளர்புகழ்ச் சனி புரக்க
பெறுமுகம் அன்பர் அன்பன்
பேணுக செவி கறுக்கும்
அறுவை நன்கு அணிவோன் காக்க
அச்சமே விளைக்கு மெய்யோன்
நறுமலர் விழி புரக்க
நாசி கை காரி காக்க.
கருங்களம் உடைய தேவன்
கவின்படு கண்டம் காக்க
பெருங்கடின் படுபு யத்தோன்
பெருவரைப் புயம் புரக்க
வருங்கை நீலோற் பலம்போல்
வளர்ஒளி அண்ணல் காக்க
ஒருங்குறும் எனது நெஞ்சம்
உடல் கரியவன் புரக்க.
சுந்தரம் தழுவும் உந்தி
சுட்கமாம் வயிற்றோன் காக்க
சந்தமார் விகடன் செய்வோன்
தடம்படு கடி புரக்க
நந்திய கோர ரூபன்
நற்றொடை புரக்க நாளும்
முந்துறு நெடிய ரூபன்
மொழிதரு முழுந்தாள் காக்க.
மங்கலம் ஈயும் ஈசன்
வனப்புறு கணைக்கால் காக்க
தங்குறு பரடு இரண்டும்
தகு குணாகரன் புரக்க
பங்கெனப் படுவோன் பாதம்
பழுதறப் புரக்க பார்மேல்
செங்கதிர் அளிக்கு மைந்தன்
திருந்திமென் அங்கங் காக்க.
நன்றிதரு சனிகவச நாள்தோறும்
அன்பினொடு நவின்று போற்றில்
வெற்றிதரும் விறல்உதவும் புகழ் அளிக்கும்
பெருவாழ்வு மேவ நல்கும்
கன்றுபவத் துயர்ஒழிக்கும் வினை ஒழிக்கும்
பிணி ஒழிக்கும் கவலை போக்கும்
அன்றியும் உள் நினைந்தவெலாம் அங்கை நெல்லி
யம்கனியாம் அவனி யோர்க்கே.
அருஞ்சுவணம் முதலவற்றின் அமைக்கும்
இயந்திரம் எள்ளுள் அமரவைத்து
வருஞ்சுகந்த மலராதிக்கு அரியவற்றால்
பூசித்து மனுப்பு கன்று
பெருஞ்சுகம் கொண்டிட விழைவோன்
கருந்துகிலோடு அந்தணர்க்குப் பெட்பின்ஈயில்
கருஞ்சனி உள் மகிழ்ந்துறு நோய்
களைந்துநல முழுதும்உளங் கனிந்தே நல்கும்.
ஆங்கதனோடு அரும்பொருளும் மற்றவனுக்கு
அளிப்பன் எனில் அவனுக்கு என்றும்
தீங்குஅகல மேன்மேலும் பெருகி எழு
வாழ்நாளும் செல்வப் பேறும்
ஓங்குமனை மக்கள்முதல் பற்பலசுற்
றப்பொலிவும் உதவும் காண்பீர்
வாங்குகடன் முளைத்திருள்நீத் தெழும்
கதிரேசன் அன்று உதவ வந்த மைந்தன்!

சனீஸ்வரன் அஷ்டோத்திரம்
ஓம் சநைச்சராய நம
ஓம் சாந்தாய நம
ஓம் ஸர்வாபீஷ்ட ப்ரதாயிநே நம
ஓம் சரண்யாய நம
ஓம் வரேண்யாய நம
ஓம் ஸர்வேசாய நம
ஓம் ஸெளம்யாய நம
ஓம் ஸுரவந்த்யாய நம
ஓம் ஸுரலோக விஹாரிணே நம
ஓம் ஸுகாஸ நோப விஷ்டாய நம
ஓம் ஸுந்தராய நம
ஓம் கநாய நம
ஓம் கநரூபாய நம
ஓம் கநாபரண தாரிணே நம
ஓம் கநஸார விலேபாய நம
ஓம் கத்யோதாய நம
ஓம் மந்தாய நம
ஓம் மந்த சேஷ்டாய நம
ஓம் மஹ நீய குணாத்மநே நம
ஓம் மர்த்ய பாவந பாதாய நம
ஓம் மஹேசாய நம
ஓம் சாயா புத்ராய நம
ஓம் சர்வாய நம
ஓம் சத தூணிர தாரிணே நம
ஓம் சரஸ்த்திர ஸ்வபாவாய நம
ஓம் அசஞ்சலாய நம
ஓம் நீலவர்ணாய நம
ஓம் நித்யாய நம
ஓம் நீலாஞ்ஜந நிபாய நம
ஓம் நீலாம்பர விபூஷாய நம
ஓம்  நிச்சலாய நம
ஓம் வேத்யாய நம
ஓம் விதிரூபாய நம
ஓம் விரோதா தார பூமயே நம
ஓம் பேதாஸ்பத ஸ்வபாவாய நம
ஓம் வஜ்ர தேஹாய நம
ஓம் வைராக்யதாய நம
ஓம் வீராய நம
ஓம் வீத ரோக பயாய நம
ஓம் விபத்பரம் பரேசாய நம
ஓம் விச்வவந்த்யாய நம
ஓம் க்ருத்ர வாஹாய நம
ஓம் கூடாய நம
ஓம் கூர் மாங்காய நம
ஓம் குரூபிணே நம
ஓம் குத்ஸிதாய நம
ஓம் குணாட்யாய நம
ஓம் கோசராய நம
ஓம் அவித்யர் மூல நாசாய நம
ஓம் வித்யாவித்யாஸ் வரூபிணே நம
ஓம் ஆவுஷ்ய காரணாய நம
ஓம் ஆபதுத்தர்த்ரே நம
ஓம் விஷ்ணுபக்தாய நம
ஓம் வசிநே நம
ஓம் விவிதாகம வேதிநே நம
ஓம் விதிஸ்துத்யாய நம
ஓம் வந்த்யாய நம
ஓம் விரூபாக்ஷõய நம
ஓம் வரிஷ்ட்டாய நம
ஓம் க்ரிஷ்டாய நம
ஓம் வஜ்ராங்குசதராய நம
ஓம் வரதாபயஹஸ்தாய நம
ஓம் வாமநாய நம
ஓம் ஜ்யேஷ்டா பத்நீ ஸமேதாய நம
ஓம் ச்ரேஷ்டாய நம
ஓம் மிதபாஷிணே நம
ஓம் கஷ்டௌகநாசகர்த்ரே நம
ஓம் புஸ்டிதாய நம
ஓம் ஸ்துத்யாய நம
ஓம் ஸ்தோத்ரகம்யாய நம
ஓம் பக்தி வச்யாய நம
ஓம் பாநவே நம
ஓம் பாநு புத்ராய நம
ஓம் பவ்யாய நம
ஓம் பாவநாய நம
ஓம் தநுர்மண்டல ஸம்ஸ்த்தாய நம
ஓம் தநதாய நம
ஓம் தநுஷ்மதே நம
ஓம் தநுப்ரகாச தேஹாய நம
ஓம் தாமஸாய நம
ஓம் அசேஷ ஜநவந்த்யாய நம
ஓம் விசஷபலதாயிநே நம
ஓம் வசீக்ருத ஜநேசாய நம
ஒம் பசூ நாம் பதயே நம
ஓம் கேசராய நம
ஓம் ககேசாய நம
ஓம் கநநீலாம்பராய நம
ஓம் காடிந்ய மாநஸாய நம
ஓம் ஆர்ய கணஸ்துத்யாய நம
ஓம் நீலச்சத்ராய நம
ஓம் நித்யாய நம
ஓம் நிர்குணாய நம
ஓம் குணாத் மநே நம
ஓம் நிராமயாய நம
ஓம் நந்த்யாய நம
ஓம் வந்தநீயாய நம
ஓம் தீராய நம
ஓம் திவ்யதேஹாய நம
ஓம் தீ நார்ததி ஹரணாய நம
ஓம் தைந்ய நாசகராய நம
ஓம் ஆர்யஜ நகண்யாய நம
ஓம் க்ரூராய நம
ஓம் க்ரூர சேஷ்டாய நம
ஓம் காமக்ரோதகராய நம
ஓம் களத்ர புத்ர சத்ருத்வ காரணாய நம
ஓம் பரிபோஷித பக்தாய நம
ஓம் பரபீதி ஹராய நம
ஓம் பக்தஸங்கமநோபீஷ்ட பலதாய நம
நாநாவித பரிமள பத்ரபுஷ்பாணி ஸமர்ப்பயாமி.
சனீஸ்வர அஷ்டகம்
எட்டு சுலோகங்களான இந்த அஷ்டகம் தசரத சக்கரவர்த்தியினால் திரேதாயுகத்தில் இயற்றப்பட்டதாகும். இந்த ஸ்தோத்திரத்தில் சனீஸ்வர பகவானின் அருமை பெருமைகள் சிறப்பாக சொல்லப்பட்டுள்ளன. சனிக்கிழமை தோறும் இந்த ஸ்தோத்திரத்தை ஜபிப்போர்க்கு சனிபகவானால் வரும் துன்பம் விலகும். உளுந்து, எள், எண்ணெய், வெல்லம் இவற்றைத் தானம் செய்வது சனிபகவானுக்குப் ப்ரீதியானதாகும். இந்த சுலோகத்தை சனிக்கிழமைகளில், அரச மரத்தடியில் அமர்ந்து படிப்பது மிகவும் விசேஷமாகும்!
கோணாந்தகோ ரௌத்ரயமோ அத பப்ரு:
க்ருஷ்ண: சநி: பிங்கள ஏவ மந்த:
நித்யம் ஸ்ம்ருதோ யோ ஹரதே ச பீடாம்
தஸ்மை நம: ஸ்ரீ ரவிநந்தநாய
ஸுராஸுரா: கிம்புருஷா கணேந்த்ரா:
கந்தர்வ வித்யாதர கிந்நராச்ச
பஜந்தி பீடாம் விஷம ஸ்திதேந
தஸ்மை நம: ஸ்ரீ ரவிநந்தநாய
தைலாயஸைர் மாஷ குட ப்ரதாநை:
ஸ்நாநைர் பலா லோத்ரபலைர் யவாத்யை:
ப்ரீணாதி ஸர்வாந் நிஜவாஸரே ய:
தஸ்மை நம: ஸ்ரீ ரவிநந்தநாய
ஸ்ரஷ்டா ஸ்வயம்பூர் புவநத்ரயஸ்ய
த்ராதா ஹரி: ஸம்ஹரண: பிநாகீ
ஏகஸ் த்ரிதா ருக்யஜு: ஸாமமூர்த்தி:
தஸ்மை நம: ஸ்ரீ ரவிநந்தநாய
நரா நரேந்த்ரா: பசவோ ம்ருகேந்த்ரா:
த்வந்யே ச யே கீடபதங்க ப்ருங்கா:
பீட்யந்தி வேதாஷ்ட ம்ருகஸ்திதேந
தஸ்மை நம: ஸ்ரீ ரவிநந்தநாய
தேசாச்ச துர்காணி வநாநி யத்ர
க்ராமா நிவேசா: புரபட்டநாநி
பீட்யந்தி ஸர்வே விஷமஸ்திதேந
தஸ்மை நம: ஸ்ரீ ரவிநந்தநாய
ப்ரயாக கூலே யமுநாதடே ச
ஸரஸ்வதீ புண்யஜலே குஹாயாம்
யோ யோகிபி: த்யேயதமோ அதி ஸூக்ஷ்ம:
தஸ்மை நம: ஸ்ரீ ரவிநந்தநாய
மாஷைஸ் திலை: கம்பள தேநுதாநை:
லோஹேந நீலாம்பர தாநதோ வா
ந பீடயேத் யோ நிஜவாஸரேண
தஸ்மை நம: ஸ்ரீ ரவிநந்தநாய
அந்யப்ரதேசாத் ஸ்வக்ருஹம் ப்ரவிஷ்ட:
த்வதீய வாரேஷு ஸுகீ நர: ஸ்யாத்
க்ருஹாத் கதோ யோ ந யத: ப்ரயாதி
தஸ்மை நம: ஸ்ரீ ரவிநந்தநாய
சந்யஷ்டகம் ய: படதி ப்ரபாதே
நித்யம் ஸுபுத்ரை: பசுபாந்தவைச்ச
கரோதி ராஜ்யம் புவி போக ஸெளக்யம்
ப்ராப்நோதி நிர்வாண பதம் ததாந்தே
கோணஸ்த பிங்களோ பப்ரு:
க்ருஷ்ணோ ரௌத்ரோ அந்தகோ யம:
ஸெளரிச் சநைஸ்சரோ மந்த:
பிப்பலாதேந ஸம்ஸ்துத:
ஏதாநி சநி நாமாநி ப்ராதருத்தாய ய: படேத்
சநைசசரருக்ருதா: பீடா: ந பவந்தி கதாசந
இந்த சுலோகத்தில், சனிபகவானின் பதினோரு நாமங்கள் கூறப்படுகின்றன. இந்த சுலோகத்தை, அதிகாலையில் படிப்பது மிகவும் விசேஷமாகும்.
சனீஸ்வர கவசம்
போர் வீரர்கள், பகைவர்களிடமிருந்து தங்களைப் பாதுகாத்துக் கொள்வதற்காக அணிவது கவசம். அதேபோல், நாம் நோய் நொடிகளால் வரும் துன்பத்திலிருந்து நமது உடலையும் உள்ளத்தையும் பாதுகாத்துக் கொள்வதற்காக உகந்த கவசமாக அணிந்து கொள்வது தெய்வத்தின் திருநாமங்களாகும். புண்ணிய புராண புருஷர்கள் நமது சுபிஷத்திற்காக தெய்வத்தின் திருநாமங்களைக் கவசமாகக் கொண்டு, இடையறாது ஓதும் வண்ணம் அருளியுள்ளார்கள். சனிபகவான் மீது இயற்றப்பட்டுள்ள சனீஸ்வர கவசம், பிரம்ம தேவனால் அருளப்பட்டதாகும். சனீஸ்வர கவசத்தில், உடம்பினை பதினேழு வகையாகப் பிரிக்கப்பட்டு, சனிபகவானுடைய பதினேழு திருநாமங்களால் ஜபிக்கப்படுகின்றன. இக்கவசத்தை அனுதினமும் படித்து, சனிபகவானின் பேரருளால் சகல சௌபாக்கியங்களையும் பெறலாம். ஓம் அஸ்ய சநைச்சர கவச மந்த்ரஸ்ய, கச்யப ருஷி: அநுஷ்டுப் சந்த: ரவிபுத்ரோ மந்தகதிர் தேவதா. சம்பீஜம், நம் சக்தி: மம் கீலகம், சநைச்சர ப்ரீத்யர்த்தே கவசஜபே விநியோக:
சநைச்சராய நம: - அங்குஷ்டாயாம் நம:
மந்தகதயே: - தர்ஜநீப்யாம் நம:
அதோக்ஷஜாய நம: - மத்யமாப் நாம் நம:
ஸெளரயே நம: அநாமிகாப்யாம் நம:
சுஷ்கோதராய நம: கநிஷ்டிகாப்யாம் நம:
ச்சாயாத்மஜாய நம: கரதலகரப்ருஷ்டாப்யாம் நம:
க்ருஷ்ணாம்பரதரம் தேவம் த்விபுஜம் க்ருத்ரஸம்ஸ் திதம்
ஸர்வபீடாஹரம் ந்ரூணாம் த்யாயேத் க்ரஹகணோத்தமம்
ச்ருணுத்வம் முநயஸ் ஸர்வே ச்நிபீடாஹரம் சுபம்
கவசம் க்ரஹராஜஸ்ய ஸெளரே ரித மநுத்தமம்
கவசம் தேவதாவாஸ: கவசம் வஜ்ரபஞ்ஜரம்
ஸர்வபீடாஹரம் ஸ்ரீமத் ஸர்வ ஸெளபாக்யதாயகம்
சிர: சநைச்சர: பாது பாலம் வை ஸூயநந்தந:
நேத்ரே ச்சாயாஸுத: பாது ச்ரோத்ரே பாது யமஸ் ததா
நாஸாம் வைவஸ்வத: பாது முகம் மே பாஸ்கரிஸ் ததா
சுஷ்ககண்டஸ்து மே கண்டம் பாஹூ பப்ருஸ் ததைவச
ஹ்ருதயம் பிங்கள: பாது கோணஸ்த: பார்சவயோர் யுகம்
நாபிம் நீலாஞ்ஜந: பாது கடிம் ரௌத்ரஸ் ததைவ ச
ஊரூ மமாந்தக: பாது யமோ ஜாநுயுகம் ததா
பாதௌ மந்தகதி: பாது ஸர்வாங்கம் பாது பிப்பல:
அங்கப்ரத்யங்ககம் ஸர்வம் ர÷க்ஷத் ஸூர்யஸுதஸ்ததா
ய ஏதத் கவசம் நித்யம் படேத் ஸூர்யஸுதஸ்ய வை
ந தஸ்ய ஜாயதேபீடா சநைச்சரக்ருதா ஸதா
ஜந்மஸ்தாந கதோவாபி ம்ருத்யுஸ்தாந கதோபி வா
ரந்த்ரஸ்தாந கதோ வாபி சநிபீடா ந தஸ்யவை
இத்யேதத் கவசம் ஸெளரே: திவ்யம் ப்ரஹ்மவிநிர்மிதம்

சனி பகவான் போற்றி
ஓம் அருளுங்கால் இனியனே போற்றி
ஓம் அண்டியோர்க்காவலனே போற்றி
ஓம் அலிக்கிரகமே போற்றி
ஓம் அடர்த்தியிலா கிரகமே போற்றி
ஓம் அனுஷத்ததிபதியே போற்றி
ஓம் அன்னதானப் பிரியனே போற்றி
ஓம் அசுப கிரகமே போற்றி
ஓம் ஆட்டுவிப்பவனே போற்றி
ஓம் ஆயுட்காரகனே போற்றி
ஓம் ஆதியூரில் அருள்பவனே போற்றி
ஓம் ஆணவமழிப்பவனே போற்றி
ஓம் இருவாகனனே போற்றி
ஓம் இளைத்த தேகனே போற்றி
ஓம் இரும்புத் தேரனே போற்றி
ஓம் இரும்பு உலோகனே போற்றி
ஓம் ஈடிலானே போற்றி
ஓம் ஈசுவரனானவனே போற்றி
ஓம் உக்கிரனே போற்றி
ஓம் உத்திரட்டாதி நாதனே போற்றி
ஓம் உபகிரகமுளானே போற்றி
ஓம் எமன் அதிதேவதையனே போற்றி
ஓம் எள் விரும்பியே போற்றி
ஓம் எவர்க்கும் அஞ்சானே போற்றி
ஓம் எண்பரித் தேரனே போற்றி
ஓம் ஏழாம் கிரகனே போற்றி
ஓம் கரு மெய்யனே போற்றி
ஓம் கலி புருஷனே போற்றி
ஓம் கழுகு வாகனனே போற்றி
ஓம் கருங்குவளை மலரனே போற்றி
ஓம் கரிய ஆடையனே போற்றி
ஓம் கருஞ்சந்தனப் பிரியனே போற்றி
ஓம் கருங்கொடியனே போற்றி
ஓம் கருநிறக் குடையனே போற்றி
ஓம் கண்ணொன்றிலானே போற்றி
ஓம் காகமேறியவனே போற்றி
ஓம் காசியில் பூசித்தவனே போற்றி
ஓம் காரியே போற்றி
ஓம் காற்றுக் கிரகமே போற்றி
ஓம் குளிர்க் கோளே போற்றி
ஓம் கும்பராசி அதிபதியே போற்றி
ஓம் குச்சனூர்த் தேவனே போற்றி
ஓம் குளிகன் தந்தையே போற்றி
ஓம் குறுவடிவனே போற்றி
ஓம் கொள்ளிக்காட்டில் அருள்பவனே போற்றி
ஓம் கைப்புச்சுவையனே போற்றி
ஓம் சடையனே போற்றி
ஓம் சமரிலானே போற்றி
ஓம் சனிவிரதப் பிரியனே போற்றி
ஓம் சனிவார நாயகனே போற்றி
ஓம் சாயை புத்ரனே போற்றி
ஓம் சுடரோன் சேயே போற்றி
ஓம் சூரனே போற்றி
ஓம் சூலாயுதனே போற்றி
ஓம் சூர்ய சத்ருவே போற்றி
ஓம் சுக்ர நண்பனே போற்றி
ஓம் சிவனடியானே போற்றி
ஓம் சிவபக்தர்க்கடியானே போற்றி
ஓம் சீற்றனே போற்றி
ஓம் செயலறச் செய்பவனே போற்றி
ஓம் தமோகணனே போற்றி
ஓம் தண்டாயுதனே போற்றி
ஓம் தசரதனுக்கருளியவனே போற்றி
ஓம் தனிக்கோயிலுளானே போற்றி
ஓம் தீபப் பிரியனே போற்றி
ஓம் திருநள்ளாற்றுத் தேவனே போற்றி
ஓம் துலாராசியிலுச்சனே போற்றி
ஓம் துயரளித்தருள்வோனே போற்றி
ஓம் தைரியனே போற்றி
ஓம் தொலை கிரகமே போற்றி
ஓம் நம்பிக்கிரங்கியவனே போற்றி
ஓம் நளனைச் சோதித்தவனே போற்றி
ஓம் நீலவண்ணப் பிரியனே போற்றி
ஓம் நீண்டகாலச் சுழலோனே போற்றி
ஓம் பத்தொன்பதாண்டாள்பவனே போற்றி
ஓம் பயங்கரனே போற்றி
ஓம் பக்கச் சுழலோனே போற்றி
ஓம் பத்மபீடனே போற்றி
ஓம் பத்திரை சோதரனே போற்றி
ஓம் பிணிமுகனே போற்றி
ஓம் பிரபலனே போற்றி
ஓம் பீடிப்பவனே போற்றி
ஓம் ப்ரஜாபதி ப்ரத்யதி தேவதையனே போற்றி
ஓம் புஷ்பப்பிரியனே போற்றி
ஓம் புதன்மித்ரனே போற்றி
ஓம் பூசத் ததிபதியே போற்றி
ஓம் பேதமிலானே போற்றி
ஓம் பைய நடப்பவனே போற்றி
ஓம் போற்றப்படுபவனே போற்றி
ஓம் மகரத்தாள்பவனே போற்றி
ஓம் மாங்கல்ய காரகனே போற்றி
ஓம் மதிப்பகையே போற்றி
ஓம் மநு சோதரனே போற்றி
ஓம் முடவனே போற்றி
ஓம் முதுமுகனே போற்றி
ஓம் மும்முறை பீடிப்பவனே போற்றி
ஓம் மூபத்தாண்டில் சுற்றுபவனே போற்றி
ஓம் மேல் திசையனே போற்றி
ஓம் மேற்கு நோக்கனே போற்றி
ஓம் யமுனை சோதரனே போற்றி
ஓம் யமனுடன் பிறந்தோனே போற்றி
ஓம் வன்னி சமித்தனே போற்றி
ஓம் வலிப்பு தீர்ப்பவனே போற்றி
ஓம் வக்கரிப்பவனே போற்றி
ஓம் வளை மூன்றுளானே போற்றி
ஓம் வில்லேந்தியவனே போற்றி
ஓம் வில்வப்பிரியனே போற்றி
ஓம் ஸ்ரம் பீஜ மந்திரனே போற்றி
ஓம் சனீச்வரனே போற்றி

சனி ஸ்தோத்திரப் பாடல்
முனிவர்கள் தேவ ரேமும்
மூர்த்திகள் முதலி னோர்கள்
மனிதர்கள் வாழ்வும் உன்றன்
மகிமையது அல்லால் உண்டோ
கனிவுள தெய்வம் நீயே
கதிர்சேயே காகம் ஏறுஞ்
சனியனே உனைத் துதிப்பேன்
தமியனேற்கு அருள்செய் வாயே!
(வேறு)
சங்கடம் தீர்க்கும் சனி பகவானே
மங்கலம் பொங்க மனம் வைத்தருள்வாய்!
சச்சரவு இன்றி சாகா நெறியில்
இச்செகம் வாழ இன்னருள் தாதா!!
சனி மங்களாஷ்டகம்
ஸெளரி: க்ருஷ்ணருசிச்ச பச்சிமமுக: ஸெளராஷ்ட்ரப: காச்யபோ
நாத: கும்பம்ருகர்க்ஷயோ: ப்ரியஸூஹ்ருத்சுரக்ஞயோர்க்ருத்ரக:
ஷட்த்ரிஸ்த: சுபதோசுபோதநுகதிச்சாபாக்ருதௌ மண்டலே
ஸந்திஷ்டந் சிரஜீவதாதிபலத: குர்யாத் ஸதா மங்களம்
பொருள்: காசியப கோத்ரியும், கும்பம், மகரம் ராசிகளுக்கு தலைவரும், மேற்கே தெற்கு முகமாக வில் போன்ற மண்டலத்தில் இருப்பவரும், நீண்ட ஆயுளை அளிப்பவருமான சனி மங்களத்தைச் செய்யட்டும்.
சனிக்கிழமைகளில் இந்த ஸ்தோத்திரத்தை பாராயணம் செய்தால் சனி பகவானின் பரிபூரண அருள் கிடைக்கும்.
சனி பகவானை வழிபடும் போது சொல்ல வேண்டிய சுலோகம்:
விதாய லோஹப்ரதிமாம் நரோதுக் காத் விமுச்யதே பாதாவா அந்ய க்ரஹாணாஞ்சய படேத்திஸ்ய நச்யதி.
மேலும் சனிக்கிழமைகளில் காக்கைக்கு ஆல இலையில் எள், வெல்லம் கலந்த அன்னம் வைத்தால் சனியின் கெடுபிடி நீங்கும் என்பர். 
மேற்கூறி ஸ்லோகங்களுடன்  கீழே கொடுக்கப்பட்டுள்ள திருஞான சம்பந்தரின் பதிகத்தை தினமும் படித்து வந்தால், சனிபகவானைப்போல் கொடுப்பவர் யாருமில்லை. இப்படி என்னதான் விளக்கு போட்டு, பதிகம் பாடி சனிபகவானை வழிபட்டாலும், நாம் எப்போதும் இறை சிந்தனையுடன் நல்லதே செய்து நல்ல முறையில் வாழ்வது மிகவும் முக்கியம்.
போகம் ஆர்த்த பூண்முலையாள் தன்னோடும் பொன்னகலம்
பாகம் ஆர்த்த பைங்கண் வெள்ஏற்று அண்ணல் பரமேட்டி,
ஆகம் ஆர்த்த தோல் உடையன், கோவண ஆடையின்மேல்
நாகம் ஆர்த்த நம்பெருமான், மேயது நள்ளாறே
தோடுடைய காது உடையன், தோல்உடையன், தொலையாப்
பீடுடைய போர்விடையன் பெண்ணும் ஓர் பாலுடையன்
ஏடுடைய மேல் உலகோடு ஏழ்கடலும் சூழ்ந்த
நாடுடைய நம்பெருமான், மேயது நள்ளாறே
ஆன்முறையால் ஆற்ற வெண்நீறுஆடி, அணியிழைஓர்
பால்முறையால் வைத்த பாதம் பக்தர் பணிந்தேத்த
மான்மறியும் வெண்மழுவும் சூலமும் பற்றிய கை
நால்மறையான், நம்பெருமான், மேயது நள்ளாறே
புல்க வல்ல வார்சடைமேல் பூம்புனல் பெய்து, அயலே
மல்க வல்ல கொன்றைமாலை மதியோடு உடன்சூடி,
பல்க வல்ல தொண்டர்தம் பொற்பாத நிழல்சேர,
நல்கவல்ல நம்பெருமான், மேயது நள்ளாறே
ஏறுதாங்கி ஊர்திபேணி, ஏர்கொள் இளமதியம்
ஆறுதாங்கும் சென்னிமேல் ஓர் ஆடு அரவம்சூடி
நீறுதாங்கி நூல்கிடந்த மார்பில் நிரை கொன்றை
நாறுதாங்கும் நம்பெருமான், மேயது நள்ளாறே
திங்கள் உச்சிமேல் விளங்கும் தேவன், இமையோர்கள்
எங்கள் உச்சி, எம்இறைவன் என்று அடியே இறைஞ்ச,
தங்கள் உச்சியால் வணங்கும் தன் அடியார்கட்கு எல்லாம்
நங்கள் உச்சி நம்பெருமான், மேயது நள்ளாறே
வெஞ்சுடர்த்தீ அங்கை ஏந்தி, விண்கொள் முழவுஅதிர,
அஞ்சுஇடத்து ஓர் ஆடல் பாடல் பேணுவது அன்றியும் போய்ச்,
செஞ்சடைக்கு ஓர் திங்கள் சூடி திகழ்தருகண்டத் துள்ளே
நஞ்சு அடைத்த நம்பெருமான், மேயது நள்ளாறே
சிட்டம் ஆர்ந்த மும்மதிலும் சிலைவரைத்தீ அம்பினால்
சுட்டு மாட்டிச், சுண்ணவெண் நீறுஆடுவது அன்றியும்போய்ப்
பட்டம் ஆர்ந்த சென்னிமேல் ஓர் பால் மதியம் சூடி,
நட்டம் ஆடும் நம்பெருமான், மேயது நள்ளாறே
உண்ணல் ஆகா நஞ்சு கண்டத்து உண்டு, உடனே ஒடுக்கி
அண்ணல்ஆகா அண்ணல் நீழல் ஆர் அழல் போல் உருவம்
எண்ணல்ஆகா உள்வினை என்று எள்க வலித்து இருவர்
நண்ணல் ஆகா நம்பெருமான், மேயது நள்ளாறே
மாசுமெய்யர், மண்டைத்தேரர், குண்டர் குணமிலிகள்
பேசும்பேச்சை மெய்என்று எண்ணி, அந்நெறி செல்லன்மின்,
மூசுவண்டார் கொன்றைசூடி, மும்மதிலும் உடனே
நாசம் செய்த நம்பெருமான், மேயது நள்ளாறே
தண்புனலம் வெண்பிறையும் தாங்கிய தாழ்சடையன்,
நண்புநல்லார் மல்குகாழி ஞானசம்பந்தன், நல்ல
பண்புநள்ளாறு ஏத்துபாடல் பத்தும் இவைவல்லார்
உண்பு நீங்கி, வானவரோடு உலகில் உறைவாரே
திருச்சிற்றம்பலம்
தசரதர் போற்றிய துதி
நம: க்ருஷ்ணாய நீலாய சிதிகண்ட நிபாயச
நமோ நீலமயூகாய நீலோத்பல நிபாயச
நமோ நிர்மாம்ஸ தேஹாய தீர்க்க ச்ருதிஜடாயச
நமோ விசால நேத்ராய சுஷ்கோதர பயாநக
நம: பௌருஷகாத்ராய ஸ்தூரோம்ணே ச தே நம:
நமோ நித்யம் க்ஷúதார்த்தாய த்ருப்தாய ச தே நம:
நமோ கோராய ரௌத்ராய - பீஷணாய கராளிநே
நமோ தீர்காய சுஷ்காய - காலதம்ஷ்ட்ர நமோஸ்துதே
நமஸ்தே கோரரூபாய - துர்நிரீக்ஷ்யாயதே நம:
நமஸ்தே ஸர்வ பக்ஷõய - வலீமுக நமோஸ்துதே
ஸூர்ய புத்ர நமஸ்தேஸ்து - பாஸ்கரே அபயதாயிநே
அதோ த்ருஷ்டே நமஸ்தேஸ்து - ஸம்வர்தக நமோஸ்துதே
நமோ மந்தகதே துப்யம் - நிஷ்ப்ரபாய நமோநம:
தப நாத் ஜாத தேஹாய - நித்ய யோகரதாயச
க்ஞாந சக்ஷúர் நமஸ்தேஸ்து - காச்யபாத்மஜ ஸூனவே
துஷ்டோ ததாஸி ராஜ்யம்த்வம் - க்ருத்த: ஹரஸி தத்க்ஷணாத்
தேவாஸுர மநுஷ்யாச்ச - ஸித்த வித்யாதர உரகா:
த்வயா அவ லோகிதா: ஸர்வே - தைன்யம்ஆசு வ்ரஜந்திதே
ப்ரம்மா சக்ரோயமச்சைவ - முநய: ஸப்ததாரகா:
ரஜ்ய ப்ரஷ்டா: பதந்தீஹ - தவ த்ருஷ்ட்யா அவலோகிதா:
த்வயா அவலோகிதாஸ்தேபி - நாசம் யாந்தி ஸமூலத:
ப்ரஸாதம் குருமே ஸெளரே - ப்ரணத்யாஹித்யம் அர்தித:
ஏவம் ஸ்துத: ஸதா ஸெளரி: - க்ரஹராஜோ மஹா பல:
அப்ரவீக்ச சநிர் வாக்யம் - ஹ்ருஷ்டரோமா ஸபாஸ்கரி:
ப்ரீதோஸ்மி தவ ராஜேந்த்ர - ஸ்தோத்ரேண அநேநஸம்ப்ரதி
அதேயம் வாவரம் துப்யம் - ப்ரீதோஹம் ப்ரததாமிச
த்வயா க்ருதந்து யத் ஸ்தோத்ரம் - ய: படேத் இஹமாநவ:
ஏகவாரம் த்விவாரம்வா-பீடாம் முஞ்சாமி தஸ்யவை
ம்ருத்யு ஸ்தாந கதோவாபி - ஜன்மஸ்தாந கதோபிவா
ய: புமான் ச்ரத்தயா யுக்த: சுசி: ஸ்நாத்வா ஸமாஹித:
சமீபத்ரை: ஸமப்யர்ச்ய-ப்ரதிமாம் லோஹஜாம் மம
மா÷ஷாதநம் திலைர் மிச்ரம் - தத்யாத் லோஹந்து தக்ஷிணாம்
க்ருஷ்ணாம் காம் மஹிஷீம் வஸ்த்ரம் - மாம் உத்திச்ய த்விஜாதயே
மத்திநேது விசேஷேண - ஸ்தோத்ரேண அநேந பூஜயேத்
பூஜயித்வா ஜபேத் ஸ்தோத்ரம் - பூத்வா சைவ க்ருதாஞ்ஜலி:
தஸ்ய பீடாம் நசைவாஹம் - கரிஷ்யாமி கதாசந
கோசரே ஜன்ம லக்னேச - தசாஸு அந்தர் தசாஸுச
ரக்ஷõமி ஸததம் தம்ஹி - பீடாப்ய: அன்ய க்ரஹஸ்யச
அநேநைவ ப்ரகாரணே - பீடாமுக்தம் ஜகத்பவேத்
வரத்வயந்து ஸம்ப்ராப்ய - ராஜா தசரத: ததா
மேநே க்ருதார்த்தம் ஆத்மாநம்-ஸம்யக் ஸ்துத்வா சனைச்சரம்
கோண: சனைச்சரோ மந்த: சாயாஹ்ருதய நந்தந:
மார்தாண்டஜ: ததாஸெளரி: பாதங்கிர் க்ருத்ரவாஹந:
ப்ரும்மண்ய: க்ரூரகர்மாச - நீலவஸ்த்ர: அஞ்ஜநத்யுதி:
க்ருஷ்ண: தர்மாநுஜ: சாந்த: - சுஷ்கோதர வரப்ரத:
÷ஷாடச ஏதாநிநாமாநி - ய: படேச்ச திநேதிநே
விஷமஸ்தோபி பகவான் - ஸுப்ரீத: தஸ்ய ஜாயதே
மந்தவாரே சுசிஸ்நாத்வா - மிதாஹாரோ ஜிதேந்த்ரிய:
தத்வர்ண குஸுமை: ஸம்யக் - ஸர்வாங்கம் த்விஜ ஸத்தம:
பூஜயித்வா அந்ந பாநாத்யை: - ஸ்தோத்ரம் ய: ப்ரயத: படேத்
புத்ரகாமோ லபேத்புத்ரம் - தநகாமோ லபேத்தநம்
ராஜ்ய காமோ லபேத் ராஜ்யம் - ஜயார்த்தீ விஜயீபவேத்
ஆயுஷ்காமோ லபேதாயு: - ஸ்ரீ காம ச்ரியம் ஆப்நுயாத்
யத்யத் இச்சதி தத்ஸர்வம் - பகவான் பக்த வத்ஸல:
சிந்திதாநிச கர்மாணி - ததாதிச நஸம்சய:
சநிநா அதஅந் யநுக்ஞாத: - ஸ்வஸ்தாநம் அகமத்ந்ருப:
ஸ்வஸ் தாந ஸங்கதோ பூத்வா - ப்ராப்தகாம: அபவத்ததா
சனைச்சர ஸ்தோத்ரம் ஸம்பூர்ணம்
முத்துசாமி தீட்சிதர் பாடிய கீர்த்தனங்கள்
பல்லவி
திவாகர தநுஜம் சனைச்ரம் தீரதரம் ஸந்தகம் சுந்தயேஹம் (திவா)
அநுபல்லவி
பவாம்பு நிதௌ நிமக்ன ஜநாநாம் பயங்கரம் அதி க்ரூரபலதம்
பவானீச கடாக்ஷ பாத்ர பூதபக்திமதாம்
அதிசய சுய பலதம் (திவா)
சரணம்
காலாஞ்ஜந காந்தியுக்த தேஹம் காலஸஹோதரம்
காக வாஹநம் நீலாம் சுக புஷ்பமாலா வருதம்
நீலரத்ந பூஷண அலங்க்ருதம்
மாலிநீ விநுத குருகுஹ முதிதம் மகரகும்ப ராசீ
நாதம் திலதைல மிச்ரிதான்ன தீபப்ரியம் தயா
ஸுதா ஸாகரம் நிர்பயம்
கால தண்ட பரிபீடித ஜாநும் காமிதார்த்த
பலத காம தேநும் கால சக்ர பேத சித்ரபாநும் கல்பித
சாயா தேவீ ஸுநும்  (திவா)
சூரியதேவனின் குமாரர் தைரியமுள்ளவர். சம்சாரம் என்னும் சாகரத்தில் மூழ்கியோர்க்கு பயங்கரமானவர் - கடுமையான பலனைத் தருபவர். சிவபெருமானது கடாட்சத்திற்கு பாத்ரமான பக்தர்களுக்கு அதிகமான - சுபமான பலனைத் தருபவர். மைபோலும் கருமை நிறம் கொண்ட காகத்தை வாகனமாகக் கொண்டவர். கருமை நிறத்துடன் கூடிய வஸ்திரத்தாலும், புஷ்பத்தாலும் அலங்காரம் செய்யப்பட்டவர். மாலிநீ மந்திரத்தால் துதிக்கின்ற குருகுஹனுக்கு இன்பம் அளிப்பவர். மகரம், கும்பம், ராசிகளுக்கு அதிபதியானவர். எள் அன்னத்திலும், நல்லெண்ணை தீபத்திலும் அத்யந்த பிரேமை மிக்கவர். கருணையில் கடலைப் போன்றவர். பயமற்றவர் யம தண்டத்தினால் வருந்தும் முழங்காலைப் பெற்றவர். நாம் விரும்பியதை அளிக்கும் காமதேனு! காலச் சக்ரத்தைப் பிளக்கும் சூரியன் சாயாதேவியிடம் பிறந்தவர். இப்பேர்ப்பட்ட சனிபகவானை எப்பொழுதும் தியானம் செய்கிறேன். சனி பகவானின் அருளையும், கருணை உள்ளத்தையும் சுந்தர கிருதிகளால் பாடிய தீக்ஷதர் அப்பெருமானை எள் அன்னத்தை நிவேதித்து, நல்லெண்ணை விளக்கேற்றி ஆராதிக்க வேண்டும் என்று கூறுகிறார். சனி பகவானுக்கு, நல்லெண்ணை விளக்கேற்றி, எள் அன்னத்தால் நிவேதிப்பதால், அப்பெருமான் நமது கோசார தோஷங்கள், தசாபுத்தி தோஷங்கள், மற்றுமுள்ள இன்னல்கள் அனைத்தையும் விலகச் செய்து, நமக்கு நல்ல பல பலன்களை அளிப்பார் என்பது திண்ணம்.


சனிபகவான் அருள்பாலிக்கும் திருத்தலங்கள்!


திருநள்ளாற்றுத் திருத்தலம்:செந்நெல்லும், செங்கரும்பும் செழித்து வளரும் சோழவள நாட்டிலே - காவிரி ஆற்றின் தென்கரையிலே திருநள்ளாறு என்னும் இத்திருத்தலம் அமைந்துள்ளது. இறைவளமும், இயற்கை வளமும் செழித்தோங்கும் இத்தெய்வீகப் பதியில், நோக்குமிடமெல்லாம் பச்சைப் பட்டு விரித்தாற் போல் வயல்களைக் காணலாம். இத்திருத்தலம் பேரளம் காரைக்கால் ரயில் மார்க்கத்தில் அமைந்துள்ளது. மாயவரம் அல்லது காரைக்கால் சென்றால் திருநள்ளாறு திருத்தலத்தை சுலபமாக அடையலாம்.ஆதிகாலத்தில் இத்திருத்தலத்தைப் பிரம்மதேவன் பூஜித்ததால் ஆதிபுரி எனவும், தல விருட்சம் தருப்பையாதலால், தருப்பாரண்யம் எனவும், முசுகுந்த சக்கரவர்த்தி நகவிடங்கப் பெருமானைப் பிரதிஷ்டை செய்தமையால் நக விடங்கபுரம் எனவும், இங்கு கோயில் கொண்டுள்ள சனிபகவானைப் பூஜித்து, மேன்மையைப் பெற்ற நளமன்னனால் நளேச்சரம் என்றும் பல திருநாமங்களை, இத்திருத்தலம் பெற்றுள்ளது. இத்திருத்தலம் சப்தவிடங்கத் தலங்களுள் ஒன்றாக விளங்குகிறது. விடங்கர் என்பதற்கு தானே தோன்றியவர், சுயம்பு மூர்த்தி என்பது பொருளாகும். அதனால்தான் இத்திருத்தலத்து, விடங்கத்தியாகரின் திருநாமம் நகவிடங்கர் என்று சொல்லப்படுகிறது. இத்திருத்தலத்தில் எம்பெருமான் ஆடிய திருநடனத்துக்கு உன்மத்த நடனம் என்று பெயர். முற்காலத்தில் பதிமூன்று தீர்த்தங்கள் இருந்தன. இன்று நளதீர்த்தம், பிரம்மதீர்த்தம், ஸரஸ்வதி தீர்த்தம், அகத்தியர் தீர்த்தம், அம்ஸ தீர்த்தம் என்று ஒரு சில தீர்த்தங்கள் மட்டுமே உள்ளன.
நளதீர்த்தத்தில் தீர்த்தமாடுவோர்க்கு அனைத்து கிரஹ தோஷங்களும் விலகும். இங்கு கோயில் கொண்டுள்ள ஈசுவரனையும், ஈசுவரியையும், சனிபகவானையும், திருமால், பிரமன், இந்திரன், முசுகுந்தன், அஷ்டதிக்கு பாலகர், அகத்தியர், சப்தரிஷிகள், அர்ச்சுனன், நளன், கலிங்காதிபதி, வாணி, முதலியோர் பூஜித்து அரும்பெரும் வரங்களைப் பெற்றுள்ளனர். இங்குள்ள திருக்கோயிலில், கோவில் கொண்டுள்ள ஆதிமூர்த்திக்குத் தர்ப்பாணேஸ்வரர் என்பது திருநாமம். அம்பிகையின் திருநாமம் போகமார்த்த பூண்முலையாள். இக்கோயிலில் எழுந்தருளியுள்ள நவக்கிரஹதேவன் சனிபகவான்! மற்ற நவக்கிரஹதேவர்களுக்கு இத்திருக் கோயிலில் சன்னதி கிடையாது. கோயிலுக்குள் நுழைந்ததும் அம்மன் சன்னதிக்கு முன்னால் சனிபகவான் சன்னதி அமைந்துள்ளது. தர்ப்பாணேஸ்வரரை, சனிபகவான் பிரதிஷ்டை செய்து வழிபட்டார் என்று புராணம் கூறுகிறது. இங்கு கோயில் கொண்டுள்ள சனிபகவான் தமது விக்ரஹத்தின் தாழே தமது சாந்நித்யம் கொண்ட மகாயந்திரம் பிரதிஷ்டை செய்யப்பட்டுள்ளது. சனி பகவானாலேயே அருளப்பட்டுள்ளதால் அந்த யந்திரத்தின் சக்தி அளவிட முடியாதது. சனிபகவானின் திருச்சன்னதி மிக்கச் சிறப்பும், சக்தியும், மூர்த்திகரமும் பெற்று விளங்குகிறது. சனிபகவானுக்கு உகந்ததும், பெருமை வாய்ந்தததுமான இத்திருத்தலத்தில், எழுந்தருளியுள்ள சனிபகவானின் பெருமைகளையும், மகிமைகளையும் அளவிட முடியாததொன்றாகும்.
நளதீர்த்தம் - நளன் தீர்த்தமாடியது.
பிரம்ம தீர்த்தம் - பிரம்மா தமது தண்டாயுதத்தால் இத்தீர்த்தத்தை நிர்மாணித்து சிவபிரானுக்கு அபிஷேகம் செய்து பூஜித்தது.
ஸரஸ்வதீ தீர்த்தம் - ஸரஸ்வதி சிவனை வழிபட்ட தீர்த்தம்.
அகத்தியர் தீர்த்தம் - அகஸ்தியரால் சிவபிரானுக்கு அபிஷேகம் செய்த தீர்த்தம்.
அம்ஸ தீர்த்தம் - தேவர்களும் முனிவர்களும் ஒன்று கூடி உருவாக்கிய தீர்த்தம்.
சனிபகவானைத் தரிசிக்க செல்வோர் வடமேற்கு திசையிலுள்ள நளதீர்த்தத்தில் கண்டிப்பாக நீராடி செல்ல வேண்டும். நளதீர்த்தக் கரையிலுள்ள விநாயகருக்கும் நளமன்னன் குடும்பத்தினருக்கும் வணக்கத்தைச் செலுத்த வேண்டும். இந்த நளதீர்த்தத்தை நளனுக்காக இறைவன் அருள் செய்தது வைகாசி மாதம். புனர்பூச நக்ஷத்திரம் ஆகும். அந்நாள் திருநள்ளாற்றில் மிக விசேஷமான வழிபாட்டு நாளாகும். ஒவ்வொரு ஆண்டும் மாசிமகத்தன்று திருநள்ளாற்றில் விசேஷ பூஜைகள் நடைபெறும். அன்றைய தினம் பக்தர்கள் பிரம்ம தீர்த்தத்தில் நீராடி சனிபகவானைத் தரிசித்து இன்புறுவர். பிதுர்க்களுக்குச் செய்ய வேண்டிய கர்மாக்களைச் செய்ய இயலாது போனவர்கள். அமாவாசைக்கு முதல் நாள் இரவு கோவிலில் தங்கி மறுநாள் தீர்த்தமாடி, தான தருமங்களைச் செய்து, சனிபகவானையும் தர்ப்பாணேஸ்வர ஈசனையும் வழிபட வேண்டும். அங்ஙனம் வழிபடுவோர் பித்ருகளுக்குச் செய்ய வேண்டிய கர்மா பண்ணாத தோஷம் நீங்கி புண்ணியத்தை அடைவர்.
பூர்வஜென்ம பாப வினைகள் விலக, மூன்று சனிக்கிழமைகள் தொடர்ந்து திருநள்ளாறு சனிபகவானை வழிபட்டு அன்னதானம் செய்தால் பாபவிமோசனம் பெற்று சனிபகவான் பேரருளையும் பெறுவர். மார்கழி மாதம் வரும் பவுர்ணமி தினத்தன்று சனி பகவானுக்கு வழிபாடு புரிந்து, எட்டு அந்தணர்க்கு அன்னதானம் செய்தால் மூன்று பரம்பரையாக தொடர்ந்து வரும் சாபங்கள் விலகும். தெண்டி குப்தன் என்ற அரசர் தான் செய்த பாப வினைகளுக்கு விமோசனம் தேடி திருநள்ளாறு வந்து, சனிபகவானை வழிபட்டு வந்தான். சனிபகவான் பேரருளால் சிவபெருமானே தெண்டிகுப்தன் செவிகளில் மிருத்யுஞ்சய மந்திரத்தை உபதேசிக்கும்படியான பெரும் பேறு பெற்றான்.
சனிபகவானால் பிரதிஷ்டை செய்யப்பட்டதாக கூறும் தர்ப்பாரண்யேஸ்வரர் சன்னதி கிழக்கு நோக்கி அமைந்துள்ளது. ஆதிமூர்த்தி சன்னதியைத் தரிசித்து முதல் பிரகாரத்திற்கு வரவேண்டும். அங்கு சோபன மண்டபம் அமைந்துள்ளது. சோபன மண்டபத்திற்கு வடக்கு முகமாகச் சென்றால் அம்மன் சன்னதியைக் காணலாம். அம்மன் திருநாமம் பிராணேஸ்வரி அம்மன் என்றும் யோக மார்த்த பூண்முனையாள் என்றும் திருநாமம் உண்டு. அம்மன் சன்னதிக்கு அருகில் சுவர்ண பிள்ளையார் சன்னதியைத் தரிசிக்கலாம். அம்மனையும், பிள்ளையாரையும் தரிசித்து அம்மன் சன்னதி முன்புறம் கிழக்கு பக்கம் சனிபகவான் சன்னதி தரிசிக்கலாம். இக்கோவிலில் சனிபகவானுக்கு மட்டும் தனி சன்னதி! மற்ற எட்டு கிரகங்களும் இக்கோவிலில் பிரதிஷ்டை செய்யப்படவில்லை. இந்த ஆலயத்தில் கர்ப்பகிரஹத்தில் தெற்கு திசையில் விடங்கதியாகர் மண்டபமும், அர்த்த மண்டபமும், சபா மண்டபமும் அமைந்துள்ளது. இதை தவிர உட்பிரகாரத்தில் பரிவார தேவதைகளை தரிசிக்கலாம். மேற்கு புறம் சித்தர்களும், சப்தரிஷிகளும் வணங்கி வழிபட்ட சிவலிங்க திருமேனியைத் தரிசிக்கலாம். அங்கிருந்து தென்புறமாக வந்தால் சபாநாதர். பைரவர் இருக்கும் மண்டபத்தைக் காணலாம். வலது புறத்தில் லட்சுமியின் திருமேனியை தரிசிக்கலாம். அங்கிருந்து பிரதக்ஷிணமாக வரும் போது முருகப் பெருமான், அறுபத்து மூன்று நாயன்மார்கள், சண்டிகேசுவரரை தரிசிக்கலாம். கோபுர வாயிலுக்கு வெளியே அடையான் முக்தி மண்டபத்தைக் காணலாம். திருநள்ளாற்று நாயகனான சனிபகவானை வழிபடுவோர்க்கு, அப்பெருமான் அவர்களது ஜாதகத்திலுள்ள தோஷங்களை நிவர்த்தி செய்து சகல சௌபாக்கியங்களும் அருளுவார். இரண்டரை ஆண்டுகளுக்கு ஒரு முறை வரும் சனிப்பெயர்ச்சியின் போது, திருநள்ளாற்றுக்கு வந்து புண்ணிய தீர்த்தங்களில் நீராடி, சனிபகவானை வழிபடுவோர்க்கு, ஜாதக ரீதியாக ஏதாவது பாதிப்பு இருந்தால் அது நிவர்த்தியாகும். சனிக்கிழமைதோறும் சனிபகவானுக்கு எள் முடிச்சு எண்ணை விளக்கு ஏற்றி ஒன்பதுக்குக் குறையாமல் வலம் வர வேண்டும். சனிபகவானுக்கு ப்ரீதி தரும் சனிதோத்திரங்களையும் மந்திரங்களையும் ஜபிக்க வேண்டும். ஆஞ்சநேயரை தரிசிப்போர்க்கு சனிபகவான் அருள் செய்வார். சனிபகவானுக்கு சங்கு புஷ்பம், நீலோத்தம பூ, துளசி, வன்னிபத்ரம், பில்வபத்ரம் இவற்றால் அர்ச்சனை செய்வது மிக்கச் சிறப்படையதாகும். இந்த வழிபாட்டால் நோய் நீங்கி ஆயுள் ஆரோக்கிய ஐசுவரியத்துடன் வாழ்வர். வைகாசி மாதம், உத்திரட்டாதி நக்ஷத்திரத்தில் தொடங்கி திருநள்ளாற்றில் பதினெட்டு நாட்கள் தொடர்ந்து நடக்கும் பிரம்மோத்ஸவத்தைத் தரிசிப்போர்க்கு சனிபகவான் அவர்களது வாழ்விலுள்ள சங்கடங்களைத் தீர்த்துச் சந்தோஷத்தை வர்ஷிப்பார். சிவபெருமானை வழிபடுவதும், ஆஞ்சநேயரை வழிபடுவதும், சனிபகவானுக்கு சந்தோஷத்தைக் கொடுக்கும். சனிபகவானை மலையாக நம்புவோர்க்கு மலையத்தன கெடுதல் வந்தாலும் அடியோடு மறைந்து போகும். சனிபகவான் அவரை நம்பிக்கையோடு வழிபடுவோர்க்கு நலம் தருபவர். நிலம் தருபவர். நிம்மதி தருபவர். வாழ்வில் என்றென்றும் சகல சவுபாக்கியங்களையும் அள்ளி தருபவர்.
திருநள்ளாறுக்கும் சனிக்கும் என்ன தொடர்பு
பூமத்திய ரேகையில் சூரியனுடைய கதிர்வீச்சு எப்படி அதிகமாகவும், அருகிலும் இருக்கிறதோ, அதேபோல் சனி கிரகத்தினுடைய நீள் வட்ட பாதையில் உச்சமான கதிர்வீச்சு திருநள்ளாறு தலத்தில் அதிகம் என்பது விஞ்ஞான உண்மை. இதனை ஞான திருஷ்டியில் உணர்ந்த முன்னோர் சனிபகவானுக்கு இத்தலத்தில் கோயில் அமைத்தார் கள். சனி கிரகம் தினமும் தன் கதிர்களை இப்பகுதியில் வாரி இறைக்கிறது. அதனால் ஒருநாள் இங்கு தங்கினால் சனிக்கிரகத்தின் கதிர்வீச்சுக்கள் நம் உடலில் பட்டு நமக்கு நன்மையான பலன்கள் நிச்சயம் கிடைக்கும். குறைந்தபட்சம் ஒரு இரவு மட்டுமாவது தங்கி காலையில் சனி பகவானை வழிபடுவது நல்ல பயன் தரும்.
சனிப்பெயர்ச்சிக்குப் பின் 45 நாள் வரலாம்
நவக்கிரகங்கள் ஒன்பதுக்குள் மிகவும் மெதுவாக சஞ்சாரம் செய்பவர் சனி. இதனால் அவரை மந்தன் என்பர். இந்த கிரகம் வான வீதியில் ஒரு பாகை தூரத்தை கடக்க சராசரி ஒரு மாத காலமாகிறது. வக்ரம், அதிசாரம் ஆகிய நிலைகளில் இந்தக் காலம் சற்று மாறுபடும். இது வானியல் கோள்கதிர்களின் முடிவாகும். இந்த முடிவின்படி சனிபகவான் ஒரு பாகையைக் கடக்க ஒரு மாத காலத்தையும் சனிப்பெயர்ச்சி காலமாகவே எடுத்துக் கொள்ள வேண்டும். ஆகையால் சனிப்பெயர்ச்சி நாளை மையமாகக் கொண்டு 15 நாட்கள் முன்பாகவோ, 15 நாட்கள் பின்போ வந்து சனிபகவானை தரிசனம் செய்யலாம். இது பூரண பலன் தரும். சனிபகவானுடைய ரட்சாயந்திரத்தை 45 என்ற எண்ணை மனதில் கொண்டு அமைத்துள்ளனர். இதனால், சனிப்பெயர்ச்சி தினத்தில் இருந்து 45நாட்கள் முன்பு அல்லது பின்பு தரிசனம் செய்யலாம் என்றாகிறது.
சனிப்பெயர்ச்சி திருவிழா
நிகழும் ஸ்வஸ்திஸ்ரீ கர வருஷம், மார்கழி மாதம் 5-ந் தேதி (21-12-2011) புதன்கிழமை, கிருஷ்ணபக்ஷ ஏகாதசி, சுவாதி நட்சத்திரம், சித்தயோகம் கூடிய சுபயோக சுபதினத்தில், காலை மணி 7.24 க்கு ஸ்ரீசனீஸ்வர பகவான் கன்னி ராசியை விட்டு துலா ராசிக்கு பிரவேசம் அடைவதை முன்னிட்டு விழுப்புரம் வட்டம், கோலியனூரில் மேற்குமுக ஸ்ரீவாலீஸ்வர சுவாமி திருக்கோயிலில், இராமாயணகாலத்தில் ஸ்ரீவாலியால் பிரதிஷ்டை செய்யப்பட்டு, ஸ்ரீகூர்மாங்க சனீஸ்வரர் என்னும் திருநாமம் கொண்டு, பக்தர்களின் சங்கடங்களை உடன் நீக்கியருளி தீர்க்காயுளையும், பொன்னையும், பொருளையும், வெற்றியையும் வாரி வழங்கும், வள்ளல் பிரானாக, வன்னிமரத்தடியில், இந்தியாவில் எங்கும் இல்லா வகையில் ஸ்ரீ சங்கடஹர வினாயகர் உடனிருக்க, திருநள்ளாருக்கு நிகரான பிரசித்திபெற்ற திருத்தலமாக விளங்கும், சரித்திரபுகழ் பெற்ற, மிகப் பழமை வாய்ந்த திவ்ய÷க்ஷத்ரமாகிய கோவில்புரநல்லூர் என்னும் கோலியனூரில் தனியாக தெற்குநோக்கி எழுந்தருளியிருக்கும் ஸ்ரீகூர்மாங்க சனீஸ்வர பெருமானின் சனிப்பெயர்ச்சி விழாவின் பலன்கள்:
இந்த சனிப்பெயர்ச்சியினால் அடுத்த இரண்டரை ஆண்டுகளுக்கு உத்திரம் 2-ம் பாதம்முதல், அஸ்தம், சித்திரை, ஸ்வாதி, விசாகம், அனுஷம், கேட்டை வரையிலான இராசிகாரர்களுக்கு ஏழரைச் சனியின் காலமாகவும், புனர்பூசம் 4 பாதம் முதல் பூசம், ஆயில்யம் வரை, கடக ராசி காரர்களுக்கு, அர்த்தாஷ்டம சனியின் காலமாகவும், பூரட்டாதி 4 பாதம் முதல் உத்திரட்டாதி, ரேவதி முடிய மீனராசிக்கு அஷ்டம சனியின் காலமாக இருப்பதால் மேற்படி இராசிகாரர்கள் தங்கள் சக்திக்கு தக்கவாறு அர்ச்சனை, அபிஷேகம், சாந்தி ஹோமம், தானங்கள் (தானத்தில் சிறந்தது அன்னதானம்) போன்ற பரிகாரங்கள் செய்து நன்மை அடையலாம் என ஜோதிட நூல்கள் கூறுகின்றன.
ரிஷபம், மிதுனம், சிம்மம், தனுசு, கும்பம் ஆகிய இராசிகாரர்களுக்கு மிக நன்மையும் ஏனைய ராசிகாரர்களுக்கு வழிபாட்டினால் நல்ல பலன்கள் உண்டாகும். எனவே இந்த இராசிகாரர்கள் ஸ்ரீ சனீஸ்வரபகவானை வழிபடுவது உத்தமம்.
இங்குள்ள சனீஸ்வர பகவானுக்கு சனிப்பெயர்ச்சியை முன்னிட்டு மார்கழி மாதம் 4-ந் தேதி (20-12-2011) செவ்வாய்கிழமை மாலை 5-00 மணிக்கு சிறப்பு அபிஷேகமும்  அன்னதான பிரசாதமும் வழங்கப்பட இருக்கிறது,
சனிப்பெயர்ச்சி விழாவில் கலந்து கொள்ள விருப்பமுள்ளவர்கள் தொடர்பு கொள்ள வேண்டிய முகவரி:
சிவஸ்ரீ வி. சிவக்குமார்,
1/228, வாலீஸ்வரர் கோவில் தெரு, கோலியனூர் அஞ்சல்,
விழுப்புரம்-605 103.
தொடர்புக்கு : 97909 09733, 75982 31159.
பிற தலங்கள்: சனி பகவான் அருள்புரியும் திருத்தலங்கள் பல உள்ளன. அத்திருத்தலங்களுக்குச் சென்று சனிபகவானால் ஏற்படும் தோஷத்திலிருந்து விடுபடலாம்.
விழுப்புரம் மாவட்டம், வானூர் வட்டம், கோரிமேட்டிற்கு அருகிலுள்ள மொரட்டாண்டி என்னும் கிராமத்தில் 27அடி உயரத்தில் நின்றகோலத்தில் கம்பீரமாக காட்சியளிக்கிறார். உலகிலேயே மிக உயரமான சனீஸ்வரர் இவர்தான். இவர் பஞ்சலோகத்தில் உருவாக்கப்பட்டவர். பீடத்துடன் சேர்த்து இவரது உயரம் முப்பத்து மூன்று அடியாகும். தங்க நிறத்தில் ஒளிரும் இந்த மகாசனீஸ்வரர் தன் வாகனமான காக்கையுடன் இல்லாமல் கழுகு வாகனத்துடன் திகழ்கிறார். ஆகமங்களில் இவரது வாகனம் கழுகு என்று கூறப்பட்டுள்ளது. நான்கு கரங்களுடன் காட்சி தரும் இவர், மேல் வலதுகரத்தில் அம்பும், இடது கரத்தில் வில்லும் வைத்துள்ளார். கீழ் வலது, இடது கரங்கள் அபயம், வரதம் கொண்டு திகழ்கிறார். இவர் எழுந்தருளியுள்ள பீடத்தில் பன்னிரண்டு ராசிகளின் திருவுருவங்கள் பொறிக்கப்பட்டுள்ளன. சனியால் பாதிக்கப்பட்டவர்கள் இவரை வழிபட்டால் எப்படிப்பட்ட துன்பங்களும் பறந்தோடிவிடும் என்ற நம்பிக்கை உள்ளது. இயற்கைச் சூழலில் வெட்டவெளியில் நின்று கொண்டிருக்கும் இந்த சனீஸ்வரருக்கு முன், சுமார் 54அடி உயரமுள்ள மகாகணபதி அருள்பாலிக்கிறார். இந்த விநாயகரின் முதுகில் நாளை வா என்ற வாசகம் பெரிய எழுத்துகளில் எழுதப்பட்டிருப்பது தனிச்சிறப்பு. இந்த மகாகணபதி பலவித அரிய மூலிகைச் சாற்றினைக் கொண்டு, விசேஷமாகப் பதப்படுத்தப்பட்ட களிமண்ணால் உருவாக்கப்பட்டவர். பெரிய திருவுருவிலிருக்கும் இந்த கணபதியை நவகிரக சாந்தி கணபதி என்றும் சொல்கிறார்கள். மகாகணபதியின் பின்புறத்தில் உள்ள சிறிய சந்நிதியில் திருமணக்கோலத் துடன் காட்சி தரும்- பஞ்சலோகத்தி னாலான மகாவல்லப கணபதியும், அவருடன் திருமணக்கோலத்தில் தேவசேனாதிபதியும் காட்சி தருகிறார்கள். இவர்களுக்கு அருகில் கோகிலாம்பிகை சமேத கல்யாணசுந்தரரும் காட்சி தருகிறார். மேலும் 16 அடி உயரத்தில் (கல் விக்ரகம்) நவகிரகங்கள் தங்களுக்குரிய வாகனங்களுடன் காட்சியளிக்கின்றன. அத்துடன் அந்தந்த கிரகத்திற்குரிய விருட்சங்களும் அருகில் உள்ளன. ஒவ்வொரு சிலையின் அடியிலும் சிவலிங்கம் உள்ளது. இத்திருத்தலத்தினை சூரியத் தோட்டம் என்று அழைக்கிறார்கள். இங்கு 27 நட்சத்திரத்திற்குரிய மரங்கள், 60 வருடத்திற்கான விருட்சங்கள், 12 ராசிகளுக்கான மரங்கள், ஒன்பது கிரகங்களுக்கான மரங்கள் என 108 மரங்கள் இங்குள்ளன. இங்குள்ள மரங்கள், செடிகள் அனைத்தும் நவகிரக தோஷத்தை நீக்கும் என்று சொல்லப்படுகிறது. இந்த எழில்மிகுந்த தோட்டத்தின் நடுவில் சுமார் நாற்பது அடி நீளமுள்ள வாஸ்து பகவான் படுத்த நிலையில் அருள்புரிகிறார். இவரைத் தரிசித்தால் வாஸ்து தோஷம் நீங்கும் என்பது ஐதீகம். சனிப்பெயர்ச்சியின்போது இந்த மகாசனீஸ்வரரைத் தரிசிப்பது சிறப்பாகும்.
விழுப்புரத்திலிருந்து திருக்கோவிலூர் செல்லும் சாலையில் சுமார் பதினைந்து கிலோமீட்டர் தூரத்தில் உள்ளது கல்பட்டு என்ற கிராமம். இங்குள்ள சுயம்பிரகாச ஆசிரமத்தில், நின்ற நிலையில் சுமார் இருபது அடி உயரத்தில் அருள்புரியும் சனி பகவானை வழிபட சனியின் தாக்கம் விலகும்.
தேனி மாவட்டம் குச்சனூரில் சனி பகவான் சுயம்புமூர்த்தியாக எழுந்தருளியுள்ளார். இத்தலத்தில்தான் சனீஸ்வரரைப் பிடித்த பிரம்மஹத்தி தோஷம் நீங்கியது. சனியின் தாக்கம் உள்ளவர்கள் சனிக்கிழமைகளில் பால், பச்சரிசி, வெற்றிலைப் பாக்கு, பழம், தேங்காய், அவல், கறுப்பு எள், சர்க்கரை, உளுந்து, எள்ளுப் புண்ணாக்கு ஆகியவற்றைப் படைத்து, கறுப்பு வஸ்திரம் அணிவித்து, நல்லெண்ணெயில் விளக்கு ஏற்றி வழிபட்டால் ஏழரைச் சனியால் ஏற்படும் தொல்லைகள் நீங்கும் என்று ஜோதிடர் கள் சொல்வர். இவருக்குத் திருவுருவம் இல்லாமல், சற்று அகலமான லிங்கம்போல் காட்சி தருகிறார்.
திருவாரூர் திருத்துறைப்பூண்டி வட்டம் திருக்கொள்ளிக்காட்டில் அமைந்துள்ளது அக்னீஸ்வரர் ஆலயம். இங்குள்ள இறைவி மிருதுபாதநாயகி. இத்தல இறைவனை சனி பகவான் வீழ்ந்து வணங்கி பொங்குசனியாக மாறினார். இங்கு சனி பகவானுக்கு தனிசன்னதி உள்ளது. இறைவன், இறைவியை வழிபட்டபின், சனி பகவானை வழிபட சனி தோஷம் நீங்கும்.
திருவாரூரில் வன்மீகநாதர்-கமலாம்பிகை (தியாகராஜர்) ஆலயம் அமைந்துள்ளது. இத்தலத்தில் உள்ள சனிபகவான் சிவபெருமானை வழிபட்ட தாகச் சொல்லப்படுகிறது. மேலும், இத்தலத்தில் நவகிரகங்கள் ஒரே நேர்வரிசையில் நிற்பதைக் காணலாம். திருநள்ளாறில் சனி பகவானைத் தரிசிப்பவர்கள் தங்கள் முழு தோஷமும் நீங்க, திருவாரூரில் அருள்புரியும் ஈசனைத் தரிசனம் செய்ய வேண்டும் என்பதால், இத்தலம் தோஷ நிவர்த்தித் தலமாகப் போற்றப்படுகிறது.
சிவகங்கை மாவட்டம், திருப்பத்தூரிலிருந்து சுமார் பத்து கிலோமீட்டர் தூரத்தில் உள்ளது பெரிச்சியூர் கிராமத்தில் சிவாலயம் ஒன்று அமைந்துள்ளது. இங்குள்ள சனி பகவான் தனிச்சன்னதியில் மேற்கு நோக்கி அருள்புரிகிறார். இவரை வழிபட சனியின் தோஷம் விலகும் என்பர்.
தூத்துக்குடி மாவட்டம் திருச்செந்தூர் சுப்ரமணியசுவாமி கோயிலில் முருகப் பெருமானை வழிபட்டபின், அங்கு கிழக்கு நோக்கி தனியாகக் காட்சி தரும் சனி பகவானை வழிபட்டால் சனியின் தோஷம் விலகும்.
திருச்சி உறையூரில் கூரை இல்லாத சன்னதியில் எழுந்தருளியிருக்கும் வெக்காளி அம்மனைத் தரிசித்தபின், அக்கோயிலுக்குள் கிழக்கு நோக்கி தனிச்சன்னதியில் அருள் புரியும் பொங்கு சனியை வழிபட்டால் சனியின் தோஷங்கள் நீங்கும். மற்ற கோயில்களில் உள்ள சனி பகவானை வழிபட்டால் அங்கு தரும் விபூதி போன்ற பிரசாதத்தை வீட்டிற்கு எடுத்து செல்ல மாட்டார்கள். ஆனால் இவர் பொங்கு சனி பகவான் என்பதால், இவரிடமிருந்து கொண்டு செல்லும் பிரசாதத்தை வீட்டிற்கு கொண்டு சென்றால் மங்களம் பொங்கும் என்பது நம்பிக்கை.
தஞ்சாவூர் கும்பகோணம் நாகேஸ்வரர் கோயிலிலிருந்து ஒரு கிலோமீட்டர் தூரத்தில் உள்ளது தேப்பெருமாநல்லூர். இத்தலத்தில் வேதாந்தநாயகி சமேத விஸ்வநாத சுவாமி அருள்புரிகிறார். இங்குள்ள சனிபகவான், ஈஸ்வரனையே பிடித்துவிட்டேன் என்ற அகந்தையுடன் நிற்கும் கோலத்தில், இடுப்பில் கை வைத்துக் கொண்டுள்ளார். இவர் சிவபெருமானால் இரண்டாகக் கிழிக்கப்பட்டு அதன்பிறகு மீண்டும் உயிர் பெற்றார். எனவே, இக்கோவிலில் அருள்புரியும் ஈசனையும் அம்பாளையும் வழிபட்டபின், சனி பகவானை வழிபட சனியின் தாக்கம் விலகும்.
தஞ்சாவூர் கும்பகோணம் நாச்சியார் கோவில் அருகில் ராமநாதசுவாமி சமேத பர்வதவர்த்தினி கோயில் உள்ளது. இக்கோயிலில் தனிச் சன்னதியில் சனி பகவான் தன் இரு மனைவிகளான மந்தாதேவி, ஜேஷ்டா தேவி, மகன்கள் மாந்தி, குளிகன் மற்றும் தசரத மகாராஜாவுடன் எழுந்தருளியுள்ளார். ஒரு காலத்தில் தசரத சக்கரவர்த்தி தன் நோய் குணமடைய இந்த ஆலயம் வந்து, புண்ணிய தீர்த்தத்தில் நீராடி சனி பகவானை வழிபட்டு குணம் பெற்றார். இதனை மெய்ப்பிக்கும் வகையில் தசரதரின் சிலை இங்கே அமைந்துள்ளது. குடும்பத்துடன் அருள்புரியும் இந்த சனி பகவானை வழிபட்டால் குடும்பத்தில் மகிழ்ச்சி பொங்கும்.
தஞ்சாவூர் கும்பகோணம் அருகிலுள்ள  சூரியனார் கோவிலில் சனி பகவான் தன் இரு பத்தினிகளுடன் தனிச்சன்னதியில் வாகனமின்றி அருள்புரிகிறார். இவரை குடும்பத்துடன் வழிபட அனைவரின் தோஷங்களும் நீங்கும் என்பர்.
தஞ்சாவூர் குடந்தை மேலக்காவிரி ஆற்றின் தென்கரையில் ஜெய் ஆஞ்சனேயர் திருக்கோயில் அமைந்துள்ளது. இத்திருக்கோயிலில் எழுந்தருளியுள்ள ஆஞ்சனேயர், சனி பகவானை தன் காலில் போட்டு மிதித்த படி காட்சி தருகிறார். இந்த ஆஞ்சனேயரை சனிக்கிழமை விரதம் இருந்து நெய் விளக்கு ஏற்றி வழிபட்டால், ஆஞ்சனேயர் அருளுடன் சனியின் தாக்கமும் விலகும்.
தஞ்சாவூர் கும்பகோணம் மேலக்காவிரியில் அமைந்துள்ள ஹயக்ரீவர் திருக்கோயிலை சனிப்பிரீதி செய்யும் தலம் எனப் போற்றுகின்றனர். சனிப் பெயர்ச்சிக்காக பரிகாரம் செய்யவேண்டிய ராசிக்காரர்கள், இங்கு வந்து ஆஞ்சநேயரை வணங்கினால், சனி பகவானின் பிடியில் இருந்து தப்பலாம். தவிர, சனீஸ்வரரின் பேரருளும் கிடைக்கும் என்பது ஐதீகம். இந்தக் கோயிலில் ஹயக்ரீவர் மற்றும் சரஸ்வதிதேவிக்கு உகந்த தலமாக இருந்தாலும், சனிக்கிழமைகளில் இங்குள்ள அனுமரையும் சனீஸ்வரரையும் பக்தர்கள் வணங்கி வழிபட்டுச் செல்கின்றனர். சனிப்பெயர்ச்சி ஹோமமும் இங்கு சிறப்புற நடைபெறுகிறது. வியாபாரம் செழிக்க, திருமணத் தடை நீங்க இங்கு வழிபடுகின்றனர்.
தஞ்சாவூர் மாவட்டம் கும்பகோணம்-திருவைகாவூர் செல்லும் வழியில் சுமார் 15 கி.மீ. தொலைவில் உள்ளது பட்டவர்த்தி எனும் ஊர். இங்கு தான்தோன்றிநாதர் ஆலயம் உள்ளது. இங்குள்ள அம்மன் பெயர் தையல்நாயகி.  மகா சிவராத்திரிக்குப் பெயர்பெற்ற தலமாக போற்றப்படும் இத்தலம் எமபயம் போக்கும் தலமாகவும் அமைந்துள்ளது. இங்குள்ள தான்தோன்றி நாதரையும் தையல்நாயகி அம்பாளையும் மனதாரப் பிரார்த்தித்தால், மரண பயம் நீங்கும்; நீண்ட ஆயுளுடன் நோய் நொடியின்றி வாழலாம் என்கின்றனர், பக்தர்கள். இந்தக் கோயிலின் இன்னொரு சிறப்பு.. இங்கு சனீஸ்வர பகவான், தனிச் சன்னதியில் இருந்தபடி, அழகுறத் தரிசனம் தருகிறார். சனிக்கிழமைகளில் இந்தத் தலத்துக்கு வந்து, சனீஸ்வரரைத் தொடர்ந்து தரிசித்து எள் தீபமேற்றி வழிபடுவதை, தஞ்சாவூர்-கும்பகோணம் மக்கள் வழக்கமாகக் கொண்டிருக்கின்றனர். சனிப்பெயர்ச்சி நடைபெறும் நாளில், தமிழகத்தின் பல்வேறு ஊர்களில் இருந்தும் திரளாக வந்து, சனீஸ்வரரைத் தரிசித்துச் செல்கின்றனர். சனீஸ்வரருக்கு உரிய கறுப்பு வஸ்திரத்தைச் சார்த்தி, எள் தீபமேற்றி, எள் சாத நைவேத்தியம் செய்து, சிறப்பு பூஜையில் பங்கேற்றால், சனி தோஷம் விலகும்; சங்கடங்கள் அகலும் என்பது ஐதீகம்!
தஞ்சாவூர் கும்பகோணத்திலிருந்து மயிலாடுதுறை செல்லும் வழியில் உள்ள குத்தாலம் என்னும் கிராமத்தில் சோழீஸ்வரர் திருக்கோயில் உள்ளது. இக்கோயிலில் அடி காணமுடியாத பாதாள சனீஸ்வரர் எழுந்தருளியுள்ளார். இவரை அமிர்தகலச சனீஸ்வரர் என்றும் அழைப்பர். சுயம்புமூர்த்தியாக பாதாளத்தில் இருந்து வந்தவர். இவரது பீடம் பழுது பட்டிருந்ததால், திருப்பணி செய்வதற்காக சனி பகவானின் விக்கிரகத்தை அகற்றுவதற்கு பீடத்தின் அடியில் பள்ளம் தோண்டினார்கள். சுமார் பதினைந்து அடி வரை தோண்டியும் பீடத்தின் அடிப் பகுதியைக் காண முடியாததால் அந்த வேலையை அப்படியே விட்டுவிட்டார்கள். அடி காணமுடியாத நிலையில் அப்படியே ஒழுங்குபடுத்தி சீர்செய்தார்கள். இரண்டு கரங்களுடன் பாதாள சனி பகவான் நின்ற நிலையில் கைகூப்பிய வண்ணம் காட்சி தருகிறார். கூப்பிய கைகளுக்குள் அமிர்த கலசம் உள்ளது. இவரை பொங்கு சனி என்றும் சொல்வர். சனி பகவானை வணங்கும்போது நேரிடையாக அவரைப் பார்க்காமல், சற்று பக்கவாட்டில் நின்று வழிபட வேண்டும் என்று சாஸ்திரம் சொல்லும். ஏனெனில், சனியின் பார்வை நேரிடையாக நம்மீது படுவது மேலும் துன்பத்தைக் கொடுக்கும் என்பர். ஆனால், இங்கு எழுந்தருளியுள்ள பாதாள சனீஸ்வரரை நேரிடையாக நின்று வழிபடலாம் என்கிறார்கள். கைகளில் அமிர்த கலசம் இருப்பதால் நமக்கு அமிர்தமான வாழ்வினை வழங்குவார் என்பது நம்பிக்கை.
மதுரை சோழவந்தானில் உள்ளது சனீஸ்வர பகவான் திருக்கோயில். இங்குள்ள மூலவர் சுயம்புவாகத் தோன்றியவர். விருச்சிக ராசிக்காரர்களின் பரிகாரத் தலமாகவும் இது விளங்குகிறது. சனிதிசை, ஏழரைசனி மற்றும் அஷ்டமத்து சனியால் பூமி, செல்வத்தை இழந்தவர்கள், குடும்பத்தை விட்டு பிரிந்து சென்றவர்கள் இத்தலத்தில் பூஜை செய்தால் இழந்ததை அனைத்தும் பெறுவர் என்பது நம்பிக்கை.
நாகப்பட்டினம் வைதீசுவரன் கோயிலில் வைத்தியநாதரும், தையல்நாயகியும் அருள்பாலிக்கின்றனர். பொதுவாக நவக்கிரகங்கள் திசை மாறி இருக்கும். ஆனால் இங்கு நவக்கிரகங்கள் அனைத்தும் சிவன் சன்னதிக்கு பின்புறம், ஒரே நேர்கோட்டில் நின்று வைத்தியநாதருக்கு அடங்கி, கிரக பலனை பக்தர்களுக்கு சாதகமாக்கி நோய் மற்றும் தோஷங்களை நீக்குவதாக நம்பிக்கை. மற்ற கோயில்களில் நவக்கிரக சன்னதி சிவன் சன்னதியின் முன்பக்கமாகவே அமைக்கப்பட்டிருக்கும். இங்கு மட்டுமே பின்பக்கம் உள்ளது. அங்காரகன்(செவ்வாய்) பகவான் இங்கு தனி சன்னதியில் அருள்பாலிக்கிறார்.
மயிலாடுதுறை மாயூரநாதர் கோயிலில் தவக்கோல சனிபகவான் சன்னதி கொண்டுள்ளார். காக வாகனத்தில் அமர்ந்துள்ள இவரது வலக்கையில் தண்டம் இருக்க, இடக்கை வரத முத்திரை காட்டுகிறது.
கரந்தை சிதாநாதேஸ்வரர் ஆலயத்தில் உள்ள சனிபகவான் வில், அம்பு, திரிசூலம் ஆகியவற்றை ஏந்தியவராகக் காட்சியளிக்கிறார்.
நாமக்கல் மாவட்டம் ஆஞ்சநேயர் கோயிலில் எழுந்தருளியுள்ள 18அடி உயர சாளக்கிராம ஆஞ்சநேயரையும், கன்னியாகுமரி சுசீந்திரம் திருத்தலத்தில் அருள்புரியும் 18 உயர ஆஞ்சனேயரையும் வழிபட்டால் சனி பகவான் உங்கள் பாதையில் குறுக்கிடமாட்டார். ஏனெனில், விநாயகரை எப்படி சனி பகவானால் பிடிக்க முடியவில்லையோ அதேபோல் ஆஞ்சனேயரும் சனி பகவானால் பிடிக்க முடியாதவர். எனவே, ஆஞ்சனேய சுவாமியை வழிபட சனியின் தோஷம் விலகும்.
திருச்சி ஜங்ஷன் அருகிலுள்ள கல்லுக்குழி என்னுமிடத்தில் எழுந்தருளியுள்ள ஆஞ்சனேய சுவாமி மிகவும் கீர்த்தி பெற்றவர். மேலும், இக்கோயில் வளாகத்தில் சக்கரத்தாழ்வாரும், நரசிம்மமூர்த்தியும் அருள்புரிவதால், ஒரே சமயத்தில் இந்த மூர்த்தங்களை வழிபட சனியின் தோஷம் விலகும் என்பர்.
திருச்சியிலிருந்து சுமார் பத்து கிலோமீட்டர் தூரத்தில் உள்ளது உத்தமர்கோவில். இங்கு அருள் புரியும் சப்தநாதர்களை (சப்தகுருக்கள்) ஒரே சமயத்தில் வழிபடுவதால் சனியின் தாக்கம் நீங்கும். மேலும் இக்கோவிலுக்கு அருகில் தென்பண்டரிபுரம் என்னும் திருத்தலம் (பிச்சாண்டார் கோவில்) உள்ளது. இங்கு ராதா, ருக்மிணி சமேத பாண்டுரங்கன் அருள்பாலிக் கிறார். மிகவும் பழமையான இக்கோவிலில் எழுந்தருளியுள்ள பாண்டுரங்கனுக்கு சனிக்கிழமைகளில் அர்ச்சனை செய்து, துளசி மாலை அணிவித்து ஆலிங்கனம் செய்து கொண்டால், சனியின் அனைத்துத் தோஷங்களும் நீங்கும் என்பர். ஆலிங்கனம் என்பது வழிபாடுகள் முடிந்தபின், மூலவரான பாண்டு ரங்கனைக் கட்டிப்பிடித்து தழுவிக் கொள்வது ஆகும். அப்போது பகவான் பாண்டுரங்கன் நம் துன்பங்களைத் தீர்த்து ஆசீர்வதிப்பதாக நம்பிக்கை. மேலும், நம்முடன் பகவான் நட்புடன் இருப்பதாக ஐதீகம். இங்கு பிரசாதமாகக் கொடுக்கப்படும் புக்கா பொடி என்னும் கருப்பு நிற குங்குமம் மிகவும் சக்திவாய்ந்ததாகக் கருதப் படுகிறது. இதனை சனிக்கிழமை களில் நெற்றியில் இட்டுக்கொண்டால் சனி தூரமாகப் போய்விடுவார்.
பெரும்பாலான பெருமாள் கோயில்களில், சக்கரத்தாழ்வார் தனிச்சன்னதியில்  அருள் பாலிப்பது வழக்கம்.  இவரை சனிக்கிழமைகளில் நெய் விளக்கு ஏற்றி வழிபட்டால் சனியின் தாக்கம் குறையும். மேலும், இவரது பின்புறத்தில் நரசிம்மர் எழுந்தருளியிருப்பார். ஒரே சமயத்தில் சக்கரத்தாழ்வாரையும் நரசிம்மரையும் வழிபடுவதால் சனி அருகே நெருங்க மாட்டார் என்பர். நரசிம்ம அவதாரத்தினைக் கண்டால் சனி பகவானுக்குப் பயம் என்ற கருத்து நிலவுகிறது.
மராட்டிய மாநிலம் சிங்கணபுரத்தில் சனி பகவான் வெட்ட வெளியில் உயர்ந்த மேடையில் சுயம்புவாக எழுந்தருளியுள்ளார். கரிய நிறத்தில் ஐந்தடி ஒன்பது அங்குல உயரமும், ஓரடி ஆறு  அங்குல அகலமும் உடைய கல் பலகைதான் திருமேனி. இவரை ஆண்கள் மட்டுமே அருகில் சென்று வழிபட வேண்டும். அதுவும் சிவப்பு ஆடை அணிந்திருக்க வேண்டும். பெண்கள் இவரை அருகில் சென்று வழிபட அனுமதிப்பதில்லை. சிறிது தூரத்திலிருந்தே தரிசிக்கலாம். இந்த ஊரினை சனி பகவான் காவல் காக்கிறார் என்பது ஐதீகம். ஆண்கள் காவித்துண்டு, வேட்டி அணிந்து நீராடி, ஈரம் சொட்டச் சொட்ட நடந்து வந்து பீடத்தின் மீதேறி நல்லெண்ணெய் அபிஷேகம் செய்தால், சனியால் ஏற்படும் அனைத்து கோளாறுகளும் குறைவதுடன் சனியின் ஆசியும் கிட்டும் என்பது நம்பிக்கை. இதனால் பதவி உயர்வு, திருமண பாக்கியம், மக்கட்செல்வம் கிட்டும் என்பர்.

சனிப்பெயர்ச்சி சமாளிப்பது எப்படி?





சனிதோஷம் விலக வழி:சனிபகவானுக்குரிய இலை வன்னி இலை. இந்த இலையால் நவக்கிரக மண்டபத்திலுள்ள சனி பகவானுக்கு அர்ச்சனை செய்ய வேண்டும். உங்கள் ஊர் கோயில்களில் வன்னிமரம் வைக்க ஏற்பாடு செய்யலாம். மேலும், சனிக்கிழமைகளில் எள் தீபம் ஏற்ற வேண்டும். நவக்கிரக மண்டபத்திலுள்ள சனீஸ்வரருக்கு நீலநிற வஸ்திரம் அணிவிக்கலாம். மாற்றுத்திறனாளிகள், அவலட்சணமாக இருப்பவர் களுக்கு உதவி செய்தால், மிகுந்த நன்மை தருவார். திருநள்ளாறு, திருக்கொள்ளிக்காடு ( திருவாரூர்), குச்சனூர்(தேனி) ஆகிய ஊர்களிலுள்ள  கோயில்களுக்கு சென்று  அர்ச்சனை செய்து வரலாம்.
திருநள்ளாறில் சனீஸ்வரரை வழிபடும் முறை: முதலில் நளதீர்த்தம் சென்று, குளத்தை வலமாக பிரதட்சணம் செய்து குளத்தில் நடுவில் இருக்கும், நளன், தமயந்தி குழந்தைகள் சிலைகளை வணங்க  வேண்டும். நல்லெண்ணெய் தேய்த்து, வடக்கு அல்லது கிழக்கு முகமாக நின்று 9 முறை மூழ்கி எழ வேண்டும். பின், பிரம்ம தீர்த்தம், சரஸ்வதி தீர்த்தங்களில் தண்ணீர் தெளித்துக் கொள்ள வேண்டும். கோயிலுக்குள் உள்ள சுவர்ண கணபதியை வணங்கி, சுப்ரமணியர் சந்நிதியை தரிசனம் செய்தபின், மூலவர் தர்ப்பாரண்யேஸ்வரரையும், பின் தியாகேசரையும் தரிசிக்க வேண்டும். வலமாக வந்து, அம்மன் சந்நிதியை தரிசிக்க  வேண்டும். கடைசியாக சனிபகவான் சந்நிதி வந்து வழிபட வேண்டும். பின்னர் பெரிய பிரகாரத்தை வலம் வர வேண்டும். அவரவர்களுடைய வசிக்கும் சக்திக்கும் ஏற்றபடி சனிபகவானுக்கு அர்ச்சனை,  அபிஷேகம், ஹோமம், தர்ப்பணம், ரட்சை தானம், பிரீதி நவ நமஸ்காரம், நவ பிரதட்சணம் செய்யலாம்.  எல்லாநாளும் சனீஸ்வரரை வணங்கலாம் திருநள்ளாறு ÷க்ஷத்ரம் சனிபகவானுடன்,  தர்ப்பாரண்யேஸ்வரர் உள்ளிட்ட மூர்த்திகளையும் கொண்டது. இங்கு சனிக்கிழமை மட்டும் தான்  வழிபட வேண்டும் என்று சிலர் தவறாக  வழிகாட்டுகின்றனர். இதனால் பக்தர்கள் கால்கடுக்க நின்று, சில நிமிடம் மட்டுமே சனிபகவானை தரிசனம் செய்யும் நிலை ஏற்படுகிறது.  ராகுகாலத்தில் ராகுவை வழிபடுவதைப் போன்றே சனிபகவானை, சனிஹோரை நேரத்தில் வழிபடலாம். இதன்படி ஞாயிறு காலை 10-11, மாலை 5-6, திங்கள் காலை 7-8, செவ்வாய் பகல் 11-12, இரவு 6-7, புதன் காலை 8-9, வியாழன் பகல் 12-1, இரவு 7-8, வெள்ளி காலை 9-10, மாலை 4-5, சனிக்கிழமை காலை 6-7, மதியம் 1-2, இரவு 8-9, ஆக இந்த வார நாள் நேரங்களிலும் சனிபகவானை வழிபட்டு அவரின் பரிபூரண அருளைப் பெறலாம்.
சனிக்கிழமை விரதம்: சனிக்கிழமைதோறும் ஒரு வேளை மட்டும்  சாப்பிட்டு, சனிபகவான் ஸ்தோத்திரங்களை சொல்ல வேண்டும். சிறிது எள்ளை பொட்டலமாக கட்டி  தினமும் இரவு படுக்கும் போது அதனை தலைக்கு அடியில் வைத்து படுத்து மறுநாள் காலையில் அதனை அன்னத்தில் கலந்து காகத்திற்கு  அன்னமிடலாம். இதனை நமது வசதிக்கேற்ப 9, 48, 108 வாரங்கள் என பின்பற்றலாம். தேங்காய் முறியில் நல்ணெண்ணை விட்டு எள்ளு முடிச்சிட்டும், அல்லது எள் தீபம் (தில தீபம்) ஏற்றலாம். சனிபகவானுக்கு நல்லெண்ணெய் அபிஷேகம் செய்து கருப்பு அல்லது நீலவஸ்திரம், வடைமாலை சாத்தலாம். எள் சாதம் நைவேத்யம் செய்யலாம். அர்ச்சகர், அந்தணர் ஏழை களுக்கு அவற்றை விநியோகம் செய்ய வேண்டும். சனிபகவானுக்கு நவக்கிரக சாந்தி ஹோமம்,  அபிஷேக ஆராதனை மண்டல பூஜை செய்யலாம். எள்ளை சுத்தம் செய்து வறுத்த வெல்லம், ஏலக்காய் பொடியுடன் இடித்து திலசூரணம் செய்து வெங்கடேசப் பெருமாளுக்கும் சனிபகவானுக்கும் படைத்து வினியோகிக்கலாம். ஆஞ்சநேயர், தர்மராஜன் ஆகிய தேவதைகளை ஆராதனை செய்யலாம். அவரவர் பிறந்த ஜன்ம நட்சத்திரம் அல்லது சனிபகவானின் ஜென்ம நட்சத்திரமான ரோகிணியில் அர்ச்சனை  செய்யலாம். எல்லா நாளும் சனிஹோரை நேரத்தில் வழிபடலாம்.
டி.ராஜா சுவாமிநாதன் குருக்கள்,
திருநள்ளாறு கோயில் தலைமை அர்ச்சகர்
@பான்: 04368  - 236 503
துலாமுக்கு  பெயர்வதால்  என்ன நிலை
இந்தமுறை சனிபகவான், கன்னி ராசியில் இருந்து துலாம் ராசிக்குப் பெயர்ச்சியாகிறார். துலாம் சனிக்கு உச்சவீடு. எனவே, அதிக ஆற்றலோடு திகழ்வார். எனவே, இந்தக்காலத்தில் ஏழரை,  அஷ்டமத்து சனி, அர்த்தாஷ்டம சனி( அஷ்டமத்து சனியில் பாதி கஷ்டத்தைக் கொடுக்கும் நிலை)  ஜீவனச்சனி(பணி, தொழிலில் சிரமம்) ஆகியவற்றை அனுபவிக்க இருப்பவர்கள் ஜாக்கிரதையாகவே இருக்க வேண்டும். ஏழரையை பிரிக்கும் விதம் ஏழரைச் சனி ஒருவரது  வாழ்வில் பொதுவாக மூன்று முறை வரும். அதாவது 221/2 ஆண்டுகள் அவர் ஒருவரது  வாழ்வில் சஞ்சரிப்பார். அதில் முதல் முறை வருவதை மங்கு சனி, இரண்டாவதை பொங்கு சனி, மூன்றாவதை மாரகம் எனப்படும் மரணச்சனி என்பர். எனவே, இரண்டாம் முறையாக சனிப்பெயர்ச்சியை அனுபவிக்க இருப்பவர்கள் அதிக கவலைப்படத் தேவையில்லை. சிலருக்கு நல்ல வளர்ச்சி ஏற்படும். உத்தியோக முன்னேற்றம், வீடு கட்டுதல் போன்ற நீண்டநாள் கனவுகள் இந்தக் கால கட்டத்தில் நடைபெற வாய்ப்புண்டு. மற்றவர்களுக்கு, அவரவர் சுயஜாதகத்தில், தசாபுத்தியின் அடிப்படையில் சிரமங்கள் குறையும்.
சனிப்பெயர்ச்சி பலனடையும் ராசிகள்:  ரிஷபம், சிம்மம், தனுசு
சுமாரான பலன்பெறும் ராசிகள்: மேஷம், மிதுனம், மகரம், கும்பம்
பரிகார ராசிகள்: கடகம், கன்னி, துலாம், விருச்சிகம், மீனம்
ஏழரைச்சனி யாருக்கு:
கன்னி - கடைசி இரண்டரை ஆண்டுகள், பாதச்சனி, வாக்குச்சனி
துலாம் - இரண்டாம் கட்டம் ஜென்மச்சனி
விருச்சிகம்- ஏழரை ஆரம்பம், விரயச்சனி
அஷ்டமச்சனி யாரைத் தாக்கும்:
மீனம்- இதுஏழரைச்சனிக்கு நிகராகவோ, அதற்கு அதிகமாகவோ கஷ்டம் தரும் எனச்சொல்லப்படுவதுண்டு.

























பலன்கள் | மேஷம் | ரிஷபம் | மிதுனம் | கடகம் | சிம்மம் | கன்னி




மேஷம்(55/100)  கண்டச்சனி வந்தாச்சு!
மற்றவர்களின் நல்வாழ்விற்காக தங்கள் பங்கை முன்வந்து தரும் மேஷராசி அன்பர்களே!  உங்கள் ராசிக்கு ஆறாம் இடத்தில் அனுகூலமாக இருந்த சனிபகவான், இப்போது ஏழாம் இடமான துலாம் வீட்டிற்கு பெயர்ச்சியாகி உள்ளார். தனது 3, 7, 10 ஆகிய பார்வைகளால் முறையே ராசிக்கு 9, ராசி, 4 ஆகிய இடங்களை பார்க்கிறார். சனியின் பார்வைபெற்ற இந்த இடங்கள் சவுபாக்கியம், பிதா, உடல், மனம், வீடு, வாகன ஸ்தானங்கள் ஆகும். ராசிக்கு ஏழாம் இடத்தில் சனி அமர்வது சப்தமஸ்தான கண்டச்சனியாகும். கடந்த காலங்களில் பல்வேறு நற்பலன்களை வழங்கிய சனி,இப்போது உங்களின் நண்பர்கள் வகையில் கருத்து பேதங்களை உருவாக்குவார். சிறு அளவிலான உடல்நலக்குறைவு அவ்வப்போது ஏற்படும். கட்டுப்பாடான வாழ்க்கை முறையை பின்பற்றுவதால் உடல்பலமும் மனபலமும் அதிகரிக்கும். உங்கள் ராசிக்கு சம அந்தஸ்து உள்ள கிரகமான சுக்கிரன் வீட்டில் சனி உள்ளார். இதனால் ஆடம்பரச்செலவு ஏற்படுவதை தவிர்க்க இயலாது. தேவையற்ற பேச்சுக்களை தவிர்ப்பதால் மட்டுமே சமூகத்திலும், வீட்டிலும் நற்பெயரைக் காப்பாற்றலாம். இளைய சகோதரர்கள் தங்கள் செயல்திறனை வளர்த்துக் கொள்வதுடன் உங்களுக்கும் இயன்ற அளவில் உதவிபுரிவர். வீடு, வாகன வகையில் பராமரிப்புச் செலவு அதிகரிக்கும். பயணத்தில் மிதவேகம் தேவை. புத்திரர்கள் படிப்பு, வேலைவாய்ப்பில் வளர்ந்து கூடுதல் புகழ்பெறுவர்.
இஷ்டதெய்வ வழிபாடு நிறைவேறும். நிதிநிலை சிறப்பாக அமையாது. பழைய கடன்களை அடைக்க தாமதமும், புதிய கடன் பெறுவதுமான நிலையும் ஏற்படும். குடும்பத்தில் சச்சரவு, தொழில் சம்பந்தமாக வெளியூர் இடமாற்றம் உருவாகும். தம்பதியர் ஒருவருக்கொருவர் கருத்துக்களை புரிந்துகொள்வதில் கருத்து வேறுபாடு ஏற்படும். விட்டுக்கொடுத்து சென்றால், சனீஸ்வரனின் அருள்பார்வை கிடைக்கும். நண்பர்களிடம் பணம் கொடுக்கல், வாங்கல் பேச்சு, விவாதங்களில் அளவுடன் நடந்துகொள்வது நன்மை தரும். பங்குச்சந்தை வர்த்தகத்தில் உள்ளவர்கள் அனுபவசாலிகளின் ஆலோசனையைப் பெற்று பங்குகளை வாங்குவதும், விற்பதும் நன்மை பெற உதவும். வெளியூர் பயணம் அனுகூல பலன் பெற்றுத்தரும்.
தொழிலதிபர்கள்: மருத்துவமனை, லாட்ஜ், ஓட்டல், பஸ், ரியல் எஸ்டேட், மலைத்தோட்ட பயிர் உற்பத்தி,பால்பண்ணை, ஏற்றுமதியாளர்கள், கல்குவாரி, காண்டிராக்ட் தொழில் செய்பவர்களும், டெக்ஸ்டைல்ஸ், ஆட்டோமொபைல்ஸ், அச்சகம், எலக்ட்ரிக்கல், எலக்ட்ரானிக்ஸ் பொருட்கள் உற்பத்தி செய்பவர்களும் தொழிலில் வளர்ச்சிபெற மனஉறுதியுடன் செயல்படுவர். இருப்பினும் லாபம் சுமாராகவே இருக்கும். தொழிற்சாலை விரிவாக்கத்துக்கு கூடுதல் இடம் வாங்குவார்கள். தொழிலில் கூட்டுசேர வரும் வாய்ப்புக்களை சாதக, பாதகம் அறிந்து ஏற்கலாம். பணப்பரிவர்த்தனையில் தகுந்த பாதுகாப்பு நடைமுறை பின்பற்றுவது அவசியம்.
வியாபாரிகள்: நகை, ஜவுளி, மளிகை, அரிசி, தானியம், காய்கறி, பழம், மருந்து, எலக்ட்ரிக்கல், எலக்ட்ரானிக்ஸ், பால் பொருள், சமையலறை சாதனங்கள், கட்டுமானப் பொருள், ஆட்டோமொபைல் உதிரி பாகம், தோல் பொருள் விற்பனை செய்வோர் ஆர்வமுடன் செயல்பட்டால் மட்டுமே இப்போதைய நிலவரத்தை தக்கவைக்கலாம். வாடிக்கையாளர்களின் மனப்பாங்கு உணர்ந்து பேசுவது நல்லது. சுமாரான லாபம் கிடைக்கும். சக வியாபாரிகளுக்காக கொடுக்கல் வாங்கல் விஷயங்களில் பொறுப்பேற்றால் சிக்கல் வரும். உங்கள் வேலையை மட்டும் கவனித்தால் வியாபாரம் இப்போதுள்ளதைப் போலவே இருக்கும்.
பணியாளர்கள்: அரசு மற்றும் தனியார் துறையில் பணிபுரிபவர்களின் பணித்திறமை பாதிக்கப்படலாம். சக பணியாளர்களின் உதவி கிடைக்காது. வருமானம் வழக்கமான அளவு இருக்கும். சிலருக்கு குறையும். அத்தியாவசிய தேவைகளுக்கு கடன் பெற வேண்டி வரும். நீண்டகால பணியில் உள்ளவர்களுக்கு இடமாற்றம் இருக்கும். தற்காலிக பணியாளர்களுக்கு மாற்று வேலை கிடைத்தாலும் வருமானம் சுமார் தான்.
பெண்கள்: பணிபுரியும் பெண்கள் மந்தநிலை காரணமாக அதிகாரிகளின் கண்டிப்புக்கு ஆளாவர். வேலைப்பளு அதிகரிக்கும். வருமானம் போதுமான அளவு இராது. விண்ணப்பித்த கடன் தொகை தாமதமாகும். குடும்பப் பெண்கள் கணவரின் மனக்குறைக்கு ஆட்படாத வகையில் பொறுமையாகச் செயல்படுவது அவசியம். குடும்பச்செலவுக்கு போதுமான பணம் இருக்காது. சிக்கன நடைமுறை நற்பலன் தரும். உடல்நலத்தில் அக்கறை கொள்வது மருத்துவச் செலவைக் குறைக்கும். சுயதொழில் புரியும் பெண்கள் நன்றாக உழைத்தாலும் சுமாரான லாபமே பெறுவர். வெளியூர் பயணங்களால் நன்மை இருக்குமென்றால் மட்டுமே செல்லவும்.
மாணவர்கள்: இன்ஜினியரிங், மருத்துவம், ஓட்டல் மேனேஜ்மென்ட், கேட்டரிங், கம்ப்யூட்டர், வணிகவியல், அறிவியல், கலைத்துறை மாணவர்களுக்கு நினைவுத்திறன் குறைய வாய்ப்புள்ளது. கூடுதல் பயிற்சியினால் படிப்பில் தேர்ச்சி பெறலாம். ஆடம்பர செலவுகளை குறைப்பதால் மட்டுமே பெற்றோரின் அதிருப்தியை தவிர்க்கலாம். சக மாணவர்களிடம் படிப்பு தவிர பிற விஷயங்களில் விவாதம் கூடாது.
அரசியல்வாதிகள்: ஆதரவாளர்களின் நம்பிக்கை எப்பொழுதும் போல தொடரும். தனிநபர் விவகாரங்களில் தலையிடுவது, சமரசம் என்ற பெயரில் கட்டை பஞ்சாயத்து செய்வது ஆகியவற்றால் சிரமங்களை சந்திக்க நேரிடும். மேலும், எதிரிகள் உங்களின் கஷ்டத்தை எதிர்பார்த்திருப்பர் என்பதால், தேவையற்ற வேலைகளில் ஈடுபடக்கூடாது. பதவி பொறுப்பில் உள்ளவர்கள் அதிகாரிகளுடன் சச்சரவு செய்யக்கூடாது. அரசியலுடன் தொழில் நடத்துபவர்கள் உற்பத்தி, விற்பனையில் சுமாரான நிலையை எதிர்கொள்வர்.
விவசாயிகள்: மகசூல் சுமாராக இருக்கும். விவசாயப்பணிகளை நிறைவேற்ற கூடுதல் செலவு ஏற்படும். மாற்றுப்பயிர் வளர்ப்புத் திட்டங்கள் பற்றி ஆலோசித்து செயல்படுத்தினால், வருமானத்தை ஓரளவாவது தக்க வைக்கலாம்.

பரிகாரம்: சிவபெருமானை வழிபடுவதால் வாழ்வில் கஷ்டம் குறைந்து நன்மை வளரும்.
பாட வேண்டிய பாடல்

மாசில் வீணையும் மாலை மதியமும்
வீசுதென்றலும் வீங்கிள வேனிலும்
மூசுவண்டறை பொய்கையும் போன்றதே
ஈசன் எந்தன் இணையடி நீழலே!.
சனி வக்ரகால பலன்

26.3.2012 முதல் 10.9.2012 வரை சனிபகவான் வக்ரகதியாகி, மீண்டும் கன்னிராசிக்கு இடம் பெயருகிறார். இந்த காலங்களில் எதிர்மறை பலன்கள் குறைந்து சுபபலன் நடக்கும். தொழில் வளர்ச்சி சீராகும். பணவரவு அதிகரிக்கும். மங்கல நிகழ்ச்சி சிறப்பாக நிறைவேறும். அரசு தொடர்பான அனுகூலம் கிடைக்கும். புதிய சொத்து சேர்க்கை உண்டு. சமூக அந்தஸ்து உயரும். வழக்கு விவகாரத்தில் சாதகமான தீர்வு வந்து சேரும். அலைச்சல் குறையும்.
ரிஷபம் (90/100)      ஜமாயுங்க! ஜமாயுங்க!
திட்டமிட்டு செயல்களைச் செய்து வெற்றி பெறும் தன்மை கொண்ட ரிஷபராசி அன்பர்களே!
உங்கள் ராசிக்கு ஐந்தாம் இடத்தில் இருந்து வாழ்வில் சாதகமற்ற பலன்களை தந்த சனிபகவான், இப்போது ஆறாம் இடமான துலாம் வீட்டிற்கு நற்பலன் வழங்கும் வகையில் பெயர்ச்சியாகி உள்ளார். சனிபகவான் தனது 3, 7, 10 ஆகிய பார்வைகளால் முறையே ராசிக்கு 8, 12, 13-ம் இடங்களை பார்க்கிறார். சனியின் பார்வை பெற்ற இந்த இடங்கள் ஆயுள், சுபச்செலவு, புகழ் ஸ்தானங்கள் ஆகும். ராசிக்கு ஆறாம் இடத்தில் சனி அமர்வது உங்கள் வாழ்வில் பல்வேறு நன்மைகளைப் பெற வழி ஏற்படுத்தும். பேச்சில் இருந்த தயக்கம் குறைந்து எவரிடத்தும் சரளமாக பேசுவீர்கள். ஒத்திவைத்த பணிகளை விரைவாக நிறைவேற்றி நன்மை பெறுவீர்கள். சமூகத்தில் அந்தஸ்து உயரும். புதிய வீடு, வாகனம் திட்டமிட்டபடி வாங்குவீர்கள். தாய்வழி உறவினர் மதிப்புடன் நடத்துவர். புத்திரர்களின் செயல்பாட்டில் இருந்த குறை விலகி திறமை வளர்த்து முன்னேற்றம் பெறுவர். இஷ்ட தெய்வ அருள் பரிபூரண துணை நிற்கும். உடல்நலம் பலமாகும். கடனை அடைப்பீர்கள். எதிரிகள் வியந்து விலகும் வகையில் உங்களின் வாழ்க்கைத்தரம் உயரும்.
உங்களின் ராசிநாதன் சுக்கிரனின் இன்னொரு ஆட்சி வீடான துலாம் வீட்டில், நட்பு கிரகமான சனிபகவான் அமர்வு பெற்றது மிகுந்த நன்மை தரும். உங்கள் நடை, உடை, பாவனையில் நேர்த்தி, வசீகரம் அதிகரிக்கும். நண்பர்களிடம் இருந்த கருத்துவேறுபாடு விலகி நட்பு வளரும். தம்பதியர் ஒருவருக்கொருவர் நல்அன்பு பாராட்டி மகிழ்ச்சிகர வாழ்க்கை நடத்துவர். உறவினர்களின் உதவி எதிர்பார்த்த வகையில் கிடைக்கும். குடும்பத்தில் மங்கல நிகழ்ச்சியை தாராள செலவில் நடத்துவீர்கள். தந்தைவழி உறவினர்கள் தம்மால் இயன்ற உதவியை மனமுவந்து செய்வர். சொத்து சேர்க்க வேண்டும் என்ற நீண்டநாள் லட்சிய கனவு இனிதாக நிறைவேறும். விருந்து, உபசரிப்புகளில் சந்தோஷ மனமுடன் கலந்துகொள்வீர்கள். வெளியூர் பயணங்களை தகுந்த திட்டமிடுதலுடன் நிறைவேற்றி உயரிய நன்மை பெறுவீர்கள். பங்குச்சந்தை வர்த்தகத்தில் உள்ளவர்கள் திறமைமிகு செயலால் ஆதாய வருமானம் பெறுவர்.
தொழிலதிபர்கள்: ஆட்டோமொபைல், டெக்ஸ்டைல்ஸ், அரிசி ஆலை, அச்சகம், கல்வி நிறுவனம் நடத்துபவர்கள், கட்டுமானப் பொருட்கள், பால், மினரல் வாட்டர், வாசனை திரவியங்கள், மின்சார உபகரணங்கள், கண்ணாடி உற்பத்தி செய்பவர்கள் அமோக உற்பத்தி, தாராள பணவரவு கிடைக்கப்பெறுவர். பணியாளர்கள் ஆர்வமுடன் செயல்பட்டு அதிக உற்பத்தியில் இறங்குவர். உபதொழில் துவங்கும் திட்டம் நிறைவேறும். சொத்து சேர்க்கை உண்டு. தொழில் சார்ந்த எதிர்ப்பு பெருமளவில் குறையும். வாகனம் வாங்க யோகம் உண்டு.
வியாபாரிகள்: நகை, ஜவுளி, மளிகை, காய்கறி, பழம், கட்டுமானப் பொருட்கள், ஆட்டோமொபைல் உதிரிபாகம், எலக்ட்ரிக்கல் எலக்ட்ரானிக்ஸ் சாதனம், அலங்காரப் பொருள், குளிர்பானம், பூ, இறைச்சி, மருந்து விற்பனை செய்பவர்கள் வியாபாரத்தில் முன்னேற்ற சூழ்நிலையை அடைவர். மற்றவர்களுக்கும் சந்தையில் போட்டி குறைந்து லாபம் அதிகமாகும். வியாபார வளர்ச்சிக்கு தேவையான கடன் எளிதில் கிடைக்கும். புதிய கிளை துவங்கவும் சொத்து, வாகனம் வாங்கவும் யோகம் உண்டு.
பணியாளர்கள்: அரசு, தனியார் துறையில் பணிபுரிபவர்கள் உற்சாக மனதுடன் செயல்படுவர். பணி இலக்கு குறித்த காலத்தில் நிறைவேறி நன்மதிப்பை பெற்றுத்தரும். சக பணியாளர்கள் நட்பு பாராட்டுவர். கடந்த நாட்களில் எதிர்பார்த்த பதவி உயர்வு, விரும்பிய இடமாற்றம் கிடைக்கும். வீடு, வாகனக்கடன் பெறுவீர்கள். குடும்பத்தேவை பெருமளவில் நிறைவேறும். புதிய வேலைக்கு முயற்சிப்பவர்களுக்கு வெற்றி கிடைக்கும்.
பெண்கள்: பணிபுரியும் பெண்கள் சீரான உடல்நலம் பெற்று பணியில் ஆர்வமுடன் ஈடுபடுவர். குறித்த காலத்தில் பணி இலக்கு நிறைவேறும். கூடுதல் சலுகைகள் கிடைக்கும். பதவி உயர்வு பெறுவதில் இருந்த சிரமம் விலகும். குடும்ப பெண்கள் தைரியத்துடன் செயல்படுவர். கணவர், குழந்தைகளின் மீதான அன்பு வளர்ந்து நற்பெயர் பெற்றுத்தரும். குடும்பச் செலவுக்கு தாராள பணவசதி இருக்கும். தாய்வழி சீர்முறை எதிர்பார்த்த அளவில் கிடைக்கும். கடந்த காலத்தில் நகை, பணத்தை இழந்தவர்கள் அதை மீண்டும் பெறுவர். சுயதொழில் புரியும் பெண்கள் அதிக மூலதனத்துடன் அபிவிருத்திபணி செய்வர். உற்பத்தி, விற்பனை சிறந்து லாபவிகிதம் கூடும்.
மாணவர்கள்: மருத்துவம், இன்ஜினியரிங், இதழியல், கேட்டரிங், கம்ப்யூட்டர், ரசாயனம், பவுதிக துறை மாணவர்கள் ஞாபகத்திறன் வளர்ந்து சிறந்த தரதேர்ச்சி பெறுவர். மற்ற துறையினரும், ஆரம்பக்கல்வி படிப்பவர்களும் உயர்ந்த மார்க் பெறுவர். படிப்புச்செலவுக்கு தாராள பணவசதி கிடைக்கும். சக மாணவர்களிடம் இருந்த கருத்து வேறுபாடு விலகும். படிப்பு நீங்கலான பிற பயிற்சிகளையும் பெறுவதில் ஆர்வம் கொள்வீர்கள். வேலைவாய்ப்பில் முன்னுரிமை உண்டு. பரிசும், பாராட்டும் பெறுவீர்கள்.
அரசியல்வாதிகள்: அரசியல் பணியில் ஈடுபடுவதில் உற்சாகம் ஏற்படும். எதிர்ப்பு குறைந்து அனுகூலம் கிடைக்கும். ஆதரவாளர்களின் நம்பிக்கையை பெறுவீர்கள். அரசு தொடர்பான எதிர்பார்ப்பு நிறைவேறும். விரும்பிய பதவி, பொறுப்பு வந்து சேரும். வழக்கு, விவகாரங்களில் சாதகமான தீர்வு கிடைக்கும். எதிரிகள் சிரமம் காரணமாக இடம்மாறிப் போவர். குடும்பத்தில் மகிழ்ச்சியும் சுபமங்கல நிகழ்வும் உண்டு. திட்டமிட்டபடி வாகனம், வீடு வாங்குவீர்கள். அரசியலுடன் தொழில் நடத்துபவர்கள் உற்பத்தி, விற்னையில் முன்னேறி ஆதாய பணவரவு பெறுவர்.
விவசாயிகள்: விளைச்சலில் சாதனை செய்வீர்கள். விளை பொருட்களுக்கு கூடுதல் விலை கிடைக்கும். நிலம் தொடர்பான பிரச்னை சரியாகும். கூடுதல் நிலம் வாங்கவும் யோகம் உண்டு. கால்நடை வளர்ப்பில் உபரி வருமானம் கிடைக்கும். குடும்பத்தில் மங்கல நிகழ்ச்சி நடத்துவீர்கள்.
பரிகாரம்: ராமபிரானை வழிபடுவதால் மனஉறுதியும் செயல் வெற்றியும், மங்கல நிகழ்வும் உண்டாகும்.
பாட வேண்டிய பாடல்
நாடிய பொருள் கைகூடும்; ஞானமும் புகழும் உண்டாம்
வீடியல் வழியதாக்கும்; வேரியம் கமலை நோக்கும்
நீடிய அரக்கர் சேனை நீறுபட்டு அழிய, வாகை
சூடிய சிலை இராமன் தோள்வலி கூறுவோர்க்கே
சனி வக்ரகால பலன்
26.3.2012 முதல் 10.9.2012 வரை சனிபகவான் வக்ரகதியாகி கன்னிராசிக்கு இடம் பெயர்கிறார். இந்த காலத்தில் அனுகூல பலன் குறைந்து எதிர்மறை சிந்தையும் செயல்களும் இருக்கும். அலட்சிய பேச்சால் நல்லவர்களின் அன்பு, உதவியை பெற இயலாமல் போகும். குடும்பத்தில் சச்சரவு உருவாகும். கவனம். தொழில் வளர்ச்சிப்பணிகளும் பின்தங்கும். பணவரவில் தாமதம், அதிக செலவு ஆகிய சூழ்நிலை இருக்கும். இந்த சமயத்தில், புத்திரர்களின் செயல்பாடுகளைக் கவனித்து ஒழுங்கு செய்வது அவசியம்.
மிதுனம்(60/100)   புண்ணியம் செஞ்சிருந்தா தப்பிக்கலாம்!
மற்றவர்கள் புகழும் வகையில் வாழ்ந்து காட்டும் மிதுனராசி அன்பர்களே!
உங்கள் ராசிக்கு நான்காம் இடத்தில் அர்த்தாஷ்டமச் சனியாக இருந்த சனிபகவான், இப்போது ஐந்தாம் இடமான துலாம் வீட்டிற்கு பெயர்ச்சியாகி உள்ளார். தனது 3, 7, 10 ஆகிய பார்வைகளால் முறையே ராசிக்கு 7, 11, 2 ஆகிய இடங்களை பார்க்கிறார். கடந்த காலங்களில் சனியின் அமர்வினால் பல்வேறு இடையூறுகளை அனுபவித்தீர்கள். இப்போது நிலைமை கொஞ்சம் சீரடைந்தாலும் பிள்ளைகள் மற்றும் பூர்வ சொத்து வகையில் சில சிரமங்களை எதிர்கொள்வீர்கள். பூர்வபுண்ணிய ஸ்தானம் என்பதால், கடந்த காலங்களில் செய்த புண்ணியத்திற்கேற்ப பலன் கிடைக்கும். நட்பு ஸ்தானத்தை சனி பார்ப்பதால் நண்பர்களிடம் இருந்த சுமூக உறவில் குளறுபடி ஏற்படும். பேச்சில் நிதானமும் இரக்க குணமும் பின்பற்றுவது அவசியம். கோபத்தால் கடுமையாகப் பேசி பிரச்னைகளை சந்திக்கலாம். இளைய சகோதரர்கள் ஓரளவுக்கு உதவுவர். வீடு, வாகன வகையில் சிறு அளவிலான மாற்றம் செய்வீர்கள். புத்திரர்கள் உங்களின் சொல்லை மதித்து நடப்பதில் முரண்படுவர். இதனால் குடும்பத்தில் சச்சரவு, நிம்மதி குறைவு ஏற்படும். அவர்களை கண்டித்தும், அன்புகாட்டியும் நல்வழி நடத்துவதால் ஓரளவு நன்மை கிடைக்கும்.
சொத்து பராமரிப்பு, பாதுகாப்பில் கவனம் வேண்டும். பத்திரங்களை பிறர் பொறுப்பில் தரக்கூடாது. உடல்நலம் சீராக இருக்க தகுந்த சிகிச்சை நல்லது. தம்பதியர் கருத்து பேதங்களுக்கு உட்படுவர். விட்டுக்கொடுத்து நடப்பதால் பிரிவினையில் இருந்து தப்பலாம். நண்பர்களிடம் பணம் கொடுக்கல், வாங்கலில் தகுதிக்கு மீறிய பரிவர்த்தனை கூடாது. பாதுகாப்பு குறைவான இடங்களுக்குச் செல்வதை தவிர்க்கவும். ஆடம்பர நாட்டத்தால் பெரிய அளவில் கடன்சுமை வரும் நிலை உள்ளது. கவனம். தந்தைவழி உறவினர்களில் விலகிச் சென்றவர்கள் விரும்பி வந்து சொந்தம் கொண்டாடுவர். பணவரவு சுமார் என்பதால், சேமிப்பு பணம் கரையும் நிலை இருக்கிறது. பங்குச்சந்தையில் உளளவர்கள் முதலீடு விஷயத்தில் கவனம். கடன் வாங்கி முதலீடு செய்வதைத் தவிர்ப்பது நல்லது.
தொழிலதிபர்கள்: கல்வி, நிதி நிறுவனம், மருத்துவமனை, ரியல் எஸ்டேட், அச்சகம் நடத்துவோர், ஆட்டோமொபைல்ஸ், டெக்ஸ்டைல்ஸ், எலக்ட்ரிக்கல், எலக்ட்ரானிக்ஸ் சாதனங்கள், கட்டுமானப் பொருட்கள், பர்னிச்சர் உற்பத்தி செய்பவர்கள் தங்கள் தொழிலில் வளர்ச்சிப்பணியை மேற்கொள்வர். மற்றவர்களுக்கு கடந்தகால இடையூறு விலகி உற்பத்தி அதிகரிக்கும். சுமாரான லாபம் கிடைக்கும். கூட்டுத்தொழில் செய்ய புதிய முயற்சி எதுவும் வேண்டாம். நிலுவை பணவரவு பெற இதமான அணுகுமுறை உதவும். தொழிற்சாலைகளில் தேவையான பாதுகாப்பு நடைமுறைகளை கவனமுடன் பின்பற்ற வேண்டும்.
வியாபாரிகள்: நகை, ஜவுளி, மளிகை, அரிசி, ஸ்டேஷனரி, எலக்ட்ரிக்கல், எலக்ட்ரானிக்ஸ் சாதனம், ஆட்டோமொபைல் உதிரிபாகம், இறைச்சி, காய்கறி, பழங்கள், பூ, பட்டாசு, மருந்து விற்பனை செய்பவர்கள் புதிய மாற்றங்களை கொண்டுவரும் பணியில் ஈடுபடுவர். லாபம் சுமார். மற்றவர்கள் இவர்களை விட கூடுதல் லாபம் பெறுவர். வியாபார விஷயமாக வெளியூர் பயணம் அதிகரிக்கும். கடன்களை ஓரளவு அடைப்பீர்கள். பிறருக்காக தகுதிக்கு மீறிய பணப்பொறுப்பு ஏற்கக்கூடாது.
பணியாளர்கள்: அரசு, தனியார் துறையில் பணிபுரிபவர்களுக்கு பணியில் நிலவிவந்த குழப்ப சூழ்நிலை சரியாகும். உற்சாகமாகப் பணிபுரிந்து நிர்வாகத்திடம் நன்மதிப்பு பெறுவீர்கள். ஆனால், கடுமையாக உழைத்தும் ஒன்றும் மிஞ்சவில்லையே என்ற ஏக்கம் இருக்கும். சக பணியாளர்களின் பணித்திறமை அல்லது பணிக் குறைபாடு பற்றி விமர்சனம் செய்வதை தவிருங்கள். கடன்கள் சிரமம் தரும் சூழ்நிலை இருக்கிறது.
பெண்கள்: பணிபுரியும் பெண்கள் உற்சாகமாக செயல்பட்டு பணியை செவ்வனே நிறைவேற்றுவர். ஆனால், சலுகைகள் கிடைக்க கால தாமதமாகும். பயிற்சிக்காக வெளியூர் செல்ல வேண்டியிருக்கும். குடும்ப பெண்கள் கணவருடன் கருத்து வேறுபாடு கொள்வர். அமைதியைக் கடைபிடித்தால் ஆனந்தம் உண்டு. குடும்பத்திற்கான முக்கிய செலவுகளை ஏற்பதால் மட்டுமே கடன் பெறுவதைத் தவிர்க்கலாம். சுயதொழில் புரியும் பெண்கள் உற்பத்தி, விற்பனையில் மாற்றங்களைக் கொண்டு வருவர். கடுமையான உழைப்பின் பேரில் இருக்கிற லாபத்தை தக்க வைக்கலாம்.
மாணவர்கள்: மருத்துவம், இன்ஜினியரிங்,விவசாயம், வங்கியியல், வணிகவியல், மேனேஜ்மென்ட் படிப்பு, கேட்டரிங், ஆசிரியர் பயிற்சி, இதழியல், கம்ப்யூட்டர் துறை மாணவர்கள் படிப்பதில் இருந்த மந்தநிலை மாறி ஆர்வம் வளரும். மற்ற துறையினரும், ஆரம்பக்கல்வி மாணவர்களும் சந்தேகங்களை நிவர்த்தி செய்து கொண்டால் ஆசிரியர்களின் பாராட்டைப் பெறலாம். நண்பர்களிடம் தேவையற்ற விவாதம் கூடாது. படிப்புக்கான பணவசதி குறைந்த அளவில் கிடைக்கும்.
அரசியல்வாதிகள்: கடந்தகாலத்தில் ஏற்பட்ட அவப்பெயர் மற்றும் சிரமங்களை சரிசெய்வதில் கவனம் கொள்வீர்கள். செலவு அதிகரிக்கும். ஆதரவாளர்களின் நம்பிக்கை மனதிற்கு ஊக்கம் தரும். அரசு தொடர்பான காரியம் அதிகாரிகளின் உதவியால் நிறைவேறும். அரசியல் பணிக்கு புத்திரர்களைப் பயன்படுத்தினால் கெட்ட பெயர் வரும். எதிரிகள் பாடாய் படுத்துவர். அரசியலுடன் தொழில் நடத்துபவர்களுக்கு உற்பத்தி, விற்பனை அதிகரித்தாலும் பொருள் தேக்கத்தால் லாபம் இராது.
விவசாயிகள்: பயிர் வளர்க்க புதிய நுட்பங்களை பயன்படுத்தி அதிக மகசூல் பெறுவீர்கள். பயிர்களுக்கு கூடுதல் விலை கிடைக்கும். கால்நடை வளர்ப்பில் முன்னேற்றமும் தாராள பணவரவும் உண்டு. நிலம் தொடர்பான ஆவணங்களை பிறர் பொறுப்பில் தரக்கடாது.
பரிகாரம்: லட்சுமி தாயாரை வழிபடுவதால் தொழில், பணி மந்தம் விலகி கூடுதல் பணவரவு கிடைக்கும்.
பரிகாரப் பாடல்
திருமகளே! திருப்பாற்கடலூடு அன்று தேவர் தொழ
வருமகளே! உலகெலாம் என்றென்றும் வாழ வைக்கும்
ஒருமகளே! நெடுமால் உரத்தே உற்று, வரம் பெரிது
தருமகளே! தமியேன் தலைமீது நின்தாள் வையே
சனி வக்ரகால பலன்
 26.3.2012 முதல் 10.9.2012 வரை சனிபகவான் வக்ரகதியாகி கன்னிராசிக்கு இடம் பெயர்கிறார். இதனால் உங்கள் வாழ்வியல் நடைமுறையில் நெருக்கடியான சூழ்நிலை உருவாகும். வீண் செலவுகளுக்காக பணத்தேவை அதிகரிக்கும். வாகனத்தில் மிதவேகம் பின்பற்றுவதால் விபத்து வராமல் தவிர்க்கலாம். தாய்வழி உறவினர்களிடம் இதமாக நடப்பது நல்லது. தொழில் வகையில் இருந்த தாமதம் விலகி, சுமாரான பணவரவு கிடைக்கும். மனச்சுமை குறையும். குடும்பத்தில் மங்கல நிகழ்வு ஏற்படும்.
கடகம் (50/100)    அர்த்தாஷ்டம சனி புடிச்சாச்சு!
நல்ல எண்ணங்கள் ஊற்றெடுக்கும் ஞானக்கடலான கடகராசி அன்பர்களே!
உங்கள் ராசிக்கு மூன்றாம் இடத்தில் மிக அனுகூலமாக இருந்த சனிபகவான் ராசிக்கு நான்காம் இடமான துலாம் வீட்டிற்கு பெயர்ச்சியாகி உள்ளார். சனியின் அமர்வு உங்களுக்கு அர்த்தாஷ்டமச்சனி என்ற நிலையை தருகிறது. அஷ்டமச்சனி என்ற எட்டாம் இடத்து சனி, ஏழரை சனியை விட கடும் துன்பம் தரும் என்பார்கள். அர்த்தம் என்றால் பாதி. அதில் பாதி கஷ்டத்தை தருவார் சனி. அவர் தனது 3, 7, 10 ஆகிய பார்வைகளால் முறையே ராசிக்கு 6, 10, ராசி ஆகிய இடங்களான எதிரி, தொழில், தன்செயல் ஸ்தானங்களை பார்க்கிறார். இதனால் பேச்சில் நிதானத்தையும், செயல்பாடுகளில் நியாய தர்மத்தையும் கடைபிடிப்பது நன்மை தரும். சமூக அந்தஸ்தை குறைக்கும் முயற்சியில் சனி சோதிப்பார். அதில் இருந்து சாமர்த்தியமாக மீள்வது உங்கள் பொறுப்பு. தம்பி, தங்கை உங்களின் சிரம சூழ்நிலையில் தகுந்த ஆதரவும், பணஉதவியும் தருவர். வீடு, வாகனத்தில் பராமரிப்பு செலவு அதிகரிக்கும். பயணத்தின் போது கவனம் கொள்வதால் விபத்து வராமல் தவிர்க்கலாம். புத்திரர் படிப்பு, பிற தேவைகளுக்கு அதிக செலவுக்கு உட்படுவர். பணம் கிடைப்பதில் தாமதம் ஏற்படும் என்பதால் மனக்கஷ்டத்தைச் சந்திக்க நேரிடும். பூர்வ சொத்தில் சுமாரான பணவரவு இருக்கும். எதிரிகளின் தொந்தரவு பெருமளவு குறையும். உற்சாகம் சற்று குறைந்து மந்தநிலை ஏற்படும். இதனால் உங்கள் செயல்பாடுகளில் இதுவரை இருந்த வீரியம் சற்று குறையும். உடல்நலம் சுமாராக இருக்கும். தம்பதியர் குடும்ப பொறுப்பை உணர்ந்து செயல்படுவர். எதிர்கால வாழ்வில் நம்பிக்கை வளரும். நண்பர்கள் உதவுவது, உதவி பெறுவதுமான நன்மை இருக்கும். சிலருக்கு வீடு, தொழில் இடமாற்றம் உருவாகும். வீடு, கார் உள்ளிட்ட வசதிகளை பெறுவதில் தாமதம் உண்டு. பங்குச்சந்தையில் உள்ளவர்கள் அளவான முதலீடு செய்வது அவசியம்.
தொழிலதிபர்கள்: ரியல் எஸ்டேட், மருத்துவமனை, ஓட்டல், லாட்ஜ், கல்வி, நிதி நிறுவனம், டிராவல்ஸ் நடத்துவோர், ஆட்டோமொபைல், டெக்ஸ்டைல்ஸ், குளிர்பானம், மின்சார மின்னணு சாதனம், உற்பத்தி செய்பவர்கள் உற்பத்தியை பெருக்குவதிலும் தரத்தை சீராக்குவதிலும் கவனமாக செயல்பட வேண்டும். அளவான உற்பத்தி, மிதமான லாபம் என்கிற நிலை இருக்கும். மற்ற தொழில் செய்வோருக்கு நிர்வாகச் செலவு கூடும். திறமை நிறைந்த பணியாளர்களை நியமித்து ஆலோசனை பெற்று உற்பத்தியை சீராக்கிக் கொள்ளலாம். மூலதனத்திற்காக அளவுக்கு மீறிய கடன் பெறக்கூடாது.
வியாபாரிகள்: நகை, ஜவுளி, மளிகை, அரிசி, மருந்து, கட்டுமானப் பொருள், விவசாய இடுபொருள், உணவுப்பண்டம், பழம், காய், மலர், இறைச்சி, வாசனை திரவியம், அழகு சாதனம், சமையலறை சாதனங்கள், கடல்சார் பொருட்கள் விற்பனை செய்பவர்கள் கடும் போட்டியை சந்திப்பதால், லாபக்குறைவு ஏற்படும். பிற வியாபாரிகளுக்கு கடை வாடகை, ஊழியர் சம்பளம், விரிவாக்கம் போன்ற பணிகளுக்கு எதிர்பார்த்ததை விட அதிகம் செலவாகி லாபவிகிதம் குறையும். வாகன பராமரிப்பு செலவு கூடும். பாக்கப் பணத்தை வசூலிப்பதில் கெடுபிடி செய்தால் சிக்கலை சந்திக்க நேரிடும். சக வியாபாரிகளின் உதவி கிடைக்கும்.
பணியாளர்கள்: அரசு, தனியார் துறையில் பணிபுரிபவர்கள் பணியில் குளறுபடி, கடுதல் பணிச்சுமை என்ற சூழ்நிலையை எதிர்கொள்வர். சிலர் நிர்வாகத்தின் கண்டிப்புக்கு ஆளாகி பணியிட மாற்றம், சலுகை பெறுவதில் தாமதம் என்ற நிலை அடைவர். டிரைவர் பணியில் உள்ளவர்கள் அவசர காரணம் இருந்தாலும் நிதானம் மற்றும் கூடுதல் கவனத்துடன் பணிபுரிவது நல்லது. சக ஊழியர்களின் ஆறுதலான பேச்சு உங்களை நல்ல முறையில் வழி நடத்தும்.
பெண்கள்: பணிபுரியும் பெண்கள், மந்தம் காரணமாக பணியில் குளறுபடிகளை எதிர்கொள்வர். நிர்வாகம் சொல்வதை அப்படியே செய்தால், பிரச்னைகளில் இருந்து தப்பலாம். சக பணியாளர்களில் நல்லவர்களின் ஆலோசனையைப் பெற்று செயல்படுவது நல்லது. சிலருக்கு பதவி குறைப்பு, வெளியூர் மாற்றம் இருக்கும். குடும்பப் பெண்கள், கணவரின் அன்பு, பாசம் கிடைக்கும். வீட்டுக்குச் செலவுக்கான பணவசதி சுமாராகவே இருக்கும். தாய்வழி உறவினர்களிடம் கருத்து வேறுபாடு ஏற்படலாம். சுயதொழில் புரியும் பெண்கள் அளவான மூலதனத்துடன் கடும் உழைப்பால் மட்டுமே ஓரளவு லாபம் பெற முடியும். பிரிண்டிங் டெக்னாலஜி, ஜர்னலிசம், சட்டம், கம்ப்யூட்டர், கலைத்துறை, அறிவியல் துறை மாணவர்களுக்கு படிப்பில் கவனச்சிதறல், ஞாபகத் திறன் குறைவு ஏற்படும். மற்ற துறையினருக்கு சக மாணவர்களில், சிறந்த படிப்பாளிகளின் உதவியுடன் படிப்பதால் தரதேர்ச்சி உயரும். விளையாட்டுப் பயிற்சியில் தகுந்த பாதுகாப்பு நடைமுறைகளை பின்பற்ற வேண்டும். படித்து முடித்து வேலைவாய்ப்பு எதிர்பார்ப்பவர்களுக்கு ஓரளவு அனுகூலம் கிடைக்கும்.
அரசியல்வாதிகள்: ஆதரவாளர்களே உங்களை எதிர்ப்பர். அவர்களைச் சரிக்கட்ட அதிக செலவாகும். அரசு தொடர்பான செயல்பாடுகளை நிறைவேற்றுவதில் அதிக சிரமம் ஏற்படும். அரசியலுடன் தொழில் நடத்துபவர்கள் ஓரளவே லாபம் பெறுவர். சிலர் சட்ட சிக்கல்களையும் சந்திக்கக் கூடும். கவனம்.
விவசாயிகள்: விவசாயப்பணிகளை நிறைவேற்ற பணம், அதிகாரிகளின் உதவி கிடைத்தல் என்ற வகையில் குறுக்கீடுகளை எதிர்கொள்வீர்கள். மகசூல் சிறந்து எதிர்பார்த்த பணம் கிடைக்கும். கால்நடை வளர்ப்பில் கவனம் வேண்டும். நிலம் தொடர்பான விவகாரங்களில் சிரமம் குறையும்.
பரிகாரம்: முருகப்பெருமானை வழிபடுவதால் வாழ்வில் எதிர்ப்பு குறைந்து தொழில் வளர்ச்சி அதிகரிக்கும்.
பரிகாரப் பாடல்
உல்லாச நிராகுல யோக விதச்
சல்லாப விநோதனும் நீ அலையோ
எல்லாம் அற என்னை இழந்த நலம்
சொல்லாய் முருகா! கர பூபதியே.
சனி வக்ரகால பலன்: 26.3.2012 முதல் 10.9.2012 வரை சனிபகவான் வக்ரகதியாகி கன்னிராசிக்கு இடம் பெயருகிறார். இதனால் உங்கள் வாழ்வியல் நடைமுறையில் முன்னேற்றம் தருகிற மாற்றம் உருவாகும். துவங்கிய காரியம் வெற்றி பெறும். பசு, பால் பாக்ய யோகம் கிடைக்கும். சமூக அந்தஸ்து உயரும். உடல்நலம் பலம்பெறும். குடும்பத்தில் சுபநிகழ்வு உண்டு. அரசு தொடர்பான செயல்பாடுகள் அனுகூலமாக நிறைவேறும். கடனை கணிசமான அளவில் அடைப்பீர்கள்.
சிம்மம் (80/100)   ஹைய்யா! ஏழரை போயாச்சு!
நினைத்ததை வெற்றிகரமாக நடத்த, கடினமாக உழைக்கும் சிம்மராசி அன்பர்களே!
உங்கள் ராசிக்கு இரண்டாம் இடத்தில் இருந்த சனிபகவான் ஏழரைச் சனி என்ற நிலையில் இருந்து உங்களை விடுவிக்கிறார். ராசிக்கு மிக அனுகூலமான மூன்றாம் இடமான துலாம் வீட்டிற்கு பெயர்ச்சியாகிறார். கடந்த காலங்களில் இருந்த துன்பச்சுமை குறைந்து நல்ல பலன்களை பெறுவீர்கள். முயற்சிகள் அனைத்தும் வெற்றி தரும். சனி தனது 3, 7, 10 ஆகிய பார்வைகளால் முறையே உங்கள் ராசிக்கு 5, 9, 12 ஆகிய இடங்களை பார்க்கிறார். இதனால் புத்திரர்கள் வகையில் அதிக கவனம் செலுத்துவீர்கள். அவர்களின் படிப்பு, பிற வகை திறமைகள் வளம்பெறும். அவர்களுக்கு வேலை வாய்ப்பு கிடைக்கும். குடும்பத்திற்கு தேவையான பொருளாதார வசதி கணிசமான அளவில் கிடைக்கும். பிறரிடம் கடினமாக பேசுவதை தவிர்த்து அன்பு, கருணை, சிந்தனையுடன் பழகுவீர்கள். பசு, பால் பாக்ய யோகம் கிடைக்கும். ராசிநாதன் சூரியனுக்கு பகை கிரகமான சுக்கிரன் வீட்டில், இன்னொரு பகை கிரகமான சனி அனுகூலமாக அமர்ந்துள்ளார். இதனால் பகைவர்களிடமும் நன்மை பெறும் வகையில் அனுகூல சூழ்நிலை உருவாகும். புதிய சொத்து வாங்குகிற திட்டம் இனிதாக நிறைவேறும். இஷ்ட, குலதெய்வ அருள் பரிபூரணமாக துணைநிற்கும். சமூகப்பணியில் தாராளமாக செயல்பட்டு அபரிமிதமான புகழ், அந்தஸ்து பெறுவீர்கள். உடல்நலம் சீராக இருக்கும். இளைய சகோதரர்கள் உற்ற துணையாக இருந்து உங்கள் வாழ்வு வளம்பெற தேவையான பணி செய்வர். தம்பதியர் ஒருவர் நலனில் ஒருவர் அன்பு, பாசத்துடன் இருப்பர். குடும்பத்தில் மகிழ்ச்சியும் சுபநிகழ்வும் நிறைந்திருக்கும். நண்பர்களின் நன்மதிப்பைப் பெற்று உற்சாக மனதுடன் செயல்படுவீர்கள். ஆபத்து எதுவும் அணுகாத பாதுகாப்பு நிறைந்த நல்வாழ்வு பெறுவீர்கள். தந்தையின் தேவையை நிறைவேற்றி ஆசி பெறுவீர்கள். குடும்பத்திற்கு தேவையான சகல வசதியும் எளிதாக கிடைக்கும். தொழில் சார்ந்த வகையில் புதிய திட்டங்களை செயல்படுத்தி அதிக முன்னேற்றம், தாராள பணவரவு பெறுவீர்கள். பங்குச்சந்தையில் உள்ளவர்கள் நுணுக்கமான நடைமுறையை பின்பற்றி எதிர்பாராத அளவில் லாபம் காண்பர்.
தொழிலதிபர்கள்: ரியல் எஸ்டேட், கல்வி, நிதி நிறுவனம், மருத்துவமனை நடத்துவோர், டெக்ஸ்டைல்ஸ், மின்சார, மின்னணு பொருட்கள் தயாரிப்போர், பர்னிச்சர், அச்சகம், அரிசி ஆலை, பால்பண்ணை, ஆட்டோமொபைல்ஸ், கடல்சார் பொருட்கள், மினரல் வாட்டர், அழகு சாதனப் பொருள், வாசனை திரவியம், கட்டுமானப் பொருட்கள் உற்பத்தி செய்பவர்கள் தொழிலில் கூடுதல் ஆர்வமுடன் செயல்படுவர். உற்பத்தியும் தரமும் உயரும். புதிய ஒப்பந்தம் கிடைக்கும். தாராள பணவரவு உண்டு. உபதொழில் துவங்க அனுகூலம் வளரும். சொத்து, வாகனச் சேர்க்கை உண்டு.
வியாபாரிகள்: நகை, ஜவுளி, மளிகை, அரிசி, பால்பொருள், மின்சார, மின்னணு பொருட்கள், மீன், இறைச்சி, செல்லப்பிராணி, அலங்கார பொருள், பட்டாசு, கட்டுமானப் பொருள், எண்ணெய், பேக்கரி பொருள் விற்பனை செய்பவர்கள் விற்பனை அதிகரித்து கூடுதல் லாபவிகிதம் பெறுவர். மற்றவர்களுக்கு அதிக லாபத்துடன் புதிய கிளை துவங்கும் திட்டமும் நிறைவேறும். வியாபார சங்கங்களில் அந்தஸ்து உள்ள பதவி கிடைக்கும். புதிய சொத்து சேர்க்கை உண்டு. கடை நிர்வாகத்தில் பிறரை அனுமதிக்க வேண்டாம்.
பணியாளர்கள்: அரசு, தனியார் துறையில் பணிபுரிபவர்கள் ஒருமுகத்தன்மை மற்றும் திறமையுடன் செயல்படுவர். பணி சிறந்து பாராட்டு, சலுகைகள் கிடைக்கும். பணவரவு அதிகரித்து குடும்பத்தேவையை பெருமளவில் நிறைவேற்றுவர். சக பணியாளர்கள் உங்கள் மீது நன்மதிப்பு, மரியாதை கொள்வர். நண்பர்களின் உதவி, ஆலோசனை திறமையை வளர்க்க உதவும்.
பெண்கள்: பணிபுரியும் பெண்கள் ஆர்வத்துடன் செயல்பட்டு நிலுவைப் பணியை நிறைவேற்றுவர். தகுதி, திறமை வளர்ந்து பாராட்டு கிடைக்கும். பதவி உயர்வு, விரும்பிய இடமாற்றம் வந்துசேரும். குடும்பப் பெண்கள் பொறுமை நிறைந்த செயல்களால் கணவர், உறவினர்களிடம் நன்மதிப்பு பெறுவர். புத்திரர்களின் கவனக்குறைவான செயல்களை ஒழுங்கு செய்வதில் கூடுதல் அக்கறை கொள்வீர்கள். ஆடை, ஆபரணச்சேர்க்கை உண்டு. சுயதொழில் புரியும் பெண்கள் தாராள உற்பத்தி கிடைத்து அபரிமிதமான பணவரவு பெறுவர். சேமிப்பு உயர்வதால் மனதில் தன்னம்பிக்கை வளரும்.
மாணவர்கள்: மருத்துவம், விவசாயம், இன்ஜனியரிங், கம்ப்யூட்டர் ஜர்னலிசம், ஆசிரியர் பயிற்சி, சட்டம், கேட்டரிங், ஓட்டல் மேனேஜ்மென்ட், துறை சார்ந்த மாணவர்கள் சாதனை நிகழ்த்தும் எண்ணத்துடன் படிப்பில் கூடுதல் அக்கறை கொள்வர். மற்ற துறை மாணவர்களும், ஆரம்பக்கல்வி மாணவர்களும் தரத்தேர்ச்சி உயர்ந்து ஆசிரியர், பெற்றோரிடம் நன்மதிப்பை பெற்றுவர். வேலைவாய்ப்பு பெறுவதில் கூடுதல் முன்னுரிமை உண்டு. சக மாணவர்களின் அன்பு, நட்பு கிடைத்து உற்சாகம் பெறுவீர்கள்.
அரசியல்வாதிகள்: பணிகளை திட்டமிட்டு நிறைவேற்றி ஆதரவாளர்களிடம் நன்மதிப்பு பெறுவீர்கள். அரசு தொடர்பான செயல்பாடுகள் அதிகாரிகளின் சிறப்பு கவனத்துடன் எளிதாக நிறைவேறும். சிலருக்கு கூடுதல் பதவிப்பொறுப்பு கிடைக்கும். புத்திரரின் செயல்களை வளர்ச்சிப்பாதையில் கொண்டுசெல்வீர்கள். எதிரிகளால் இருந்த தொல்லை பெருமளவில் குறையும். அரசியலுடன் தொழில் நடத்துபவர்கள் உற்பத்தி, விற்பனை சிறந்து உபரி வருமானம் காண்பர்.
விவசாயிகள்: பயிர் வளர்க்க தேவையான அனைத்து வசதிகளும் திருப்திகரமாக கிடைக்கும். மகசூல் சிறந்து தாராள பணவரவு பெறுவீர்கள். கால்நடை பராமரிப்பில் இருந்த குறை நீங்கி வளர்ச்சி ஏற்படும். புதிய நிலம் வாங்க அனுகூலம் உண்டு.
பரிகாரம்: வியாழக்கிழமைகளில் தட்சிணாமூர்த்தி அல்லது நவக்கிரக சந்நிதியிலுள்ள குரு பகவானை வழிபடுவதால் புகழும், தொழில் முன்னேற்றமும் உண்டாகும்.
பரிகாரப் பாடல்
மறைமிகு கலைநூல் வல்லோன்
வானவர்க்கு அரசன் மந்த்ரி
நறைசொரி கற்பகப் பொன்நாட்டினுக்கு
அதிபனாகி நிறைதனம் சிவிகை மன்றல்
நீடு போகத்தை நல்கும்
இறைவன் குரு வியாழன்
இணையடி போற்றி போற்றி!
சனி வக்ரகால பலன்: 26.3.2012 முதல் 10.9.2012 வரை சனிபகவான் வக்ரகதியாகி கன்னிராசிக்கு இடம்பெயருகிறார். இதனால் சுமார் ஆறுமாத கால அளவுக்கு ஏழரைச்சனி என்கிற நிலை திரும்பவும் தொடரும். இந்த நேரத்தில் பேச்சில் நிதானமும் கண்ணியமும் பின்பற்றுவது அவசியம். புதிய இனங்களில் பணச்செலவு அதிகரிக்கும். கண் தொடர்பான பிணி சிகிச்சையினால் சரியாகும். ஆதாய பணவரவில் தேக்கநிலை இருக்கும். வாகன பயணத்தில் மிதவேகம் பின்பற்றுவது நல்லது.
கன்னி (55/100) ஏழரையின் கடுமை குறையும்!
உழைப்பிலும் சேமிப்பிலும் ஆர்வமுள்ள கன்னிராசி அன்பர்களே!
உங்கள் ராசியில் ஜென்மச்சனியாக (ஏழரைச்சனி) இருந்த சனிபகவான், இப்போது ராசிக்கு இரண்டாம் இடமான துலாம் வீட்டிற்கு பெயர்ச்சியாகி உள்ளார். இது ஏழரைச் சனியின் கடைசி காலகட்டம். இன்னும் மூன்றாண்டுகள் ஏழரை காலத்தை அனுபவிக்க வேண்டிய பாக்கிய இருக்கிறது. தனது 3, 7, 10 ஆகிய பார்வைகளால் முறையே ராசிக்கு 4, 8, 11 ஆகிய இடங்களை சனீஸ்வரர் பார்க்கிறார். ராசிநாதன் புதனுக்கு நட்பு கிரகமான சுக்கிரன் வீட்டில் சனி அமர்வது, நண்பர்களிடம் உங்களுக்கு புதிய மரியாதையை பெற்றுத்தரும். கடந்தகாலத்தில் உங்கள் மனதில் இருந்த தயக்கம், கஷ்டம், செயல்களில் இருந்த குளறுபடி சரியாகும். நியாய, தர்மங்களை பின்பற்றி பேசி சமூகத்தில் நற்பெயர் பெறுவீர்கள். தம்பி, தங்கைகள் பாசத்துடன் நடந்துகொள்வர். வீடு, வாகனத்தில் இருக்கிற வசதியை முறையாக பயன்படுத்துவது போதுமானது. வாகனப் பயணத்தில் மிதவேகம் பின்பற்றுவதால் மட்டுமே விபத்து அணுகாத நன்னிலை தொடரும். கடன் கிடைக்கிறதென்று வீட்டில் புதிய கட்டடம் கட்டுவதில் ஈடுபட வேண்டாம். தாய்வழி உறவினர்களிடம் சிறு அளவிலான கருத்து வேறுபாடு வந்து பின்னர் சரியாகும். புத்திரர்கள் உங்கள் சொல் கேட்டு நடந்து குடும்பத்திற்கு பெருமை தேடித்தருவர். அவர்களுக்கு வேலை வாய்ப்பு கிடைக்க ஏதுவான நிலை உண்டு.
புத்திரர்களின் பணியால் கிடைக்கிற வருமானம் உங்கள் குடும்ப நிகழ்கால தேவைக்கும், எதிர்கால சேமிப்புக்குமாக பயன்படும். உடல்நலத்தை பேணுவதிலும் கண்களின் பாதுகாப்பிலும் கூடுதல் அக்கறை அவசியம். எதிரிகளின் கெடுசெயல் சிரமம் தந்தாலும் பெரிய அளவிலான பாதிப்பு இருக்காது. இஷ்ட தெய்வ வழிபாட்டை சிறப்பாக நிறைவேற்றி மனநிறைவு கொள்வீர்கள். பூர்வசொத்தில் பெறுகிற வருமானத்தை தர்ம காரியங்களுக்கு செலவிடுவது நல்லது. கணவன், மனைவியடையே இருந்து வரும் கருத்து பேதம் தொடரும். சமாதானத்தை பின்பற்றுவதால் மட்டுமே குழப்பம் இல்லாத நிலை தொடரும். நண்பர்களின் உதவி ஓரளவு கிடைக்கும். தொழில் சார்ந்த வகையில் சிரமம் விலகி வளர்ச்சி தருகிற புதிய பாதை திறக்கும். கடின உழைப்பால் வாழ்வில் முன்னேற்றம் அடைவீர்கள். பங்குச்சந்தை வர்த்தகத்தில் உள்ளவர்கள் அளவான முதலீட்டில் அதிக வருமானம் பெறுகிற அதிர்ஷ்டகரமான நிலையைப் பெறுவர்.
தொழிலதிபர்கள்: பள்ளி, கல்லூரி, நிதி நிறுவனம், ரியல் எஸ்டேட், டிபார்ட்மென்டல் ஸ்டோர், மருத்துவமனை நடத்துவோர், டெக்ஸ்டைல்ஸ், அச்சகம், ஆட்டோமொபைல், கட்டுமானப் பொருள், மின்சார சாதனம், நவீன பர்னிச்சர், எலக்ட்ரிக்கல், எலக்ட்ரானிக்ஸ் சாதனம், மருத்துவ உபகரணம் உற்பத்தி செய்பவர்கள் பணவரவை அதிகப்படுத்தும் எண்ணத்துடன் புதிய திட்டங்களை செயல்படுத்துவர். ஆனாலும், எதிர்பார்க்கும் அளவுக்கு வருமானம் இராது. வெளியூர் பயணம் அதிகரிக்கும். நிறுவனங்களில் பாதுகாப்பு நடைமுறைகளை அதிகப்படுத்துவது நல்லது. குடும்ப உறுப்பினர்களின் ஒத்துழைப்பு இருக்காது.
வியாபாரிகள்: நகை, ஜவுளி, ஸ்டேஷனரி, மளிகை, எண்ணெய், மருந்து, மின்சார, மின்னணு சாதனம், கட்டுமானப் பொருள், ஆட்டோமொபைல் உதிரிபாகங்கள், காய்கறி, மலர், இறைச்சி, விவசாய இடுபொருட்கள், பட்டாசு, பேக்கரி பொருட்கள், உணவு பண்டங்கள் விற்பனை செய்பவர்களுக்கு வியாபாரம் சுமாராகவே இருக்கும். மற்றவர்களும், இருக்கிற விற்பனையைத் தக்க வைக்க லாப விகிதத்தை குறைத்து விற்பனை செய்வர். சரக்கு குடோன்களில் தீயணைப்பு கருவி அமைப்பது பாதுகாப்பாக இருக்கும். வியாபார அபிவிருத்திக்காக தகுதிக்கு மீறிய அளவில் கடன் பெறக்கூடாது.
பணியாளர்கள்: அரசு, தனியார் துறையில் பணிபுரிபவர்கள் தமது திறமையைப் பயன்படுத்தி பணி சிறக்க மாற்றங்களை பின்பற்றுவர். பணி இலக்கு நிறைவேறி அனுகூல பலன் கிடைக்கும். ஆனால், வரவைவிட குடும்ப செலவுகளுக்கான தேவை அதிகரிக்கும். வெளியூர் பயணங்களை பயன் அறிந்து மேற்கொள்வது நல்லது. சக பணியாளர்களிடம் சச்சரவு வளராத அளவிற்கு விட்டுக்கொடுக்கும் மனப்பாங்குடன் செயல்பட வேண்டும். கொடுக்கல் வாங்கல், பொருட்களை இரவல் பெறுதல் ஆகியவற்றாலும் சிரமம் உண்டு. குடும்பத்தில் சுபநிகழ்ச்சி நடத்த அலுவலகத்தில் கடன் பெறுதல், சேமிப்பு பணத்தை எடுத்தல் என்ற வகையில் செலவாகும்.
பெண்கள்: பணிபுரியும் பெண்கள் பணியில் அக்கறையுடன் செயல்படுவதால் மட்டுமே குளறுபடி வராமல் தவிர்க்கலாம். இரக்க சிந்தனையுடன் பிறருக்கு பணம் கொடுத்து உதவுவதால், திரும்ப பெறுகிற நேரங்களில் வீண் சிரமம் ஏற்படும். கவனம். குடும்பப் பெண்கள் கணவருடன் கருத்து வேறுபாடுகளை எதிர்கொள்வர். குடும்ப நலன் கருதி சகிப்புத்தன்மை பின்பற்றுவதால் பிரிவு ஏற்படாமல் ஒற்றுமை வளரும். வீட்டுச் செலவுக்கு திண்டாட்டமாக இருக்கும் என்பதால் சிக்கனம் நல்லது. தாய்வழி உறவினர்களிடம் அதிருப்தி ஏற்படும். சுயதொழில் புரியும் பெண்கள் அளவான மூலதனமிடுவது நல்லது. கடுமையாக உழைத்தாலும் உற்பத்தி, விற்பனை சுமார் தான்.
மாணவர்கள்: இன்ஜினியரிங், மருத்துவம், சட்டம், விவசாயம், வங்கியியல், வணிகவியல், மார்க்கெட்டிங், கேட்டரிங், ஓட்டல் மேனேஜ்மென்ட், கம்ப்யூட்டர், பிரிண்டிங் டெக்னாலஜி, ஜர்னலிசம், ஆசிரியர் பயிற்சி மற்றும் ஆரம்பக்கல்வி மாணவர்கள் படிப்பில் சிறிது மந்தநிலைக்கு உட்படுவர். மற்ற துறை மாணவர்கள் பெற்றோரின் கண்டிப்பு, ஆசிரியரின் நல்வழிகாட்டுதலை ஏற்று நடந்தால் மட்டுமே சிறப்பான தேர்ச்சியைப் பெற முடியும். படிப்புக்கான பணவசதி குறைந்த அளவில் கிடைக்கும். சக மாணவர்களிடம் விலைமதிப்புள்ள பொருள் எதுவும் இரவல் வாங்கக்கூடாது.
அரசியல்வாதிகள்: சமூகப்பணியில் ஆர்வமுடன் செயல்படுவீர்கள். பேச்சில் நிதானமும், இனிய சொல் பயன்படுத்துவது மட்டுமே நன்மை தரும். ஆதரவாளர்கள் உரிய மரியாதை தருவர். எதிரிகளால் தொந்தரவு இருந்தாலும் பெரிய அளவிலான பாதிப்பு வராது. அரசு அதிகாரிகள் உங்கள் கோரிக்கைக்கு முன்னுரிமை தருவர். நடைமுறை செலவுகளுக்கு அதிக அளவில் பணம் தேவைப்படும். வாகன பயணங்களில் மிதவேகம் பின்பற்றுவது நல்லது. அரசியலுடன் தொழில் நடத்துபவர்கள் சுமாரான உற்பத்தி, விற்பனையும் அதற்கேற்ப லாபமும் காண்பர்.
விவசாயிகள்: விவசாய பணிகளைச் செய்வதில் மந்தநிலை ஏற்படும். மகசூல் சுமாராக இருக்கும். கால்நடை வளர்ப்பில் முன்னேற்றமும் அதனால் கிடைக்கிற பணவரவும் பற்றாக்குறையை சரிக்கட்டும். சொத்தின் பேரில் தகுதிக்கு மீறிய அளவில் கடன் பெறக்கூடாது.
பரிகாரம்:  சாஸ்தாவை வழிபடுவதால் துன்பம் குறைந்து வாழ்வில் இன்பம் வளரும்.
பரிகாரப் பாடல்
புவிகாக்கும் இருவர் வயிற்றில்
பூலோகம் காக்க பிறந்தவரே!
மலைக்கு வரும் பக்தர்
மனதில் சரணமாய் ஒலிப்பவரே!
சங்கடம் நீக்கி அருள்புரியும்
சம்சாரக் கடல் கடந்தவரே!
பிரம்மச்சர்ய குலவிளக்கே!
பிரம்மனின் கெடுவிதியை மாற்றுவீரே!
சனி வக்ரகால பலன்: 26.3.2012 முதல் 10.9.2012 வரை சனிபகவான் வக்ரகதியாகி கன்னிராசிக்கு இடம் பெயருகிறார். இதனால் உங்களுக்கு ஜென்மச்சனி என்கிற நிலை ஆறு மாத கால அளவில் இருக்கும். இதுகாலத்தில் மனதில் இறுக்கமான சூழ்நிலையும் செயலில் குளறுபடியான தன்மையும் இருக்கும். சமூக மதிப்புக்கு பங்கம் ஏற்படும். தொழில் நிமித்தமாக வெளியூர் பயணம் அதிகரிக்கும். பணத்தேவையை சரிசெய்ய சேமிப்பை பயன்படுத்துவீர்கள். புத்திரர்களுக்கான வேலைவாய்ப்புகளில் பின்தங்கிய நிலை இருக்கும்.


பலன்கள்: துலாம் | விருச்சிகம் | தனுசு | மகரம் | கும்பம் | மீனம்





துலாம் (50/100) ஏழரையின் உச்சத்தை எப்படியோ சமாளியுங்க!
தோற்றப் பொலிவின் மூலம் பிறரை வசீகரிக்கும் துலாம்ராசி அன்பர்களே!
உங்கள் ராசிக்கு பன்னிரெண்டாம் இடத்தில் இருந்த சனிபகவான் இப்போது ஜென்மச்சனியாக ராசியில் அமருகிறார். இது ஏழரைச் சனியின் உச்சகட்டம். சனி தனது 3, 7, 10 ஆகிய பார்வைகளால் முறையே தைரியம், புகழ், களத்திரம், தொழில் ஸ்தானங்களை பார்க்கிறார். ஆனாலும், ராசிநாதன் சுக்கிரனுக்கு சனி நட்புக்கிரகமாகி, துலாம் வீட்டில் உச்சம் பெறுவதால் அதன் கெடுபலன் குறைந்தளவிலேயே இருக்குமென எதிர்பார்க்கலாம். நீங்கள் உயர்நிலையில் இருந்தால் மதிப்பதும், தாழ்நிலைக்குச் சென்றால் ஏளனம் செய்வதுமாக உறவினர்கள் இரட்டை வேடம் போடுவர். செயல்களில் குளறுபடியும், சிந்தனையில் குழப்பமும் இருக்கும். நற்குணம் உள்ளவர்களின் ஆலோசனை பெற்று செயல்படுவது சிரமங்களைக் குறைக்கும். பேச்சில் கண்டிப்பு, துடுக்குத்தனத்தைக் குறைத்துக் கொள்வது நல்லது. சமூகத்தில் கிடைத்த அந்தஸ்துக்கு குறையேதும் வராது. வீடு, வாகனத்தில் பராமரிப்பு செலவு இருக்கும். துலாமுக்கு பிடித்தவர் சனி என்பதால் சிலருக்கு புதிய வீடு, வாகனம் வாங்குகிற அனுகூல பலன் ஏற்படும். புத்திரர்கள் உங்கள் சொல்லை கேட்கமாட்டார்கள். அவர்கள் போக்கில் சென்று விட்டுப்பிடிப்பதே நல்லது. பூர்வ சொத்தில் கிடைக்கிற வருமானத்தின் அளவு குறையும்.
உடல்நலம் பாதிக்கப்படலாம் என்பதால். சிறு பிரச்னையானாலும் டாக்டரைப் பாருங்கள். எதிரிகளால் பெரும் பிரச்னைகள் ஏற்படலாம். இந்த வகையில் செலவும் அதிகமாகும். அவர்கள் திட்டினாலும் பொறுமை காப்பதே பெருமை. கணவன், மனைவியிடையே ஒருவர் கருத்தை ஒருவர் புரிந்துகொள்ளாமல் தேவையற்ற சண்டையிடும் நிலை வரும். விட்டுக்கொடுத்து நடந்தால், சனிபகவான் உங்கள் பக்கம் திரும்பமாட்டார். நண்பர்களிடம் எதிர்பார்க்கிற உதவி ஓரளவு கிடைக்கும். பயணங்களிலோ பிற வகைகளிலோ வருகிற ஆபத்தை தவிர்க்க இஷ்டதெய்வத்தை தினமும் காலையில் நினைத்து விடுங்கள். குடும்பத்தேவைகளை நிறைவேற்ற இப்போதைக்கு இயலாது. வெளியூர் பயணம் சிறப்புற அமையும். பங்குச்சந்தை வர்த்தகத்தில் உள்ளவர்களுக்கு கவனம் வேண்டும். சரியான நிறுவனங்களில் முதலீடு செய்யுங்கள்.
தொழிலதிபர்கள்: ரியல் எஸ்டேட், மருத்துவமனை, டிராவல்ஸ், டிபார்ட்மென்டல் ஸ்டோர், கல்வி, நிதிநிறுவனம், ஓட்டல், லாட்ஜ் அதிபர்கள், டெக்ஸ்டைல்ஸ், காகிதம், ரைஸ்மில், பால்பண்ணை, ஆட்டோமொபைல், அச்சகம், பட்டாசு, மின்சார, மின்னணு சாதனம், மினரல் வாட்டர், பர்னிச்சர் உற்பத்தி செய்பவர்களுக்கு ஓரளவுக்கு உற்பத்தியும், சுமாரான லாபமும் கிடைக்கும். மற்றவர்கள் இவர்களை விட சற்று அதிக லாபம் பெறுவர். பயணம் அதிகரிக்கும். சக தொழில் சார்ந்தவர்களிடம் அதிக எதிர்பார்ப்பு கூடாது.
வியாபாரிகள்: நகை, ஜவுளி, மளிகை, அரிசி, கட்டுமானப் பொருள், ஆட்டோமொபைல் உதிரிபாகம், பால் பொருள், குளிர்பானம், எண்ணெய், பெயின்ட், அழகுசாதனம், மீன், மின்சார, மின்னணு பொருள், இறைச்சி, மருந்து விற்பனை செய்பவர்கள் கூடுதல் மூலதன தேவைக்கு உட்படுவர். இதனால் கடன்சுமை ஏற்படும். சுமாரான லாபம் உண்டு. சரக்கு வினியோகத்தில் பாதுகாப்பு நடைமுறை அவசியம். கொள்முதலை அதிகப்படுத்தினால் பணச்சிக்கலுக்கு ஆளாக நேரலாம்.
பணியாளர்கள்: அரசு, தனியார் துறையில் பணிபுரிபவர்கள் சோம்பல் தன்மைக்கு உட்படுவர். பொறுப்பு உணர்ந்து செயல்படுவதால் மட்டுமே நிர்வாகத்தின் கண்டிப்புக்கு ஆளாகாமல் தப்பலாம். சக பணியாளர்கள் சொல்கிற கருத்துக்களை மதித்து நடப்பது போல நடிக்கவாவது செய்யுங்கள். நீண்டகால நண்பர்களால் உதவி உண்டு. குடும்பத்தின் முக்கிய செலவுகளுக்கு கடன் பெறுவீர்கள். மின்சார பணியில் உள்ளவர்கள் பாதுகாப்பு நடைமுறைகளை பின்பற்றுவதால் சிரமம் தவிர்க்கலாம். சிலருக்கு பணியிட மாற்றம் ஏற்படும்.
பெண்கள்: பணிபுரியும் பெண்களின் மனதில் உற்சாக குறைவு ஏற்படும். வேலைப்பளு அதிகமாகும். சலுகைகள் ஓரளவே கிடைக்கும். சக பணியாளர்களின் நல்ல கருத்துக்களை மதித்து ஏற்றுக்கொள்வீர்கள். குடும்பப் பெண்கள் பொறுப்புகளை கூடுதலாக ஏற்கிற சூழ்நிலை பெறுவர். கணவரிடம் கருத்து வேறுபாடு வளராத அளவிற்கு நடப்பது நலம். வீட்டுத்தேவைக்கு பற்றாக்குறை ஏற்படும். சிக்கனம் சிரமம் தவிர்க்கும். சுயதொழில் புரியும் பெண்கள் தீவிரமாகப் பாடுபட்டால் தான் சுமாரான லாபத்தையாவது பெற முடியும்.
மாணவர்கள்: இன்ஜனியரிங், மருத்துவம், விவசாயம், சட்டம், ஆசிரியர் பயிற்சி, பியூட்டீஷியன், ஜர்னலிசம், கலை, அறிவியல், வணிகத்துறை, கம்ப்யூட்டர் மாணவர்களுக்கு படிப்பதில் ஆர்வக்குறைவும், ஞாபகத்திறன் வளர்வதில் சிரமமும் இருக்கும். பிற துறை மாணவர்களும், ஆரம்பக் கல்வியினரும் சுமாராகவே படிப்பர். சக மாணவர்கள் படிப்பில் உறுதுணை புரிவர். ஆடம்பரப் பொருள் வாங்கும் விருப்பங்களை தவிர்ப்பது நல்லது. விளையாட்டு பயிற்சியில் பாதுகாப்பு நடைமுறை பின்பற்ற வேண்டும். பெற்றோரின் அனுமதி இன்றி பிறரது உதவியை ஏற்பது சிக்கலை உண்டாக்கும்.
அரசியல்வாதிகள்: மூன்றாண்டுகளுக்கு சோதனையான நேரமே. எதிரிகள் தொந்தரவு செய்வர். சிலருக்கு எதிர்பார்த்த பதவி அதிர்ஷ்டவசமாக கிடைக்கும். உறவினர்களிடம் தேவையற்ற விவாதம் கூடாது. அரசியலுடன் தொழில் நடத்துபவர்கள் திறமைமிகு பணியாளர்களை நியமித்தால் தான், உற்பத்தி, விற்பனையைத் தக்க வைக்கலாம்.
விவசாயிகள்: விவசாயப் பணிகளை நிறைவேற்ற தேவையான அனைத்து வசதியும் கிடைக்கும். மந்தநிலையைத் தவிர்த்து பாடுபட்டால் தான் மகசூல் உயரும். கால்நடை வளர்ப்பில் லாபம் கிடைக்கும். நிலம் தொடர்பான விவகாரங்கள் வரும். பொறுமையுடன் இருங்கள்.
பரிகாரம்: சக்கரத்தாழ்வாரை வழிபடுவதால் மனதில் புத்துணர்வும் தொழிலில் சிறப்பும் ஏற்படும்.
பரிகாரப் பாடல்
ஆயிரம் பெயர் கொண்டவனின்
அழகுக் கையில் சுழல்பவரே!
அன்புவழி நடப்போர் சங்கடம்
அழிக்க துள்ளியோடி விரைபவரே!
கஜேந்திரனின் காலைப் பிடித்த
கடுமுதலை முதுகை அறுத்தவரே!
பாவத்தை வேரறுக்கும்
பரம்பொருளே! காத்தருள்வாய்.
சனி வக்ரகால பலன்: 26.3.2012 முதல் 10.9.2012 வரை சனிபகவான் வக்ரகதியாகி கன்னிராசிக்கு இடம்பெயருகிறார். இதனால் உங்கள் ராசிக்கு ஏழரைச்சனியில் விரயச்சனி என்கிற நிலை திரும்பவும் வருகிறது. ஆடம்பரத்தை தவிர்த்து சிக்கன நடைமுறை பின்பற்றுவதால் சிரமங்களை பெரிதும் தவிர்க்கலாம். மிகவும் அன்பு பாராட்டுபவர்களிடம் உரிமைகொண்டு கடின வார்த்தை பேசுவதை தவிர்ப்பது நல்லது. நிலுவைப்பணம் வசூலாகும். வழக்கு விவகாரத்தில் சாதகத் தீர்வு வரும். குடும்பத்தில் திட்டமிட்ட சுபநிகழ்ச்சி இனிதாக நிறைவேறும்.
விருச்சிகம்(55/100) வந்துட்டதைய்யா! ஏழரை வந்துட்டதைய்யா!
முயற்சி திருவினையாக்கும் என்பதை மனதில் நிறுத்தி எதிலும் வெற்றி பெறுகிற விருச்சிகராசி அன்பர்களே!
உங்கள் ராசிக்கு பதினொன்றாம் இடத்தில் மிகவும் அனுகூலமாக இருந்த சனிபகவான் இப்போது ஏழரைச் சனியின் துவக்கமாக ராசிக்கு பன்னிரெண்டாம் இடமான துலாம் வீட்டிற்கு பெயர்ச்சியாகி உள்ளார். கடந்த காலங்களில் சனிபகவானின் கருணையினால் அளப்பரிய நற்பலன்களை பெற்றீர்கள். இனி, ஏழரையின் தாக்கத்தால் அதை எதிர்பார்க்க இயலாது. தனது 3, 7, 10 ஆகிய பார்வைகளால் முறையே ராசிக்கு 2, 6, 9ம் இடங்களான தனம், குடும்பம், எதிரி, பிணி, பிதா, பாக்ய ஸ்தானங்களை பார்க்கிறார். உங்கள் ராசிநாதன் செவ்வாய்க்கு சம அந்தஸ்துள்ள கிரகமான சுக்கிரன் வீட்டில் உள்ளார். உங்கள் கைவசம் இருக்கிற பணத்தை சுதந்திரமாக செலவு செய்ய இயலாத மாறுபட்ட நிலை உருவாகும். பேச்சில் எரிச்சல் உணர்வும், விரக்தியும் சமஅளவில் கலந்திருக்கும். கண் தொடர்பான பிணி அணுகாதிருக்க கவனமான மருத்துவமுறைகளைப் பின்பற்ற வேண்டும். சமூகத்தில் பெற்ற நற்பெயரும் புகழம் ஓரளவு துணை நிற்கும். உடன் பிறந்தவர்கள் உருவாக்குகிற நிர்ப்பந்தத்தினால் தேவையற்ற செலவு ஏற்படும். வீடு, வாகன வகையில் தேவையான மாற்றம் செய்வீர்கள்.
தாயின் அன்பு, ஆசி உங்களின் முக்கிய செயல்களுக்கு துணை நிற்கும். புத்திரர்கள் கவனக்குறைவான நடவடிக்கைகளால் சில சிரமங்களை எதிர்கொள்வர். உங்களின் மென்மையான பேச்சு மூலம் அவர்களை நல்வழியில் நடத்துங்கள். உடல்நலம் ஒருநேரம் போல மறுநேரம் இராது. நேரத்துக்கு உணவு, தகுந்த ஓய்வு எடுப்பது அவசியம். எதிரிகளால் இருந்த கஷ்டங்கள் பெருமளவில் குறையும். இஷ்ட தெய்வ வழிபாடு நிறைவேற்றி மகிழ்வீர்கள். கணவன், மனைவி எதிரெதிர் கருத்துடன் செயல்படும் கிரகநிலை உள்ளது. குடும்பப் பெருமை, நலன் கருதி விட்டுக்கொடுத்து செயல்படும் எண்ணத்தை வளர்த்துக்கொள்ளுங்கள். நண்பர்கள் பிறரது பேச்சைக் கேட்டு, உங்களிடம் பிரச்னை செய்வர். பங்குச்சந்தை வர்த்தகத்தில் உள்ளவர்கள் ஓரளவு லாபம் பெறுவர்.
தொழிலதிபர்கள்: ரியல் எஸ்டேட், மருத்துவமனை, டிராவல்ஸ், ஓட்டல், லாட்ஜ், அச்சகம் நடத்துவோர், டெக்ஸ்டைல்ஸ், ஆட்டோமொபைல்ஸ், காகிதம், மின்சார, மின்னணு சாதனம், கட்டுமானப்பொருள் உற்பத்தி செய்வோர் தங்கள் நிறுவனத்தின் பெயர், புகழை வளர்ப்பதில் கூடுதல் கவனம் கொள்வர். உற்பத்தி ஓரளவுக்கு இருக்கும். சுமாரான லாபம் கிடைக்கும். நிர்வாகச்செலவு கூடும். பேச்சில் நிதானமும் கண்ணியமும் கலந்தால் பணியாளர்களின் அதிருப்தியை சம்பாதிப்பதில் இருந்து தப்பலாம்.
வியாபாரிகள்: நகை, ஜவுளி, மளிகை, அரிசி, மருந்து, எண்ணெய், மின்சார, மின்னணு சாதனம், கம்ப்யூட்டர், ஆட்டோமொபைல் உதிரிபாகங்கள், கட்டுமானப் பொருள், தோல் பொருள், பூ, காய், இறைச்சி விற்பனை செய்பவர்கள் சந்தையில் கடும் போட்டியை எதிர்கொள்வர். மற்ற பொருட்களை விற்பவர்கள் லாபம் குறைத்து விற்றால் நிலைமை சீராக இருக்கும். சரக்கு வாகன வகையில் பராமரிப்பு செலவு கூடும். அளவான கொள்முதல், ரொக்கத்திற்கு விற்பனை என்ற நடைமுறையை பின்பற்றுவது நல்லது. வியாபாரம் தொடர்பான பயணங்கள் புதிய அனுபவத்தைப் பெற்றுத்தரும்.
பணியாளர்கள்: அரசு மற்றும் தனியார் துறையில் பணிபுரிபவர்களுக்கு வேலைப்பளு அதிகரிக்கும். நிர்வாகத்திடம் நற்பெயர் பெற அதிக உழைப்பு அவசியம். சலுகைகள் ஓரளவுக்கே கிடைக்கும். சிலருக்கு பணியிட மாற்றம், வீடு, வாகன மாற்றம் இருக்கும். குடும்பத்தின் முக்கிய செலவை சரிக்கட்ட அலுவலகத்தில் கடன் வாங்க வேண்டி வரும். சக பணியாளர்களை அனுசரித்து செல்வதன் மூலம் பிரச்னைகளைப் பெரும்பாலும் தவிர்த்து விடலாம்.
பெண்கள்: பணிபுரியும் பெண்கள பணிச்சுமைக்கு உட்படுவர். பணி சார்ந்த குளறுபடிகள் மனக்கஷ்டத்தை தரும். சிலருக்கு பணியிட மாற்றம் ஏற்படும். சலுகைகள் பெறுவதில் தாமதம் இருக்கும். குடும்பப் பெண்கள் உடல்நல பாதிப்புக்கு ஆளாகலாம். சுபநிகழ்ச்சிகளை நடத்த கடும் முயற்சி மேற்கொள்ள வேண்டியிருக்கும். தாய்வழி சீர்முறை எதிர்பார்த்தபடி கிடைக்கும். சுயதொழில் புரியும் பெண்கள் உற்பத்தி, விற்பனையை உயர்த்தும் வகையில் நடைமுறை மாற்றங்களைப் பின்பற்றுவர். பணவரவு சுமாரான அளவில் கிடைக்கும்.
மாணவர்கள்: இன்ஜினியரிங், மருத்துவம், சட்டம், விவசாயம், கம்ப்யூட்டர், கேட்டரிங், வணிகவியல், கலைத்துறை, அறிவியல் துறை மாணவர்கள் பொறுப்பை உணர்ந்து படிப்பதால் மட்டுமே எதிர்பார்த்த தரத்தேர்ச்சி கிடைக்கும். மற்ற துறை மாணவர்கள் கவனக்குறைவால் மார்க் குறைய நேரிடலாம். குறிக்கோளை எட்ட வேண்டுமென்ற லட்சியமுள்ள மாணவர்களுக்கு சனீஸ்வரரின் உதவி நிச்சயம் உண்டு. சக மாணவர்களிடம் தேவையற்ற விவாதம் கூடாது. படிப்புக்கான பணவசதி கிடைக்க தாமதமாகும். படித்து முடிப்பவர்களுக்கு எதிர்பார்த்த வருமானத்துக்கு குறைவாக வேலை கிடைக்கும். பெற்றோரின் எதிர்பார்ப்பை நிறைவேற்றுவதில் ஆர்வம் கொள்வர்.
அரசியல்வாதிகள்: எதைச் செய்தாலும் பணம் வாங்க வேண்டும் என்ற எண்ணம் மேலிடும். இந்த எண்ணம் சட்ட சிக்கலுக்கு வழிவகுக்கும். ஆதரவாளர்கள் அதிருப்தி கொள்வர். அரசு அதிகாரிகளின் உதவி எதிர்பார்க்கும் அளவுக்கு இராது. எதிரிகளின் தொல்லை குறையும். குடும்ப உறுப்பினர்கள் அரசியல் பணியில் தலையிட்டு கெட்ட பெயரை ஏற்படுத்தலாம். அரசியலுடன் தொழில் நடத்துபவர்களுக்கு லாபம் சுமாராகவே இருக்கும்.
விவசாயிகள்: எதிர்பார்ப்பைவிட திருப்திப்படும் வகையில் மகசூல் கிடைக்கும். கால்நடை வளர்ப்பில் லாபம் உண்டு. கூடுதல் நிலம் வாங்க உருவாகிற வாய்ப்பை கடன் வாங்கினால் தான் செயல்படுத்த முடியும்.
பரிகாரம்: லட்சுமி நரசிம்மரை வழிபடுவதால் மனதில் துணிச்சலும், தொழிலில் வளர்ச்சியும் ஏற்படும்.
பரிகாரப் பாடல்
ஆடிப்பாடி அகம் கரைந்து இசை
பாடிப்பாடி கண்ணீர் மல்கி, எங்கும்
நாடிநாடி நரசிங்கா என்று
வாடி வாடும் இவ்வாள் நுதலே.
சனி வக்ரகால பலன்: 26.3.2012 முதல் 10.9.2012 வரை சனிபகவான் வக்ரகதியாகி கன்னிராசியில் பிரவேசிக்கிறார். இந்த அமர்வு ஆதாயச்சனி என்ற பெயர் பெற்று உங்கள் வாழ்வில் வளர்ச்சி தருகிற புதிய திருப்பங்களை ஏற்படுத்தும். இந்த ஆறுமாத காலத்தில் தாராள பணவரவு, தொழில் அபிவிருத்தி உண்டாகும். உறவினர்களிடம் மதிப்பு, மரியாதை பெறுவீர்கள். கூடுதல் சொத்து சேர்க்கை உண்டாகும். குடும்பத்தில் மகிழ்ச்சியும் சுபநிகழ்வுகளும் நிறைந்திருக்கும். பணியில் உள்ளவர்களுக்கு கூடுதல் பதவி, பொறுப்பு கிடைக்கும். பிள்ளைகளால் ஏற்படும் பிரச்னை குறையும்.
தனுசு (85/100) மனசை நிறைக்க வசந்தம் வந்தாச்சு!
நல்ல எண்ணத்துடன் செயல்படும் தனுசுராசி அன்பர்களே!
உங்கள் ராசிக்கு பத்தாம் இடத்தில் அனுகூலக் குறைவாக இருந்த சனிபகவான் இப்போது ராசிக்கு லாப ஸ்தானமான துலாம் வீட்டிற்கு பெயர்ச்சியாகி உள்ளார். சனி தனது 3, 7, 10 ஆகிய பார்வைகளால் முறையே ராசி, ராசிக்கு 5, 8ம் இடங்களை பார்க்கிறார். ராசிநாதன் குருவுக்கு பகை கிரகமான சுக்கிரன் வீட்டில் சனி உள்ளார். இதனால் எதிரிகளும் பார்த்து வியக்கிற அளவில் உங்களின் வாழ்க்கைத்தரம் உயரும். புதிய சிந்தனைகளை செயல்படுத்தி வாழ்வில் வசந்தத்தை ஏற்படுத்துவீர்கள். தொழிலில் வளர்ச்சியும் தாராள பணவரவும் காண்பீர்கள். பேச்சில் நிதானம் வெளிப்படும். இளைய சகோதரர் உங்களை தந்தைக்கு நிகராக வைத்து நல்வழியில் செயல்படுவர். சமூகப்பணியாற்றி மக்கள் மத்தியில் புகழ் பெறுவீர்கள். வீடு, வாகனத்தில் திட்டமிட்ட மாற்றங்களை செய்து மகிழ்வீர்கள்.
வாகன பயணங்களில் மிதவேகம் பின்பற்றுவது அவசியம். பூர்வசொத்தில் பெறுகிற வருமானம் உயரும். புத்திரர் நல்லவிதமாக படித்து கல்வி, வேலைவாய்ப்பில் முன்னேற்றம் பெறுவர். புத்திர வகையிலான மங்கல நிகழ்ச்சி சிறப்பாக நிறைவேறும். இஷ்டதெய்வ வழிபாட்டால் வாழ்வு நலம் பெறுவீர்கள். எதிரியின் தந்திரம் பயனற்றுப் போகும். ஆரோக்கியம் சீராக இருக்கும். உறவினர்கள் வகையில் விருந்து, உபசரிப்பில் அடிக்கடி கலந்து கொள்வீர்கள். தம்பதியர் பாசத்துடன் சந்தோஷ வாழ்வு நடத்துவர். நண்பர்களிடம் இருந்த கருத்து வேற்றுமை மறையும். விலகி சென்ற நண்பர்கள் வலியத் தேடி வந்து அன்பு பாராட்டுவர்.  தந்தைவழி உறவினர்களின் ஒத்துழைப்பு கிடைக்கும். வெளியூர் பயணத்தால் எதிர்பார்த்த நன்மை கிடைக்கும். தொழில் சார்ந்த வகையில் குறுக்கிட்ட சிரமம் நீங்கி நன்மை உண்டாகும். பங்குச்சந்தை வர்த்தகத்தில் உள்ளவர்கள் சனியின் வக்ரகதிக்கு பிறகு வரும் காலங்களில் வெற்றியும், நல்ல லாபமும் காண்பர்.
தொழிலதிபர்கள்: ரியல் எஸ்டேட், கல்வி, நிதி நிறுவனம், மருத்துவமனை, டிபார்ட்மென்டல் ஸ்டோர், லாட்ஜ், ஓட்டல் நடத்துவோர், காகிதம், டெக்ஸ்டைல்ஸ், தோல், கட்டுமானப்பொருள், பர்னிச்சர், பாத்திர உற்பத்தியாளர்கள் புதிய ஒப்பந்தங்கள் கிடைக்கப்பெறுவர். மற்றவர்களுக்கும் உற்பத்தி சிறந்து தாராள பணவரவைப் பெற்றுத்தரும். புதிய தொழில் துவங்கவும், சொத்து வாங்கவும் யோகம் உண்டு. சக தொழிலதிபர்களின் மத்தியில் அந்தஸ்து உயரும். சிலருக்கு தொழில் கூட்டமைப்பில் கவுரவமான பதவி கிடைக்கும். வெளிநாடு சுற்றுலா பயணத்திட்டம் நிறைவேறும்.
வியாபாரிகள்: தங்க நகை, ரெடிமேட் ஆடை, ஸ்டேஷனரி பொருட்கள், பாத்திரங்கள், மளிகை பொருட்கள், மருந்துப் பொருட்கள், சமையலறை சாதனங்கள், தோல் பொருட்கள், பூஜை பொருட்கள், இனிப்பு பண்டங்கள், ஆட்டோமொபைல் உதிரிபாகங்கள், கட்டிட கட்டமானப் பொருள் போன்றவற்றை விற்பனை செய்பவர்களுக்கு சந்தையில் இருந்து வந்த போட்டி குறையும். தாராள விற்பனை, அபரிமிதமான பணவரவு கிடைக்கும். வாடிக்கையாளர்களின் எதிர்பார்ப்பை நிறைவேற்றி நற்பெயர் பெறுவர். குடும்பத்தில் மங்கல நிகழ்ச்சி சிறப்பாக நடக்கும். திட்டமிட்டபடி புதிய வீடு, வாகனம் வாங்கும் எண்ணங்கள் நிறைவேறும்.
பணியாளர்கள்: அரசு, தனியார் துறையில் பணிபுரிபவர்கள் பணித்திறமையில் முன்னேற்றம் பெறுவர். குறித்த காலத்தில் இலக்கை நிறைவேற்றி நிர்வாகத்திடம் நற்பெயர் உண்டாகும். எதிர்பார்த்த பதவி உயர்வு, விரும்பிய இடமாற்றம் கிடைக்கப் பெறுவர். சம்பள உயர்வு அதிகரிக்கும். சக பணியாளர்களிடம் நட்புறவு பலப்படும். விருந்து உபசரிப்பில் அடிக்கடி கலந்து கொள்வீர்கள். குடும்பத்தினரின் தேவைகளை நிறைவேற்றத் தேவையான பணவசதி கிடைக்கும். எந்திர பயன்பாடு, தொழில்நுட்பம் சார்ந்த பணியில் உள்ளவர்களுக்கு கூடுதல் வேலைவாய்ப்பும் அதற்கேற்ற வருமானமும் கிடைக்கும். குறைவில்லாத ஜீவனமும், பசு, பால் பாக்ய யோகமும் உண்டு.
பெண்கள்: பணிபுரியும் பெண்கள் உற்சாகத்துடன் செயல்படுவர். திறமையுடன் பணியாற்றி குறித்த நேரத்திற்கும் பணியிலக்கை எட்டிப் பிடிப்பர். நிர்வாகத்திடம் பாராட்டு, சலுகைப்பயன் தாராள அளவில் கிடைக்கும். குடும்ப பெண்கள் கணவரின் அன்பு, பாசம் கிடைத்து இனிய வாழ்வு நடத்துவர். புத்திரர்களின் வளர்ச்சிக்கு உறுதுணையாக விளங்குவர். ஆடை, ஆபரணச்சேர்க்கை தகுதிக்கேற்ப கிடைக்கும். சுயதொழில் புரியும் பெண்கள் கூடுதல் மூலதனத்துடன் அபிவிருத்தி பணிகளை நிறைவேற்றுவர். உற்பத்தி, விற்பனை சிறந்து லாபவிகிதம் அதிகரிக்கும். உபதொழில் துவங்குவதற்கான சூழ்நிலையும் தானாக வந்து சேரும்.
மாணவர்கள்: மருத்துவம், சட்டம், கலை, இலக்கியம், ஆசிரியர், ஜர்னலிசம், தொழில்நுட்பம், கம்ப்யூட்டர், விவசாயம், ஓட்டல் மேனேஜ்மென்ட் போன்ற துறை சார்ந்த மாணவர்கள் ஒருமுகத் தன்மையுடன் படித்து உயர்ந்த தரதேர்ச்சி பெறுவர். மற்ற துறை மாணவர்கள் திட்டமிட்டுப் படித்து கல்வியில் முன்னேற்றம் காண்பர். படிப்புக்கான பணவசதி எதிர்பார்த்தபடி கிடைக்கும். சக மாணவர்களிடம் இருந்த கருத்துவேறுபாடு நீங்கி நட்பு மலரும். விளையாட்டு, கலைத்துறையிலும் ஈடுபட்டு பரிசு, பாராட்டு பெறுவீர்கள். நண்பர்களுடன் சேர்ந்து இன்பச் சுற்றுலா சென்று வருவர். வேலைவாய்ப்பில் முன்னுரிமை உண்டு.
அரசியல்வாதிகள்: கடந்த வருடங்களில் தடைபட்ட சமூகப்பணியை புது உத்வேகத்துடன் நிறைவேற்றுவீர்கள். சமூகத்தில் கூடுதல் மதிப்பு, மரியாதை கிடைக்கும். அரசு தொடர்பான காரியம் அதிகாரிகளின் உதவியால் எளிதாக நிறைவேறும். ஆதரவாளர் உங்களிடம் கூடுதல் நம்பிக்கை கொள்வர். எதிரி வியக்கும் அளவில் வளர்ச்சி உண்டாகும். புத்திரரின் ஒத்துழைப்பால் அரசியல் பணி மேலும் சிறக்கும். புதிதாக சொத்து வாங்கும் எண்ணமும் நிறைவேறும். அரசியலுடன் தொழில் நடத்துபவர்களுக்கு உற்பத்தி, விற்பனை சிறந்து வருமானம் பலமடங்கு அதிகரிக்கும்.
விவசாயிகள்: பயிர் வளர்க்க தேவையான வசதி அனைத்தும் எளிதாக கிடைக்கும். மகசூல் சிறந்து தானியங்களுக்கு தாராள விலை கிடைக்கும். கால்நடை வளர்ப்பால் ஆதாய பணவரவு கூடும். நிலப்பிரச்னையில் இருந்து விடுபட்டு மனநிம்மதி காண்பர். குடும்பத்தில் திட்டமிட்ட மங்கல நிகழ்ச்சி சிறப்பாக நிறைவேறும்.
பரிகாரம்: செவ்வாய் கிழமைகளில் துர்கையை வழிபடுவதால், கிடைக்கவிருக்கும் நற்பலன் இரட்டிப்பாகும்.
பரிகாரப்பாடல்
நாயகி நான்முகி நாராயணி கை நளின பஞ்ச
சாயகி சாம்பவி சங்கரி சாமளை சாதிநச்சு
வாயகி மாலினி வாராகி சூலினி மாதங்கியென்று
ஆகி கியாதியுடையாள் சரணம் அரண் நமக்கே!
சனி வக்ரகால பலன்: 26.3.2012 முதல் 10.9.2012 வரை சனிபகவான் வக்ர கதியாகி திரும்பவும் கன்னிராசியில் பிரவேசிக்கிறார். இந்த அமர்வு தொழில் வகையில் குளறுபடியை உருவாக்கும். பிறருக்கு கொடுத்த வாக்குறுதி நிறைவேற தாமதமாகும். தேவையற்ற செலவு அதிகமாகும். புத்திரர் உடல்நலத்திற்கு மருத்துவ சிகிச்சை தேவைப்படும். தம்பதியர் கருத்துவேறுபாடு கொள்வர். வெளியூர் பயணங்கள் மூலம் எதிர்பார்த்த ஆதாயம் கிடைக்காது.
மகரம் (60/100) தொழில், வேலையில் கவனமா இருங்க!
ஆன்மிகப் பணிகளில் ஆர்வமுடன் ஈடுபட்டு, மறுபிறவிக்கும் புண்ணியம் சேர்க்கும் மகரராசி அன்பர்களே!
உங்கள் ராசிக்கு ஒன்பதாம் இடத்தில் அனுகூலக் குறைவாக இருந்த சனிபகவான் இப்போது ராசிக்கு பத்தாம் இடமான துலாத்திற்கு, ஜீவனச்சனி என்ற நிலையில் பெயர்ச்சியாகி உள்ளார். சனி தனது 3, 7, 10 ஆகிய பார்வைகளால் முறையே ராசிக்கு 12, 4, 7 ஆகிய இடங்களைப் பார்க்கிறார். உங்களுக்கு ராசிநாதனே சனி என்பது பிளஸ் பாயின்ட். அவர் தனது நட்பு கிரகமான சுக்கிரன் வீட்டில் உச்சம் பெறுவதால், ஒரு சில நன்மைகளை எதிர்பார்க்கலாம். உங்கள் பணிகளை நிகழ்த்துவதில் குறுக்கீடு ஏற்படும். அந்தஸ்தை தக்கவைத்துக் கொள்வதில் கவனம் தேவைப்படும். தேவையற்ற பேச்சு பிரச்னைகளை நிறைய கொண்டு வரும் என்பதை உணர்ந்து நடப்பது நல்லது. இளைய சகோதர, சகோதரிகள் அலுவல் காரணமாக வெளியூருக்கு மாற்றலாகிற சூழ்நிலை உண்டு. வீடு, வாகன வகையில் வசதிக் குறைவு ஏற்படும் என்பதால், வேறு வழியின்றி சகித்துக் கொள்ள வேண்டிய சூழல் வரும். தாய்வழி உறவினர்கள் உங்களிடம் கொண்டிருந்த அன்பு குறையும். புத்திரர்கள் கவனக்குறைவான செயல்களால் உடல்நல பாதிப்பு அடைவர். அவர்களை கவனமாக இருக்கச் சொல்லுங்கள். மருத்துவச்செலவு கையைக் கடிக்கும்.
எதிரிகளால் இருந்த சிரமம் குறையும். பணவரவு சுமாராகவே இருக்கும். குடும்பத்தின் முக்கிய செலவுகளுக்கு சேமிப்புபணத்தை எடுக்க வேண்டிய சூழ்நிலை உருவாகும். சிலசமயங்களில் கடன் பெறும் சூழ்நிலையும் உண்டு. தந்தைவழி உறவினர்கள் சொல்கிற ஆலோசனை வழி நடந்து வருமானத்தை ஓரளவு உயர்த்திக் கொள்ளலாம். வழக்கு, விவகாரத்தில் உங்களுக்கு சாதகமாக தீர்ப்பு வரும். ஆனால், அதைக் கொண்டாடி மகிழ்வதைத் தவிர்க்கவும். நண்பர்கள் உதவும் சூழ்நிலை உண்டு. கவலையைக் குறைக்க தியானம், சுவாசப்பயிற்சி அவசியம். பங்குச்சந்தை வர்த்தகம் அதிகமாக கை கொடுக்காது. முதலீடு செய்வதில் பாதுகாப்பான நடைமுறைகளை பின்பற்ற வேண்டும்.
தொழிலதிபர்கள்: மருத்துவமனை, ஓட்டல், டிராவல்ஸ், டிபார்ட்மென்டல் ஸ்டோர், கல்வி, நிதிநிறுவனம், பால் பண்ணை அதிபர்கள், பாத்திரம் தயாரிப்போர், ஆட்டோமொபைல், அச்சகம், அரிசி ஆலை, மினரல் வாட்டர், குளிர்பானம், மின்னணு சாதனம், காகிதம், கம்ப்யூட்டர், பர்னிச்சர் உற்பத்தியாளர்கள் தொழிலை நினைத்து மனதில் பதட்டம் கொள்வர். பிற வகை தொழில் செய்வோரும் கூடுதல் கவனத்துடன் இருந்தால் தான் தொழில் சிரமத்தைத் தவிர்க்கலாம். பணியாளர்களின் ஒத்துழைப்பை பெற்று உற்பத்தி இலக்கை நிறைவேற்றுவது அவசியம். நிர்வாக நடைமுறைச்செலவு கூடும். பொதுப்பணியில் ஆர்வம் குறையும். சக தொழில் சார்ந்தவர்களிடம் கருத்து வேறுபாடு அதிகரிக்காத அளவிற்கு நடந்துகொள்வது நல்லது.
வியாபாரிகள்: நகை, ஜவுளி, மளிகை, அரிசி, ஆட்டோமொபைல் உதிரிபாகங்கள், கட்டுமானப் பொருள், பால் பொருட்கள், விவசாய விளைபொருட்கள், மின்சார, மின்னணு சாதனங்கள், பேக்கரி, மருந்து, அலங்காரப் பொருள், குளிர்பானம், மினரல் வாட்டர், எண்ணெய், பெயின்ட், கண்ணாடி விற்பனை செய்பவர்கள் அளவான விற்பனை, சுமாரான பணவரவு என்கிற நிலையை எதிர்கொள்வர். மற்ற வியாபாரம் செய்பவர்களுக்கு இவர்களை விட சற்று அதிக லாபம் கிடைக்கும். குடும்ப செலவுகளுக்கான பணத்தேவை அதிகரிப்பதால் கவலை ஏற்படும். வியாபார நுணுக்கங்களை தகுந்தபடி செயல்படுத்துவதால் விற்பனை, லாபம் அதிகரிக்கும். வாகன பாதுகாப்பு, பராமரிப்பில் கவனம் வேண்டும்.
பணியாளர்கள்: அரசு, தனியார் துறையில் பணிபுரிபவர்கள் நிர்வாகத்தின் வழிகாட்டுதலை பின்பற்றி நடப்பது நல்லது. சக பணியாளர்களின் குளறுபடியான செயல்களால் உங்கள் மீது அவப்பெயர் ஏற்படலாம். கவனம் தேவை. குடும்பத்திற்கான தேவையை நிறைவேற்ற கணிசமான கடன் பெறுவீர்கள். நிச்சயமற்ற வேறு பணிக்கு செல்கிற வாய்ப்புகளை சிறிதுகாலம் கடந்து பயன்படுத்தலாம்.
பெண்கள்: பணிபுரியும் பெண்களுக்கு குளறுபடி உருவாகி நிர்வாகத்தின் கண்டிப்புக்கு உட்பட நேரும். சலுகைகள் அதிகம் கிடைக்காது. கூடுதல் கவனம் நற்பலன் பெற உதவும். குடும்பப் பெண்கள் கணவரின் கருத்துக்கு முக்கியத்துவம் தருவதால் மட்டுமே சச்சரவு இல்லாத வாழ்க்கைமுறை தொடரும். தாய்வழி உறவினர்களிடம் சீர்முறை பெறுவதில் அதிக எதிர்பார்ப்பை வளர்த்துக்கொள்ளக் கூடாது. சுயதொழில் புரியும் பெண்கள் சுமாரான உற்பத்தி, அளவான லாபம் காண்பர். அதிக கடன் பெற்று அபிவிருத்தி பணி செய்வதை தவிர்ப்பது நல்லது.
மாணவர்கள்: இன்ஜனியரிங், விவசாயம், மருத்துவம், ஜர்னலிசம், ஆசிரியர் பயிற்சி, ஓட்டல் மேனேஜ்மென்ட், கேட்டரிங், பிரிண்டிங் டெக்னாலஜி, கலை, அறிவியல், வணிகத் துறை, ஆரம்பக்கல்வி மாணவர்களுக்கு கவனச்சிதறலும் அதனால் மதிப்பெண் குறைவதுமான சூழ்நிலை இருக்கும். மற்ற துறையினரும் எதிர்கால நலன் கருதி கடும் முயற்சியுடன் படிப்பதால் மட்டுமே தேர்ச்சி அதிகரிக்கும். ஆடம்பரப் பொருள் வாங்க விரும்புகிற பிடிவாத குணத்தை தவிர்ப்பது நல்லது. ஆசிரியரின் கண்டிப்பையும், பெற்றோரின் அறிவுரையையும் ஏற்றால் படிப்பு சீராக இருக்கும். சக மாணவர்களிடம் தேவையற்ற விவாதம் கூடாது.
அரசியல்வாதிகள்: பணிகளை குறித்த காலத்தில் நிறைவேற்ற இயலாத வகையில் குறுக்கீடுகள் வந்து சேரும். அனுபவசாலியின் ஆலோசனை, தகுதி வாய்ந்தவர்களின் உதவியைப் பெறுவதால் நிலைமை சீராகும். உங்கள் ஆதரவாளர்களே எதிரிகளின் மறைமுக நடவடிக்கைக்கு துணைபோவர். இதனால் எவரிடமும் முக்கியமான ரகசியங்களை சொல்ல வேண்டாம். அரசியலுடன் தொழில் நடத்துபவர்கள் அபவிருத்தி பணிகளை செய்ய உகந்த நேரம் அல்ல.
விவசாயிகள்: விவசாயப்பணிகளுக்கான செலவு அதிகரிக்கும். அதிக லாபம் தருகிற பயிர் வகை வளர்ப்பதால் மட்டுமே எதிர்பார்த்த பணவரவு கிடைக்கும். கால்நடை வளர்ப்பில் அளவானலாபம் உண்டு. நிலம் தொடர்பான விவகாரத்தில் சாதகத் தீர்வு பெற தாமதம் ஏற்படும்.
பரிகாரம்: பெருமாளை வழிபடுவதால் தொழில் சார்ந்த இடர் விலகி மனதில் மகிழ்ச்சி கூடும்.
பரிகாரப் பாடல்
செடியாய வல்வினைகள் தீர்க்கும் திருமாலே!
நெடியானே வேங்கடவா நின்கோயில் வாசல்
அடியாரும் வானவரும் அரம்பையரும் கிடந்தியங்கும்
படியாய்க் கிடந்துன் பவளவாய் காண்பேனே!
சனி வக்ரகால பலன்: 26.3.2012 முதல் 10.9.2012 வரை சனிபகவான் வக்ரகதியாகி சுமார் ஆறுமாத காலம் கன்னிராசியில் பிரவேசிக்கிறார். இதனால் தொழில் வகையில் இருந்த மந்தநிலை விலகும். வாகன போக்குவரத்தில் கவனம் வேண்டும். பணவரவு அதிர்ஷ்டகரமாக வந்துசேரும். எதிரிகளால் தொல்லை வரும். புத்திரர்கள் படிப்பு, வேலைவாய்ப்பில் முன்னேற்றம் பெறுவர். தம்பதியர் ஒற்றுமை சிறந்து குடும்பத்திற்கு பெருமையும் புகழும் தேடித்தருவர். குடும்பத்தில் திட்டமிட்ட சுபநிகழ்ச்சியை நடத்துவீர்கள்.
கும்பம்( 65/100)
எந்த சூழ்நிலையிலும் திடமான சிந்தனையுடன் செயல்படுகின்ற கும்பராசி அன்பர்களே!
உங்கள் ராசிக்கு எட்டாம் இடத்தில் அஷ்டமச்சனியாக இருந்த சனிபகவான் இப்போது ஒன்பதாம் இடமான துலாம் வீட்டிற்கு பெயர்ச்சியாகி உள்ளார். சனி தனது 3, 7, 10 ஆகிய பார்வைகளால் முறையே ராசிக்கு 11, 3, 6 ஆகிய இடங்களை பார்க்கிறார். சனி தனது நட்பு கிரகமான சுக்கிரன் வீட்டில் உச்ச பலத்துடன் அமர்வது சில நல்ல பலன்களையும் பெற்றுத்தரும். பேச்சில் நிதானமும், செயலில் நேர்மையும் பின்பற்றி தேவையான செயல்களை நிறைவேற்றுவீர்கள். புகழ் பெறுவதின் மீதான ஆர்வம் குறையும். இளைய சகோதரர்களின் தேவைகளை நிறைவேற்ற உங்களாலான உதவிகளைச் செய்வீர்கள். வீடு, வாகனத்தில் பராமரிப்புப் பணிகளை மேற்கொள்வதால் செலவு அதிகரிக்கும். தாயின் உடல் நலத்திற்காக மருத்துவசிகிச்சை செய்ய நேரிடும். புத்திரர்களின் செயல்பாடு மனதிற்கு ஆறுதல் தரும்.
பூர்வசொத்தில் கூடுதல் வருமானம் கிடைக்கும். மற்றவர்களின் செயல்பாட்டை பொது இடங்களில் விமர்சிப்பதை தவிர்ப்பது நல்லது. உடல்நலம் சீராக இருக்க முறையான உணவும், ஓய்வும் தேவை. உறவினர்களின் உதவியும், ஒத்துழைப்பும் அவ்வப்போது கிடைக்கப் பெறுவீர்கள்.தம்பதியர் ஒருவருக்கொருவர் விட்டுக் கொடுத்து வாழ்க்கையை மகிழ்ச்சியான வழியில் கொண்டு செல்வர். உங்களைப் பற்றிய தந்தையின் மனதில் அதிருப்தி எண்ணங்கள் உருவாகும். பங்குச்சந்தை வர்த்தகத்தில் உள்ளவர்கள் லாபமும், நஷ்டமும் கலந்து சந்திக்கின்ற சூழல் உருவாகும்.
தொழிலதிபர்கள்: ரியல் எஸ்டேட், மருத்துவமனை, ஓட்டல், லாட்ஜ், நிதி, கல்வி நிறுவனம், அச்சகம், டிராவல்ஸ் நடத்துவோர், காண்டிராக்டர், டெக்ஸ்டைல்ஸ், காகிதம், பட்டாசு, கட்டுமானப் பொருள், பாத்திரம் உற்பத்தி செய்வோர் சுமாரான வளர்ச்சி காண்பர். தொழிலில் மறைமுகப்போட்டியை எதிர்கொள்ள நேரிடும். தொழிலுக்காக கடன் பெறுவதில் நிதான நடைமுறை நல்லது. மற்றவர்களை நம்பாமல், நேரடியாக நீங்களே களத்தில் இறங்கி செயல்படுங்கள். புகழ்பெறுவதைவிட பணம் சம்பாதிப்பதில் ஆர்வம் அதிகமாகும்.
வியாபாரிகள்: நகை, ஜவுளி, மளிகை, அரிசி, மருந்து, சமையலறை சாதனங்கள், ஸ்டேஷனரி, தோல் பொருட்கள், பழம், பட்டாசு, கட்டுமானப் பொருள், ஆட்டோமொபைல் உதிரிபாகங்கள், பர்னிச்சர் விற்பனை செய்பவர்கள் போட்டியைச் சந்தித்தாலும் லாபத்திற்கு குறைவிருக்காது. பிற வியாபாரிகளுக்கு சுமாரான லாபம் கிடைக்கும். கடையை அழகுபடுத்தலாம் என்று தகுதிக்கு மீறிய அளவில் கடன் பெறக்கூடாது. பணப்பரிவர்த்தனையில் பாதுகாப்பு நடைமுறைகளை பின்பற்றுவது அவசியம். நிலுவைப்பணம் வசூலிப்பதில் மென்மையான போக்கை கடைபிடிப்பது நன்மை தரும்.
பணியாளர்கள்: அரசு, தனியார் துறையில் பணிபுரிபவர்கள் கூடுதல் பணிச்சுமைக்கு உள்ளாவர். சக பணியாளர்களிடம் கருத்துவேறுபாடு ஏற்பட வாய்ப்புண்டு. பேச்சில் நிதானத்தைக் கடைபிடிப்பது எதிர்கால நலனுக்கு உகந்ததாகும். இயந்திரப்பணியில், கருவிகளை கையாளும்போது விழிப்புணர்வுடன் செயல்படுவது அவசியம். ஆடம்பர செலவைக் குறைத்தால் தான் வருமானம் போதுமானதாக இருக்கும்.
பெண்கள்: பணிபுரியும் பெண்கள் பணியிடத்தில் குளறுபடியை எதிர்கொள்வர். நிர்வாகத்தின் கண்டிப்பு, நடவடிக்கைகளால் மனதில் கவலை அதிகரிக்கும். அனுபவம் பெற்றவர்களின் ஆலோசனை கேட்டு குறையை நிவர்த்தி செய்வது நல்லது. பணத்தேவை அதிகரிக்கும். குடும்ப பெண்கள் கணவரின் வழிகாட்டுதலை ஏற்று நடப்பர். சிக்கனத்தைக் கடைபிடித்து நல்வாழ்க்கை நடத்துவர். உறவினர்களிடம் தேவையற்ற விஷயங்களில் வாக்குவாதம் கூடாது. உடல்நலம் பேணுவதில் அக்கறை தேவைப்படும். சுயதொழில் புரியும் பெண்களில் சிலர் பணப்பற்றாக்குறைக்கு ஆளாவர். உற்பத்தியைப் பெருக்குவதிலும் போட்டியை சமாளிப்பதிலும் நேரத்தைச் செலவழிப்பர். உழைப்புக்கேற்ற லாபம் பெற்று திருப்தி காண்பர்.
மாணவர்கள்: விவசாயம், மருத்துவம், இன்ஜினியரிங், கலை, அறிவியல், சட்டம், ஜர்னலிசம், கம்ப்யூட்டர் துறை மாணவர்கள் அமைதியான சூழ்நிலையை உருவாக்கிக் கொள்வது நல்லது. மற்ற துறையில் உள்ளவர்களுக்கும் கவனம் தேவை. வீண்பொழுதுபோக்குகளில் ஈடுபடுவதை தவிர்க்க வேண்டும். சக மாணவர்களின் ஒத்துழைப்பு சீராகக் கிடைக்கும்.
அரசியல்வாதிகள்: கவனக்குறைவாக செயல்பட்டால் எதிரிகள், உங்களுக்கு கெடுதல் செய்ய முற்படுவர். அதே நேரம், ஆதரவாளர்களின் ஒத்துழைப்பு கண்டு பிரமிப்பு உண்டாகும். நம்பிக்கைக்கு உரியவர்களை மட்டும் உடன் வைத்துக் கொள்வது அவசியம். நடைமுறை செலவு நாளுக்கு நாள் அதிகமாகும். அரசியலுடன் தொழில் நடத்துபவர்கள் சுமாரான உற்பத்தி, அதற்கேற்ற லாபம் காண்பர்.
விவசாயிகள்: விவசாயப்பணிகளில் ஆர்வமுடன் செயல்படுவீர்கள். நடைமுறை செலவுக்கு கூடுதல் பணம் தேவைப்படும். அளவான மகசூல் உண்டு. கால்நடை வளர்ப்பில் மிதமான லாபம் கிடைக்கும். நிலம் தொடர்பான பிரச்னையில் இருந்து தப்பிக்க முன்யோசனை தேவைப்படும்.
பரிகாரம்: ஆஞ்சநேயரை வழிபடுவதால் துன்பம் விலகி நன்மையான பலன் நடக்கும்.
பரிகாரப் பாடல்
அஞ்சிலே ஒன்று பெற்றான்
அஞ்சிலே ஒன்றைத் தாவி
அஞ்சிலே ஒன்று ஆறு ஆக
ஆருயிர் காக்க ஏகி
அஞ்சிலே ஒன்று பெற்ற
அணங்கு கண்டு அயலார் ஊரில்
அஞ்சிலே ஒன்றை வைத்தான்
அவன் நம்மை அளித்துக் காப்பான்
சனி வக்ரகால பலன்: 26.3.2012 முதல் 10.9.2012 வரை சனி பகவான் வக்ரகதியாகி மீண்டும் கன்னிராசியில் அஷ்டமச்சனியாக இடம்பெறுகிறார். இதனால், விலகிப் போனவர்களால் கூட புதிய சிரமங்கள் உண்டாகும். இக்காலகட்டத்தில் வீண் செலவைக் குறைத்து சிக்கனத்தை கடைபிடிப்பது நல்லது. உறவினர்களிடம் வாக்குவாதம் செய்ய நேரிடும். பணியிட மாற்றமும் சிலருக்கு ஏற்படும். பாதுகாப்பு குறைவான இடங்களில் பயணம் செய்வதை தவிர்க்க வேண்டும். விலை மதிப்பான பொருட்களை இரவல் வாங்கவோ, கொடுப்பதோ கூடாது.
மீனம் (50/100)  புடிச்சாச்சு அஷ்டமத்து சனி!
பரந்த மனப்பான்மையும் இரக்க சிந்தனையும் உள்ள மீனராசி அன்பர்களே!
உங்கள் ராசிக்கு ஏழாம் இடத்தில் கண்டகச்சனியாக இருந்த சனிபகவான் இப்போது எட்டாம் இடமான துலாம் வீட்டில் அஷ்டமச்சனியாக இடம் பெயருகிறார். கடந்த இரண்டரை வருடத்தில் எதிர்கொண்ட சிரமங்களை விடவும் சற்று அதிகமாக தரும் வகையில் இந்த சனிப்பெயர்ச்சி அமையும். சனி தனது 3, 7, 10 ஆகிய பார்வைகளால் முறையே ராசிக்கு 10, 2, 5 ஆகிய இடங்களான தொழில், பணவரவு, பூர்வ புண்ணிய ஸ்தானங்களை பார்க்கிறார். எந்தச் செயலை செய்தாலும் குறுக்கீடுகளும் அதனால் மனம் தளர்வதுமான சூழ்நிலை இருக்கும். பணவரவைப் பெற கடினமாக உழைக்க நேரிடும். பொது இடங்களில் அதிகம் பேசுவது, உறவினர் கருத்தை விமர்சிப்பது கூடாது. சகோதரர்கள் உதவுவதாக எண்ணிச் சிரம சூழ்நிலையை உருவாக்கி விடுவர், கவனம். வீடு, வாகனத்தில் கிடைக்கும் வசதி சீராக இருக்கும்.
புத்திரர்கள் படிப்பு, வேலைவாய்ப்பில் பின்தங்க நேரிட்டாலும், தக்க வழிகாட்டுதலால் ஊக்கப்படுத்துவீர்கள். பூர்வசொத்தில் சுமாரான வருமானம் கிடைக்கும். எக்காரணம் கொண்டும் விலை உயர்ந்த பொருட்கள், சொத்து ஆவணங்களைப் பிறர் பொறுப்பில் தரக்கடாது. உடல் ஆரோக்கியம் சீராக இருக்கும். குடும்பத்தின் தேவைகளை நிறைவேற்ற அவ்வப்போது கடன் வாங்குவீர்கள். மாற்றுகுணம் கொண்டவர்களிடம் இருந்து தப்பிக்க அவர்களிடம் இருந்து விலகிச் செல்வது அல்லது அமைதி காப்பது என்கிற நடைமுறையை பின்பற்றுவது நல்லது. அடிக்கடி கடின அலைச்சல் மிக்க பயணம் ஏற்பட வாய்ப்புண்டு. தம்பதியர் கருத்துவேறுபாடுகளை மறந்து ஒருவருக்கொருவர் விட்டுக் கொடுத்து நடந்து கொள்வர். குடும்ப வாழ்வு அமைதியாக இருக்கும். பங்குச்சந்தை வர்த்தகத்தில் உள்ளவர்கள் சுமாரான லாபம் கிடைக்கப்பெறுவர்.
தொழிலதிபர்கள்: ரியல் எஸ்டேட், நிதி, கல்விநிறுவனம், டிராவல்ஸ், லாட்ஜ், ஓட்டல் அச்சகம், டிபார்ட்மென்டல் ஸ்டோர், பால்பண்ணை, நடத்துவோர், டெக்ஸ்டைல்ஸ், காகிதம், ஆட்டோமொபைல், மின்சார, மின்னணு சாதனங்கள், பர்னிச்சர், தோல் பொருள் உற்பத்தி செய்யும் தொழிலதிபர்கள் வளர்ச்சிப்பணிகளை மேற்கொள்வதில் பின்தங்கிய நிலை காண்பர். மற்றவர்களுக்கும் சுமாரான நிலையே இருக்கிறது. ஒப்பந்தம் பெறுவதில் தாமதம் ஏற்படும். லாபம் ஓரளவுக்கே இருக்கும். விடாமுயற்சியும் கடின உழைப்புமே வளர்ச்சிக்கு கைகொடுக்கும்.
வியாபாரிகள்: நகை, ஜவுளி, மளிகை, அரிசி. அழகு சாதனம், பர்னிச்சர், பால் பொருட்கள், ஆட்டோமொபைல் உதிரிபாகங்கள், கட்டுமானப் பொருள், மினரல் வாட்டர் விற்பனை செய்பவர்கள் அளவான விற்பனை, மிதமான பணவரவு என்கிற நிலையை எதிர்கொள்வர். மற்ற வியாபாரிகளுக்கு இவர்களை விட சற்று அதிக லாபம் உண்டு. புதிய வியாபாரத்தில் மூலதனம் செய்வதை தவிர்ப்பது நல்லது. வாகன வகையில் அதிக செலவாகும்.
பணியாளர்கள்: அரசு, தனியார் துறையில் பணிபுரிபவர்கள் தங்கள் பணியில் குளறுபடிகளை எதிர்கொள்வர். துறை சார்ந்த அனுபவசாலிகளின் வழிகாட்டுதல், ஆலோசனை பெற்று செயல்படுவது நன்மை தரும். குடும்பத்திற்கான முக்கிய செலவுகளுக்கு கடன் பெற நேரிடும். சக பணியாளர்களிடம் நட்பு நிலைத்திருக்கும். பணியிட மாற்றம் ஏற்படுமோ என்ற அச்சம் மனதில் குடிகொள்ளும்.
பெண்கள்: பணிபுரியும் பெண்கள் கூடுதல் பணிச்சுமைக்கு உட்படுவர். பணியில் கவனமின்மையால் அவப்பெயர் உண்டாகும். விரும்பாத இடமாற்றம் பெற வேண்டியதிருக்கும். குடும்ப பெண்கள் நல்லது என்ற எண்ணித் தொடங்கிய செயல்களில் எதிர்மறையான பலன்களைப் பெறுவதற்கான கிரக சூழ்நிலை உள்ளது. சுயதொழில் புரியும் பெண்கள் அளவான மூலதனத்துடன் கடின உழைப்பின் மூலம் விற்பனையை தக்க வைத்துக் கொள்வர். வியாபாரம் தொடர்பான அலைச்சல் அடிக்கடி உண்டாகும்.
மாணவர்கள்: இன்ஜனியரிங், மருத்துவம், விவசாயம், சட்டம், கலை, அறிவியல், கம்ப்யூட்டர், மேனேஜ்மென்ட் படிப்பு மாணவர்களுக்கு ஆர்வம், ஞாபகத்திறன் குறையும். எதிர்கால நலனை கருத்தில் கொண்டு விடாமுயற்சியுடன் படித்தால் மட்டுமே தரத்தேர்ச்சி பெற இயலும். விளையாட்டு பயிற்சிகளில் ஈடுபடும் போது கவனம் தேவை. வேலைவாய்ப்பு பெறுவதில் தாமதம் ஏற்படும்.
அரசியல்வாதிகள்: அரசு தொடர்பான விஷயங்களில் தாமதம் ஆவதால் கவலை அதிகரிக்கும். அதிகாரிகளிடம் கண்டிப்புடன் பேசி சிரமங்களைச் சந்திக்க நேரிடலாம். உங்களின் சிரமங்களைக் கண்டு எதிரிகள் பரிகாசம் செய்வர். வகிக்கிற பதவி, பொறுப்புகளை சரிவர நிறைவேற்றாததால் சிலர் தலைமையின் ஒழுங்கு நடவடிக்கைக்கு உட்படுவர். அரசியலுடன் தொழில் நடத்துபவர்கள் அரசின் சட்டதிட்ட நடைமுறை விதிகளை மதித்து நடத்துவது நல்லது.
விவசாயிகள்: பயிர் வளர்க்க தேவையான வசதி கிடைப்பதில் தாமதம் இருக்கும். அளவான மகசூல், மிதமான பணவரவு கிடைக்கும். கால்நடை வளர்ப்பில் கிடைக்கிற வருமானம் குடும்பத் தேவைக்கு உதவியாக இருக்கும். சொத்து ஆவணங்களைப் பிறர் பொறுப்பில் தரக்கூடாது. குடும்பத்தில் சுபநிகழ்ச்சி நடத்துவதில் உறவினர்களின் உதவி கிடைக்கும்.
பரிகாரம்: பைரவரை வழிபடுவதால் கெடுபலன் குறைந்து, பொருளாதார முன்னேற்றமும், தொழில் வளமும் ஏற்படும்.
பரிகாரப் பாடல்
கயிரவ நாணமலர்க் கவின் கணார் மயற்
செயிரவ நாடொறும் இயற்றியே திரி
யுயிரவ நானென வொறாது காத்தருள்
வயிரவ நாதனை வணங்கி வாழ்த்துவாம்!
சனி வக்ரகால பலன்: 26.3.2012 முதல் 10.9.2012 வரை சனிபகவான் வக்ரகதியாகி மீண்டும் கன்னிராசியில் கண்டகச்சனியாக இடம்பெயருகிறார். இதனால் நண்பர்களிடம் கருத்து வேறுபாடு ஏற்படும். குடும்பத்தில் நிம்மதி குறையும். எதிர்பார்ப்புக்களை குறைத்துக் கொண்டு செயல்படுங்கள். அறிமுகம் இல்லாதவர்களுக்கு உதவி சிரமத்தை வரவழைத்துக் கொள்வீர்கள்.



கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக